மேல்முறையீட்டு நீதிமன்றம், ஷார்வாண்டி சோல்லாஹுடின் அவர்களின் 78 மாத சிறைத்தண்டனையை 12 மாதங்களாகக் குறைத்தது. அவர் தனது வேலை மற்றும் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் 39 வயதுடைய ஷார்வாண்டி சொல்லாஹுடினுக்கு முதல் மூன்று குற்றங்களுக்காக 12 மாதங்கள்…
AIMST கணக்காய்வு அறிக்கையில் காணப்படுகிற ‘பொய்யான கோரிக்கைகளை’ பிகேஆர் சுட்டிக்…
மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் மீதான கணக்காய்வு அறிக்கையின் சில பகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. பல மஇகா தலைவர்களை 'பணக்காரர்களாக்குவதற்கு' அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவனம் ஒன்று 'ஏமாற்றியதை' அவை காட்டுவதாக அது கூறிக் கொண்டது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியை நடத்தி வரும் ஜெயா கபே…
பாஸ்: ‘மலாய் நிலம் விற்கப்பட்டதை அம்னோ இளைஞர்கள் எதிர்ப்பார்களா ?”
பினாங்கு பாலிக் புலாவ்-வில் மலாய் சமூகத்துக்குச் சொந்தமான நிலத்தை கொழுத்த ஆதாயத்திற்கு விற்றதாக கூறப்படும் தனது இரண்டு தலைவர்களுக்கு எதிரான தனது நிலையை அம்னோ இளைஞர் பிரிவு அறிவிக்க வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவு சவால் விடுத்துள்ளது. மலாய் சமூகத்தை அலட்சியம் செய்வதாக பினாங்கு அரசாங்கத்தை…
கெடா எம்பி: மெர்செடிஸ் எனக்காக அல்ல; விருந்தினருக்காக
கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசு வாங்கிய மெர்செடிஸ் பென்ஸ் எஸ்350 கார் தமக்காக அல்லவென்றும் கெடாவுக்கு வருகை புரியும் விருந்தினர்களுக்காக அது வாங்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார். டாக்டர் மகாதிர் முகம்மட் கெடாவுக்கு வருகை மேற்கொண்டபோதும் ஜோகூர் பட்டத்திளவரசர் கோலா நெராங்கில் ஒருவாரம் பயிற்சியில்…
தீவகற்பத்தில் காற்றின் தரம் மோசமடைகிறது
வியாழக்கிழமை தொடங்கி இந்தோனேசியாவின் சுமத்ராவில் பல இடங்களில் தீப் பற்றி எரிவதால் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் காற்றின் தரம் சீர்கெட்டிருக்கிறது. சுமத்ராவில் திறந்த வெளிகளில் கட்டுப்பாடற்ற முறையில் காடுகள் எரிக்கப்படுவதும் தென்மேற்குக் காற்று வீசுவதும் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் குறிப்பாக போர்ட் கிள்ளான் பகுதியில் தூய்மைக்கேட்டை…
கெடா அரசு ஆடம்பரச் செலவு செய்வதாக கெராக்கான் குற்றச்சாட்டு
கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக ஆடம்பரக் கார்கள் வாங்குவதில் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குறைகூறப்பட்டுள்ளது. கெடா அரசு, கடந்த ஆண்டு இறுதியில் மந்திரி புசாருக்காக மெர்செடிஸ் எஸ்320 கார் ஒன்றை வாங்கியதாக மாநில கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங்…
தடுப்புக் காவலில் குணசேகரன் மரணமடைந்தது தொடர்பில் வழக்கு
ஆர்எஸ் குணசேகரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்தது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 30ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று ஆணையிட்டுள்ளது. காலஞ்சென்ற குணசேகரனுடைய சகோதரியான ஆர்எஸ் கங்கா கௌரி அந்த வழக்கை ஜுலை 13ம் தேதி தாக்கல் செய்திருந்தார். குணசேகரனைத்…
மெர்தேக்கா தினம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. அது மக்களுடையது
"மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? அது மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானது என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்." பெர்க்காசா: 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) ஒர் அனைத்துலக சுலோகம் மௌனமான பெரும்பான்மை: மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? - உண்மையில் திசை திருப்பப்பட்ட கருத்தாகும்.…
அபு செமான்: கோலாலம்பூர் கடைத் தொகுதிகளில் 9 சம்பவங்கள் மட்டுமே…
