26 பொருள்களின் விலை உயரும்

எல்லாத் துறைகளிலும்  விலையேற்றம்  நடப்புக்கு  வந்த  பின்னர் குறைந்தது  26 பொருள்கள்  மற்றும்  சேவைக் கட்டணங்கள்  விலை உயரும்  என்கிறார் யுனிவர்சிடி  உத்தாரா மலேசியா(யுயுஎம்)  பேராசிரியர்  ஒருவர். நேற்று  சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த  விலை உயர்வு  மீதான  கருத்தரங்கத்தில்  கலந்துகொண்டு  பேசிய  யுயுஎம்  பொருளாதாரப்  பேராசிரியர்  அமிர் …

மலேசியாவில் மனித உரிமைகள் கூட்டமைப்புக்குத் தடை

கோமங்கோ என்ற மனித உரிமைகள் கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது, மலேசியா கடுமைவாத இஸ்லாமிய குழுக்களுக்கு அடிபணிந்து வருவதைக் காட்டுகிறது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். இவரின் தொலைபேசி பேட்டியை (இங்கே சொடுக்கவும்) பிபிசி தமிழோசை இன்று வெளியிட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணனின் கேள்விகளுக்குப் பதிலளித்த…

விசாரணைக்காக அமைச்சரின் உதவியாளர் கைது

அமைச்சரின்  சிறப்பு  அதிகாரி  ஒருவரும்,  டத்தோ  பட்டம்  கொண்ட ஒரு வணிகர் உள்பட  மேலும்  இருவரும் ஊழல் தொடர்பான  விசாரணைக்கு உதவியாக தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சின் சுத்திகரிப்பு  வேலைக்கான  குத்தகை  தொடர்பில் அம்மூவரிடமும்  விசாரணை  நடப்பதாக  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  அதன்  அறிக்கையில்  கூறி  இருந்தது. தடுத்து வைக்கப்பட்டவர்களின் …

ஜயிஸ் மற்றவர் சமய உரிமைகளை மீறவில்லை

சிலாங்கூர்  இஸ்லாமிய  சமய  விவகார மன்றம் (மயிஸ்), அதன் அமலாக்கப்  பிரிவான மாநில  இஸ்லாமிய  விவகாரத் துறை (ஜயிஸ்),  அதிரடிச்  சோதனை  நடத்தி  பைபிள்  பிரதிகளைக் கைப்பற்றிய  நடவடிக்கையைத்  தற்காத்துப்  பேசியுள்ளது. ஜயிஸ்  மற்றவர்களின்  சமய  உரிமைகளை  மீறியதாகக்  குறைகூறப்படுவது  பற்றிக்  கருத்துரைத்த  மயிஸ்  தலைவர் முகம்மட்  அட்சிப் …

பாதர் லாரன்ஸ் மீதான விசாரணையை போலீஸ் கைவிடாது

கத்தோலிக்க  வார  இதழான த ஹெரால்ட்-இன்  ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ்  எண்ட்ரு  மீதான   விசாரணை  அறிக்கை சட்டத்துறை தலைவர் (ஏஜி)  அலுவலகம்  அனுப்பப்பட்டு  அது  போதாது என்று  ஏஜி திருப்பி  அனுப்பி விட்டாலும்கூட  போலீஸ்  அவர்மீதான விசாரணைக்  கைவிடப்போவதில்லை. அவர்மீதான  விசாரணை  தொடரும். ஏஜி  அலுவலகம்  அனுப்பப்படும்  ஆவணங்கள்,…

‘ஹெரால்ட்’ ஆசிரியர் முஸ்லிம்களின் மனத்தைக் காயப்படுத்தப் புறப்பட்டிருக்கிறார்

கத்தோலிக்க  வார இதழ்  ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ்  அண்ட்ரு, சிலாங்கூர் தேவாலயங்களில் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்னும் சொல்  தொடரந்து  பயன்படுத்தப்பட்டு  வரும்  என வலியுறுத்தி  வருவது  அவர் “முஸ்லிம்களின் மனத்தை நோகடிப்பதில்” முனைப்பாக  இருக்கிறார்  என்பதைக்  காண்பிக்கிறது. முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் இவ்வாறு  குறிப்பிட்டதாக …

