மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கான இடங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன?

கடந்த திங்கள்கிழமை துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான மொகைதின் யாசின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் பயில்வதற்கு இந்திய மாணவர்களுக்கு 557 இடங்கள் ஒரே ஒரு முறைதான் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாண்டு பெப்ரவரில் பிரதமர் நஜிப் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல் 1000 இடங்கள் கொடுக்கப்படும்…

அம்னோ இளம் உலாமாக்கள் ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை வரவேற்கிறார்கள்

அம்னோவின் இளம் உலாமா செயலகம், ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறது. அதன் தலைவர் பாதுல் பாரி மாட் யஹயா, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்னும் இரண்டு மூன்று நாள்களில் ஜோகூர் அம்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சினார்…

மெட்ரிக்குலேசன் இடங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன

துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டில் மஇகா தலைவர் ஜி.பழநிவேல் இந்திய மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல்…

குலசேகரனுடன் பொது விவாதத்திற்கு மஇகா தலைவர் பழனிவேல் தயாரா?

இந்தியர் நலன் காக்க பொது விவாதம் செய்வதற்கு மஇகா தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் தயார் என்றால் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனும் தயாராக இருப்பதாக ஈப்போ பாராட் ஜசெக செயலாளர் டாக்டர் ஜெயபாலன் கூறினார். இந்தியர்களின் தங்களின் உரிமைகளை இழந்துள்ளனர் என்பதற்கு குலா பல்வேறு…

ஐஎஸ்ஏ கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிய விரும்புகிறது இந்திய…

இந்திய தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பற்றித் தகவல் அளிக்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் எழுதிக் கேட்டிருக்கிறது. “காவலில் உள்ளவர்கள் உள்பட, இந்திய குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் தகவல் கேட்டு இந்திய தூதரகம் மலேசிய அரசாங்கத்துக்கு…

கமுந்திங் முகாமில் மலேசியாகினிக்கு தடை

கமுந்திங் தடுப்புமுகாம் பணியாளர்கள் மலேசியாகினி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடாது என்று பணிக்கப்பட்டுள்ளனர். உத்தரவில் இணைய செய்தித்தளத்தின் பெயர் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக முகாமின் பணியாளர்களில் ஒருவர் நேற்று தெரிவித்தார். “முகாமின் நிர்வாகம் அவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளது.மற்ற(செய்தி நிறுவனங்களின்) செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”, என்றாரவர். கமுந்திங்…

போலீசார் தியோ பெங் ஹொக் நாடகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்

அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணத்தைச் சித்திரிக்கும் ‘பெங் ஹொக்’ என்னும் நாடகத்தை போலீசார் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.அந்நாடகம் இவ்வாரக் கடையில் மேடையேறவுள்ளது. செவ்வாய்க்கிழமை போலீசாரிடமிருந்து ஓரு தொலைபேசி அழைப்பு வந்ததாக நாடகத் தயாரிப்பாளர் பைசல் முஸ்தபா கூறினார்.அதில் அவர் ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்குச் செல்லுமாறு…

சொய் லெக்: அதனை நான் துணிச்சலாக ஒப்புக் கொண்டேன்

தமது கடந்த காலச் செய்கையை தாம் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அவ்வாறு செய்யும் ஆற்றல் தமது எதிரியான லிம் குவான் எங்-கிற்கு இல்லை என அவர் குற்றம் சாட்டினார். "என்னைப் போன்று தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு…

ஹூடுட் சட்டம்: சந்தடியில்லாமல் பேசுவோம் என்கிறார் அம்னோ பிரதிநிதி

ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இனத்திருக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்ட அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹமட், இப்போது அப்பிரச்னையை சந்தடியில்லாமல் பேச வேண்டும் என்று கூறுகிறார். இப்போது அவ்விவகாரம் குறித்து பேச அயுப் மறுத்து விட்டார் என்று மலாய் நாளிதழ்…

பக்காத்தான் தோற்றால் அன்வார் அரசியலைவிட்டு விலகுவார்?

பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோற்றால் தாம் அரசியலைவிட்டு விலகலாம் என்று பிகேஆர் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று பினான்சியல் டைம்ஸில் வெளிவந்த ஒரு நேர்காணலில், தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறவில்லை என்றால் தாம் “ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்” என்றாரவர். “எங்கள் தேர்தல் அறிக்கையை வழங்கி…

மலாக்கா சிஎம் பதவிக்கு மூவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது

தாங்கா பத்து எம்பி இட்ரிஸ் ஹருனிடம் அடுத்த மலாக்கா முதலமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டிருப்போரில் அவரும் ஒருவர் என்று கூறியதும் வாய் விட்டுச் சிரித்தார். அது உண்மையல்ல என்று கூறிய இட்ரிஸ், முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமின் ஆள்களில் யாராவது ஒருவர்தான் அப்பதவிக்கு வருவார் என்றார். “(முகம்மட் அலி)பல தலைவர்களை…

“நான் சொய் லெக் அல்ல” என்கிறார் லிம்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் ஊழியர் ஒருவரை லிம்-மின் மனைவி பெட்டி சியூ தாக்கியதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் மீது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார். ஒருவருடைய நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும் பிஎன், மசீச நடவடிக்கைகளின் விளைவே அந்தக் குற்றச்சாட்டு என லிம் சொன்னார். தமக்குத் தொடர்புகள் இருந்ததாகக்…

“யார் சொன்னது பினாங்கில் அடக்கவிலையில் வீடுகள் இல்லை என்று?”