இவ்வாண்டு கோலாலம்பூர் கடைத் தொகுதிகளில் 9 குற்றச் செயல்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப் கூறுகிறார். அந்த இடங்கள் பாதுகாப்பானவை அல்ல என்ற பொது மக்கள் எண்ணத்துக்கு ஆதரவாக புள்ளி விவரங்கள் இல்லை என அவர் சொன்னார். "இவ்வாண்டு கோலாலம்பூரில் கடைத் தொகுதிகள்…
“தேவாலயம் இடிக்கப்பட்ட” வழக்கு: ஜோகூர்பாரு மாநகராட்சி மன்ற முறையீடு தள்ளுபடி…
ஒராங் அஸ்லி தேவாலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் மீது ஜோகூர்பாரு மாநகராட்சி மன்றம் (MBJB ) செய்து கொண்ட முறையீட்டை புத்ராஜெயாவில் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சையட் அகமட் ஹெல்மி சையட் அகமட் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த முடிவை ஏகமனதாக…
காரணம் கோரும் கடிதத்தை அம்னோ லாஜிமுக்கு வழங்கியது
முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லாஜிம் உக்கினுக்கு அந்தக் கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் ஒன்றை அம்னோ வழங்கியுள்ளது. அதற்குப் பதில் அளிப்பதற்கு லாஜிமுக்கு இரண்டு வார அவகாசம் கொடுக்கப்படுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…
ஹுடுட் விவகாரத்தில் பிஎன் பங்காளிக்கட்சிகள் மெளனமாக இருப்பது ஏன்?
ஹூடுட் சட்டத்தை முஸ்லிம்-அல்லாதாரிடையேயும் அமல்படுத்த அம்னோ தலைவர்கள் ஆர்வம் காட்டும் வேளையில் வாயைப் பொத்திக் கொண்டிருக்கும் மசீச, கெராக்கான் தலைவர்கள் டிஏபியைக் குறைசொல்ல எந்த உரிமையும் கிடையாது என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். ஹூடுட் விவகாரத்தில் பாஸைக் காட்டிலும் அம்னோ “மிகவும் தீவிரமாக உள்ளது”…
பெர்சே பேரணியில் ஆசிரியர் ஒருவரை “போலீசார் அடித்தனர், உதைத்தனர்
இவ்வாண்டு ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்களை கைது செய்வதற்காக கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் போலீஸ்காரர்கள் நுழைந்து சரணடைய முயன்ற ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. சொங் ஹுவா சுயேச்சை உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் 48 வயது கோ பான்…
தெங்கு ரசாலி: பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கிளந்தான் எண்ணெய் உரிமப்…
எண்ணெய் உரிமப் பணம் கோரு கிளந்தான் மாநில அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தீர்க்குமாறு பிஎன் அரசாங்கத்தை செல்வாக்குமிக்க அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார். 1990ம் ஆண்டு தொடக்கம் பாஸ் கட்சி ஆட்சி புரிந்து வரும் கிளந்தானில் அம்னோவை வலுப்படுத்தும்…
பாஸ்: மெர்தேக்கா சின்னம் முற்றாக கைவிடப்பட வேண்டும்
இவ்வாண்டுக்கான மெர்தேக்கா சின்னம் மிகவும் 'பயங்கரமானது', 'பயனற்றது' என பாஸ் இளைஞர் பிரிவு கூறியுள்ளது. எந்த ஒரு ஊடகத்திலும் கூட கலை அம்சம் கொண்டதாக அது காட்டப்படக் கூடாது என அது கருதுகிறது. "அந்தச் சின்னம் பிரச்சார ஒவியமாக இருந்தாலும் அது அதிகாரத்துவச் சின்னம் அல்ல என தகவல்,…
வேதமூர்த்தி நாடு திரும்ப கடப்பிதழ் கிடைத்தது
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கடப்பிதழ் பெற மேற்கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றார்.புதன்கிழமை அவர் நாடு திரும்புகிறார். 2008-இல் ரத்துச்செய்த கடப்பிதழைத் திருப்பிக் கொடுத்திருப்பது இண்ட்ராப் போராட்டம் நியாயமானதுதான் என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர். கடப்பிதழ் கிடைத்ததும் மலேசியாகினியிடம் பேசிய வேதமூர்த்தி,“மலேசியன் என்று கூறிக்கொள்வதிலும் இந்தியர்களுக்கு மலேசிய அரசாங்கம் இழைத்த பெரும் அநீதியை…
பெர்காசா: ‘Janji Ditepati’ உலகளாவிய ஒரு சுலோகம்