யுஎஸ் இமாம்: ‘அல்லாஹ்’என்ற சொல்ல தடைபோடுவது இறைவனைக் களங்கப்படுத்தும் செயல்

இறைவன்  பெயரைப்  பாதுகாப்பதாகக்  கூறும் மலேசிய இஸ்லாமிய  அதிகாரிகள்  உண்மையில்  அல்லாஹ்-வின் பெயரைக் “களங்கப்படுத்துகிறார்கள்” என அமெரிக்க  இமாம் ஒருவர்  கூறியுள்ளார். மலேசியாவில்  முஸ்லிம்- அல்லாதார்  ‘அல்லாஹ்’ என்று சொல்ல  தடைவிதித்திருப்பது  திருக்குர்ஆன் போதனைகளுக்கு  எதிரானது  என  செண்ட்ரல்  புளோரிடா  இஸ்லாமியக்  கழகத்தின்  தலைவரான  இமாம்  முகம்மட்  முஸ்ரி …

டிஏபி: கோமாங்கோ-வைச் சட்டவிரோதமானது என அறிவித்தது கேலிக்குரியது

என்ஜிஓ-களின் கூட்டமைப்பான  கோமாங்கோவைச் சட்டவிரோதமானது என்று  உள்துறை  அமைச்சு அறிவித்திருப்பதை  டிஏபி-இன் டோனி  புவா  கேலி  செய்துள்ளார். நடப்பு உள்துறை  அமைச்சரான  அஹமட் ஜாஹிட்  ஹமிடி,  பெர்சே 2.0-ஐ  சட்டவிரோத அமைப்பு  என்று  அறிவித்த  முன்னாள் அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனை  “மிஞ்சப் பார்க்கிறார்  என புவா  கூறினார். “பெர்சே …

முகைதின் எழுத்தாளர்களை ‘அவமதித்தார்’ என உதயசங்கர் இடித்துரைத்தார்

துணைப் பிரதமர் முகைதின் யாசின்  எழுத்தாளர்கள்  அரசாங்க- ஆதரவாளர்கள்  என்று  கூறியதன்வழி  அறிவுஜீவிகளை  அவமதித்து  விட்டார்  என எழுத்தாளர் உதயசங்கர் எஸ்.பி. கூறினார். அப்படிக் கருத்துரைப்பது  படைப்புத்திறனாளிகளின்  அறிவுத்திறத்தையும் அவர்களின் நேர்மையையும்  கண்ணியத்தையும்  களங்கப்படுத்துவதாகும்  என்றாரவர். சர்ச்சைக்குரிய  இண்டர்லொக் நாவலை  மாணவர்-பதிப்பாக  திருத்தி  வெளியிட  ஒரு  குழு  அமைக்கப்பட்டபோது …

ஆறுமாதம் கூடாரங்களில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு விடிவு காலம்

தங்கள்  வீடுகள் இடிந்து  விழலாம்  என்று  அஞ்சியதால்  அவற்றுக்குத்  திரும்பிச் செல்ல  மறுத்து வெளியில் பல மாதங்களாகக் கூடாரங்கள்  அமைத்துக்கொண்டு அவற்றிலே  வாழ்க்கை  நடத்தி  வந்த டிங்கில் தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி  குடியிருப்பாளர்களுக்கு  இப்போது  ஒரு நல்ல  செய்தி  கிடைத்துள்ளது.  கூட்டரசு  அரசாங்கம்  அவர்களுக்குப் புது  வீடுகள் கட்டிக்கொடுக்க …

சீன ஆலய விவகாரங்களுக்குத் தனி வாரியம்

பினாங்கில் சீன ஆலய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள ஒரு தனி வாரியம் அமையும். அது, இந்து ஆலயங்களைக் கவனித்துக்கொள்ளும் பினாங்கு இந்து அற வாரியம் போல் அமைந்திருக்கும் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இந்து அற வாரியம் துணை முதலமைச்சர் 11  பி.இராமசாமியின் தலைமையில்  செயல்படுகிறது. அதில்…

