இண்டர்போல் ஜோ லவ்வையும் மேலும் நால்வரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை

போலீசார்  பினாங்கு  கோடீஸ்வரர்  ஜோ லவ்மீதும்  மேலும்  நால்வர்மீதும்  விசாரணை  எதையும்  மேற்கொள்ளவில்லை  என்பதால் இண்டர்போல் மலேசியா அவர்களைத்  தேடும்  முயற்சியில்  ஈடுபடவில்லை  எனத்  துணைப் பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். “அவர்கள்மீது  போலீஸ்  விசாரணை  எதுவுமில்லை  அதனால்  இண்டர்போல்  அவர்களைத்  தேட வேண்டிய  அவசியமில்லை. “மேலும், …

பாஸ் கிளந்தான் இளைஞர்கள் ஹுசாம்-முஸ்தபா மோதலுக்கு மேடை அமைத்துக்கொடுக்கத் தயார்

பாஸ்   தேர்தல்  இயக்குனர்  முஸ்தபா  அலியும்  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  ஹுசாம்  மூசாவும்  நேருக்கு நேர்  வாதமிடுவதாக  இருந்தால்  அதற்கான  ஏற்பாடுகளைச்  செய்ய  கிளந்தான்  பாஸ்  இளைஞர்  பகுதி  முன்வந்துள்ளது. பாஸ்-அம்னோ  இணைப்புக்காக  பாடுபட்டவர்களில்  முஸ்தபாவும்  ஒருவர்  என்றும்  அதற்காக  அவர்  அம்னோ  தலைவர்களைச்  சந்தித்தார்  என்றும் ஹுசாம் …

நஜிப்: அரசியல் நன்கொடைகளுக்காக ஜிஎல்சி-களிடம் தனி ஒதுக்கீடு எதுவும் இல்லை

அரசு-தொடர்பு  நிறுவனங்கள் அரசியல்  கட்சிகளுக்கு  நன்கொடை  அளிப்பதுண்டு  ஆனால்,  நன்கொடை  அளிப்பதற்கென்றே  நிரந்தரமான  ஒதுக்கீடுகளை  அவை  வைத்திருப்பதில்லை எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். அரசியல்வாதிகள்  நன்கொடை  கேட்கும்போது  அவற்றிடம்  போதுமான  நிதி  இருந்தால்  கொடுத்துதவும். அந்த  உதவியும்கூட  பள்ளிகளின்  விளையாட்டுத்  தினம், வெள்ள  நிவாரண  உதவி,…

‘இவ்வளவுதான் ஹரிமாவ் மலாயாவின் தரம்’

அனைத்துலக  அளவில்  படுதோல்வி  கண்டுள்ள  மலேசியக்  கால்பந்துக்  குழுவான  ஹரிமாவ்  மலாயா  மலேசியர்கள்  பெருமைப்படத்தக்க  வகையில்  எழுச்சி  பெறும்  என்ற  நம்பிக்கையை புத்ரா  ஜெயா  இழந்து  விட்டது. “இதுதான் மூத்த  ஆட்டக்காரர்களைக்  கொண்ட  அக்குழுவின்  தரம்”, என  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  இன்று  நாடாளுமன்றத்தில் …

குவான் எங்: நானே நாட்டில் குறைவான சம்பளம் பெறும் சிஎம்

பினாங்கில்    ஆட்சிக்குழு  உறுப்பினர்களுக்கு 100 விழுக்காடு  சம்பள  உயர்வு  வழங்கப்படுவது  நியாயம்தானா  என்று  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கிடம்  வினவியதற்கு,  தானே நாட்டில்  “மிகக் குறைந்த சம்பளம்” பெறும்  முதலமைச்சர்  என்று  பதிலளித்தார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சம்பளம்  உயரவில்லை  அதைப்போன்று  தம்முடைய  சம்பளமும்  அதிகரிக்கப்படவில்லை  என்றாரவர்.…

