சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
ஷாபியை மனித உரிமை தூதராக நியமித்த அரசாங்கம் சுஹாகாமைக் கவனிக்கவில்லை
வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா மலேசியாவின் மனித உரிமை தூதராக நியமிக்கப்பட்டிருப்பதைச் சாடிய சுவாராம், அவர் எக்காலத்திலும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர் அல்ல என்று கூறியது. அரசாங்கம் மனித உரிமைகள்மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், மலேசிய மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) கடந்த சில மாதங்களாக ஆணையர்கள் இல்லாமல் இருக்கும்படி …
சமயத்தையும் இனத்தையும் அரசியலில் கலப்பது தப்பு- ரபிடா அசீஸ்
சமயம், இனம், கல்வி ஆகியவற்றை அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றைக் கலக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ் கூறினார். ஆஸ்ட்ரோ அவானியில் ஹரித் இஸ்கண்டரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரபிடாவிடம் ஹுடுட் பற்றி வினவியபோது அவர் இவ்வாறு கூறினார். “நான் எப்போதும் …
ரயானி ஏர் விமான நிறுவன உரிமம் இரத்து
மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) ரயானி ஏர் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்துச் சேவை (ஏஎஸ்எல்) நடத்த வழங்கப்பட்டிருந்த உரிமத்தை இரத்துச் செய்தது. ரயானி ஏர், விமானப் போக்குவரத்துச் சேவை நடத்துவற்கான நிபந்தனைகளை மீறி விட்டதாகவும் ஒரு வர்த்தக விமான நிறுவனமாக தொடர்ந்து இயங்க போதுமான நிதி…
சுங்கை புசாரில் பிஎன்னுக்கே அமோக வெற்றி- கணிப்புகள் காட்டுகின்றன
சுங்கை புசார் இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தொடங்கி பாதிதூரம் கடந்துள்ள வேளையில், அங்கு பிஎன் 2013-இல் பெற்றதைவிட இம்முறை கூடுதல் ஆதரவைப் பெறும் என்று தோன்றுகிறது. மலேசியாகினி மேற்கொண்ட ஆய்வுகளில் 60விழுக்காட்டு மலாய்க்காரர் வாக்குகள் பிஎன்னுக்குச் செல்லும் என்பது தெரிய வந்துள்ளது. சீனர்களிடமும் அதற்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கலாம்.…
கோலா கங்சாரில் மேம்பாடு தொடர பிஎன்னுக்கே வாக்களிப்பீர்- ஜாஹிட்
கோலா கங்சார் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்வதற்கு வாக்காளர்கள் அத்தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும். அப்பகுதிக்கென அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, வாக்காளர்கள் பிஎன் வேட்பாளர் மஸ்துரா முகம்மட் யாசிட்டுக்குக் கொடுக்கும் ஆதரவு …
ராஜா பாரின்: நஜிப், நஜிப்பின் குடும்பத்தினர் மன்னர்களையும் மிஞ்சிய படாடோபமான…
மலேசியப் பிரதமர் நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் மலாய் ஆட்சியாளர்களையும் மிஞ்சிய படாடோபமான வாழ்க்கையில் திளைத்துள்ளனர் என்று திரங்கானு இளவரசர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்திடம் இதர ஏழு விமானங்கள் இருக்கையில், பிரதமரின் துணைவியார் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானத்தை இரண்டு மாதங்களுக்கு ரிம86 மில்லியனுக்கு வாடகைக்கு எடுத்திருப்பதை…
அஸ்மின் இவ்வாரம் இடைத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்வார்
கோலகங்சார் இடைத் தேர்தல் வேட்பாளர் அஹமட் தெர்மிஸி ரம்லி மற்றும் சுங்கை புசார் வேட்பாளர் அஸ்ஹார் சுகோர் ஆகிய இருவரையும் ஆதரித்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி இவ்வாரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. அமனா கட்சியின் வேட்பாளர்கள் கோலகங்சார் மற்றும் சுங்கை…
பிரதமரின் துணைவியார் என்ற முறையில் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்கும்…
பிரதமரின் மனைவி என்ற முறையில் தனிப்பட்ட ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்கும் ரோஸ்மாவின் உரிமையும் கடமையும் குறித்து எவரும் கேள்வி எழுப்பக்கூடாது என்று அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா மலேசியாகினியிடம் கூறினார். ஆகவே, இந்தப் பயணத்திற்கான விமானம் தனிப்பட்ட உபயோகத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது என்ற…