ஐஎஸ்ஏ கொடுமையின் நினைவுச் சின்னத்தை இழுத்து மூடுவீர்

பேராக்கில் உள்ள கமுந்திங் தடுப்புமுகாம் எதிரணித் தலைவர்களையும் சமூக  ஆர்வலர்களையும்   அடைத்துவைக்க நெடுங்காலமாக பயன்பட்டு  வந்துள்ளது.  கடைசியாக அங்கு உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ் தடுப்புக்  கைதிகளாக  இருந்த சிலரும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அரசாங்கம் அம்முகாமை மூடுவதற்குத்  தயாராக இல்லை. அதனால் சீற்றமடைந்த ஐஎஸ்ஏ- எதிர்ப்பு  இயக்கம்(ஜிஎம்ஐ),…

நஜிப் அவர்களே, விமர்சனத்தால் நாட்டுக்கு நன்மையே

நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் சென்.  பெர்ஹாட்டின்  முன்னாள்  ஆசிரியர் அப்துல்  காடிர்  ஜாசின், தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொருளாதாரத்தை நிர்வகித்து வரும் முறையைக் குறைகூறியது  சரியான  ஒன்றே என்கிறார். நாடு  நல்லதொரு  பொருளாதாரத்தைப்  பெற்றிருக்க  விமர்சனங்கள் அவசியம்  என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம் நல்ல  முறையில் …

நிலச் சரிவு நிகழ்ந்த ஜாலான் மகாமேருவில் இரண்டு தடங்கள் திறக்கப்பட்டன

நேற்று மாலை  புக்கிட்  துங்குவில்  நிகழ்ந்த நிலச் சரிவால் மூடப்பட்ட  மகாமேரு  சாலை  இன்று காலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. நாடாளுமன்றத்திலிருந்து  புத்ரா வணிக மையம் நோக்கிச் செல்லும்  அச்சாலையின்   மூன்று தடங்களில் இரண்டு திறக்கப்பட்டதை அடுத்து  அங்கு போக்குவரத்து  சுமூகமாக  நடைபெற்று  வருவதாக  போக்குவரத்து  போலீஸ் …

ரபிஸி: ஜிஎஸ்டி விளக்கமளிப்புக்கு நிறைய செலவிடுவது அதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும்…

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி விளக்கமளிக்க  ஒரு இயக்கத்தைத் தொடங்கி  அதற்காக பெரும்பணத்தைச்  செலவிடுவது எந்த நோக்கத்துக்காக  அந்த  வரி அடுத்த  ஆண்டில் அமல்படுத்தப்படவிருக்கிறதோ  அந்த நோக்கத்தையே தோற்கடித்து விடும் என்று பிகேஆர்  வியூக இயக்குனர்  ரபிஸி ரம்லி  கூறினார். “பற்றாக்குறை நிலையைச் சரிக்கட்டவும்  செலவுகளைக் குறைக்கவும்  ஜிஎஸ்டி…

மகாதிர்: புத்ரா ஜெயாவில் ஹார்ட் ரோக் கபே இருக்கலாம், தப்பில்லை

புத்ரா ஜெயாவில் ஹார்ட் ரோக் கபேயைத்  திறப்பதால் கேடு  எதுவும் நேர்ந்துவிடாது  என்கிறார் முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். நாட்டின்  நிர்வாக தலைநகரமானது  அது  கேளிக்கைகளுக்கு எதிரானது  அல்ல.  ஆனால், மதுபானங்கள், கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகள்  போன்றவற்றுக்கு அங்கு இடமில்லை என்பதை  அவர் வலியுறுத்தினார். “நமக்குப்…

கிறிஸ்துவர்களுக்கு மலாய்மொழி பைபிளா? நம்பலாமா?

