சமீபத்தில் உயிரிழந்த 14 வயது மாணவி ஒருவரின் தாய், தனது மகள் துன்புறுத்தல் அல்லது கேலி செய்தல் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி, அவருக்கு நீதி கேட்கிறார். கஸ்தூரி என்று மட்டுமே அழைக்கப்படும் அந்தப் பெண், தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்தக் குழந்தைக்கும் ஏற்படக் கூடாது…
வேறு நாடுகளில் குடியேறுமாறு ஏர் ஏசியா X தலைமை நிர்வாகிக்கு…
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உணர்வுகளைத் தூண்டக் கூடிய தலையங்கங்களை வெளியிடும் உத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா X தலைமை நிர்வாகி அஸ்ரான் ஒஸ்மான் ரானி 'தாம் விரும்பும் நாட்டில் குடியேறலாம்' என பிஎன் கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார் ராடின் ஆலோசனை கூறியிருக்கிறார். "அவரைப் போன்றவர்கள்…
அமைச்சர் பாதிக்கப்படும் போது குற்றச் செயல் கற்பனை அல்ல
"ஆகவே குற்றச் செயல் நிலவரம் மோசமாக உள்ளது என்பதை ஒர் அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண மக்கள் கொள்ளையடிக்கப்படும் போது, பாலியல் வன்முறைக்கு இலக்காகும் போது ,கொல்லப்படும் போது அவர்கள் கற்பனை என்று சொல்கின்றனர்" குற்றச் செயல்கள் கூடுவது கற்பனை அல்ல என கைரி திருட்டுச் சம்பவத்திற்கு பின்னர்…
இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம்
பேராக், பினாங்கு, சிலாங்கூர், சரவாக், புக்கெட் பகுதிகளில் கடலோரமாக இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விளைவாக மணிக்கு 50 கிமீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் அதன் வலைத்தளத்தில் கூறியுள்ளது. இது சிறு படகுகளுக்கு அபாயமாக அமையலாம்.…
முஸ்லிம்களுக்கு மட்டுமே அகதிகள் தகுதி என்பது தவறு
முஸ்லிகளுக்கு மட்டும்தான் ‘அகதிகள்’ தகுதி வழங்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை. குடிநுழைவுத் துறைதலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட், குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) இவ்வாறு கூறினார். அகதிகள் தகுதி பெற்ற பலர் பிலிப்பீன்சிலிருந்து வந்த முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்றால் பிலிப்பீன்ஸ் அண்டைநாடாக இருப்பதுதான் காரணமாகும் என்றாரவர். “நமது…
பினாங்கு அம்னோ: கவர்னர் முதலமைச்சரைப் போலப் பேசுகிறார்
பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் புதிய கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து கவர்னர் ஆற்றிய உரை முதலைமைச்சர் லிம் குவான் எங்-கின் சொற்பொழிவுகளைப் போன்று இருந்ததாக அந்த மாநில அம்னோ கூறிக் கொண்டுள்ளது. "மக்கள் வாக்குகள்' ஏஇஎஸ் (Agenda Ekonomi Saksama) போன்ற சொற்கள் லிம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என…
மஇகா: மதமாற்ற மசோதாவில் திருத்தம் தேவை
மஇகா, மதமாற்ற மசோதா இப்போதைய நிலையில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் அது திருத்தம் செய்யப்படுவதை விரும்புகிறது. மஇகா தலைவர் ஜி.பழனிவேல், கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அது பற்றித் தாம் பேசியதாகக் கூறினார். “18வயதுக்குக் குறைந்த பிள்ளையைப் பெற்றொரில் ஒருவர் மட்டுமே மதமாற்றம் செய்ய முடியாது. அதனால்…
‘குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் அவசியம்’
தாயின் ஒப்புதலுடன் மட்டுமே ஒரு குழந்தையை மதம் மாற்ற முடியும் என்பது தான் இஸ்லாத்தின் நிலை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "தாயார் இஸ்லாத்துக்கு மாறாமல் தந்தை மட்டும் மாறியதால் முகமது நபி ஒரு குழந்தையை தாயாரிடம் திருப்பி அனுப்பிய நிகழ்வு ஒன்று உள்ளது," என…
திரெங்கானு பாஸ் கோலா பெசுட் தேர்தலைப் புறக்கணிக்காது
கோலா பெசுட் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் முன்மொழிந்திருப்பதை திரெங்கானு பாஸ் நிராகரித்துள்ளது. அது அந்த இடத்தை பிஎன்னிடமிருந்து தட்டிப் பறிக்க உறுதியுடன் இருக்கிறது. பாஸ் அந்த இடத்தை பிஎன்னிடம் எளிதாக விட்டுக் கொடுத்துவிடாது என மாநில பாஸ்…
தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க நுருல் இஸ்ஸா தீர்மானம் தாக்கல்
லெம்பா பந்தாய் பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை நீக்கக் கோரும் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அது மக்களவை விவாதத்துக்குக் கொண்டுவரப்படும் என்று “நம்பிக்கையுடன்” இருப்பதாக அவர் கூறினார். “வழக்கமாக மாற்றரசுக் கட்சியினரின் தீர்மானம்…
சபா பிஎன் எம்பி-க்கள்: சுலு ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்…
இவ்வாண்டு தொடக்கத்தில் சபாவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன் என்று சபாவைச் சேர்ந்த இரண்டு பிஎன் எம்பி-க்கள் வினவியுள்ளனர். லஹாட் டத்துவில் போலீஸ் அதிகாரிகளை ஊடுருவல்காரர்கள் தாக்கும் வரையில் அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளம் காண அரசாங்கம் தவறி விட்டது…
கலால் வரியை ரத்துச் செய்வதால் கார் விலை குறையும் என…
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான கலால் வரியைக் ரத்துச் செய்வது கார் விலைகளைக் குறைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என அனைத்துலக வாணிக, தொழிலியல் துணை அமைச்சர் ஹமிம் சாமுரி மக்களவையில் கூறியிருக்கிறார். கலால் வரி ரத்துச் செய்யப்பட்டாலும் நடப்பு கார் விலைகளை குறைப்பதா அல்லது அப்படியே வைத்திருப்பதா என்பதை…
சந்தேகத்துக்குரிய நபர்கள் ‘சித்திரவதை’ செய்யப்படுவது ஏன்?
போலீஸ் நிலையங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவதற்கும் தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்வதற்கும் போலீஸ்காரர்களுக்கு விசாரணை முறைகளில் போதுமான பயிற்சி இல்லாதது காரணமாக இருக்கலாம் என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர். கடந்த எட்டாண்டுகளாக வாக்குமூலங்களும் எச்சரிக்கை வாக்குமூலங்களும் நீதிமன்றங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை வழக்குரைஞர் மன்ற குற்றவியல் சட்டக் குழுத்…
மதம் மாற்ற மசோதா மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு…
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மதம் மாற்ற மசோதாவைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு தவறு காரணம் என மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் பழி சுமத்தியிருக்கிறார். இன்று காலை நிருபர்களிடம் பேசிய சுகாதார அமைச்சருமான அவர், அந்த மசோதாவின் மலாய் மொழி வாசகம் ஆங்கில…
ஆயர்: துணைப் பிரதமர் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்
குழந்தைகளை மதம் மாற்றுவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தம் மீது துணைப் பிரதமர் முஹைடின் யாசின் விடுத்துள்ள அண்மைய அறிக்கை 'ஒரே சமயத்தில் அச்சத்தையும் தருகிறது, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது' என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கருதுகிறார். "அரசாங்கம் எல்லாக் கருத்துக்ளையும் கவனத்தில்…
மதம் மாற்றம் மசோதா மீது மனச்சாட்சியுடன் வாக்களியுங்கள் என பிஎன்…
இஸ்லாத்துக்கு குழந்தைகளை மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச சட்டத்தைத் திருத்தும் மசோதா மீது பிஎன் எம்பி-க்கள் தங்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் எனப் பினாங்கு கெராக்கான் தலைவர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார். அவ்வாறு ஆலோசனை கூறிய அந்தக் கட்சியின் மாநில சட்ட, மனித உரிமைப் பிரிவுத் தலைவர் பல்ஜித் சிங்,…
இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் விவகாரம்: புத்ரா ஜெயாவில் பாயில் அமர்ந்து…
