அவசரகாலப் பிரகடனங்களை மீட்டுக்கொள்ளும் தீர்மானம் ஏற்கப்பட்டது

இன்று டேவான் நெகாரா, 1966,1969,1977 அவசரகாலப் பிரகனங்களை மீட்டுக்கொள்ளும் தீர்மானமொன்றை ஏற்றுக்கொண்டது. 1969 ஆம் ஆண்டு அவசரகாலப் பிரகடனம், 1969 மே 13 இனக்கலவரங்களை அடுத்து மே 15ஆம் நாள் விடுக்கப்பட்டது. 1966 செப்டம்பர் 14, சரவாக்கிலும், 1977 நவம்பர் 8-இல் கிளந்தானிலும் அரசியல் சர்ச்சைகள் காரணமாக அவசரகாலம்…

பேரணி மசோதா: செனட்டர்களுக்கு ஒரு திறந்த மடல்

செனட்டர் அவர்களுக்கு, மலேசிய வழக்குரைஞர் மன்றம், 2011,அமைதிப் பேரணி சட்ட முன்வரைவை, அது கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமைக்கு நியாயமற்ற, பொருத்தமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதற்காக எதிர்க்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்தச் சட்டமுன்வரைவில், நடப்புச் சட்டத்தில் உள்ளதைவிட கெடுபிடிகள் அதிகம். எடுத்துக்காட்டுக்கு ‘தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு" (ஊர்வலங்களுக்கு)த்…

பிகேஆர்: டாக்டர் மகாதீர் பொய் சொன்னார், தொடர்ந்தும் பொய் சொல்கிறார்

நிதி நெருக்கடியின் தாக்கத்தை சமாளிப்பதற்கு 1999ம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து மலேசியா கடன்களை வாங்கியிருப்பதை அரசாங்கப் பதிவேடுகள் காட்டுவதை பிகேஆர் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. 2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான இணைப்புப் பகுதிகளை மேற்கோள் காட்டிய பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில், உலகப் பொருளகத்திடமிருந்து…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் ஆடம்பர…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரம் தொடருகிறது. அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்று சொந்தமாக உள்ளது என பிகேஆர் இன்று தகவல் வெளியிட்டது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம்…

சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் எங்களுக்கு ஆசை இல்லை என்கிறது…

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு டிஏபி குறி வைத்துள்ளதாக கூறப்படுவதை அந்த மாநில டிஏபி தலைவர் தெரெசா கோக் நிராகரித்துள்ளார். மாநிலத்தில் இட ஒதுக்கீடுகளைப் பார்த்தால் மாநில அரசாங்கத் தலைமைத்துவத்தை டிஏபி கோருவது இயலாத காரியம் என்பது தெரிய வரும் என அவர் சொன்னார். அவர் இன்று…

ஹசான் சொல்வது “முற்றிலும் அபத்தமானது” என ஆயர் சாடுகிறார்

கிறிஸ்துவ அமைப்பு ஒன்று அந்நிய உதவியுடன் முஸ்லிம்களுடைய நம்பிக்கையை கீழறுப்புச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் ஹசான் அலி கூறிக் கொள்வதை "முற்றிலும் அபத்தமானது" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.…

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

டிஏபி புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் எட்வர்ட் லீ இன்று காலை காலமானார். அவர் சில காலமாகவே புற்று நோயால் சிரமப்பட்டு வந்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறினார். 64 வயதான லீ சுற்றுலா, பயனீட்டாளர் விவகாரம், சுற்றுச்சூழல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத்…

அது ஜாலுர் கெமிலாங் இல்லை; அப்புறம் ஏன் இவ்வளவு ஆரவாரம்?

"டிரிப்போலி சாலைகளிலிருந்து புத்ரா உலக வாணிக மைய வளாகம் வரையில் மாற்றத்துக்கான போராட்டத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. அதன் கூக்குரலையும் செவிமடுக்க முடியாமல் இருக்க முடியாது." "நஜிப் கொடி' விஷயம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை பெண்டர்:  ஊழல் ஆட்சியால் மலேசியர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும்…

இண்ட்ராப் போராட்டவாதிகளுக்கு எதிரான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்

இண்டர்லோக் நாவலுக்கு எதிராகக் குரல் கொடுத்த 54 போராட்டவாதிகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அப்பட்டமான பழி மீட்டுக்கொள்ள சட்டத்துறை தலைவர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். இன்டர்லோக் நாவல் மீட்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சிடமிருந்து எவ்வகையான  முறையான அறிவிப்பும் வெளிவராத சூழலில் நாடெங்கும் இதைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். பல…

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராமசாமி உதவியாளரை நீக்கினார்

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் இன்னொரு நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த முறை அவரது ஊழியர்களில் ஒருவர் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவமாகும். சதிஷ் முனியாண்டி இராமசாமியின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். சதிஷ் இளைஞர், ஆர்வமிக்கவர் என்பதால் அவர்…

“நஜிப் கொடி” சம்வம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை

அம்னோ தலைமையகத்தில் சிறிது நேரத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடியை அகற்றி விட்டு தங்களது எதிர்ப்பு பதாதையைப் பறக்க விட்டதற்காக சனிக்கிழமையன்று அங்கு நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. ஒரு கருத்தை வெளியிடுவதற்கு அது தங்களுக்கு உள்ள உரிமை என அவர்கள் கூறினர்.…

மருத்துவர், காயங்கள் பற்றி மாட் சாபு சொன்னதை ஒப்புக் கொள்கிறார்

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு-வுக்கு ஏற்பட்ட காயங்கள், அவர் சொன்ன நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இருப்பதாக மருத்துவர் ஒருவர் இன்று கூறியிருக்கிறார். அன்றைய தினத்தில் அவசரமான மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 31 வயது…

