சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
இரு இடைத் தேர்தல் டிஎபி நிகழ்ச்சிகளில் மகாதீர் பங்கேற்கிறார்
கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியலுக்கு ஒரு முடிவு கட்டும் கடும் சித்தத்துடன் ஜோகூர் கேளாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் பிரதமர் களமிறங்கினார். அத்தொகுதியின் தீர்ப்பு என்ன என்பது வரலாறு. இன்று நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது.…
ரோஸ்மா விருது வாங்குவதற்கு தனி ஜெட்டில் இஸ்தான்புல் சென்றார்
இஸ்தான்புல்லில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ரோஸ்மா மன்சூர் தனி ஜெட் விமானத்தில் பறந்து சென்றதாகக் கூறுகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி. மே 27-இல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி பெர்மாத்தா சார்பில் 3ஜி சிறார் நல விருதைப் பெற்றுக்கொண்டார். அச்செய்தி மைய நீரோட்ட …
போலீஸ் ஹக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்
சிறார்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்டதற்காக பிரிட்டனில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரிச்சர்ட் ஹக்கலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க போலீஸ் பிரிட்டனின் அமலாக்க அதிகாரிகளுடனும் மலேசிய அமைச்சு ஒன்றுடனும் ஒத்துழைக்கும். “போலீஸ், பிரிட்டனின் குற்றவியல் வாரியத்துடனும் மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடனும் …
சரவாக் பிணையாளிகளை அபு சயாப் விடுவித்தது
பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திவரும் அபு சயாப் தீவிரவாத கும்பல், அது பிடித்து வைத்திருந்த நான்கு சரவாக் கடலோடிகளை விடுவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நால்வரும் இன்று காலை சாபா, சண்டகான் திரும்பினார்கள் என இன்று த ஸ்டார் அறிவித்தது. “மலேசிய, பிலிப்பீன்ஸ் பேச்சாளர்கள் அக்கும்பலுடன் பல …
ரபிசி: ரோஸ்மாவின் சொகுசான வாழ்வை அம்பலப்படுத்துவேன்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி வெளியில் தெரியாத செய்தியை வெளியிடப்போவதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி கூறினார். இன்று பிற்பகல் கோலா கங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அதைத் தெரிவிக்கப்போவதாக அவர் சொன்னார். ஆளும் வர்க்கத்தினரும் அவர்களின் குடும்பத்தாரும் “சாமானிய மக்கள் அன்றாட …
பெர்சே-இன் கோரிக்கைகளுக்கு பாஸ் வேட்பாளர் ஆதரவு
சுங்கை புசார் இடைத் தேர்தலுக்கான பாஸ் வேட்பாளர் டாக்டர் ரானி ஒஸ்மான், நிறுவனப்பூர்வமான மாற்றங்களுக்காக பெர்சே நடத்தும் போராட்டத்துக்கு தம் ஆதரவு உண்டு என்று உறுதியளித்தார். “நமது வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம். “வழிமுறைகள் வேறுபட்டால்…
போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே குடிமக்கள் பிரகடனம்மீது புகார்…
அதிகாரிகள் குடிமக்கள் பிரகடனத்தைப் பறிமுதல் செய்து அதில் கையொப்பமிட்டவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே அதன்மீது நிறைய புகார்கள் கூறப்படுகின்றன என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்கள் குடிமக்கள் பிரகடனத்தை இழித்துப் பேசுகிறார்கள்; அதில் நிறைய பொய்கள் இருக்கின்றனவாம். “அதை …
ஜோகூர் இளவரசரை அவமதித்த இளைஞனுக்கு ஓராண்டுச் சிறை
ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை அவமதிக்கும் கருத்துகளைப் பதிவு செய்த குற்றத்தை ஒப்பிய முகம்மட் அமிருல் அஸ்வான் முகம்மட் ஷக்ரிக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜோகூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அமிருல்,19, ஒப்புக்கொண்டார் என சினார் ஹரியான் கூறியது. அவர்மீது வாசிக்கப்பட்ட …
ஹுடுட் சட்டவரைவை நிராகரிக்கிறார் நன்சி: வாக்களிக்க நாடாளுமன்றம் வர மாட்டார்
பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி ஹுடுட் சட்ட அமலாக்கத்துக்கு வழிகோலும் சட்டத் திருத்தங்களுக்குத் தம் ஆதரவு இல்லை என்பதை இன்று மீண்டும் வலியுறுத்தினார். அச்சட்டத் திருத்தங்களை நிராகரிக்கும் சரவாக் பிபிபி நிலைப்பாட்டுக்கு ஏற்ப தாம் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார். அப்படியானால் சட்டவரைவுக்கு எதிராக வாக்களிப்பாரா என்று வினவியதற்கு …
சுரேந்திரன்: தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்குரைஞர் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக…
தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்குரைஞர் தொழில் செய்வதற்குக் குறுக்கீடாக உள்ளது என்றும் அதனால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிகேஆர் தலைவர் என்.சுரேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். “அன்வார் இப்ராகிமுக்காக வாதாடி விட்டு கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது தேச நிந்தனைக்குரிய வகையில் …
வான் அசிசாவும் அவரின் கூட்டணி தோழர்களும் அஸ்மின் திட்டத்தைப் புறக்கணித்தார்களாம்
பாஸ்மீது கொண்ட கோபத்தின் காரணமாக டிஏபியும், பார்டி அமனா நெகாரா(அமனா)வும் சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்ற சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள் என அம்னோ எம்பி ஒருவர் கூறினார். இடைத் தேர்தலில் நேரடிப் போட்டி என்றால் அது எதிரணிக்குச் சாதகமாக …
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹில்லரி கிளிண்டன்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, ஹில்லரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹில்லரி முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமாவார். அமெரிக்காவின் 239-ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு பெண்மணி அதிபர் பதவிக்கு போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.
ஹூடுட் சட்டத்திற்கு எதிரான கட்சியின் எதிர்ப்பை மஇகா தேர்தல் பிரச்சாரத்தின்…
நடைபெறவிருக்கும் இரு இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது மஇகா அதன் ஹுடுட் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடை வாக்காளருக்குத் தெரிவிக்காது. ஹூடுட் சட்டத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பை மசீச வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மசீசவின் நிலைப்பாட்டை மஇகா பின்பற்றுமா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த மஇகா தலைவர்…
குவான் எங் பங்களா குறித்து மேலும் விசாரணை நடத்த ஏஜி…
சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வீடு வாங்கிய விவகாரம்மீதான விசாரணை அறிக்கையைத் திரும்பவும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கே அனுப்பி வைத்திருக்கிறார். “விசாரணை அறிக்கைகளில் எல்லா விளக்கங்களையும் படித்துப் பார்த்த பின்னர் மேலும் சிலவற்றைப் பற்றி விசாரிக்க வேண்டுமென இத்துறை கருதுகிறது.…
மஸ்தூராவைக் கவிழ்க்க உள்ளுக்குள் சதியா? மறுக்கிறார் மகன்
ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் கொல்லப்பட்ட தம் கணவரின் கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மஸ்தூரா முகம்மட் யாஸிட்டுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகள் நடப்பதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது. அம்னோவுக்குள்ளேயே மஸ்தூராவைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்யப்படுகிறதாம். ஆனால், அவரின் மூத்த மகன் வான் எமிர் அஸ்தார் …
சட்டவிரோத நில அழிப்பு வேலைகளால் பேராக்கில் நீர்ப் பிடிப்புப் பகுதிகள்…