பிரதமருக்கு எதிரான பிகேஆரின் இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் ஒன்று திரும்பப்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  பதிவு  செய்திருந்த  நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தை  ஹீ லோய்  சியான்  மீட்டுக்கொண்டிருக்கிறார். இதை  மக்களவைத்  துணைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  சைட்  இன்று  அறிவித்தார். “ஹீ,  எழுத்துப்பூர்வமாக  தெரியப்படுத்தி   தீர்மானத்தைத்  திரும்பப் பெற்றுக்  கொண்டார்”, என  இஸ்மாயில்  கூறினார். ஹீயைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு “எதிரணித் …

பினாங்கு ஆட்சிக்குழுவினரின் சம்பளம் இரு மடங்காக அதிகரிப்பு

பினாங்கு  சட்டமன்றத்தில்  ஆட்சிக்குழுவினரின் சம்பளத்தை  100விழுக்காடு  அதிகரிக்க  சில  சட்டத்  திருத்தங்கள்  கொண்டுவரப்படும்  எனத்  தெரிகிறது. அதன்  பலனாக  சட்டமன்ற  உறுப்பினர்களின்  சம்பளமும்  கிட்டத்தட்ட  இரு  மடங்கு  அதிகரிக்கும். சட்டமன்றம்  இன்று தொடங்கி  வெள்ளிக்கிழமைவரை  நடைபெறும். வெள்ளிக்கிழமை  திருத்தங்கள்  ஏற்கப்பட்டால்  புதிய  சம்பள  அதிகரிப்பு ஜனவரி  முதல்  அமலுக்கு …

ஐஎஸ் கொலைப்பட்டியலில் மலேசியத் தலைவர்கள்

ஐஎஸ்  தீவிரவாதிகள்  கொலை  செய்யத்  திட்டமிட்டுள்ளவர்களின்  பட்டியலில்  மலேசியத்  தலைவர்கள்  பலர்  இடம்பெற்றிருப்பதாகக்  கூறப்படுகிறது. தேசிய  பாதுகாப்பு அமைப்புகளுக்குக்  கிடைத்த  உளவுத்  தகவல்களிலிருந்து  இது  தெரிய  வந்திருப்பதாக  த ஸ்டார்  ஆன்லைன்  கூறியது. தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன், ஐஎஸ்  குறி  வைத்துள்ள தலைவர்களின்  பட்டியலில்  தம்முடைய  பெயரும் …

ஹாடி: டிஎபி ஊராட்சிமன்றத் தேர்தல் நடத்த விடமாட்டோம்

  டிஎபி ஊராட்சிமன்ற தேர்தலை அறிமுகப்படுத்துவதை பாஸ் கட்சி எதிர்க்கிறது ஏனென்றால் சீனர்கள் நகரங்களைக் கைப்பற்றுவதை அது விரும்பவில்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கூறினார். "டிஎபி ஊராட்சிமன்ற தேர்தல்கள் நடத்துவதை நாங்கள் தடுப்போம் (ஏனென்றால்) சீனர்கள் நகரங்களை வெற்றிகொள்வார்கள். "நகரங்கள் டிஎபியின் கட்டுப்பாட்டிற்குள் வருவதை…

குவான் எங்: ஜிஎஸ்டி உண்மையாகவே “செலாகா”

  பொருள்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரியை டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒரு "செலாகா" வரி என்று சாடியதோடு அந்த வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு (செலாகா) என்று கூறுவதற்காக தம் மீது வழக்கு தொடரப்படலாம். ஆனாலும், அவ்வாறு கூறுவதிலிருந்து…

சிலாங்கூரில் அம்னோ-பாஸ் அரசாங்கம் அமைக்க சதித் திட்டமா?

  கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி புசார் சம்பந்தப்பட்ட நெருக்கடியின் போது அம்னோவுடன் சேர்ந்து ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க தாம் விரும்பியதாகக் கூறப்படுவதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மறுத்துள்ளார். "இல்லை, இல்லை, அப்படி எதுவும் இல்லை", என்று செய்தியாளர்கள் இன்று அவரிடம் இது…

பாஸின் குறும்பு நடவடிக்கைகளைத் தடுக்க டிஎபி சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து…

  பாஸ் கட்சி அதன் குறும்புகளைத் தொடராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிஎபி சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து பங்கு பெறும் தேவை இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நம்புகிறார். பாஸ் கட்சி "தவறான கொள்கைகளை" அமல்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இது அவசியமாகிறது என்று கூறிய…

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் எம்பிக்களின் கூட்டம்

    மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துல வட்டமேசை விவாதம் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. அந்த விவாதம் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அசிஸ் தலைமையில் நடைபெறும். நடப்பில்…

விஸ்மா புத்ரா: பாரிஸ் தாக்குதலில் மலேசியர் எவரும் காயமடையவில்லை

பாரிசில்  துப்பாக்கிக்காரர்களும்  தற்கொலை  வெடிகுண்டு  வெடிப்பாளர்களும்  நடத்திய  பயங்கரவாதத்  தாக்குதலில் பலியானவர்களில்  மலேசியர்  எவரும்  இருப்பதாக தலவல்  இல்லை  என வெளியுறவு  அமைச்சு  அறிவித்துள்ளது. பாரிஸ்  நகரில் இசை  அரங்கு,  விளையாட்டரங்கு  எனப்  பல  இடங்களில்  நிகழ்ந்த  தாக்குதல்களில்  150 பேருக்குமேல்  கொல்லப்பட்டிருப்பது  தெரிய  வந்துள்ளது. “இத்தாக்குதல்களை  மலேசிய …

தேவமணி பேராக் சட்டமன்றத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்- குலசேகரன்

2013 ஜூன் 28-இல்  அப்போது  மஇகா  உதவித்  தலைவராக  இருந்த  எஸ்.தேவமணி  பேராக்  மாநிலச்  சட்டமன்றத்  தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, 2013 பொதுத்  தேர்தலில்  சுங்கை  சிப்புட்  நாடாளுமன்றத்  தொகுதியில் அவர் தோற்றுப்போன  பின்னர்   நடந்தது. இவ்வாண்டு  நவம்பர்  6-இல் தேவமணி  மஇகா  துணைத்  தலைவர்  பதவிக்காக  எஸ்.…

பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல், 150பேருக்கு மேல் பலி, அவசரகாலம் பிரகடனம்

பாரிசில் தீவிரவாதிகள்  உணவகங்கள்,  இசை அரங்கு,  விளையாட்டரங்கு என  பல இடங்களில் நடத்திய  தாக்குதல்களில் 150 பேருக்குமேல்  கொல்லப்பட்டனர். அத்தாக்குதல்களினால்  அதிர்ச்சி  அடைந்த  அதிபர்  இப்படிப்பட்ட  கோரமான பயங்கரவாதத்  தாக்குதல்  இதற்குமுன்  பாரிசில்  நிகழ்ந்ததில்லை  என்றார். நகரில் அமைந்துள்ள பாடாகிளான் இசை  அரங்கில்  நுழைந்த  தீவிரவாதிகள்  இசை  நிகழ்ச்சி …

‘நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரிங்கிட் மதிப்பைக் குறைக்கலாம்’

நஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டுவருவது  பற்றிப்  பேசப்படுவதுகூட  ரிங்கிட்டின்  மதிப்பு  குறைவதற்குக்  காரணமாக  இருக்கலாம்  என  பேங்க்  நெகாரா  மலேசியா நம்புகிறது. “சந்தை  ஓரளவுக்கு  நிச்சயமற்ற  நிலையில்தான்  செயல்படுகிறது. இந்நிலையில்  அரசியலில்  பதற்றம்  நிலவும்போது அது  சந்தை உணர்வுகளைப்  பாதிக்கிறது. “இது  நாணய  மாற்று  விகிதங்களையும்…

அன்வார்: மெக்னம்4டி ரிம60 மில்லியன் கொடுத்ததா? அப்பட்டமான பொய்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,   சூதாட்ட  நிறுவனமான  மெக்னம்  கார்ப்பரேஷன்  பெர்ஹாட்  தம்மிடமும்  தம் இடைத்தரகர்களிடத்திலும் மொத்தம்  ரிம60மில்லியன்  கொடுத்ததாகக்  கூறப்பட்டதை  மறுத்தார். இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில் அன்வார்  செனட்டர்  எஸ். நல்லகருப்பனின்  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவால்  குறுக்கு  விசாரணை  செய்யப்பட்டார். அன்வாரின்   இடைத்தரகர்கள் …

