"அவசர காலங்களில் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதைத் தவிர, இந்த வழிபாட்டுத் தலம் அண்டை வீட்டாருடன் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று மலேசிய இந்துக்களின் உயர்மட்ட அமைப்பு கூறுகிறது." புச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுத் தளத்தில் (staircase landing) அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தை (சுவாமி சிலை) திரெட்ஸ்…
அரசமைப்பில் திருத்தம் செய்து மதமாற்ற குழப்பத்துக்கு முடிவு கட்டலாம்
தன்மூப்பாக குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்வதன் தொடர்பில் எழுந்துள்ள குழப்பத்துக்கு முடிவுகாண வேண்டுமானால் அரசாங்கம் கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். அப்படிச் செய்வதற்கு டிஏபி-இன் 38 எம்பிகளும் அதற்கு ஆதரவளிப்பர் என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர்…
‘பினாங்கு அரசு விவகாரங்களை மூடிமறைக்கப் பார்க்கிறது’
பினாங்கின் பக்காத்தான் ரக்யாட் அரசு “முக்கிய விவகாரங்களை மூடிமறைக்க” விரும்புகிறது அதனால்தான் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை எடுத்துவிட்டது என்கிறார்கள் பினாங்கு பிஎன் இளஞர் தலைவர்கள். அவர்கள் இன்று சட்டமன்றத்தைப் “பார்வையிட”ச் சென்றிருந்தனர். மாநில பிஎன் இளைஞர் தகவல் தலைவர் இங் கூன் லெங், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் “முக்கியமான” விவகாரங்கள்…
Red Bean Army-யை இன்னும் அடையாளம் காணவில்லை:அமைச்சு ஒப்புதல்
Red Bean Army (தட்டப் பயறு இராணுவம்) என்ற பெயரில் அழைக்கப்படும் மின்வெளி படையை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லை. டிஏபி-இன் நிதியுதவியில் செயல்படுவதாகக் கூறப்படும் அது எங்குள்ளது, யார்யார் அதில் உள்ளனர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை என தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொகாரி…
கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கீடு
சாபா குடிநுழைவுத் துறை முன்னாள் துணை இயக்குனர் இஸ்மாயில் அஹ்மட், கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அரசியல்வாதிகள் தலையிடுவது உண்டு என்றார். சாபாவில் குடியேறிகள்மீது விசாரணை நடத்திவரும் அரச ஆணையத்திடம் இன்று சாட்சியம் அளித்த இஸ்மாயில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…
அஸ்ரி: திருக் குர்ஆன் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கிறது
இஸ்லாத்தைத் தழுவும் தாயோ தந்தையோ தங்கள் பிள்ளைகளையும் மதமாற்றுதல் கூடாது. இதைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி டாக்டர் முகம்மட் அஸ்ரி சைனல், இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்று திருக் குர் ஆன் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். ஒருவர் சுயமாக உணர்ந்து சுய விருப்பத்தின்பேரில்…
சிம்பாங் ரெங்காம் எம்பிக்கு எதிராக பக்காத்தான் தீர்மானம்
பக்காத்தான் ரக்யாட், சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் டெக் மெங்கை நாடாளுமன்ற உரிமை, சலுகைக் குழுவின் விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறும் தீர்மானம் ஒன்றை நேற்று பதிவு செய்தது. ஜெலுத்தோங் டிஏபி எம்பி ஜெப் ஊய் (இடம்), மற்ற பக்காத்தான் எம்பிகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானத்தை…
ஸ்ரீலங்கா பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட்ட மூவர் கைது
ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். 'No Fire Zone: In the Killing Fields of Sri Lanka' என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு என்ஜிஓகள்- கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி…
உத்துசானுக்கு எதிரான வழக்கில் நிஜாருக்கு வெற்றி
