புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி, கைரி, பால் லவ்; எம்சிஎவுக்கு இடம்…

இன்று மாலை பிரதமர் நஜிப் ரசக் அவரது "உருமாற்றம் அமைச்சரவை" உறுப்பினர்களை அறிவித்தார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைச்சரவையில் ஜமாலுடின் கைரி விளையாட்டு மற்று இளைஞர் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். கெராக்கான் மற்றும் மசீச கட்சிகளிலிருந்து எவரும் அமைச்சரவையில்…

முன்னாள் நீதிபதியின் உரைமீது போலீஸ் விசாரணை தொடங்கியது

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவின் உரைக்கு எதிராக செய்யப்பட்ட புகார்கள்மீது டாங் வாங்கி போலீஸ் நிலையம் விசாரணையைத் தொடக்கியுள்ளது. விசாரணை அதிகாரி ஒருவர், முன்னாள் நீதிபதி உரையாற்றிய நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரையும் தொடர்பு கொண்டார். அவரது உரைக்கு எதிராக ஆகக் கடைசியாக…

நுருல் இஸ்ஸா நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்களை முன்மொழிவார்

அண்மைய பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது 'அரசியல். தேர்தல்,  நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான' யோசனைகளை லெம்பா பந்தாய் எம்பி-யாக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் முன்மொழிவார். "தேர்தலுக்கு முன்னதாக 'இன அரசியல் பயன்படுத்தப்பட்டதாலும்' தேர்தலில் மோசடிகள்  நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதாலும் அவை தேர்தல் முடிவுகள்…

செனட்டர் பதவி? அமைச்சர்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் தி கியாட்

முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுவதை மறுத்தார். இது வெறும் ஊகம் மட்டுமே என்றாரவர். “அப்படி நடக்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அமைச்சர் பதவிக்கு என்னைக் காட்டிலும் தகுதியுடைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக்…

தேர்தல் மனுக்கள்: பக்காத்தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும்

பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகியவற்றில் பக்காத்தான் அடைந்துள்ள வெற்றிக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த தேர்தல் மனுவையும் அல்லது சவாலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ராக்யாட் ஆயத்தமாக இருக்கிறது. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். தமக்குத் தெரிந்த வரையில் தகராறு ஏதுமில்லை என அவர் இன்று நிருபர்களிடம்…

ஆய்வு: 81 விழுக்காட்டினர் அன்வார் அரசியலிலிருந்து விலகுவதை விரும்புகின்றனர்

மே 5 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றாதால் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசியலை விட்டு விலக வேண்டும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 81.62 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். இணைய வர்த்தக செய்தித்தளமான தி எட்ஜ், இணையவழி மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்ட 12,736 பேரில் 10,396…

‘நஜிப் கேட்டுக் கொண்டால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி பேசப்படும்’

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பு விடுத்தால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி  பாஸ் கட்சி பரிசீலிக்கும். இவ்வாறு அந்தக் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் ஹரூண் தாயிப் கூறுகிறர. அந்த அழைப்பு வெளிப்படையாக இருந்தால் தாம் பாஸ் அந்த யோசனையைத் தீவிரமாக கருதும் என அவர்…

பக்காத்தான்: அரசாங்கத்தை ‘வீழ்த்தும்’ பேரணியில் நாங்கள் சம்பந்தப்படவில்லை

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பேரணி நடத்தப்பட வேண்டும் என சில போராளிகள் வேண்டுகோள் விடுத்ததிலிருந்து பக்காத்தான் ராக்யாட் ஒதுங்கிக் கொண்டுள்ளது. பக்காத்தான் கட்சிகள் அந்த யோசனை பற்றி சிந்திக்கவே இல்லை என பிகேஆர் மூத்த தலைவர்  அன்வார் இப்ராஹிம் கூறினார். "அந்த யோசனை எங்களுக்குச் சமர்பிக்கப்படவில்லை. பக்காத்தான் ராக்யாட் அதனை…

தேர்தல் எல்லைகள் திருத்தப்படும்போது சீனர்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படலாம்

தேர்தல் ஆணையம் (இசி), அடுத்து தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது- ஆண்டின் பிற்பகுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது- சீன வாக்காளர்களை ஒரே இடத்துக்குள் அடைத்து வைக்க அது முற்படலாம். “சீன சுனாமி” ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படலாம். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு…

கிட் சியாங் இரட்டை வேடம் போடுவதாக மசீச குற்றம் சாட்டுகின்றது

டிஏபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ராக்யாட் அடைந்த வெற்றிகளை  மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளர்கள் தோல்வி கண்ட இடங்களில் அந்த நடைமுறை  'நியாயமானதாக தூய்மையானதாக சுதந்திரமானதாக' இல்லை எனச் சொல்வதாக மசீச சாடியுள்ளது. "நாம் லிம் சொல்லும் வாதத்தை பின்பற்றினால் பதவி…

தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றச் சொல்வது தேச நிந்தனை இல்லையா ?

உங்கள் கருத்து : "போலீஸ் தாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். மலேசியர்களுக்கு  நீங்கள் நியாயமானவர்கள் என்பதை உணர்த்துவதற்கு அது உதவும்" முனைவர்: ஐக்கியத்துக்காக தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுங்கள் கிள்ளான்வாசி: அந்த Universiti Teknologi Mara (UiTM) இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் எல்லா மாணவர்களுக்கும்…

விளக்கமளிக்க வருமாறு இசி தலைவருக்கு பிகேஆர் அழைப்பு விடுக்கும்

அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் சவால் விடுத்ததை அடுத்து பக்காத்தான் ரக்யாட், பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும்  முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்புக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது. இன்றைய பக்காத்தான் செயலக மன்றக் கூட்டத்தில்…

தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டுமா?: ஏன் இந்த ஆணவமான பேச்சு?

