தமிழ் புத்தாண்டை முடிவு செய்வது யார்!

இராகவன் கருப்பையா -தலைநகர் அம்ப்பாங் வட்டாரத்தில் அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். 'பீசாங் கோரேங்' எனப்படும் வாழைப்பழ பலகாரம் வாங்குவதற்கு மலாய்க்கார மாது ஒருவரின் அங்காடிக்கடைக்குச் சென்ற ஒரு இந்திய இளைஞரின் திடுக்கிடும் அனுபவமே அந்த நிகழ்வு. உங்களுக்கும் இந்த பலகாரம் செய்யத்தெரியுமா என எண்ணெய் சட்டியில்…

கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?  

இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன்…

புத்தாண்டு குழப்பம் – சித்திரையா! தையா? -இராகவன் கருப்பையா

உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 கோடி தமிழர்கள்  நாளைய தினம் தங்களுடைய புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு தேவையான கடைசி நேர ஏற்பாடுகள் அனைத்தையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு சில நாள்களுக்கு முன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்…

தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள்…

ருசிகண்ட புலி பூனையான கதை!

இராகவன் கருப்பையா - மலேசியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் முன்னின்று நிர்வகித்தது மட்டுமின்றி காலங்காலமாக அரசியல் 'புலி'யாகத் திகழ்ந்த அம்னோ தற்போது மக்களின் கேலிக்கூத்துக்கு இலக்காகியுள்ள ஒரு 'பூனை'யாகிவிட்டது என்றால் அது உண்மையா அல்லது நடிப்பா! அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதன் தலைவர்களின் சுயநலப் போக்கினால் கடந்த சில மாதங்களாக அக்கட்சி…

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா!

இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இந்தியர்கள் என்றால் ம.இ.கா.தான் என்ற நிலைமாறி நீண்டநாள்களாகிவிட்டன. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி அக்கட்சிக்கு ஏறக்குறைய சாவுமணியடித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியைத்…

நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில்…

தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை. நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 'இது எங்கே போய் முடியுமோ' என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம்…

இந்துத்துவ இந்திய அரசியல், இங்கே வேண்டாம்! – கி.சீலதாஸ்

இந்த நாட்டின் தூண்கள் எனப்படும் ருக்குன் நெகாரா நாட்டின் தனித்தன்மை கொண்ட இலட்சியங்களை உள்ளடக்கியதாகும். ருக்குன் நெகாரா தேசிய தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. அது எதை உறுதிப்படுத்துகிறது? இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்டம் முறைப்படி ஆட்சி…

சட்டத்தை மீறுவதும் சாதனைதானோ?

இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நமது அரசாங்கம் விதித்திருக்கும் 'எஸ்.ஓ.பி.' எனப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மீறும் 'வி.ஐ.பி.'களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது எல்லாருக்கும் பெரும் வியப்பாகவே உள்ளது. அத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் மக்களுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லவேண்டும்.…

நீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் அடைக்கலம் கோரியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளில் 1086 பேரை கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நமது குடி நுழைவுத் துறையின் போக்கு உண்மையில் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாகும். மியன்மார் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பில் உள்ளதால் இந்த அகதிகளின் உயிர்களுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை…

சமூக மேம்பாட்டுக்கு பங்காற்றியவர் உதயசூரியன்

தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ள கா. உதயசூரியன், ஒரு சிறந்த சேவையாளர். அவர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பல நிலைகளில் ஈடுபட்டுக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றி வருவதாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சமூக இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரைத்தனர். இன்று கிள்ளானில் ஒன்று கூடிய இவர்கள், உதயசூரியன் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும் ஆதரவையும் புலப்படுத்தினர். முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள்…

அரசியல் நெருக்கடியால் எஸ்பிஆர்எம் விசாரணையா?

முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள் அதிகாரிகள்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசேச பணி அதிகாரியாக இருந்த கா உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும்…

மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அரணாக இருந்தவர்கள் சிறுபான்மையினர்

 கி.சீலதாஸ் -   இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பலவகையில் கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று சிறுபான்மையினர் என்ற கேலிக்குக் குறிவைக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சபா, சரவாக் பூர்வீகக் குடியினர் கூட சிறுபான்மையினர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபகற்ப மலாயாவை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் பிழைப்பை…

கம்யூனிஸ்டுகளின் குரலான சிவப்பு துண்டு – தா. பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருந்தபோதும் அவரது உடல் நிலையில்…

தைமாதமா, சித்திரையா, பெரியாரா, இந்துத்துவமா? எப்போது திருந்துவோம்!  

இராகவன் கருப்பையா- கடந்த இரு வாரங்களாக நம் சமூகத்திடையே எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. மலேசிய இந்து சங்கம் ஒரு புறமும் அரசியல்வாதிகளும் அரசு சாரா இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து மற்றொரு பக்கமுமாக வரிந்து கட்டி களமிறங்கி வாள்களைக் கொண்டு போரிடுவதைப்…

ரிம 5 லட்சம் அபராதம் – கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த…

நீதி துறையை விமர்சனம் செய்யும் வகையில் சில வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்ததிற்காக, மலேசியகிணி ரிம 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 9.6.2020-இல் மலேசியகிணியில் வெளியான, “CJ orders all courts to be fully operational from…

தமிழினப்போராளி அமைச்சியப்பன் காலமானார்

தமிழினப்போராளி செ. அமைச்சியப்பன் இன்று (18.2.2021) மாரடைப்பால் காலமானார். சிலகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாலை கேமரன் மலையிலுள்ள தனது இருப்பிடத்தில் காலமானார். தமிழர், தமிழ்மொழி, தமிழ்தேசியம் என்ற சொற்களுக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் உணர்வோடும் உரிமையோடும் தனது வாழ்க்கை பாதையில் பயணித்த அமைச்சு என்ற…

களவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு வாய்ப்பு!

இராகவன் கருப்பையா- முஹிடினின் பெரிக்காத்தான் அரசாங்கம் தனது முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வரைவதற்கு  இந்தக் காலக்கட்டத்தை அவர் நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அவரகாலச் சட்டம் அமலில் இருப்பதால் அடுத்த ஐந்தரை மாதங்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல்…

அந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்!

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அந்நோயின் கோரப்பிடியிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மகிழ்ச்சியான ஒரு விசயம். ஆனால் நம் நாட்டில் அந்த பெருந்தொற்றின் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில்…

தரிசில் தேடும் நீதி – ஓர் அலசல் (updated)

கி.சீலதாஸ்  -  மலேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ டோமி தோமஸ் கடந்த ஜனவரி திங்களின் இறுதியில் வெளியிட்டுள்ள தமது “என் கதை – நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்புடைய நூலில், தம்மின் இருபது மாத தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியபோது கிட்டிய அனுபவங்களை விளக்கியுள்ளார். “நீதி…

பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன்    

இராகவன் கருப்பையா - பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரனை அறியாதவர்கள் நம் நாட்டில் யாரும் இருக்க முடியாது. இப்போதுதான் அவருக்கு 9 வயதாகிறது என்ற போதிலும்  மலேசியாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டில் அவர் ஒரு 'சுப்பர் சீனியர்'. அவரின் சகாசங்கள் கொண்ட காணொளிகல் இனையத்தளத்தில் உள்ளன. கடந்த…

அமுதா கருப்பண்ணனின் அபாரப் பயணம்!

இராகவன் கருப்பையா- ஆண்களை மிஞ்சும் பெண்கள் அதிசயிக்கும் சாதனைகளை புரிவது அரிது. அதிலும் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சாதிக்கும் தமிழ்ப் பெண்களைக் காண்பது சற்று அபூர்வம்தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வறுமைக் கோட்டில் வளர்ந்து ஆயுள் காப்புறுதித் துறையில் ஆசிய நிலையில் உச்சத்தைத் தொட்டவர்தான் அமுதா கருப்பண்ணன்.…