மலாய் உரிமைகளுக்கு அழுத்தம் கொடுத்துவரும் அமைப்பான பெர்காசா, இவ்வாண்டு மெர்டேக்கா கொண்டாட்டத்துக்கான கருப்பொருளான 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) சுலோகத்தைத் தற்காத்துள்ளதுடன் அது உலகம் தழுவிய சுலோகம் என்றும் வலியுறுத்தியுள்ளது. “வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உலகளாவிய பண்பு அல்லவென்று நினைக்கிறீர்களா?...'Janji Ditepati' என்பது உலகளவில் மதிக்கப்படும் ஒரு பண்பு”, என்று…
கார் வரிகள் வேண்டியவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு தேடித்தருகின்றன
உங்கள் கருத்து: “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புரோட்டானால் உலக அளவில் போட்டியிட முடியவில்லை என்றால் அது கடையை இழுத்துமூடுவதுதான் நல்லது”. கார் விலைக்குறைப்பால் வேலையின்மை உருவாகும் ஸ்வைபெண்டர்: புரோட்டோனைப் பாதுகாக்கும் முயற்சியால், இவ்வட்டாரத்தின் கார் தயாரிப்பு மையமாக விளங்கும் வாய்ப்பை தாய்லாந்திடம் பறிகொடுத்தோம். அது…
உங்கள் கருத்து: குற்றச் செயல்கள் கூடுவதற்குப் போலீஸ் திறமைக் குறைவே…
"தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பெருகி விட்டதற்கு போலீஸ் படை தனது கடமையை செய்யத் தவறியுள்ளதும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதும் முக்கியக் காரணங்களாகும்." பாதுகாவலர்கள் மீது செலவு செய்யும் பணத்துக்கு எங்களுக்கு வரிக் கழிவுகள் கொடுங்கள் அபாஸிர்: 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வரிகளை வசூலித்தும் மக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை…
சிகாமட் பள்ளிக்கு ஆதரவாக டோங் ஜோங் பேரணி
சீனமொழி சுயேட்சை உயர்நிலைப்பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி 3,000 க்கு மேற்பட்டோர் இன்று சிகாமட்டில் ஒரு பேரணியில் கலந்து கொண்டனர். சீன கல்வி ஆதரவு குழுவான டோங் ஜோங் மற்றும் இதர சீன அமைப்புகள் இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த…
துவாரான் எம்பி பிஎன்னிலிருந்து விலகினார்
பிஎன் பங்காளிக் கட்சியான உப்கோவின் (UpKo) துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரட் மோஜிலிப் பும்பூரிங் அவரது கட்சியான உப்கோவிலிருந்து விலகுவதன் மூலம் பிஎன்னிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். பக்கத்தானுக்கு உதவ அவர் உறுதியளித்தார். "நான் இதனை உப்கோவின் உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் பலருடன் விவாதித்துள்ளேன். நாங்கள்…
பிரதமர்: லாஜிம் பதவி விலகல் வியப்பளிக்கவில்லை
கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகும் அம்னோ பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின் முடிவைக் கண்டு வியப்படையவில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “லாஜிம் அப்படிச் செய்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுகாறும் கட்சியின் நிலைபாட்டுக்கெதிராகத்தான் அவர் பேசி வந்திருக்கிறார். “அதனால் முடிவு வியப்பளிக்கவில்லை. அவரது முடிவை ஏற்கிறோம். அதை ஒரு…
தேசிய நாளா,பாரிசான் தேசிய நாளா?
உங்கள் கருத்து: “மலேசிய வரலாற்றின் மிக முக்கியமான நாளை எதிர்வரும் தேர்தலுக்குப் பயன்படும் அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.” தேசிய நாள் பாடல் ‘அசிங்கமான பரப்புரை’ என்கிறார் பாடலாசிரியர் சின்னபையன்: பாடலாசிரியர் புத்தி ஹிகாயாட் கூறுவதை முழுமையாக ஏற்கிறேன். தேசிய நாள் கருப்பொருள் பாடல் பிஎன் அரசின் பரப்புரையே தவிர…
சர்ச்சைக்குரிய மெர்டேகா சின்னத்தை அரசு அகற்றியது
மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 55-வது தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சின்னத்துக்குப் பதில், 1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனை அறிவித்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் “தப்பெண்ணங்களைத் தடுக்க” அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார். “தப்பெண்ணத்தைத் தடுக்க 1மலேசியா சின்னத்தை மட்டுமே மெர்டேகா…