WWW1 கார் எண்பலகை விவகாரம் தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் வெற்றி பெற்றார். அவருக்கு இழப்பீடாக ரிம250,000 வழங்க உத்துசானுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வழக்குச் செலவாக ரிம30,000 கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி…
போலி அடையாளக் கார்டு பறிமுதல் ஆர்சிஐ-யைக் கீழறுப்புச் செய்யும் தந்திரமா…
'இனிமேல் போலி அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் யாரும் சாட்சியமளிக்க முன் வரமாட்டார்கள். சாட்சிகளை மிரட்டினால் ஆர்சிஐ எப்படி உண்மையை அறியப் போகிறது?' ஆர்சிஐ-யில் இந்தோனிசியரின் அடையாளக் கார்டு பறிமுதல் மலேசிய இனம்: நான் தவறைச் சரி எனச் சொல்லவில்லை. சாட்சிகள் முன்வந்து சாட்சியமளிப்பதை தடுப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலாகும். ஆர்சிஐ…
திறந்த வெளியில் மது அருந்தத் தடை செய்யும் சட்டம் அரசு…
கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் சுல்தான் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளின் தொடரில் 2- 7-2013 செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர், பொது இடங்களிலும், திறந்த வெளிகளிலும் மது …
கூட்டரசு பிரதேச இஸ்லாமிய நிர்வாக மசோதா சிலாங்கூரிலும் வீண் சலசலப்பை…
-டாக்டர் சேவியர்ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்,ஜூலை 3, 2013. கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைகள் மத மாற்றம் மீதான மசோதாவை மீண்டும் அடுத்த வாசிப்புக்கு எடுத்துச் சென்று அதனைச் சட்டமாக்கும் யுக்தியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இரண்டு விதக்…
மஇகா: இந்தியர்களுக்கான மெட்ரிகுலேசன் இடங்களை நிரப்புவீர்
மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1500 இடங்களையும் கல்வி அமைச்சு நிரப்ப வேண்டும் என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் விரும்புகிறார். மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இடமளிக்கப்பட்டு அதை இந்திய மாணவர்களில் சிலர் நிராகரித்திருந்தால் அந்த இடங்களை மற்ற இந்திய மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சரான…
இன்னொரு அமைச்சரும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு
2013 இஸ்லாமிய சட்ட நிர்வாக(கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதாவுக்கு சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அறிந்ததே. இப்போது இன்னொரு அமைச்சரும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பிரதமர்துறை அமைச்சரான பால் லவ் (வலம்), பெற்றோரில் ஒருவர் 18-வயதுக்குக் குறைந்த தம் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதமாற்ற…
ஆர்சிஐ-இல் ஐசி பறிமுதல்; அதிர்ந்துபோனார் இந்தோனேசியர்
சாபாவில் குடுயேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியம் அளிக்க வந்த ஒர் இந்தோனேசியர், அவர் வைத்திருப்பது போலி அடையாள அட்டை என்று கூறக்கேட்டு அதிர்ந்து போனார். விசாரணை நடத்துனர் ஜமில் அரிபின், இந்தோனேசியாவின் தீமோரில் பிறந்தவரான இஷாக் உஸ்லுவானிடம் இதனைத் தெரிவித்ததும் அவர் பேச்சிழந்து உறைந்து…
கேள்வி பதில் நேரம் இல்லாதது கண்டு குவான் எங்-கும் அதிர்ச்சி
பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் கேள்வி பதில் நேரம் இல்லாதது குறித்து முதலமைச்சர் லிம் குவான் எங் வியப்படைந்துள்ளார். அந்த நிலைமை தவிர்க்கப்பட்டிருக்க முடியும் எனக் கூறிய அவர், மாநில சட்ட ஆலோசகருடைய அறிவுரைக்கு இணங்க அவைச் செயலாளர் அந்த முடிவைச் செய்ததாகத் தெரிவித்தார். "ஜுன்…
பக்காத்தான் வசமுள்ள தொகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறைந்தன
