கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி ஒரு சலுகைதான், உரிமையல்ல, ஒரே மலேசியா…
மலேசியாகினி இணையதள உரிமையாளர் எம்கினி டோட்கோம் செண். பெர்ஹாட்டின் நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி கோரிக்கை மீதான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் வெளியிடுதலுக்கான அனுமதி ஒரு சலுகையே தவிர அது ஓர் உரிமையல்ல என்று அரசாங்கத் தரப்பு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. நாளிதழ் வெளியிடுவதற்கு எம்கினி டோட்கோம் செய்திருந்த…
பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல: அரசுதரப்பில்…
மலேசியாகினி இணையத்தள உரிமையாளரான எம்கினி டோட்காம் சென்.பெர்ஹாட் பிரசுர உரிமத்துக்காக செய்த விண்ணப்பத்தை எதிர்க்கும் அரசாங்கம், பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல என்ற வாதத்தை முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்தது. பேச்சுரிமை மீதான அரசமைப்பின் பிரிவு 10-இன்படி பிரசுர உரிமம் வழங்கப்படுவது ஓர் உரிமை என்று…
கவுன்சிலருக்கு நல்ல இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது: பிஸ்ஸா ஹட் விளக்கம்
பெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் அந்தோனி தனஞ்செயனுக்கு இடமில்லை என மிட் வேலி பிஸ்ஸா ஹட் உணவகம் தடைசெய்யவில்லை, மாறாக அவர் அமர்வதற்கு “வசதியான, விசாலமான” இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது என அந்த உணவகம் விளக்கமளித்துள்ளது. நேற்று “தொடர்பாடலில் ஏற்பட்ட தவறு” என்று குறிப்பிட்டு அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்த…
பிரதமரே, உங்கள் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்!
பிரதமரை அவருடைய வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுமாறு கேட்டுக்கொள்வது உலக நடப்புக்கு முரணானதோ, நியாயமற்றதோ அல்ல. பக்கத்தான் மாநில அரசாங்கத் தலைவர்கள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை என்று பாஸ் இளஞர் பிரிவு தலைவர் ஒருவர் கூறுகிறார். பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்கான மின்சாரக் கட்டணம் ரிம2.5…
எம்பி: மாடுவெட்டுதல் கல்வியின் ஒரு பகுதியாகும்
பள்ளிக்கூடங்களில் மாடுவெட்டுதல் என்பது முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் ஒரு பகுதியாகும் என பிஎன் எம்பி ஒருவர் கூறினார். அது இஸ்லாமியக் கல்வியில் ஒரு பகுதியாகும் என ஷாபுடின் யாஹ்யா (பிஎன் -தாசெக் குளுகோர்) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது கூறினார். “அது மாடுகளை எப்படி முறைப்படி வெட்டுவது என்பதை விளக்கும்…
தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவுக்கு உயர்ந்த…
உலகப் பொருளகம், உலகின் 189 நாடுகளை ஆராய்ந்து தொழில்செய்வதற்கு ஏற்ற நாடுகள் என வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கும் பட்டியலில் மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களையும் முந்திக்கொண்டு 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்வழி சிங்கப்பூர், ஹாங்காங், நியு சிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் மலேசியாவும் இடம்பெறுகிறது என அனைத்துலக…
இட்ரிஸ் ஜாலா: பிரதமர்துறைக்கு மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு நியாயமானதே
அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதும் செயல்படுத்துவதும் பிரதமர் துறை(பிஎம்டி)தான் என்பதால் அதற்கு பட்ஜெட்டில் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. பிரதமர் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொறுப்பாக உள்ளன என பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. “உதாரணத்துக்கு நாட்டின் முதலீட்டுச் செலவினம்…
செவிவழி கேட்டதை வைத்து மகாதிர் ‘பண அரசியல்’ எனக் கூறி…
அம்னோவில் பண அரசியல் இன்னமும் பரவலாக இருக்கிறது என டாக்டர் மகாதிர் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பிரதமர் துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், யாரோ சொன்னதைக் கேட்டு மகாதிர் அவ்வாறு சொல்லி இருக்கலாம் என்றார். “கையூட்டு கொடுப்பது கடினமான காரியம். 75,000 உறுப்பினர்களுக்குக் கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கும். யாரால்…
முகிரிஸ் பல்டி அடித்ததைத் தொடர்ந்து கெராக்கான் தேர்தல் பரப்புரைக்கு உதவும்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில். கெராக்கான் இளைஞர் பகுதி மதில்மேல் பூனை போல் இருக்கும் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க கெடா மந்திரி புசாருக்கு உதவும். சுமார் 100 கெராக்கான் இளைஞர்கள், சுங்கை லிமாவ் சென்று, அங்கு“எந்தத் தரப்பிற்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுக்காதிருக்கும் வாக்காளர்களைக் கவரும்” நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கெராக்கான்…
மலேசியா நாடாளுமன்றம் பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மேலானது, காசிம்
பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் "சொரசொரப்பற்ற விவாதங்கள்" நடத்தப்படுவதற்கான வசதிகள் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் "மேஜைகள் கூட இல்லை", என்றாரவர். "அவர்களது…
சீனர்களுக்கு உதவப் போவதாக முக்ரீஸ் இப்போது சூளுரைக்கிறார்
சீனப்பள்ளிகளுக்கு உதவமாட்டேன். சீனர்கள் பாரிசானை ஆதரிக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் சீன சமூகத்திற்கு சவால் விட்ட கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் இப்போது வேறொரு தொனியில் அவர் அச்சமூகத்திற்கு உதவப் போவதாக உறுதியளித்தார். சுங்கை லிமாவ் டாலம், மசீச இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற…
