கூட்டக் குறிப்புக்கள் வெளியான பின்னர் கோகிலன் ‘கொண்டோ’ அங்கீகாரம் குறித்து…

பத்து மலையில் சர்ச்சைக்குரிய டோலோமைட் பார்க் அவினியூ ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தை வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை அங்கீகரித்தார் என்பதைக் காட்டும் செலாயாங் நகராட்சி மன்ற கூட்டக் குறிப்புக்கள் காட்டிய பின்னர் அது குறித்து கருத்துரைக்க கோகிலன் மறுத்து விட்டார். அந்தத் திட்டம்…

நுருல் உத்துசானுக்கு எதிராக ஜயிஸில் புகார் செய்தார்

இஸ்லாம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் தாம் விடுத்த அறிக்கைகளை உத்துசான் மலேசியா திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையிடம் புகார் செய்துள்ளார். அந்த நாளேட்டுக்கு எதிராக ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசினிடம் பந்தாய்…

ஜோகூர் அம்னோவுடன் தொடர்பா? மறுக்கிறது ஏஇஎஸ் குத்தகை நிறுவனம்

மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)யைக் குத்தகைக்கு எடுத்துள்ள பேத்தா தெகாப் சென். பெர்ஹாட், அதற்கு ஜோகூர் அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. “பேத்தா தெகாப்(Beta Tegap)சென். பெர்ஹாட், அந்நிறுவனத்துக்கு அம்னோவுடன் உறவோ தொடர்போ இல்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகிறது”, என்று பேத்தா தெகாப்…

சிலாங்கூர் ஏஇஸ்-ஸை நிறுத்தியது, சுயேச்சை ஆய்வு தேவை என்கிறது

போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) அளித்த விளக்கத்தில் திருப்தியுறாத  சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் ஏஇஎஸ் அமலாக்கப்படுவதற்கு அனுமதி வழங்காது என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று போக்குவரத்துத் துறையின் விளக்கத்தைக் கேட்டபின்னர்  மாநில அரசு அம்முடிவுக்கு வந்ததாக காலிட்(இடம்) கூறினார். “நேற்று ஆர்டிடி தலைமை இயக்குனர் சோலா…

இலண்டன் காவல்துறை அவசரத் தேவை பிரிவில் தமிழுக்கு இடம்!

இலண்டன்: இலண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் பெங்காலி, பஞ்சாபி ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. இந்த தகவலை இலண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் நாள்தோறும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண…

அதிர்ச்சி அடைந்துள்ள அகமட் சொந்தப் பாதுகாப்புக்கு போலீசில் புகார் செய்தார்

ஜோகூர் சுல்தானை புண்படுத்தியதாக கூறப்பட்ட முகநூல் பதிவு மீது கைது செய்யப்பட்டு ஜோகூர் பாருவில் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அகமட் அப்துல் ஜலில் தமது சொந்தப் பாதுகாப்புக்கு அஞ்சி போலீசில் புகார் செய்துள்ளார். நேற்றிரவு 7 மணி வாக்கில் புகார் செய்வதற்காக அகமட்-உடன் அவரது…

சமயம் அரசியலுடன் கலக்கப்படும் போது…..

 "நுருல் இஸ்ஸா சொன்னதை வேண்டுமென்றே திரித்து உத்துசான் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் உயர் நிலை அம்னோ தலைவர்கள் கண்டனங்களை வெளியிடுவது உண்மையில் வெறுப்பைத் தருகின்றது." நுருல் இஸ்ஸாவைக் களங்கப்படுத்தும் இயக்கத்தை நிறுத்துங்கள் கிம் குவேக்: அம்னோ தலைவர்கள் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மீது- அவற்றை ஒப்புக் கொண்டாலும்…

மலேசியாகினி அலுவலகத்திற்கு 15 போலீஸ்காரர்கள் வருகை

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை மீtதான ஒரு வாசகரின் கடிதம் குறித்து புலன்விசாரணை நடத்துவதற்காக 15 போலீஸ்காரர்கள் இன்று மாலை (நவம்பர் 8) மலேசியாகினி அலுவலகத்திற்கு வந்தனர். குற்றவியல் சட்டம் 298 இன் கீழ் மலேசியாகினி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு…

‘போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு’

இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவி, பிராந்திய அளவில் முரண்பாடுகள் அற்ற வகையில் செயல்பட்டு வரும் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு…

ராயிஸ்: தாண்டா புத்ரா திரையீட்டைத் தள்ளி வைக்க அமைச்சரவை முடிவு…

தாண்டா புத்ரா திரைப்படத்தை வெளியிடுவதை அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைப்பது என்ற முடிவை அமைச்சரவை எடுத்தது. அந்தத் தகவலை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இன்று வெளியிட்டார். திரையிடப்படுவதற்கு 'பொருத்தமற்ற' அம்சங்கள் திரைப்படத்தில் இருப்பதை அமைச்சர்கள் கண்ட பின்னர் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.…

அகமட் மீது குற்றம் சாட்டப்பட்டது, 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

மலேசிய தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் அகமட் அப்துல் ஜலில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி தெரிவித்துள்ளார். அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்காக நவம்பர் 28ம் தேது நீதிமன்றத்துக்கு அவர் வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. "அவர் விடுவிக்கப்பட்டதற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்,'…

புதிய அம்சங்களுடன் தேர்தல் இணையத்தளம்: பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது பிகேஆர்