சட்டவிரோத பேரணியில் பங்கேற்றதாக 18பேர்மீது குற்றச்சாட்டு 15பேர் விடுவிக்கப்பட்டனர்

இன்று  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றம்,  2013-இல்  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்   சட்டவிரோத  பேரணியில் கலந்துகொண்டதாகக்  குற்றஞ்சாட்டப்பட்ட  33  சமூக  ஆர்வலர்களில்  15 பேரை  விடுவித்தது. மீதி 18 பேர்  எதிர்வாதம்  செய்ய  அழைக்கப்பட்டனர். அந்த  18பேரின்மீது  சட்டவிரோத  பேரணீயில்  கலந்துகொண்டதாக  குற்றவியல்  சட்டம் பிரிவு  143-இன்கீழ்  குற்றம்  சுமத்தப்பட்டது. அவர்கள் …

மூத்தோர் மன்றம்: மகாதிரின் பரிந்துரையை இடித்துரைக்கிறார் நஜிப்

மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்  ஒருவரை  மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாத  ஒரு  மன்றம்  கட்டுப்படுத்துவது ஜனநாயகத்துக்கு  எதிரானது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  வலைப்பதிவில் இவ்வாறு  பதிவிட்டுள்ளார். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்  பிரதமருக்கு  ஆலோசனை  கூற  மூத்தோர்  மன்றம்  ஒன்றை  அமைக்கலாம்  என்று  பரிந்துரைத்திருந்தார்.  அப்படி  ஒரு …

பிரதமர் ரிம2.6 பில்லியன் பற்றி விரைவில் வாக்குமூலம் அளிப்பார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  விரைவில் மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம்  வாக்குமூலம் அளிப்பார். பிரதமரைச்  சந்திப்பதற்கு நாள்  கேட்டு  அவரது  அலுவலகத்தைத்  தொடர்பு  கொண்டதாகவும்  பதிலுக்குக்  காத்திருப்பதாகவும்  எம்ஏசிசி  இன்று  அறிவித்திருந்தது. அது  நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்பட்ட  ரிம2.6 பில்லியன்  குறித்து  விசாரணை  மேற்கொண்டிருக்கிறது. “அந்த அரசியல் …

நஜிப் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்ட போலீசையும் நீதிமன்றத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் போலீசையும் நீதிமன்றத்தையும் பயன்படுத்தி  தேர்தல்களில் போட்டியாக  விளங்கக்கூடிய   எதிர்ப்பாளர்களை  ஒழித்துக்கட்ட  முயல்கிறார்  என பெர்சேயும்  சுவாராமும்  கூறியுள்ளன.. அது ஆரோக்கியமற்ற  போக்கு  என்று  வருணித்த  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  அதைச்  சரிசெய்ய  வேண்டும்  என்றார். “நஜிப்  நீதிமன்றங்களைப்  பயன்படுத்தி  எதிர்ப்புகளைச் …

காராக் விரைவுச் சாலையில் துப்புரவு வேலை இன்னும் முடியவில்லை

கோலாலும்பூர்-காராக்  விரைவுச் சாலையில்  52.4 கிலோ மீட்டரில்    நிலச்  சரிவு  ஏற்பட்ட  பகுதியைச்  சுத்தப்படுத்தும்  வேலைகள்  இன்று  அதிகாலை  மணி  3.20க்கு  முடிவுக்கு  வந்தன. ஆனாலும்,  போக்குவரத்துக்கு  இன்னும்  அது  திறந்து  விடப்படவில்லை. எல்லாம்  பாதுகாப்பாக  உள்ளது  என்பதை உறுதி  செய்துகொண்ட  பின்னரே  அது  போக்குவரத்துக்குத்  திறந்து  விடப்படும் …