சுங்கை புசார், கோலக்கங்சார் வாக்காளர்கள் நாட்டு மக்களுக்கு நீதி வழங்க…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஜூன் 11, 2016. இம்மாதம் 18 ஆம் தேதி நடக்கும் சிலாங்கூர் சுங்கை புசார், பேராக் கோலக்கங்சார் இடைத் தேர்தல்கள் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வருமானம் பெறுபவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். சுதந்திரத்திற்குப் பின் நம் நாடு, மிக…
அம்பாங் தமிழ்ப்பள்ளி இணைக்கட்டிடம் கல்நடும் விழா அழைப்பிதழ்
சிலாங்கூர் மாநிலத்தில் அம்பாங் நகர் மையத்தில் அமைத்திருக்கும் அம்பாங் தமிழ்ப்பள்ளியின் நான்காவது இணைக்கட்டடம் கல்நடும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (3/7/216) காலை 9 மணியளவில் மிக விமர்சையாக நடைபெறும். இவ்விழாவினை மஇகா தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் நமது சமய…
ஹாடியின் சட்டவரைவு விவகாரத்தில் நஜிப் பின்வாங்கினால் அது அம்னோவைப் பாதிக்கும்-…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முன்வைத்துள்ள தனி உறுப்பினர் சட்டவரைவுக்கு ஆதரவு அளிக்காது போனால் அது அம்னோவைப் பாதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. “அது (சுங்கை புசாரிலும் கோலா கங்சாரிலும்) அம்னோவையும் முஸ்லிம் வாக்காளர்களையும் பாதிக்கலாம்”, என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் …
மகாதிர் ஹராபான் வேட்பாளருக்கு ஆதரவு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சுங்கை புசார் இடைத் தேர்தலில் தம் ஆதரவு பார்டி அமனா நெகாரா வேட்பாளர் அஸ்ஹார் அப்துல் ஷுக்குருக்குத்தான் என்று பிரகடனம் செய்தார். அஸ்ஹார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும் குடிமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மகாதிர் …
கிளந்தானில் ஆடை ஒழுக்கத்தை மீறியதாக 31 பெண்கள் கைது
கிளந்தான் மாநிலத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் இறுக்கமான உடை அணிந்ததற்காகவும் முகத்தை மூடாததற்காகவும் 31 பெண்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் 24 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் அறிவுரை பெறுவதற்கு அனுப்பப்பட்டதாக சின் சியு டெய்லியை மேற்கோள்காட்டி த ஸ்டார் அறிவித்துள்ளது. ஆடைகள் முறையாக அணியப்படுவதைக் கண்காணிக்கும் …
இந்திய வாக்காளர்களைப் பிடிக்க வலைவீசுகிறார் பாரிசான் தலைவர் நஜிப்
கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதியில் வாழும் இந்திய சமூகத்திற்கு பல சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை இன்று பிரதமரும் பாரிசான் தலைவருமான நஜிப் ரசாக் அறிவித்தார். அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் எஸ்ஜேகேடி (SJKT) காந்தி மெம்மோரியலின் சுவற்றை மேம்படுத்துவதற்கு ரிம100,000 ஒதுக்கப்பட்டுள்ளதும் அடங்கும். அப்பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள்…
பாஸ்: சிவில் சட்டத்தில் பிரம்படி கொடுப்பது ஷியாரியா சட்டத்தைவிடவும் கொடூரமானது
சுங்கை புசாரில் களமிறக்கப்படும் பாஸ் வேட்பாளர் டாக்டர் ரனி ஒஸ்மான், சிவில் சட்டத்தின்படி கொடுக்கப்படும் பிரம்படி தண்டனை ஷியாரியா சட்டத்தில் கொடுக்கப்படும் பிரம்படிகளைவிட ‘கொடூரமானது’ என்கிறார். ஒரு மருத்துவர் என்ற முறையில் இதைக் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். “பிரம்பால் அடிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குத் தெரியும் அது எவ்வளவு …
ரப்பர் தொழிலுக்கு ரிம194 மில்லியன் உதவி அறிவித்த பிரதமர் ‘என்…
இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரப்பர் விலைகள் வீழ்ச்சி அடைந்து வரும் வேளையில் ரப்பர் தொழிலுக்கு உதவியாக ரிம194மில்லியன் மான்யம் வழங்கப்படுவதாக அறிவித்தார். அந்த உதவியை அறிவித்த கையோடு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “உங்கள் விருப்பதை நான் நிறைவேற்றி விட்டேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.…
