காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை.…
விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிய சுனிதா வில்லியம்ஸ்
டெல்லி: அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில்…
இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெயலலிதா வலியுறுத்தல்
இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக்…
வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பில் இந்தியா
இந்திய நாட்டின் 66வது சுதந்திரதினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, இந்தியா பூராகவும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மக்கள் அதிகம்…
ராஜபக்சேவுக்கு விருது கொடுத்து இந்தியா கௌரவிக்க வேண்டுமாம்!
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தமது நாட்டு பிரச்சனையை மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரச்சனையையும் சேர்த்து தீர்த்து வைத்துள்ளார் என்பதால் அவருக்கு உயர்ந்த விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டுமாம் இவ்வாறு கூறியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி. இலங்கை தலைநகர் கொழும்பில் அனைத்துலக பாதுகாப்பு குறித்த…
அசாமில் வன்முறைக்கு இதுவரை 73 பேர் பலி
கவுகாத்தி: அசாமில் மீண்டும் துவங்கியுள்ள வன்முறைக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், வன்முறைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கோக்ராஜ்கர் மற்றும் தூப்ரி மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 31ல், நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அசாமின்,…
டெசோ மாநாடு: விருப்பமில்லாமல் திமுக நிர்வாகிகள் – கடுப்பாகிப் போன…
சென்னை: தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தாலும் எப்போது தமிழீழத் தீர்வை வலியுறுத்தமாட்டோம் என்று அவர் அறிவித்தாரோ அப்போதே திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதான் டெசோ மாநாட்டுப் பணிகளிலும் தொய்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. டெசோ மாநாடு…
காஞ்சிபுரத்தில் கட்டிடம் இடிந்து 9 பேர் பலி
தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகே குன்னம் எனும் இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பொறியியற் கல்லூரியின் உள் விளையாட்டரங்க கட்டடம் இடிந்து விழுந்ததில் திங்களன்று மாலை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவருமே ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணியில் 20-க்கும் மேற்பட்டோர்…
கட்சி தொடங்க ஹசாரேவுக்கு கடும் எதிர்ப்பு- உருவப் படத்துக்கு தீ…
சூரத்: அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் எதிர்ப்பு இயக்க பேனரையும் ஹசாரே உருவப் படத்தையும் தீ…
பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த நஜீப்!
மால்டா: பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த சம்பவம் பெரும் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது நாசிபூர் எஸ்.எஸ். பாயிண்ட் உறைவிட ஆங்கில பள்ளி. அந்த…
தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை!
சென்னை: "தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை'' என Read More
ஊழலை ஒழிக்க அரசியலில் குதிக்கிறது அன்னா ஹசாரே குழு
டெல்லி: இந்தியாவில் ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஊழலை ஒழிக்க அவர்கள் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளனர். ஊழலுக்கு எதிராகவும், வலுவான…
புனேயில் தொடர் குண்டு வெடிப்பு: முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று மாலையில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஜங்கலி மகாராஜா சாலை, டெக்கான் சாலை, கந்தர்வா திரையரங்கு அருகில் மற்றும் கார்வாரே கல்லூரி அருகில் என அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்டதாக…
உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க…
ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பைடிதல்லி (வயது70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின்…
அறுபது கோடி இந்திய மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு!
ஆமதாபாத் : இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களாக டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. இதனால் மெட்ரோ உள்ளிட்ட ரயில்களின் சேவை,…
ஊழியர்களை கூண்டோடு இடமாற்றம் செய்த தமிழக அமைச்சர்
திருவள்ளூர்: தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனையில் தொழிலாளர் தமிழக அரசின் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு நடத்தி, ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனை ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கணினியில்…
மாணவர்களிடம் கைத்தொலைபேசி இருந்தால் பறிமுதல் செய்க: தமிழகத்தில் உத்தரவு
தமிழகம்: பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி வைத்திருந்தால் பறிமுதல் Read More
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து; தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த…
நெல்லூர்: இந்திய தலைநகர் டில்லியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த புகையிரத்தின்…
தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்: சீமான்
சென்னை: "உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர்…
சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு முற்றுகை
இந்திய நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அன்னாஹசாரே ஆதரவாளர்களும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள்…
விபத்தில் சிறுமி பலி; பள்ளிப் பேருந்து தீயிட்டு எரிப்பு!
சென்னையை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, புதன்கிழமை (25.7.12) பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு துவாரம் வழியாக கீழே விழுந்து அவள் பயணித்த பேருந்து ஏறியே கொல்லப்பட்ட சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை…
“கை விடப்படவில்லை”: சொல்கிறார் கருணாநிதி
சென்னை: "தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட வில்லை'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். "இந்திய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில், தி.மு.க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய மத்திய அரசின் வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக…
இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி
சென்னை: இலங்கை விமானப் படையினர் நான்கு பேர், பயிற்சிக்காக மாற்று உடையில் சென்னை வழியாக கோல்கட்டா சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையினருக்கு தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பின் அவர்கள்,…
இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத்…