பினாங்கில் அடக்கவிலை வீடுகள் குறைவு என்று கூறப்படுவதை மறுத்த மாநில அரசு, ஜார்ஜ்டவுன் நடுவே ஜாலான் எஸ்.பி.செல்லையா ஓரத்தில், குறைந்த விலை, நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகள்(எல்எம்சி) கட்டப்படுவதாக அறிவித்துள்ளது. அதற்காக, பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்துக்குச் சொந்தமான 7.2ஏக்கர் நிலத்தை மாநில மேம்பாட்டு அமைப்பான பினாங்கு மேம்பாட்டுக் கார்பரேசனிடம்…

மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என சைபுலின் தந்தை விரும்புகிறார்

ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முறையீட்டைச் சமர்பிக்க வேண்டும் என்று புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய தந்தையார் அஸ்லான் முகமட் லாஸிம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சில தரப்புக்களுடைய செல்வாக்கு காரணமாக முறையீட்டை ஏஜி அலுவலகம் சமர்பிக்காமல் போகக் கூடாது என்றும் அவர் சொன்னார். கடந்த…

அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் : நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதேன்?

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் எனக் கூறி 50 அரசுசார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் 12. 30 மணி அளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு முன்பு ஒன்றுகூடி…

மலாக்கா சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது

மலாக்கா மாநிலச் சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை நடைமுறை விதிகளை மீறியதற்காகவும் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. கோத்தா லக்ஸ்மணா உறுப்பினர் பெட்டி சியூ ஜெக் செங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், ஆயர் கெரோ உறுப்பினர் கூ போய் தியோங், பண்டார்…

வெளிநாட்டு வாக்காளர்கள்: 3மாதங்களாகியும் இசி எதுவும் செய்யவில்லை

தேர்தல் ஆணையம்(இசி), வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மூன்று-மாத கால அவகாசம் அளிக்கப்பட்டும்கூட எதுவும் செய்யப்படவில்லை என மைஓவர்சீஸ் வோட்(எம்ஓவி) வருத்தம் கொள்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்கு நாடாளுமன்ற ஆதரவுதேடுவதற்காக உருவாக்கி இருக்கும் ஓர் அமைப்புத்தான் எம்ஓவி.இப்போதைக்கு வெளிநாட்டில் உள்ள…

போலீஸ் அம்பாங் எல்ஆர்டி விவகாரத்தை எம்ஏசிசி-க்கு அனுப்புகிறது

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கடந்த வெள்ளிக் கிழமை போலீஸில் புகார் செய்துள்ள போதிலும் அந்த விவகாரத்தை போலீசார் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு…

தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பில் அரசு சாரா அமைப்புக்கள் பிரதமருக்கு மகஜர்…

பல அரசு சாரா சீன அமைப்புக்கள் இந்த மாத இறுதி வாக்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அனுப்பும். அந்த அமைப்புக்களில் செல்வாக்கு மிக்க சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோக் ஜோங்-கும் ( ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம்) அடங்கும்.…

‘நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை காட்டுகின்றன’

"டிஎஸ்பி ஜுட் பெரெரா கடமையை மீறியுள்ளாரா என்பது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டனவா என்பதௌ அதிகாரிகள் அவசியம் விசாரிக்க வேண்டும்." குதப்புணர்ச்சி வழக்கு  IIல் நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியுள்ளது பெர்ட் தான்: இப்போது நீதிபதி அதனை உறுதி செய்துள்ளார். அதாவது டிஎன்ஏ என்ற மரபணு…

அரசியல் வன்முறைகள்: இரு தரப்புக் குழுவை அமைக்க பக்காத்தான் யோசனை

அரசியல் வன்முறைகள் கவலை தரும் வகையில் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கு இரு தரப்பு குழுவை அமைக்கலாம் என்று பக்காத்தான் ராக்யாட் யோசனை தெரிவித்துள்ளது. அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அண்மைய காலத்தில் 'அச்சமூட்டும்' நிலையை எட்டி விட்டதாக டிஏபி தலைவர் ரோனி லியூ கூறினார். வன்முறை மருட்டல்களும் வழக்கமாகி விட்டதையும்…

கந்தரகோளத்தில் 1மலேசியா, என்ன செய்யப் போகிறார் பிரதமர்?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் 1மலேசியா கொள்கையைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தால் உடனடியாக ஸ்ரீகாடிங் எம்பி முகமட் அசீஸ், உத்துசான் மலேசியா, பெர்காசா  ஆகிய  தரப்புகளைக் கண்டிக்க வேண்டும். அம்மூன்று தரப்பினரும் இனவாதிகள் என்றும் அவர்கள் நஜிப் நிர்வாகத்தின் 1மலேசியா கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள் என்றும் டிஏபி…

‘குடிமக்களை வேவு பார்ப்பதை நிறுத்தி குற்றங்களை எதிர்த்துப் போராடுங்கள்’

பிஎன் அரசாங்கம் அரசியல் கட்சிகளை வேவு பார்க்க போலீசின் சிறப்புப் பிரிவுக்கு(எஸ்பி) ஒதுக்கும் நிதியைக் குற்றச்செயல்களை எதிர்க்கும் போராட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று  பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. குற்றச்செயல்கள் மீதான விசாரணைக்குச் செலவாகும் தொகையைவிட அரசியல் கட்சிகளுக்கு எதிரான விசாரணைகளுக்குச் செலவிடப்படும் தொகை 2.8மடங்கு அதிகமாகும் என்று பிகேஆர்…