"அவசர காலங்களில் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதைத் தவிர, இந்த வழிபாட்டுத் தலம் அண்டை வீட்டாருடன் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று மலேசிய இந்துக்களின் உயர்மட்ட அமைப்பு கூறுகிறது." புச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுத் தளத்தில் (staircase landing) அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தை (சுவாமி சிலை) திரெட்ஸ்…
கிட் சியாங்: குற்றச் செயல் புள்ளிவிவரமும் அவசரகாலச் சட்டமும்
குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டு அதே வேளையில் வன்முறை குற்றச் செயல்கள் கூடியுள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது காரணம் என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "தேசிய போலீஸ்…
மதம் மாற்ற மசோதாவை முற்றாக கைவிடுங்கள் என்கிறார் பினாங்கு பிஎன்…
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை மீட்டுக் கொள்வது மட்டும் போதாது என பினாங்கு மாநில கெரக்கான் சட்ட, மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பல்ஜித் சிங் கூறுகிறார். அதனை இப்போது முழுமையாக ரத்துச் செய்யாவிட்டால் அது மீண்டும் தோன்றும் என அவர் கருதுகிறார். அத்துடன் பிரச்னைக்கான…
‘கூட்டரசு அரசாங்கம் நியமித்த கிராமக் குழுக்கள் சட்டவிரோதமானவை’
பினாங்கு மாநிலத்திற்கு கூட்டரசு அரசாங்கம் நியமித்துள்ள 142 கிராம மேம்பாட்டு பாதுகாப்புக் குழு (JKKP) உறுப்பினர்கள் தேவை இல்லை என முதலாவது துணை முதலமைச்சர் ரஷீட் ஹான்சோன் கூறுகிறார். அந்தக் குழு உறுப்பினர்கள் செயல்படுவது சட்ட விரோதமானது என்பதோடு தொந்தரவாகவும் இருக்கிறது என அவர் சொன்னார். காரணம் அவர்களை மாநில…
என்ஜிஓ: குறுக்கு வழியில் குற்றச்செயல்களைத் தடுக்க இயலாது
அரசாங்கம் போலீஸ் படையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அவசரகாலச் சட்டம் (இஓ) போன்ற அடக்குமுறைச் சட்டங்களை (இஓ) மீண்டும் கொண்டுவருவதன் மூலமாக “குறுக்கு வழியில்” குற்றச்செயல்களைத் தடுக்கப் பார்க்கிறது என வழக்குரைஞர் அமைப்பு ஒன்று சாடியுள்ளது. நாட்டின் குற்றச்செயல் பிரச்னைக்குத் தீர்வு “இஓ போன்ற அடக்குமுறை தடுப்புச் சட்டங்களை…
ஜஹிட்: தேச நிந்தனைச் சட்டத்துக்குத் தேவை இருக்கிறது
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுவதை எதிர்க்கிறார். அதை அகற்றிவிட்டால் தேச நிந்தனைக் கருத்துகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லாது போய்விடும் என்பது அவருடைய கருத்து. “அதை அகற்றுவது அவதூறு கூறுவதை, அபாண்டமாக குற்றம் சாட்டுவதை ஊக்குவிப்பதாக அமையும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல”.…
சில்லறை வணிகர்கள்: தொடர் மினி மார்க்கெட்-கடைகள் ‘எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன’
பேரங்காடி ஒன்று நடத்தும் தொடர் மினி மார்க்கெட்-கடைகளுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வணிகர் சங்க உறுப்பினர்கள் நேற்று ஷா அலாமில் இரண்டு தொடர் மினி மார்க்கெட் கடைகளுக்கு வெளியில் கூடினர். மலேசிய முஸ்லிம் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30 பேர், நேற்று பிற்பகல் 99…
மாயாவி தட்டப்பயறு இராணுவத்தை தேடுகின்றனர்
'அம்னோ இணைய எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதால் பக்காத்தான் ராக்யாட்டை ஆதரிக்கின்றவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது என எண்ணக் கூடாது' 'தட்டப்பயறு இராணுவத்தை அரசாங்கம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை' சியாங் மாலாம்: தட்டப்பயறு இராணுவம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் அந்த மாயாவியான தட்டப்பயறு இராணுவத்துடன் மோதுவதற்கு ஏன் 350…
சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை அமைச்சரவை மீட்டுக் கொள்கிறது