-சி. பசுபதி, தலைவர், தமிழ் அறவாரியம், மே 14, 2013. கடந்த 60 க்கு மேற்பட்ட ஆண்டுகளாக அம்னோ அரசியல்வாதிகள் "தாய்மொழிப்பள்ளிகள்" மூடப்பட வேண்டும் என்று இடையிடையே பாடி வந்த பல்லவியை இப்போது மலாய்க் கல்விமான்களும் பாட ஆரம்பித்துள்ளனர். இப்பல்லவியைத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலங்களில் பாடுவார்கள். தேர்தலுக்கு முன்னர்…

டோங் ஸோங்: கல்வியாளருக்கும் முன்னாள் நீதிபதிக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள…

சீனக் கல்வி பாதுகாப்புக்குழுவான டோங் ஸோங், தேர்தல் முடிவுகள் தொடர்பில் “இனவாத, தீவிரவாத” கருத்துகளை மொழிந்துள்ள யுஐடிஎம் இணை வேந்தருக்கும் ஒரு முன்னாள்-நீதிபதிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. யுஐடிஎம் இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட்டும் (இடம்) முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள்…

அகோங் புதிய அமைச்சரவைப் பட்டியல் தொடர்பில் நஜிப்புக்கு நாளை பேட்டி…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு புதிய அமைச்சரவைப் பட்டியல் தொடர்பில் யாங் டி பெர்துவான் அகோங்  துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா நாளை நண்பகல் கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பேட்டி   அளிக்கிறார். அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னருடைய அங்கீகாரத்தை பெறுவது அந்தப் பேட்டியின் நோக்கமாகும். பிரதமர் துறை இன்று…

‘பக்காத்தான்-ஆதரவு சீன நிறுவனங்களைப் புறக்கணிப்பீர்’: என்ஜிஓ-கள் வலியுறுத்தல்

13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு நிதியுதவி செய்த சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை மலாய் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று சில இஸ்லாமிய என்ஜிஓ-கள் வலியுறுத்தியுள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் செயல்களால் நாட்டில் ஒற்றுமை குலைந்து விட்டதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் (இடம்)…

‘சீனர் சுனாமி’ என்ற கருத்தை நெகிரி மந்திரி புசாரும் நிராகரிக்கிறார்

13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு 'சீனர் சுனாமி' காரணம் என பிஎன் தலைவர்  நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்  முகமட் ஹசானும் சேர்ந்து கொண்டுள்ளார். அண்மைய தேர்தல் முடிவுகள் இளம் வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன்…

‘வாக்காளர்கள் தொடர்பான குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இசி பதவி விலக வேண்டும்’

வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகளுக்கும் ‘அழியா மை’ அழிந்துபோனதற்கும் பொறுப்பேற்று தேர்தல் ஆணையம் (இசி) பதவி விலகுவதே கெளரவமான, கண்ணியான செயலாக இருக்கும் என சமூக அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. “அவர்கள் பேரரசரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவோம். அவர்கள் இயல்பாக நீக்கப்படுவதற்குமுன் அவர்களின் மனசாட்சியின் உறுத்தலால் தாங்களே…

ஹாடி : அம்னோ மூழ்குகிறது அதனுடன் சேர்ந்து நாங்களும் மூழ்க…

மலாய்க்காரர்கள் ஐக்கியமடைய வேண்டும் என அம்னோவில் உள்ளவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். அந்த மலாய் தேசியவாதக் கட்சி 'மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை இனிமேல் காப்பாற்ற முடியாது' என  அவர் வருணித்தார். மூழ்கிக் கொண்டிருக்கும் அம்னோவுடன் பாஸ் சேர்ந்தால் அதுவும் மூழ்கி விடும்…

ஜோகூரில் கட்சி தீர்மானத்தை மீறி ஆட்சிக்குழுவில் இணைந்தார் மசீச பிரதிநிதி

பூலாய் செபாதாங் சட்டமன்ற உறுப்பினர் டீ சியு கியோங்,  அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் முதலாவது மசீச சட்டமன்ற பிரதிநிதியாகியுள்ளார். அவர், இன்று காலை ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆட்சிகுழுவில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப்…

தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பிரதமர்…

தேசிய ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்ற வேண்டும் என முனைவர் ஒருவர் தெரிவித்த  யோசனை மீதான தமது நிலையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவுபடுத்த வேண்டும் என 25 சிவில் சமூக  அமைப்புக்களை அங்கமாக கொண்ட Gabungan Bertindak Malaysia என்னும் கூட்டமைப்பு கேட்டுக்  கொண்டுள்ளது. "பிரதமர்…

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மஇகா தலைமைச் செயலாளர் பதவி துறந்தார்

எஸ் முருகேசன் மஇகா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி துறக்கப் போவதாக தாம் அளித்த உறுதிமொழிக்கு  இணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். மே 5ம் தேதி நிகழ்ந்த தேர்தலில் அவர், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை…

சபா, சரவாக் எம்பி-க்கள் அமைச்சரவைப் பதவிகளை நிரப்புவார்கள்

அமைச்சரவைப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக் கட்சிகளான  மசீச-வும் கெராக்கானும் முடிவு செய்ததைத் தொடர்ந்து சபா, சரவாக்கைச் சேர்ந்த புதுமுகங்கள் காலி  இடங்களை நிர்ப்புவர் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது. மே 5 பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர்களுடைய…