என்ஆர்டி: போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை…
பல பாதுகாப்பு நிறுவனங்கள் போலி அடையாள அட்டை(ஐசி) வைத்துள்ள வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருப்பதைத் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அடையாளம் கண்டிருக்கிறது. எனவே, போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர், வங்கிகளின் பாதுகாப்புப் பிரிவுகளில் வேலை செய்வது தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என என்ஆர்டி விசாரணை, அமலாக்க இயக்குனர் வான் சக்கரியா வான்…
பள்ளிகளில் குர்பான் -அமைச்சர்களிடையே முரண்பாடு
இரண்டாம் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூஸோ, பள்ளிகளில் மாடுகள் அல்லது மற்ற விலங்குகள் குர்பான் செய்யப்படுவதை அமைச்சு தடை செய்யாது என்று கூறுகிறார். ஆனால், அதைச் செய்யும்போது பள்ளி நிர்வாகம் மற்ற இனத்தவர் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார். “அப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தும்போது மற்றவர்களையும் மதிக்க…
அஸ்மின்: சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து காலிட்டை அகற்ற முயலவில்லை
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். காலிட்டைப் பதவியிலிருந்து தூக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “எதனால் இவ்விவகாரம் அடிக்கடி தலைநீட்டுகிறது என்று தெரியவில்லை. நாங்கள் கருத்துச் சொல்லக் கூடாதா, என்ன?”, என்றவர்…
பிகேஆர்: உதவித்தொகை அகற்றப்பட்டதால் சீனி உற்பத்தியாளர்களுக்கு 1பில்லியனுக்கு மேல் ஆதாயம்
அரசாங்கம் சீனிக்கான உதவித்தொகையை இரத்துச் செய்ததால் முக்கிய சீனி உற்பத்தியாளர்கள், நல்ல அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ள செண்ட்ரல் சுகர் நிறுவனத்தின் சைட் மொக்தார் அல் புஹாரி போன்றோர் ரிம 1பில்லியன் ஆதாயத்தை அள்ளிக் குவிப்பார்கள் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். “உதவித்தொகை இரத்தாவதற்குமுன்பு அந்…
மகாதிர்: அம்னோவில் தகுதியற்றவர்கள் வெற்றிபெற பண அரசியலே காரணம்
அண்மையில் நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் வெற்றிபெற தகுதியற்ற பலர் வென்றார்கள் என்றால் அதற்கு, அவர்கள் பணத்தை வாரி இறைத்ததுதான் காரணமாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அம்னோ தேர்தலில் ஊழலை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள், நான் நம்பவில்லை. “நிறைய பணம் செலவிடப்பட்டதாக நினைக்கிறேன். வெற்றிபெற முடியாதவர்கள்…
இனி கோயில் உடைப்பை அனுமதியோம்: குழு சூளுரை
செப்டம்பர் மாதம் கோலாலும்பூரில் 101ஆண்டு பழைமையான ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றதைத் தொடர்ந்து வருங்காலத்தில் கோயில் உடைப்புகளைத் தடுப்பதற்காக இந்து பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்படும் என தெலுக் இந்தான் முன்னாள் எம்பி, எம். மனோகரன் கூறினார். அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கவும் …
பரிசோதனைக்காக’ ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதாம்: அரசாங்கம் கூறுகிறது
‘கிறிஸ்துவ இதழான த ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளது உள்துறை அமைச்சு. அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வார இதழ் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, அதில் அச்சொல் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்தது. “பரிசோதனையில் அதில் ‘அல்லாஹ்’…
“ரொம்ப நன்றி” ஒரு பட்ஜெட் நாடகம்
மலேசிய பிரதமர் நஜிப் 2014-ஆம் ஆண்டுக்கான ஒரு பொறுப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அது இரண்டு அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தவறி விட்டது என சாடுகிறார் கா. ஆறுமுகம். குறைந்த சம்பளக் கொள்கையில் மாற்றமில்லை என்பதால் இந்த பட்ஜெட் உண்டாக்கும் விலைவாசி…
த ஹெரால்ட் தடுத்து வைக்கப்பட்டது: பிரதமரின் வாக்குறுதி என்னவாயிற்று?
கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா கின்னாபாலு விமானநிலையத்தில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் மலேசிய ரோமன் கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட்டின் 2,000 பிரதிகள் தடுத்து வைக்கப்பட்டன. இந்தத் தடுத்து வைக்கும் நடவடிக்கை "அல்லாஹ்" என்ற சொல் சாபா மற்றும் சரவாக்கில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நஜிப் அளித்திருந்த வாக்குறுதி…
கட்சி பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும், கெராக்கான் பேராளர்கள்
கட்சி கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கட்சி தொடர்ந்து பாரிசான் பங்காளியாக இருப்பது குறித்து நேற்று நடைபெற்ற கெராக்கான் தேசிய மாநாட்டில் பல பேராளர்கள் கேள்வி எழுப்பினர். கெராக்கன் அதற்குரிய மரியாதையைப் பெறவில்லை என்று ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன்…
பிரதமர் துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு
நாட்டின் நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மக்கள் வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக், அவரது அமைச்சின் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதற்குமுன் இல்லாத அளவிற்கு பெருத்துள்ளது. பிரதமர் துறையின் அடுத்த ஆண்டிற்கான செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரிம16.45 பில்லியன் ஆகும். நடைமுறைச் செலவுக்கு…
மா கெராக்காரன் தலைவராக தேர்வு பெற்றார்
பாரிசான் பங்காளிக் கட்சியான கெராக்கான் அதன் நடப்பு இடைக்கால தலைமைச் செயலாளர் மா சியு கியோங்கை அக்கட்சியின் 2013- 2016 தவணைக்கான தலைவராக தேந்தெடுத்துள்ளது. மா 1086 வாக்குகளைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவை தோற்கடித்தார். தெங் 577…