அமைச்சரவை, சர்ச்சையை ஏற்படுத்திய 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) மசோதாவை மீட்டுக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்ட அந்த மசோதாவை மீட்டுக் கொள்வது என அதன் இன்றையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குழந்தையை மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் மட்டும் போதுமானது…
அம்னோவுக்கு ‘எடுபிடி’ பையனாக தாம் இருப்பதை இப்ராஹிம் இப்போது உணர்ந்துள்ளார்
'இப்ராஹிம், பெட்ரோல் நிலைய உதவியாளராக அல்லது உபசரிப்பாளராக வேலை செய்யத் தகுதி இருப்பதாக நீங்கள் ஏன் எண்ணுகின்றீர்கள் ? அந்த இரு தொழில்களிலும் வேலை செய்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம்' 'பெர்க்காசாவுக்கு செவி சாய்க்காத' அம்னோ/பிஎன் -னை இப்ராஹிம் சாடுகிறார் கோமாளி: பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, நீங்கள் சொல்வது…
EAIC 2009ம் ஆண்டிலிருந்து 31 விவகாரங்களைத் தீர்த்துள்ளது
EAIC எனப்படும் அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் 2009ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் அரச மலேசியப் போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட 31 விவகாரங்களைத் தீர்த்துள்ளது. "அந்த எண்ணிக்கை சிறியது என சில தரப்புக்கள் எண்ணலாம். 2009ல் அந்த ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் அது 2012ல்…
தாயிப் மீது வழக்குப் போட ஏன் நீண்ட காலம் பிடிக்கிறது…
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டின் உறவினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நில ஊழல் விவகாரம் மீது விசாரணை நடத்துவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஏன் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது என ஒர் அனைத்துலக அரசு சாரா அமைப்பு வினவியுள்ளது. 2011ம் ஆண்டு ஜுன் மாதம்…
கூலாய் எம்பி: குழந்தைகள் மதம் மாற்றம் ஐநா ஒப்பந்தத்திற்கு எதிரானது
குழந்தையைத் தன்மூப்பாக மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் மசோதா, மலேசியா கையெழுத்திட்டுள்ள குழந்தை உரிமைகள் மீதான ஐநா ஒப்பந்தத்திற்கு முரணானது. ஆகவே அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என கூலாய் எம்பி தியோ நீ சிங் கூறுகிறார். இஸ்லாத்துக்கு குழந்தைகளை தன்மூப்பாக மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய…
‘இனவாத மருத்துவர்கள் நீக்கப்பட வேண்டும் ஆனால் ஆதாரத்தைக் காட்டுங்கள்’
'இனவாதப் போக்குடைய மருத்துவர்கள் நீக்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் மருத்துவராக சேவை செய்வதற்கு எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுகின்றனர் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார். அந்த விவகாரம் மீது விசாரித்து பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு, இனவாதிகள் எனத் தாம் கூறிக் கொள்ளும் மருத்துவர்களுடைய பெயர்களை…
குழந்தைகள் மத மாற்றம்: மலேசிய இந்து தர்ம மாமன்றம் எதிர்க்கிறது
கடந்த ஜூன் மாதம் 26 இல் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இஸ்லாமியச் சட்ட நிருவாக (கூட்டரசுப் பிரதேசம்) திருத்த மசோதாவிற்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. "இச்சட்டத்தால் இந்நாட்டிலுள்ள இந்துக்கள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகும்", என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின்…
இடைத் தேர்தல்: அழியா மை புதிய விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்படும்
கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையை ஒரு புதிய விநியோகிப்பாளரிடமிருந்து வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்துள்ளார். “இம்முறை மேம்பட்ட மையை வாங்குவோம்.....அது அழியாமல் இருக்க அதில் போதுமான அளவு சில்வர் நைட்ரேட் இருப்பதையும் உறுதிப்படுத்துவோம்”,…
