பிகேஆர்: தேர்தல் வேட்பாளர்களை வடி கட்டுவதற்கு உதவி தேவை இல்லை

சாத்தியமான தேர்தல் வேட்பாளர்களை ஆய்வு செய்வதற்கு உதவி செய்ய எம்ஏசிசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன் வந்ததை பிகேஆர் நிராகரித்துள்ளது. "வேட்பாளர் தேர்வு கட்சியின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது எங்கள் வியூகத்தின் ஒரு பகுதி. நாங்கள் அதனை வெளியிட்டால் எம்ஏசிசி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை…

தேர்தலில் பக்காத்தான் பொது அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது

பக்காத்தான் ரக்யாட் ஒரு கூட்டணியாக சங்கப் பதிவதிகாரியால் இன்னமும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் 13வது பொதுத் தேர்தலில் அது ஒரு பொதுவான அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்தவியலாது என்பதைத் தேர்தல் ஆணையம்(இசி) உறுதிப்படுத்துகிறது. அதனால், குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அங்கு போட்டியிடும் கட்சியின் கொடிகளை மட்டுமே பறக்கவிடலாம்;பங்காளிக் கட்சிகளின் கொடிகளைப  பறக்கவிட…

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தை மஇகா திருப்பித் தந்தேயாக வேண்டும்

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு நில மேம்பாட்டாளர் வழங்கிய 6 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கரை மஇகா பறித்துக்கொண்டு விட்டது. அந்த நிலம் பள்ளிக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அதனை அடைவதுதான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் என்று அதன் ஏற்பாட்டாளர் மணிவண்ணன் கூறினார். கடந்த 53 மணிநேரமாக நடந்து வரும்…

WWW1 என்ற எண்ணுக்கு ரிம0.5 மில்லியன் கொடுத்தார் ஜோகூர் சுல்தான்

மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த விலை கொடுத்து வாகனப் பதிவு எண்ணை வாங்கியிருப்பவர் ஜோகூர் சுல்தான் என்று சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி) தெரிவித்துள்ளது.   பலரும் பெற விரும்பிய WWW1 என்ற எண்ணை சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் இஸ்கண்டார் ரிம520,000 கொடுத்து வாங்கியுள்ளார். விலை உயர்ந்த வாகன…

ஏஜி கனி பட்டேய்லை அசைக்க முடியவில்லையே, ஏன்?

உங்கள் கருத்து: “அது ஏனென்றால் மற்றவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.” ஏஜியை எதுவும் செய்ய முடியாது என்றிருந்த நிலை மாறுகிறது ஒடின்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாட் ஜைன்னும் ரம்லி யூசுப்பும் சுமத்திய குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் அசிங்கத்தனத்தைத்…

லெம்பா பந்தாயில் அம்னோ ஆள்களை ஏன் பிகேஆர் கையும் களவுமாக…

கடந்த வியாழக்கிழமை லெம்பா பந்தாய் செராமாவில் கல்லெறிந்தவர்கள் அம்னோ இளைஞர்கள் என்று கூறும் பிகேஆர் அவர்களைக் கையும் களவுமாக பிடித்திருக்கலாமே, ஏன் பிடிக்கவில்லை? லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் சஸாலி கமிலான் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார். அச்சம்பத்தைக் காண்பிக்கும் காணொளி ஆதாரத்தை பிகேஆரின் லெம்பா…

டிஏபி: வான் அகமட் வாக்காளர்களை அவமதிக்கிறார்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புவதாகக் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை தேர்தல் ஆணையம் (இசி) நிராகரித்துள்ளது - அந்த அமைப்பு சுயேச்சையாக இயங்கவில்லை என்பதை மெய்பிப்பதாக டிஏபி கூறுகிறது. அந்த ஆய்வு முடிவுகளை 'அற்பமானவை' என…

உங்கள் கருத்து: அச்சத்தை மூட்டுவதும் மிரட்டுவதும் இனிமேல் வேலை செய்யாது

"அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்." பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?…