கலந்துரையாடலை அரசாங்கம் புறக்கணித்தது; ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் குமுறுகின்றனர்

ஆறு அரசாங்க அமைப்புக்கள் கோலாலம்பூரில் ஜாலான் சுல்தானில் எம்ஆர்டி திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன. டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சுற்றுப்பயண அமைச்சு, தகவல் தொடர்பு பண்பாட்டு அமைச்சு , போக்குவரத்து அமைச்சு, பிரதமர் துறை, ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து…

கிட் சியாங் வெறுப்பது ‘மகாதீர் தத்துவத்தை’, மகாதீரை அல்ல

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை தாம் 'வெறுப்பதாக' கூறப்படுவதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார். தாம் உண்மையில் 'மகாதீர் தத்துவத்தையே' நிராகரிப்பதாகவும் அதற்கு புத்துயிரூட்டப்படுவதை எதிர்ப்பதாகவும் லிம் விளக்கினார். அம்னோ, பிஎன் கொள்கைகளில் 'மகாதீர் தத்துவத்தை' மீண்டும் இடம் பெறச் செய்து அதனை நிலை…

இந்தோனிசியாவில் அன்வாருக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் பிரச்சாரத்திற்கு இந்தோனிசிய அரசாங்க, அரசியல் தலைவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள் என தாம் நம்பவில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்த நாட்டில் அன்வாருடைய செல்வாக்கு கூறப்படுவது போல அவ்வளவு அதிகமாக இல்லை என்றார் அவர். மலேசிய அரசியல் சூழ்நிலை…

அன்வார் விலகுவது மனோதத்துவ ‘தந்திரம்’ என அம்னோ வருணனை

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற பக்காத்தான் ராக்யாட் தவறினால் அரசியலிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளது, மனோதத்துவ விளையாட்டு என அம்னோ வருணித்துள்ளது. அந்தத் தகவலை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய அறிக்கை மீது அரசியல் களத்தில்…

சபாஷ் வழக்கு: டிஏபி புவா-வுக்காக 200,000 ரிங்கிட்டைத் திரட்டுகிறது

சபாஷ் எனப்படும்  Syarikat Bekalan Air Selangor பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில்  சபாஷ்-க்கு கொடுக்குமாறு உத்தரவிடப்பட்ட 200,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு டிஏபி நிதி திரட்டுகின்றது. நீர் வள உரிமைகளுக்காக 1 ரிங்கிட் எனப் பெயரிடப்பட்டுள்ள முதலாவது…

பிஎன் -னும் மூன்று மோசமான விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறது –…

"அம்னோ/பிஎன் நமக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும் மோசமான செய்கைகளை மறைத்து விடலாம் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது." பக்காத்தான் மூன்று மோசமான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதாக நஜிப் சொல்கிறார் குழப்பம் இல்லாதவன்: பிரதமருடைய பரிதாபகரமான கபட வேடத்தைக் கண்டு நான்…

பள்ளியிலேயே குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி!

16 வயது பள்ளி மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, அதை தனது சக மாணவியின் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இங்கு இடம்பெற்றுள்ளது. பள்ளியிலேயே பெண் குழந்தை ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இதையடுத்து செய்வதறியாமல் தவித்த அந்த மாணவி,…

லினாஸ் எதிர்ப்புப் பேரணியில் 34 மாநகரங்கள் இணைந்து கொள்ளும்

இந்த மாதம் 14ம் தேதி மலேசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 34 நகரங்களிலும் மாநகரங்களிலும் இன்னொரு சுற்று லினாஸ் எதிர்ப்புப் பேரணிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். 'மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லினாஸை நிறுத்துங்கள்' கூட்டணியின் 'நடவடிக்கை வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. "நாங்கள் தூய்மையான பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வாக்களிப்போம்" என்னும்…

குற்றங்கள்:போலீஸ் அறிக்கைகளில் மட்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது

உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, வழிப்பறிக் கொள்ளை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று போலீஸ்காரர்களே கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் ‘குற்றங்கள்’ குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.” ஹிஷாமுடின்: குற்றங்கள் கூடியிருப்பதாக மாற்றுத்தரப்பினர் கூறுவது உண்மையல்ல டீகி:ஐயா,உள்துறை அமைச்சர் அவர்களே, மக்களிடம் சென்று பேசிப் பாருங்கள்.அப்போது தெரியும் குற்ற நிலவரம் எவ்வளவு மோசமாக…

அம்னோவின் இன்னொரு நிலக்கொள்முதல் முறைகேடு, டிஏபி அம்பலம்

செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், சிலாங்கூர் தஞ்சோங் காராங் அம்னோ டிவிசன் சம்பந்தப்பட்ட இன்னொரு நிலக்கொள்முதலிலும்  முறைகேடு நிகழ்ந்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார.2001-இல் அந்தத் தொகுதி வாங்கிய 1.2ஹெக்டர் நிலத்துக்கு ரிம3.17மில்லியன் கழிவு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். குறிப்பிட்ட அந்த நிலத்தின் மதிப்பு  ரிம3.3மில்லியன் என்று…

வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பாரிசான் தோல்வி!

மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த உயிர் சேதமும் அங்கு ஏற்படாதது இறைவன் செயலாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவரது செய்தி அறிக்கையில் கூறுகிறார். நாளிதழ் நிர்வாகம், பாதுகாப்பு அம்சத்தில் இன்னும் அதிக…

“விலகப் போவதாக” அன்வார் சொல்வது வெறும் தந்திரம் என்கிறார் மகாதீர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் சொல்வது போல அரசியலிலிருந்து விலக விருப்பம் கொண்டிருந்தால் இனிமேல் நேரத்தை விரயம் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "அவர்  அரசியலிலிருந்து இப்போதே விலக வேண்டும். பிரதமராவதற்கு அவர் கொண்டுள்ள விருப்பம் விழலுக்கு இறைத்த நீரைப்…

போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம்

இசா தடுப்புக்காவல் கைதி ரஸாலி காசானின் மனைவியை புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து கமுந்திங் இசா தடுப்புக்காவல் மையத்தின் பணியாளர்களுக்கு எதிராக அவர் செய்துள்ள போலீஸ் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தமளித்துள்ளனர். கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் தலைமையகத்திலிருந்து பல அதிகாரிகள் ரஸாலியின் மனைவி நுனுர்ஹெனி ஒனிம்மை…

முன்னாள் புக்கிட் ஜலில் தோட்டத் தொழிலாளர்கள் பிரதமரைச் சந்திக்கின்றனர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் புக்கிட் ஜலில் தோட்டத் தொழிலாளர்கள் பல காலமாக விடுத்து வரும் கோரிக்கை அடுத்த செவ்வாய்க் கிழமை அதாவது ஜுலை 10ம் தேதி நிறைவேறும். 2011ம் ஆண்டு தொடக்கம் நஜிப்பின் உதவி கோரி பல கடிதங்களை அந்தத் தோட்டத்…

நாடற்ற மலேசியருக்கு குடியுரிமை இயல்பாகவே கிடைக்க வேண்டும்

நாடற்ற மலேசியர்கள்- பிறப்புச் சான்றிதழ் அல்லது நீலநிற மைகார்ட் வைத்திராதவர்கள்-வெளிநாட்டவர் அல்லர். எனவே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறது பிகேஆர். இன்று கிள்ளான் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குப் பின்னர் இவ்வாறு கூறிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அந்த…

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்த ‘ஆட்டிறைச்சித் துண்டு ஹிஷாமை’ GMI…

கமுந்திங் தடுப்பு மய்யத்தில் விடுதலை கோரி இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டக் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்துள்ள உள்துறை அமைச்சரது நடவடிக்கை பொறுப்பற்றதாகும் என GMI என்ற இசா எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது. "இதற்கு முன்னதாக உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுடைய தேர்வு என ஹிஷாமுடின்…

2 மில்லியன் ரிங்கிட் ஊழலுக்கு எம்ஏசிசி அதிகாரிக்கு சிறைத்தண்டனை, அபராதம்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை சேர்ந்த உதவி சூப்பரிடெண்ட் ஒருவருக்கு 2.275மில்லியன் ரிங்கிட் சம்பந்தபட்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மோகன் என்பவருக்கு ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்கானிஸ் தே அஸ்மான் தே…

தலாம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை பற்றி சிலாங்கூர் மந்திரி புசார்…

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் சம்பந்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை விவரங்களை திங்கட்கிழமை Read More

நஜிப்: பக்காத்தானின் மூன்று தீய போதனைகள்

மாற்றரசுக் கட்சிகள் மக்களுக்கு தீயனவற்றை-சமயத்துக்குப் புறம்பானவற்றைக்கூட கற்றுத்தர முனைவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அவற்றுள் மூன்று,விசயங்கள் தெளிவாக தெரிபவை என்றாரவர்.கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்கிறார்கள், நற்செயல்களை மறந்திடலாம் என்கிறார்கள்,வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். “கடந்த பொதுத் தேர்தலின்போது(மாற்றரசுக் கட்சிகள்) பல வாக்குறுதிகளை அளித்தார்கள்.(சில…

இன வேறுபாடுகளுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தை மலேசியா அங்கீகரிக்க வேண்டும்

இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து விதமான இன வேறுபாடுகள் அகற்றப்படுவது மீதான அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தை பல அரசு சார்பற்ற அமைப்புகள் கேட்டுக்கொண்டன. "ஐசெர்ட் இப்போதே அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்ற பரப்புரையை நேற்று தொடக்கி வைத்த பின்னர் மெனாரா பிகேஎன்எஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

செல்கேட்: பிஜே ஊராட்சித் திட்டம் 2-ஐ ரத்து செய்க

 அரசு இதழில் வெளியிட்டுள்ள பெட்டாலிங் ஜெயா ஊராட்சித் திட்டம் 2(பிஜேஎல்பி2) சட்டத்தை அனுசரித்துச் செல்லவில்லை என்பதால் ரத்துச் செய்யப்பட வேண்டும் என திறமை,பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மீதான சிலாங்கூர் தேர்வுக்குழு (செல்கேட்) கூறியுள்ளது. “மாநில சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி அதை ரத்துச் செய்யும் உரிமை மாநில அரசுக்கு உண்டு”, என…

அல்தான்துயா கொலை: கொலையாளிகளின் முறையீடு அக்டோபருக்குத் தள்ளிவைப்பு

மங்கோலிய நாட்டுப் பெண்ணான அல்தான்துயா ஷாரிபூவை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் அதிரடி நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீடு மீதான விசாரணை அக்டோபர் 31க்கும் நவம்பர் 1-க்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அம்முறையீடு முதலில் அக்டோபர் 27, 28-இல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபடவிருந்தது. குற்றவாளிகளில்…