பேராக், கிரியானில், புக்கிட் மேரா ஏரியைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து போகும் நிலை உருவாகலாம் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சஹாபாட் ஆலம் மலேசியா(எஸ்ஏஎம்) எச்சரிக்கிறது. “அதன் விளைவாக கிரியான் மாவட்ட தானிய சேமிப்புப் பகுதியும் அருகில் செபராங் பிறையில் …
விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிக் குலுங்கலில் இறந்துபோவோம் என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்ட…
லண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய விமான நிறுவன (எம்ஏபி)த்தின் எம்எச்01 விமானம், மோசமான வானிலையில் சிக்கி அதிர்ச்சியால் குலுங்கியபோது இறந்துபோவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் மேரி என்ற பயணி. சிங்கப்பூரரான அந்த 50-வயது மாது, ஏர்பஸ் 380 ரக விமானம் கீழ்நோக்கிப் பாய்ந்து பின்னர் …
1எம்டிபி குற்றச்சாட்டுகளைத் தேர்தல் பரப்புரையில் திரும்ப எடுத்துரைக்க முடியுமா? மகாதிருக்கு…
1எம்டிபிமீது குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்குற்றச்சாட்டுகளை இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது திரும்பவும் கூறுவாரா, அதற்கான துணிச்சல் இருக்கிறதா என அம்னோ அமைச்சர் சைட் கெருவாக் கேட்கிறார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி பணத்தில் ரிம42 பில்லியனைத் திருடினார், ரிம50 பில்லியனைத் திருடினார் …
பிஎன் வேட்பாளர் கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்
சுங்கை புசார் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளர் புடிமான் முகம்மட் ஸோடி வெற்றி பெற்றால் அங்குள்ள மக்களின் கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார். இவ்விரு துறைகளும் பச்சைப்பசேல் என்ற வயல்காடுகளையும் கிராமிய வாழ்க்கையையும் கொண்ட அத்தொகுதியின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்றாரவர். “சுங்கை புசாரில் உள்ள …
இடைத் தேர்தல்களீல் பிஎன்னிடம் தோற்பதற்கு பாஸ் திட்டமிடுகிறதா? ஹாடி மறுப்பு
வேண்டுமென்றே இரண்டு இடைத் தேர்தல்களிலும் தோல்விகாணத் திட்டமிட்டிருக்கிறது என்று கூறப்படும் ஆருடங்களை பாஸ் மறுத்தது. கோலா கங்சாரிலும் சுங்கை புசாரிலும் பிஎன் வேட்பாளர்களை எதிர்த்து பாஸ் முழுமூச்சாக போராடும் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். டிஏபிதான் பிஎன்னுக்கு இடமளித்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறது என்றாரவர். “பிஎன்னை …
இன்சுலின் இருக்கையில் கைகாலை வெட்ட வேண்டியதில்லை: ஹாடிக்குப் பதிலடி
ஹுடுட் சட்டம் குற்றங்களைக் குறைக்கும் என்ற வாதத்தை முன்வைத்துள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்குக் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் பதிலடி கொடுத்திருக்கிறார். “உடலுறுப்புகளை வெட்டி எடுப்பது மட்டுமே நீரிழிவுக்குத் தீர்வு அல்ல. இப்போது இன்சுலின் உள்பட வேறு சிகிச்சை முறைகளும் இருக்கின்றன. காலத்தோடு …
‘பெண்கள் தலைவர்களாக இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை’: சுயேச்சை வேட்பாளார்
கோலா கங்சார் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கல்வியாளர் இசாட் புகாரி இஸ்மாயில் புகாரி-க்கு மகளிர் வாக்குகள் கிடைப்பது சந்தேகம்தான். அவருடைய சித்தாந்தமே அவருக்கு எதிரியாக அமையும்போல் தெரிகிறது. ஆண்கள்தான் தலைமை தாங்க வேண்டும். பெண்கள் அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவரான …
நஜிப் அகற்றப்படுவதை ஆதரிப்பதால் அமனாவை ஆதரிக்கிறார் அம்பிகா
சுங்கை புசாரில் வேட்பாளர் நியமனம் முடிந்ததுமே அமனா ஆதரவாளர்கள் டேவான் பெர்னாமுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குந்தை மேடையாக மாற்றி அமைத்தார்கள். அந்த மேடையிலிருந்து பேச்சாளர்கள் பலர் பேசத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன். அமானா குடிமக்கள் பிரகடனத்தை ஆதரிக்கிறது …