இன்றைய நிலையில் 13 மெட்ரிகுலேசன் மையங்களில் 700 இந்திய மாணவர்கள் மட்டுமே பயில்வதாகவும் இன்னும் 800 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என மலேசிய இந்திய கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆ.திருவேங்கடம் உறுதியாகச் சொல்கின்றார். ஆக, இந்த உண்மை நிலை தெரிந்திருந்தும் துணைக் கல்வியமைச்சர் கமலநாதன்…
தண்ணீர் சர்ச்சை குறித்து முக்ரிஸின் பேராளர்களைச் சந்திக்க லிம் மறுப்பு
தண்ணீர் கட்டண விவகாரம் குறித்து கெடா அரசின் கீழ்நிலை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச பினாங்கு தயாராக இல்லை என்று அதன் முதலமைச்சார் லிம் குவான் எங் கூறினார். அவ்விவகாரம் குறித்து கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருடன் நேரடியாக விவாதிப்பதையே அவர் விரும்புகிறார். “உயர்நிலையில் சந்திப்போம். மூன்றாம் தரப்புகள்…
சிலாங்கூருக்கு எதற்காக துணை பட்ஜெட்?: அஸ்மின் கேள்வி
சிலாங்கூர் சட்டமன்ற அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவர் அஸ்மின் அலி (பிகேஆர்- புக்கிட் அந்தாராபங்சா), கூடுதல் நிதி கேட்டு மாநில அரசு துணை பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதைக் குறைகூறினார். இது மாநில அரசின் திட்டமிடும் ஆற்றல் குறித்து ஒரு தப்பான கருத்தை உருவாக்கிவிடும். “2013ஆம் ஆண்டுக்கான…
குகன் வழக்கு குறித்து பேசாதீர்: மக்களவை துணை தலைவர்
தடுப்புக்காவலில் இறந்துபோன ஏ.குகன் விவகாரம் பற்றிப் பேச வேண்டாம் என மக்களவை துணைத் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சயிட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை விதித்துள்ளார். ஜூன் 20-இல், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் அதைப் பற்றிப் பேசுவது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாக அமையும் என்றாரவர். “தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும்…
கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான தேதிகள் வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படும்
தேர்தல் ஆணையம் (இசி) கோலா பெசுட் இடைத் தேர்தல் தொடர்பான விவகாரங்களை வெள்ளிக்கிழமை விவாதிக்கும். அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வேட்பாளர் நியமனம், முன்கூட்டியே வாக்களிப்பது, வாக்களிப்பு ஆகியவற்றுக்கான தேதிகளை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அறிவிப்பார் என இசி செயலாளர் கமாருதின் முகமட் பாரியா கூறினார்.…
மதம் மாற்ற மசோதா இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்படுவதற்கு எம்பி-க்களுக்கு விளக்கமளிக்கப்படும்
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மதம் மாற்றம் மீதான கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும் முன்னர் அரசாங்கம் தனது எம்பி-க்களுக்கு விளக்கமளிக்கும். "நாங்கள் முடிந்த அவரை அந்த மசோதாவை ஆராய்வோம். எல்லோருடைய கருத்துக்களையும் கவனத்தில்…
அஜிஸ் பேரி: ‘தொங்கு’ சட்டமன்றத்தில் சுல்தான் மட்டுமே தலையிட முடியும்
திரங்கானுவில் 'தொங்கு' சட்டமன்றம் ஏற்பட்டால் அதனைக் கலைப்பதற்கும் மாநில அரசாங்கத்தை நியமிப்பதற்கும் சுல்தானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநிலச் சட்டமன்ற சபாநாயகரிடம் அந்த அதிகாரம் இல்லை என அரசமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார். மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் முகமட் ஜுபிர் எம்போங், அவைக்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட்டவர்.…
சில இலக்குகளை அடையவில்லை என்பது உண்மையே: மந்திரி புசார்
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், மெராக்யாட் எக்கோனோமி சிலாங்கூர் (எம்இஎஸ்) திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில இலக்குகளை அடையமுடியாமல் போனதை ஒப்புக்கொண்டார். இலவச குடிநீர், சிலாங்கூர் குழந்தைகள் நிதி, மூத்த குடிமக்கள் உதவி போன்றவை அவற்றில் அடங்கும்.. “இவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை. எனவே, இத்திட்டங்கள் அவற்றின் இலக்கை…