‘மலாய்க்காரர்களிடையே கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பும்  முயற்சி இல்லை  என்பதை  உறுதிப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு’ சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்)க்கு உண்டு. அப்படிப்பட்ட  முயற்சிகள் இல்லை என்பது  இப்போது  தெளிவாகியுள்ளது என  ஷியாரியா வழக்குரைஞர்  சங்கத் தலைவர் மூசா  ஆவாங், மலேசியாகினிக்கு  அனுப்பிவைத்த அறிக்கையில்  குறிப்பிட்டார்.. ஆனால், ஒரு விசயம்தான் நெருடலாக…

பிஎஸ்எம் தலைவர்: முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்தோம் என்பதற்கு ஆதாரமில்லை

மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்), முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்கிறது  என்பதற்கு  எந்த  ஆதாரமும்  இல்லை என்பதால் அதனிடமிருந்து  கைப்பற்றப்பட்ட  பைபிள்களை மாநில  அரசு  திருப்பிக் கொடுக்க  வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. 1985-இலிருந்து  பைபிள்களை  விநியோக்கும்  ஒரு மையமாகத்தான் பிஎஸ்எம்  செயல்பட்டு  வருகிறது என  அதன் தலைவர்  லீ…

பைபிள் கழகத்துக்குள் செல்ல எம்பிபிஜே அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (எம்பிபிஜே), அதிகாரிகள் இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்) த்துக்குள் சென்று  சோதனை  செய்ய  விரும்பினார்கள். ஆனால், அவர்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த வாரம்  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஎஸ்) பிஎஸ்எம்மில் அதிரடிச் சோதனை  நடத்தியது நினைவிருக்கலாம். இதன் தொடர்பில்  பிஎஸ்எம் தலைமைச் …

அல்லாஹ் விவகாரத்தில் புத்ரா ஜெயா தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்

“அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது  தொடர்பில்  முரண்பாடான  கொள்கைகள்  இருப்பதால்  அச்சொல்லை  முஸ்லிம்-அல்லாதார்  பயன்படுத்தலாமா கூடாதா  என்பதில்  புத்ரா ஜெயா தீர்க்கமான ஒரு முடிவைச்  செய்திட வேண்டும் என  சிலாங்கூர் அரசு, விரும்புகிறது. அவ்விவகாரத்தில்  விளக்கம் கேட்டு மாநில அரசு உள்துறை  அமைச்சுக்குக்  கடிதம் எழுதும் என  சிலாங்கூர்…

டிஏபி: சூதாட்ட வரியைக் கொண்டு மலாய்க்காரர்-அல்லாதாருக்கு உதவலாம்

சூதாட்டம் வழியாகப் பெறும் வருமானத்தைத் தனிக் கணக்கில்  போட்டுவைத்து  அதை  முஸ்லிம்-அல்லாதாரின் நலனுக்கும் கல்விக்கும்  கலாச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடலாம்  என்ற கருத்தை  டிஏபி  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அப்படிச் செய்வதால் “ஒரே கல்லில்  இரண்டு  மாங்காயை வீழ்த்தியவர்கள் ஆவோம்” என்கிறார் சிரம்பான் எம்பி அந்தோனி லொக்.    அது, ஹலால்-அற்ற  வருமானம் …

ஹாங் காங் ஊடக சக்கரவர்த்தி ரன் ரன் ஷா 107…

ஹாங் காங்கிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய  நாடுகளிலும் சின்னத் திரையிலும்  பெரிய திரையிலும்  கோலோச்சிய  ரன் ரன் ஷா இன்று 107-வது வயதில்  காலமானார். ஹாங் காங்கில் அவரது இல்லத்தில்  குடும்பத்தார்  சூழ்ந்திருக்க  ஷா அமைதியாகக் கண் மூடினார்  என அவரது நிறுவனம், டெலிவிஷன் புரோட்காஸ்ட்ஸ்  லிமிடெட்(டிவிபி) …

தூங்குமூஞ்சி கவுன்சிலர் சிஎம்மிடம் குட்டுப் பட்டார்

நேற்று பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி) கவுன்சிலர்கள் பதவி-உறுதிமொழி  எடுத்துக்கொள்ளும்  சடங்கின்போது ஒரு  கவுன்சிலர் தூங்கி  விழுவதை முதலமைச்சர் லிம்  குவான் எங்  கவனித்து  விட்டார். பின்னர், லிம் தம்முரையில்  அதை  சுட்டிக்காட்டினார். கவுன்சிலரின் பெயரைக்  குறிப்பிடாமலேயே, “அது முறைகேடானது. (கவுன்சிலர்) இப்படியா பதவியைத்  தொடங்குவது”, என்றவர் கடிந்து கொண்டார்.…