பிகேஆர் மூன்று புதிய அம்சங்களுடன் தனது தேர்தல் இணையத் தளத்தைத் திருத்தி அமைத்துள்ளது. ஆதரவாளர்கள் கட்சிக்கு எளிதாக நன்கொடை வழங்குவதற்கு பாதுகாப்பான வழியும் அவற்றுள் ஒன்றாகும். 'பணம் செலுத்துவதற்கு கிரடிட் கார்டு மற்றும் இதர வழிகளும் அதில் உள்ளன. தங்கள் நன்கொடைகள் எங்கள் தேர்தல் முயற்சிகளுக்குச் செல்வதை அவை…

AES சம்மன் பெற்றோருக்கு உதவ பாஸ் முகப்புச்சேவை

தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்) யின்கீழ் சம்மன்கள் பெற்றோருக்கு உதவ பாஸ், கோலாலும்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் அதன் தலைமையகத்தில் ஒரு முகப்புச் சேவையைத் தொடங்க விருக்கிறது. நவம்பர் 21-இலிருந்து அது செயல்படும். சம்மன் பெற்றோர் அவற்றை அங்கு கொண்டுவரலாம் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். அது…

முக நூல் புலனாய்வு: போலீஸ்காரர்கள் வைகறையில் குடும்ப வீட்டில் சோதனை

ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கப்படும் கட்டுமான மதிப்பீட்டாளர் அகமட் அப்துல் ஜலிலின் கிள்ளான் குடும்ப வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஜோகூர் பாருவைச் சேர்ந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் இன்று காலை மணி 6.20 வாக்கில் அவரது குடும்ப வீட்டுக்கு வந்தனர். அந்தத் தகவல் குறித்து…

நுருல் இஸ்ஸா நாளை ஜயிஸில் புகார் செய்வார்

சமய நம்பிக்கையற்ற நிலை என்னும் பிரச்னை மீது தாம் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக தாம் கூறிக் கொள்வதற்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையில் புகார் செய்யவிருக்கிறார். நாளை காலை 11.00 மணி வாக்கில் தாம்…

போக்குவரத்து அமைச்சர் : “AES குத்தகை நிறுவனத்துடன் எனக்குத் தொடர்பில்லை”

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறையைக்  குத்தகைக்கு எடுத்துள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் மிகப் பெரிய பங்குதாரரின் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் கடப்பாடோ அக்கறையோ தமக்கில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பங்குதாரருடன் தமக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அவர் தெரிவித்ததாக சீனமொழி…

ராபிஸி: என்னைக் கட்டுப்படுத்துவதே நாடாளுமன்ற நிருபர்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டதின்…

நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் அல்லாதவர்கள் நிருபர்கள் கூட்டத்தை நடத்துவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை தாம் அம்பலப்படுத்தி வருவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். "நஸ்ரி அத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என நான்…

இஸ்லாத்துக்கு அரசியல் சாயம் பூசுவது யார் ? பாஸ் அல்ல

'நான் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நுருல் இஸ்ஸா அதனைச் செய்யவில்லை. அமைச்சர்கள் உண்மையைப் பேச வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவறாக வழி நடத்தக் கூடாது' இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதாக நுருல் மீது குற்றம் சாட்டப்படலாம் ஜியூடைஸ்: பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் அவர்களே, மற்றவர்கள் இஸ்லாத்தின் …

வேதா: இண்ட்ராப் மீதான தடையை நீக்குங்கள், பிறகு பேசலாம்

இண்ட்ராப்புடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்பினால் முதலில் அந்த இயக்கத்தின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. அரசாங்கம் இண்ட்ராபுடன் பேச்சு நடத்த விரும்புவதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய வேதமூர்த்தி, தாம் ஆகஸ்டில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதுமே நஜிப்பிடமும்…

பிரதமருக்கு உதயகுமாரின் 5 கோரிக்கைகள்

மனித உரிமைக் கட்சித் தலைவர் பி.உதயகுமார், இண்ட்ராபின் 18 கோரிக்கைகளில் ஐந்தையாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013 ஜனவரி முதல் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் அவரைச் சந்திக்க முடியும் என்கிறார். இண்ட்ராப் அதன் 18 கோரிக்கைகளை 2007 ஆகஸ்ட் 12-இல், அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியது. ஆனால், அவப்பேறாக…

ஒராங் அஸ்லி மாணவிகளை அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது

மதிய உணவுக்கு முன்னர் துவா சொல்லத் தவறியதாகக் கூறப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் 12 வயது அஸ்லி மாணவிகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை 'எடுக்கப்படுகின்றது'. குழு நிலையில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை நேற்று நிறைவு செய்து வைத்து பேசிய கல்வித்…

டாக்டர் மகாதீர்: மேற்கத்திய சுதந்திரங்கள் பேரிடர்களுக்கு வழி வகுத்து விடும்

சமய சுதந்திரம் உட்பட மேற்கத்திய இலட்சியங்களினால் மலேசியர்கள் "ஈர்க்கப்பட்டு விடக் கூடாது" என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சமயத்தில் கட்டாயம் கூடாது என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்த கருத்தை நிராகரித்த அவர், மேற்கத்திய சுதந்திரங்களை நாடுவது பல வகையான…

இப்போது பிரதமர் ஹிண்ட்ராப்பை சந்திக்க விரும்புகிறார்

இந்திய சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் பொருட்டு தம்முடன் விவாதம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு ஹிண்ட்ராப் உட்பட இந்திய சமூக அமைப்புக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அழைத்துள்ளார். "இது அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்படும் திறந்த அழைப்பாகும். ஹிண்ட்ராப் மிகவும் வெளிப்படையாக பேசும்…