தாயிப்புக்கும் தியோவுக்கும் உள்ள வேறுபாடு

"தியோ பெங் ஹாக் சாதாரண 2,500 ரிங்கிட்டுக்காக உயிரை இழந்தார். பல பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழல் விவகாரத்தில் எத்தனை பேர் சாக வேண்டும்?" எம்ஏசிசி தாயிப் ஊழல் வழக்கு மீது மௌனம் சாதிக்கிறது மிலோசெவிக்: அப்துல் தாயிப் மாஹ்முட் என்ற அந்த மனிதருடன் விளையாட வேண்டாம். "போமோக்கள்…

இண்டர்லோக் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலமாக சர்சைக்குள்ளாகியிருந்த இண்டர்லோக் பாடநூல் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் அந்த சர்ச்சைக்குள்ளான இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது. கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அது குறித்த…

வருமான வரி வாரியம் BR1M பாரத்தின் போட்டோ பிரதிகளை ஏற்றுக்…

BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவி விண்ணப்ப பாரத்தின் போட்டோ பிரதிகளை வருமான வரி வாரியம் ஏற்றுக் கொள்ளாது. அந்தத் தகவலை நிதித் துணை அமைச்சர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் இன்று வெளியிட்டார். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து விநியோகம் செய்யப்பட்டு வரும் அசல் பாரத்தைத் தாங்கள்…

பாஸ் “பிரச்னையை உண்டாக்கும்” இருவருக்கு எதிராக பாஸ் மனோவியல் போர்ப்…

பாஸ் கட்சியை பற்றி தவறாகப் பேசி வருவதாகக் கூறப்படும் 'அதிருப்தி அடைந்த' இரண்டு கட்சித் தலைவர்களுக்கு எதிராக முழு அளவில் மனோவியல் போரைத் தொடங்குவதற்கு அந்தக் கட்சியின் அனைத்து அமைப்புக்களும் தயாராகி வருகின்றன. முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் முகமட்…

தேர்தலுக்குப் பின்னர் புரட்சி நிகழாதிருப்பதை உறுதி செய்யுமாறு பிஎஸ்சி-யிடம் கூறப்பட்டது

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவர் தமது கட்சியிலிருந்து விலகினால் அந்த இடம் இயல்பாகவே காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் என பினாங்கு கெரக்கான் பரிந்துரை செய்துள்ளது. அவ்வாறு செய்வதின் மூலம் ஒர் அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை வாக்காளரிடம் இருப்பது உறுதி செய்யப்படும் என அந்த கட்சியின் மாநில சட்ட,…

அன்வார்: உலக வங்கியிடம் உதவி கேட்டார் மகாதிர்

1999 நிதி நெருக்கடியின்போது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உலக வங்கியிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதினார் என்ற திடுக்கிடும் தகவலை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து நிகழ்வில் உரையாற்றிய அன்வார், தம்மை “அமெரிக்காவின்…

நான் பாஸ் போராட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்கிறார் ஹசான்

பாஸ் "கட்சியின் போராட்டத்துக்கான" தமது பற்று உறுதியை முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தெரிவித்துக் கொண்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வேட்பாளராக நியமிக்கப்படும் விஷயத்தை "பெரிதுபடுத்துவதை" நிறுத்திக் கொள்ளுமாறு அவர் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டார். "பாஸ் தலைவர்களுடைய பதில்களினால் என் கோட்பாடுகள் மருட்டலுக்கு…

ரசாக் பகிந்தாவிடம் நீர்மூழ்கி கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

மங்கோலியரான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணைக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து காணாமல் போன அப்துல் ரசாக் பகிந்தா, நேற்றிரவு கோலாலம்பூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்டார். அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற அப்துல் ரசாக்,…

ஓராங் அஸ்லிகள் ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

நேற்று ஜோகூர், கோத்தா இஸ்கண்டரில், ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் நூற்றுக்கணக்கான ஓராங் செலேத்தார்-கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோகூர் நீரிணையை ஒட்டியுள்ள தங்கள் பாரம்பரிய நிலங்கள் இஸ்கண்டர் மலேசியா திட்ட மேம்பாட்டாளர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  எட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலை மணி 11-க்கு மாநில…

ஊழல், எம்ஏசிசி-முகத்தைப் பார்த்து முறைக்கிறது

"அது தியோ பெங் ஹாக் விவகாரத்தைப் போல இருந்தால் அவர்கள் எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள். அந்த விவகாரத்தை ஆழமாக தீவிரமாக ஆராய்வர்." எம்ஏசிசி ஊழலைப் பார்த்துக் கண்ணை மூடிக் கொள்கிறது அலக்ஸ் ஜெப்ரி நாதன்: அபு காசிம் முகமட், குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக எம்ஏசிசி தலைவராக…

வேலை வாய்ப்பு:புதிய பட்டதாரிகள் எதிர்நோக்கும் இன்னல்கள்

மலேசியாவில் இளநிலை பட்டதாரிகளில் பாதிப்பேருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பதில்லை என்று இணையத்தள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வருகிறது. பட்டதாரிகள் (73விழுக்காடு) பொதுவில் ரிம1,800-இலிருந்து ரிம2,100வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அவர்களில் 54 விழுக்காட்டினருக்குத்தான் அது சாத்தியமாகிறது என்றும் அவ்வாய்வு கூறுகிறது. 35 விழுக்காட்டினர் ரிம1,800-க்கும் குறைவாகத்தான்…