‘பெயர் இல்லை’ என்பதே ஒருவரின் பெயரான விந்தை
சாபா, தாவாவில் பிறந்த ஒருவர் 40 ஆண்டுகளாக ‘பெயர் இல்லை’ என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாக சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினார். மஹாட் இஸ்மாயில், 65, பிறந்தபோது அவரின் தந்தை மற்ற விசயங்களில் மும்முரமாக இருந்ததால் பெயரைப் பதிவு செய்யவில்லை உடனே,“மருத்துவ மனை…
கோபிந்த்: இஓ-வுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் சட்டத்தின் வரைவைக் காட்டுங்கள்
அவசரகாலச் சட்டவிதி(இஓ)களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் வரைவை முதலில் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அதன் தொடர்பில் பின்னூட்டம் வழங்க முடியும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. அப்புதிய சட்டம் தொடர்பில் மாற்றரசுக் கட்சிகள், என்ஜிஓ-கள் முதலியோரின் கருத்துகளை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு…
ஜூலை 24-இல் கோலா பெசுட் இடைத் தேர்தல்
கோலா பெசுட் இடைத் தேர்தல் ஜூலை 24, புதன்கிழமை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஜூலை 12. அது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை திரெங்கானுவில் விடுமுறை நாளாகும். இதனை இன்று அறிவித்த தேர்தல் ஆணையம், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 20-இல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்தத்…
நீர் விரயத்தைத் தடுப்பதற்குக் கொடுத்த நிதியில் ஷபாஸ் கார் வாங்கியது;…
2011-இல், சியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூருக்கு (ஷபாஸ்) அதன் விரயமாகும் தண்ணீரை 20விழுக்காடாகக் குறைக்கும் திட்டத்துக்காக மாநில அரசு ரிம784 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. ஆனால், விரயமாகும் தண்ணீரின் அளவு குறையவில்லை. அது இன்னும் 33 விழுக்காடாகவே உள்ளது. அப்பணத்தில் 32 விழுக்காடு மட்டுமே அத்திட்டத்துக்காக செலவிடப்பட்டிருக்கிறது. “மீதி, …
மதமாற்ற சட்டமசோதா: கருத்துரைக்க எம்பிகள் தயக்கம்
இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதா 2013 மீது கருத்துத் தெரிவிக்க பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை. மற்ற முஸ்லிம் எம்பிகள் சர்ச்சைக்குரிய அச்சட்ட முன்வடிவு குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (படத்தில்…
கேள்வி நேரம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் குவான் எங்
பினாங்கு சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “இது ஒரு தவறு. இவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடாது. அதற்காக மாநில அரசின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றாரவர். கவர்னர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில் லிம் இவ்வாறு கூறினார்.
சாட்சி: குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு போலி அடையாளக் கார்டு…
சபாவில் போலி அடையாளக் கார்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு கள்ள அடையாளக் கார்டு கண்டு பிடிக்கப்படுவதாக சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் இஸ்மாயில் அகமட் கூறுகிறார். அத்தகைய போலிகளில் மை அடையாளக் கார்டுகள் மட்டும் சம்பந்தப்படவில்லை. பழைய நீல நிற அடையாளக் கார்டுகளும்…
வாக்குகள் எண்ணப்படுவதை நேரடியாக ஒளிபரப்ப அரசாங்கம் எண்ணுகின்றது
கோலா பெசுட் இடைத்தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணப்படுவதை நேரடியாக வீடியோ ஒளிபரப்புச் செய்வதற்குத் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என கூட்டரசு அரசாங்கம் விரும்புகின்றது. அவ்வாறு அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்தைத் தாம் வற்புறுத்தப் போவதாகவும் அதனைச் செய்யும் ஆற்றல் ஆர்டிஎம்-முக்கு உள்ளதா என்பதை விசாரிக்கப் போவதாகவும்…