உலக வங்கிக்கான விண்ணப்பத்தை இபியூ தயாரித்தது

உலக வங்கியிடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை பெறுவதற்கான விண்னப்பத்தை அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டின் கீழ் இயங்கிய பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒரு பிரிவு தயாரித்ததற்கான ஆவணங்களை பிகேஆர் இன்று காட்டியுள்ளது. பகிரங்கமாகக் கிடைக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியிடப்பட்ட உலக வங்கி…

வரும் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்தவும் முன்கூட்டியே வாக்களிக்கவும் இசி…

பிஎஸ்சி தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளூமன்றத் தேர்வுக் குழு, அழியா மை மற்றும் முன் கூட்டியே வாக்களிப்பு ஆகியவை தொடர்பில் வழங்கிய பரிந்துரைகளை 13வது பொதுத் தேர்தலில் இசி என்ற தேர்தல் ஆணையம் அமலாக்கும். அந்தத் தகவலை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் இன்று வெளியிட்டார்.…

நஜிப் பெக்கானில் போட்டியிட உறுதி பூண்டுள்ளார்

பாகாங் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு அந்த மாவட்டத்தை மேம்படுத்தவும் அங்குள்ள சமூகத்துக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்ய நஜிப் அப்துல் ரசாக் உறுதி பூண்டுள்ளார். "சிரமமாக இருந்தாலும் எளிதாக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் நான் பெக்கான் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன். என் உள்ளமும் ஆன்மாவும் பெக்கானில்…

கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறுவதற்கு பின்னணியில் இயங்கும் திருடர்கள் யார்?”

"'ஒர் அந்நிய அமைப்பு அந்தக் கசிவுகளை இதுகாறும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் பாங்க் நெகாரா ஊமையாகவும் செவிடாகவும் இருக்கிறது," லிம்: 150 மில்லியன் ரிங்கிட் இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உங்கள் அடிச்சுவட்டில்: கள்ளத்தனமாக வெளியேறும் பணத்தை துல்லிதமாக கணக்கிடுவது சிரமம் தான். இல்லை என்றால் அதற்குக்…

அம்னோவின் வித்தையில் கழுதை கட்டெறும்பானது

[ஜீவி காத்தையா] “ஐயா, இந்திய சமூகம் உமது நல்ல நடவடிக்கைகள், நல்ல அறிவிப்புகள் மற்றும் நல்ல திட்டங்கள் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கிறது”, என்ற வகையில் பிரதமர் நஜிப்பை பாரிசான் ஆளுங்கூட்டணியின் பங்காளியான மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் அக்கட்சியின் 65 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் வேண்டிக்கொண்டார். “அம்னோவிடம் கையேந்தி நிற்பதைத் தொழிலாகக்…

“அத்துமீறி செல்பவர் தண்டிக்கப்படுவர்”

[கா. ஆறுமுகம், வழக்கறிஞர்] ஒரு நீண்ட துப்பாக்கியால் ஒருவனை குறி வைத்து சுடுவது போன்ற படத்துடன் “அத்துமீறி செல்பவர் தண்டிக்கப்படுவர்” என்ற அறிவிப்பு சிகப்பு நிற இரும்பு குழாய் சாலை தடுப்பு, காவலாளியையும் இவற்றையும் தாண்டினால்தான் இந்தியர்களை சந்திக்க முடியும். இந்தியர்கள் தோட்டங்களில் அவ்வளவு பாதுகாப்பாக வாழ்ந்தனர்! இதே…

“இணையத்தில் ரொட்டி அரசியலாக்கப்படுவதாக குற்றச்சாட்டு”

கார்டெனியா ரொட்டிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக இணையம் வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரொட்டியை சேவகர் நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் சந்தையில் நுழைந்த மாஸிமோ என்னும் போட்டி ரொட்டி நிறுவனத்துக்கு ஆதரவளிக்குமாறு அந்த பிரச்சார இயக்கம் பயனீட்டளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.…

“என்ன ஊடக இருட்டடிப்பு?”, என வினவுகிறார் நஜிப்

தகவல்களை இருட்டடிப்புச் செய்வதை விட மக்களுக்குத் தகவல்களை அரசாங்கம் வழங்குவது மிக முக்கியமானது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காரணம் அவ்வாறு இருட்டடிப்புச் செய்தால் மக்கள் மாற்று தகவல் வட்டாரங்களை நாடுவதற்கு அது வழி வகுத்து விடும் என்றார் அவர். "முன்பு தேவைப்படும் போது மக்கள்…

“டாக்டர் மகாதீர் நிர்வாகம் 38 உலக வங்கிக் கடன்களை பெற்றது”

மலேசியா 1982ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை ( உலக நிதி நெருக்கடிக்கு பிந்திய காலம்) உலக வங்கியிடமிருந்து 38 கடன்களை பெற்றுள்ளதை அந்த உலக நிதி நிறுவனத்தின் பதிவேடுகள் காட்டுகின்றன. அதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்…

இண்டர்லோக் மீட்பு அம்னோவின் பலவீனத்திற்கு அடையாளமல்ல; தேர்தலின் அறிக்குறி!

இண்டர்லோக் இலக்கிய நாவல் மீட்புக்கு பாடுப்பட்ட அனைத்து இந்திய இயக்கங்களுக்கும், குறிப்பாக தஸ்லிம்மின் நியாட் இயக்கத்திற்கும், பல மாணவர்கள் இயக்கத்திற்கும் பாராட்டுகள் தெரிவித்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். இந்த நாவலை அகற்றவேண்டி பாக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  முதல் சாதாரண உறுப்பினர்கள் வரை பல போராட்டங்களில்…