பக்காத்தான் ராக்யாட் வசமுள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி வளர்ச்சி நிதி, பிஎன் தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் 70,000 ரிங்கிட்டுக்கும் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடையில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு டிஏபி சிரம்பான் எம்பி அந்தோனி லோக் கூறிக் கொண்டுள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து நேற்று கிடைத்த எழுத்துப்பூர்வமான…
கைரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களுடைய படங்களை போலீஸ் உருவாக்கியுள்ளது
இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் வீட்டில் அண்மையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுடைய படங்களை போலீசார் உருவாக்கியுள்ளனர். அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக கோலாலம்பூர் போலீசார், பல நபர்களுடைய நடவடிக்கைகளைப் ர் கண்டு பிடித்துள்ளதாக போலீஸ் படையின் முகநூல்…
சபாஷ் தலைமை நிர்வாக அதிகாரிக்கான 33.4 மில்லியன் ரிங்கிட் ஊதியம்…
சபாஷ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸாலி இஸ்மாயிலுக்கு ஊதியமாக 33.4 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டது மீது கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஊதியத் தொகை 'நேர்மையற்றது, பொறுப்பற்றது' என அவர் வருணித்தார். 20 மில்லியன் ரிங்கிட் ஒய்வுக் கொடை உட்பட 2012 நிதி ஆண்டுக்கு…
நஸ்ரி: இஸ்லாத்துக்கு குழந்தையைத் தன்மூப்பாக மதம் மாற்றுவது கூடாது
குழந்தைகளை இஸ்லாத்துக்குத் தன்மூப்பாக மதம் மாற்றுவதை அனுமதிப்பதில்லை என 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவில் தாம் உறுதியாக நிற்பதாக சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். பெற்றோர்கள் இருவருடைய ஒப்புதலுடன் மட்டுமே மதம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது தமது கருத்து என நஸ்ரி இன்று…
லைனாஸ் தொழிற்கூடத்துக்கான தற்காலிக நடவடிக்கை அனுமதி ரத்துச் செய்யப்பட வேண்டும்…
லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (Lamp) தனது அணுக்கதிரியக்கக் கழிவுகளை நிரந்தமாக வெளியேற்றுவதற்கான வசதிகளை தயார் செய்யத் தவறி விட்டதால் அதற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை அனுமதி (TOL) ரத்துச் செய்யப்பட வேண்டும் என குவாந்தான் பிகேஆர் எம்பி பூஸியா சாலே கேட்டுக் கொண்டுள்ளார். அந்தத் தொழில்…
பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் என்பது ஏற்கனவே ‘முடிவான சட்டம்’ என்கிறது…
2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின் 107வது பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மீது வழக்குரைஞர்கள் மன்றம் பொது மக்களை தவறாக வழி நடத்துவதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சட்ட ரீதியாக திருத்தங்கள் செய்யப்படாத வரையில் ஒரு குழந்தையை மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய…
“அவையை தவறாக வழி நடத்தியதற்காக சிம்பாங் ரெங்காம் எம்பி கண்டனத்…
சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு '20 அந்நிய வங்கிக் கணக்குகள்' இருப்பதாக கூறிக் கொண்டதின் மூலம் 'மக்களவையைத் தவறாக வழி நடத்தியதற்காக' கண்டனத் தீர்மானத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். லியாங் இன்று தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளா விட்டால் அவரை அவையின்…
இடைத்தேர்தலுக்கு சாத்தியமான வேட்பாளர்களாக பிஎன் மூவரை அடையாளம் கண்டுள்ளது
எதிர்வரும் கோலா பெசுட் இடைத்தேர்தலுக்கு சாத்தியமான வேட்பாளர்களாக பிஎன் மூவரை அடையாளம் கண்டுள்ளது. "அவர்கள் உள்ளூர்வாசிகள், உயர்ந்த தகுதிகளைக் கொண்டுள்ளனர், விவேகமானவர்கள், உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்," என பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மூன்று பெயர்களும் பிஎன்…