தலைவர்களைக் கேலிசெய்யும் படங்களை’ப் பதிவேற்றம் செய்ததாக பாஹ்மிமீது குற்றச்சாட்டு
‘பகுதிநேர வரைகலை வடிவமைப்பாளரான முகம்மட் பாஹ்மி ரேசா முகம்மட் ஸரின்,39, தலைவர்களைக் கேலி செய்யும் தம் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. பாஹ்மி குற்றச்சாட்டை மறுத்தார். தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998, பகுதி 233(1) (ஏ)-இன்கீழ் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
பினாங்கில் மேலும் ஒரு கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது; அதிகமாகவே சேதப்படுத்தப்பட்டுள்ளது
பினாங்கில் மற்றுமொரு கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளான கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. கடந்த வாரத் தாக்குதலின்போது ஏற்பட்ட சேதத்தைவிட புதிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் அதிகமென்று கூறப்படுகிறது. பெனாந்தி தோட்டத்திலிருக்கும் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் கோயிலில் நள்ளிரவின்போது …
அம்பிகா: ஆட்சியாளர்களின் கருத்து ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு ஏஜி விளக்க…
தேசியப் பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) மசோதா குறித்து ஆட்சியாளர்கள் தெரிவித்திருந்த கருத்து ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்டி அலி விளக்க வேண்டும் என்று அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இச்சட்டம் பேரரசரின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கப் பதிவு ஏட்டில்…
ரபிசி: கிளந்தான் வெள்ளத்தின்போது நஜிப்கூட தனி ஜெட் விமானத்தைப் பயன்படுத்தவில்லையே
குறுகிய காலத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது அதனால்தான் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தனி ஜெட் விமானத்தில் இஸ்தான்புல்லுக்குப் பறந்து சென்றார் என்று கூறப்படும் காரணத்தை பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி ஏற்கவில்லை. 2014-இல் கிளந்தான் வெள்ளத்தின்போது நஜிப் உடனடியாக மலேசியாவுக்குத் திரும்பி வரவில்லை என்பதை …
36 ஆண்டுகளாகவே அரசியலுக்குத் தயாராகி வந்துள்ளார் அமனாவின் அஸ்ஹார்
அஸ்ஹார் அப்துல் ஷுக்குர், சுங்கை புசார் தொகுதித் தலைவராகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எம்பி தேர்தலில் குதிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அமனா வேட்பாளர் சுங்கை புசாரில் எதிர்த்து நிற்கப்போவது இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை. ஒருவர் மேரு சட்டமன்ற உறுப்பினர் அத்துடன் சிலாங்கூர் பாஸ் தலைவர் டாக்டர் …
நஜிப்: முதல் பார்வையில் Zuckerberg ஓர் அறிவாளி என்ற எண்ணம்…
கண்ணால் காண்பதும் பொய்யே என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பொறுத்தவரை உண்மையானது. முகநூல் கண்டுபிடிப்பாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான Mark Zuckerberg-கை முதன்முதலில் பார்த்தபோது அவர் அத்தனை பெரிய அறிவாளியாக நஜிப்புக்குப் படவில்லை. ஆனால், இப்போது, அவர் “சூப்பர் அறிவாளி” என்கிறார். “முதல் பார்வையில் …
என்எஸ்சி சட்டவரைவு: சீரமைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் வலியுறுத்திய அடுத்த…
தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டவரைவு 2015, சீரமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர் மன்றம் கேட்டுக்கொண்ட மறுநாளே, அது அரச ஒப்புதலின்றி அரசிதழில் வெளியிடப்பட்டுச் சட்டமாகியுள்ளது. அரசு இதழில், கூட்டரசு அரசமைப்பின் பகுதி 66, சட்டவிதி 4(ஏ)-இன்படி அச்சட்டவரைவு 2016, பிப்ரவரி 18-இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டவிதி 4(ஏ), ஒரு…


