கெடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அரசு அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் உறுதியளித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும், எதிர்காலத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கான நீண்டகால திட்டத்தை உருவாக்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். “அமைச்சுகள் மட்டத்தில், நீர்ப்பாசன மற்றும்…
துணைப் பிரதமர்: என்எப்சி திட்டம் கணக்காய்வு செய்யப்படும்
அரசாங்கம் சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை கணக்காய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்றை நியமிக்கும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். அந்த நிறுவனம் கடன் நீதிகளை பயன்படுத்தியது, நிர்வாகம், நடப்பு நிதி நிலை ஆகியவை அந்த கணக்காய்வில் உட்பட்டிருக்கும்…
டிஏபி: சொய் லெக் எங்கு நின்றாலும் வீழ்த்திக்காட்டுவோம்
அடுத்த தேர்தலில் நீங்கள் எங்கு போட்டியிடப் போகிறீர்கள். சொல்லுங்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுறச் செய்வோம். இப்படி மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை நோக்கி ஒரு சவாலை விடுத்துள்ளார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். அப்படி அவர் அறிவித்தால் “லியோ தெங் லாய்…
ஹிண்ட்ராப், அம்னோவை வீழ்த்த ABU-உடன் இணைகிறது
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அம்னோவை புத்ராஜெயாவிலிருந்து அகற்றும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள "அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை" என்ற ‘Asalkan Bukan Umno’ (Anything But Umno) ABU-உடன் இணைந்து கொண்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு இயக்கங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அது கேட்டுக்…
நஜிப் எனக்கு எதிரான மருட்டல்களுக்கு “அங்கீகாரம்” அளித்தார் என அம்பிகா…
தேர்தல் சீர்திருத்தம் கோரி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நடத்தப்பட்ட பொதுப் பேரணிக்கு முன்னதாக தமக்கு எதிராக விடுக்கப்பட்ட மருட்டல்களுக்கு பிரதமர் "அங்கீகாரம்" அளித்தார் என பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமது "பயங்கரமான" கனவுகளை நினைவு கூர்ந்த அவர், "அரசாங்கத்தில்…
அமைச்சர்களின் துணைவியர்/துணைவர்கள் சொத்துக்களை எம்ஏசிசி-யிடம் அறிவிக்க வேண்டும்
அரசாங்க நிர்வாகத்தின் நேர்மையை உறுதி செய்யும் பொருட்டு அமைச்சர்களுடைய துணைவியர்/துணைவர்கள் தங்கள் சொத்து விவரங்களை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் அறிவிக்க வேண்டியிருக்கும். தி ஸ்டார் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டது. அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளதாக எம்ஏசிசி…
உத்துசான், அன்வாரின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கை பொருட்படுத்தவில்லை
திருநங்கைகள் தொடர்பாக அன்வார் இப்ராஹிமைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா இன்று மீண்டும் பெரிதுபடுத்தியுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவர் ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க விரும்புகிறார் எனக் குற்றம் சாட்டி அந்த ஏடு ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக காட்டும் முதல்…
சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி…
சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி இன்று சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி-க்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்…
கீழறுப்பு வேலை வேண்டாம், அம்னோவுக்கு அறிவுரை
பினாங்கு அம்னோ தலைவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்க முற்படும்போது உள்ளுக்குள் அடித்துக்கொள்வதையும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற விரும்பினால் இப்படிப்பட்ட செயல்களில் அறவே ஈடுபடக் கூடாது என்று உள்ளூர் மலாய் என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு) ஒன்று அறிவுறுத்தியுள்ளது.…
கெடாவில் பெருங்கூட்டம் பக்காத்தானுக்கு ஒரு நல்ல சகுனம்
உங்கள் கருத்து: “என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாலும்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.” அலோர் ஸ்டாரில் பக்காத்தான் கூட்டத்தில் 10,000பேர் டாக்ஸ்: கெடாவில் பக்காத்தான் ரக்யாட் நிகழ்வுக்கு 10,000பேர் திரண்டனர். அதுவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின்…
ஆயுதக் கொள்முதல் குறித்து ஸாகிட் துளைக்கப்படவிருக்கிறார்
நாளை தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடியை சந்திக்க விருக்கும் மூன்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைக்குள்ளான பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஆயுதக் கொள்முதல் குறித்து அவரை குடையவிருக்கின்றனர். டிஎபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, பிகேஆர் மாச்சாங் எம்பி சைபுடின் நசுடியன் மற்றும் பாஸ்…
ஹசன் அலியின் இடத்துக்கு சிஜங்காங் பிரதிநிதி நியமனம்
பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக, சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் யூனுஸ் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத ஒரு நியமனம் இது. சிலாங்கூர் பாஸ் ஆணையர் டாக்டர் ரனி ஒஸ்மானே அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புதிய ஆட்சிக்குழு உறுப்பினரான…
NFC கடனுக்கு ஒப்புதல் அளித்த முகைதினையும் விசாரிக்க வேண்டும், லிம்
என்எப்சிக்கு அரசாங்கம் வழங்கிய ரிம250 மில்லியன் எளிதான வட்டி கடனுக்கு ஒப்புதல் அளித்ததில் அக்கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த முகைதின் யாசினுக்கு ஏதேனும் பங்குண்டா என்பதை விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று டிஎபி கோரியுள்ளது. இன்று என்எப்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை பதில்களைவிட அதிகமான…
பேராசிரியர்:ஹங் துவா, ஹங் ஜெபாட், ஹங் லி போ –…
ஹங் துவா, ஹங் ஜெபாட் முதலிய மலாய் வீரர்கள் வாழ்ந்ததற்கு எழுத்துப்பூர்வ சான்றுகள் இல்லை என்கிறார் நிறைநிலை பேராசிரியர் கூ கே கிம். அதேபோல் மலாக்கா சுல்தான் மன்சூர் ஷாவின் ஐந்தாவது மனைவி என்று கூறப்படும் ஹங் லி போ இருந்ததற்கும் சான்றுகள் கிடையாது என்கிறார் அவர். அந்த…
டாக்டர் மகாதீர்: குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யும் உரிமை…
மலேசிய நீதித் துறை வரலாற்றில் "முறையீட்டு வீரர்" என அன்வார் இப்ராஹிமை வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அண்மைய குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரருக்கு ஏன் அதே உரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அன்வார் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் வேளையில், முறையீடு…
ஹசன் அலியின் இடத்துக்கு ரனி!
பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக மேரு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரனி ஒஸ்மான் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமிக்கப்படலாம்போல் தோன்றுகிறது. ரனி, மாநில ஆணையர் என்ற முறையில் பாஸ் கட்சியில் உயர்ந்த பதவி வகிப்பவர். அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் துணைத் தலைவர் என்ற முறையில்…
முரட்டுத்தனம் மீதான விசாரணை தொடர்பில் சுஹாக்காம் கேஎல் சென்ட்ரலுக்கு வருகை
பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடத்தைப் பார்வையிடும் பொருட்டு சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையக் குழு இன்றுகேஎல் சென்ட்ரலுக்கு வருகை அளித்தது. சுதந்திரமான நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பேரணியின் போது முக்கியமான…
’300,000 ரிங்கிட் பெற்றதாக கூறப்படும்’ முன்னாள் அமைச்சரை MACC விசாரித்தது
முன்னாள் அமைச்சர் ஒருவர் நன்கொடைகளாக 300,000 ரிங்கிட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று விசாரித்துள்ளது. இப்போது ஒர் எம்பி-யாக இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்திடமிருந்து அந்தத் தொகையைப் பெற்றதாக கூறப்பட்டுகிறது. அந்த முன்னாள்…
‘அன்வார் இஸ்லாமியச் சட்டங்களை ஆதரிக்கிறார்; ஒரினச் சேர்க்கையை அல்ல’
பிகேஆர் தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அவர் உண்மையில் அந்த விவகாரம் மீதான இஸ்லாத்துக்குப் புறம்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டுக் கொண்டார் என்பதை அது சுட்டிக் காட்டியது. "ஷாரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப இல்லாத,…
ஜொகூர் டிஎபி இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மறுக்கிறார், இராமகிருஷ்ணன்
ஜொகூர் மாநில டிஎபி இனவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அது இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் செனட்டர் இராமகிருஷ்ணன். கடந்த ஜனவரி 12 இல் ஷா அலாமில் நடந்த டிஎபியின் தேசிய மாநாட்டில் ஜொகூர் டிஎபி சீனர்களுக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும்…
கடன் ஒப்பந்தத்துக்கு முன்பே ரிம250 மில்லியன் பெறப்பட்டதா? மறுக்கிறது NFC
ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி),அரசிடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெறும் ஒப்பந்தம் 2007-இல் கையெழுத்தானது என்று கூறி, ஒப்பந்தம் காணப்படும் முன்னரே அந்நிறுவனம் கடன்தொகையைப் பெற்றுக்கொண்டதென பொதுக் கணக்குக் குழு(பிஏசி) கூறுவதை மறுத்துள்ளது. “என்எப்சி-க்கும் அரசின் பிரதிநிதியான நிதி அமைச்சுக்குமிடையிலான கடன் ஒப்பந்தம் 2007 டிசம்பர்…
சீரமைப்பு இல்லையென்றால் இன்னொரு பேரணி, பெர்சே கோடிகாட்டியது
தூய்மையான, நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, தேர்தல் சீரமைப்பு தொடர்பிலான தன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும். இன்று கோலாலம்பூரில், வாக்காளர் கல்வி இயக்கம் ஒன்றைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், தேர்தல் சீரமைப்பு மீதான…
ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலக தீவிரவாதத்திற்கு எதிரானது என்கிறார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலகத் தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறியிருக்கிறார். அவர் இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் கூடியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நியப் பேராளர்களிடம் உரையாற்றினார். மிதவாதத்துடன் மலேசியா எப்போதும் இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.…
நஜிப் சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு உத்தரவாதம் அளிப்பாரா?
"மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது." புத்ராஜெயாவுக்கான பக்காத்தான் பாதையில் பல தடைகள் கேஎஸ்என்: சுமூகமான அதிகார மாற்றம் குறித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலில் பேசினார். அதற்கு பிரதமர்…