தாயிப் மாஹ்முட் ஊழல் விசாரணை மீது எம்ஏசிசி மௌனம் சாதிக்கிறது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணையின் நடப்பு நிலை குறித்து கருத்துரைக்க அதன் முதுநிலை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். காட்டுவள நிர்வாகம், நீடித்த மேம்பாட்டில் ஊழல் பற்றி விவாதிப்பதற்காக மலேசிய அனைத்துலக…

பிஎஸ்சி சந்திப்பு: பெர்சே பிரதிநிதிக்கு தடை

தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) பெர்சே 2.0 அதன் பரிந்துரைகளைத் தாக்கல் செய்வதற்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அதன் பிரதிநிதி வருத்தம் தெரிவித்தார். பெர்சே 2.0 வழிகாட்டி குழுவின் உறுப்பினர் டாக்டர் தோ கின் வூன் அவரின் எட்டு-கூறு பரிந்துரையைத் தனிப்பட்ட நபர் என்ற முறையில்…

முஸ்தாபா: ஹசானும் நஷாருதினும் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்

பாஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டு அதன் பல்லவிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருப்பதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சாடியுள்ளார். அவர் குறிப்பாக அண்மையில் பாஸ் கட்சிக்கு பாதகமான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள்…

அதிகமான இந்தியர்கள் BN-ஐ ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாக ஜோகூர் மஇகா கூறுகிறது

ஜோகூர் மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரிசான் நேசனலுக்கு 45 விழுக்காடாக இருந்த இந்தியர் ஆதரவு இப்போது 75 விழுக்காடாக உயர்ந்துள்ளது என ஜோகூர் மஇகா கூறுகிறது. 2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த இந்தியர்கள் பிஎன்-னுக்கு மீண்டும் ஆதரவு தரத் தொடங்கியுள்ளதாக அதன் செயலாளர் எம் அசோகன் கூறுகிறார்.…

2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியது

2009ம் ஆண்டு நாட்டிலிருந்து 150 பில்லியன் ரிங்கிட் (47 பில்லியன் அமெரிக்க டாலர்) சட்டவிரோதப் பணம் வெளியேறியுள்ளது. இதனால் சட்டவிரோதமாக அதிக அளவு மூலதனம் வெளியேறியுள்ள தலையாய நான்கு நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே 2000-2008ம் ஆண்டு (9 ஆண்டுகள்) கால கட்டத்தில் 927 பில்லியன் ரிங்கிட்…

பெல்டா டிஜி-க்கு எதிராக பெர்காசா தலைமையில் 1,000 பேர் ஆர்ப்பாட்டம்

மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா, இன்று சுமார் ஆயிரம் பேருக்குத் தலைமையேற்று கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைமை இயக்குனர் சுல்கிப்ளி வகாப்புக்கு  எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது. பெல்டாவுக்குள் விசாரணை நடத்தி அதில் உள்ள “துரோகிகளை”க் களையெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  “துரோகிகளில்” …

சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன், அன்வார் சூளுரை

குதப்புணர்ச்சி வழக்கில் தம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து கொடுஞ்சிறைக்குள் போட்டுப் பூட்டிவைத்தாலும்  நீதிக்கான தமது போராட்டம் ஓயாது என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். அவ்வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9-இல் தெரிவிப்பதாக நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிறைவாசம்…

கெடாவில் ஹூடுட் இல்லை என்ற கூற்றில் உண்மையில்லை, மசீச

கெடாவில் இப்போதைக்கு ஹூடுட் சட்டம் நடைமுறைக்கு வராது என்று பாஸ் கட்சி அறிவித்திருப்பதில் உண்மையில்லை; அது முஸ்லிம்-அல்லாதாரின் ஆதரவைப் பெறுவதற்காக சொல்லப்பட்டது என்கிறது அம்மாநில மசீச. “கெடாவில் முஸ்லிம்-அல்லாத வாக்காளர் ஆதரவு இறங்குமுகமாகவுள்ளதைப் பிடித்து நிறுத்தும்  நோக்கத்துடன் அவ்வாறு அறிவித்திருக்கிறார்கள்”, என்று கெடா மசீச தலைவர் சோங் இட்…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்காட பாஸ் கட்சிக்கு அனுமதி…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்தும் அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் வழக்காடுவதற்கு அனுமதி கோரி பாஸ் சமர்பித்த விண்ணப்பம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) நீதிபதி ரோஹானா யூசோப், அந்த முடிவை அறிவித்தார். விண்ணப்பதாரர்களில் இருவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும்…

அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II: ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நீண்ட காலமாகத் தொடரும் குதப்புணர்ச்சி வழக்கில் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களது வாதத் தொகுப்புக்களை இன்று சமர்பித்து முடித்த பின்னர் நீதிபதி முகமட் அபிடின் முகமட் டியா,"…

கர்பால்-இராமசாமி மோதல் தீர்க்கப்பட்டது!

டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராசாமிக்கும் இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் டிஎபி தலைமைத்துவம் ஒன்றிணைந்த அணியாக 13 ஆவது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள முனோக்கிச் செல்லும் என்றும் இன்று காலையில் வெளியிடப்பட்ட…

அன்வார் ஜெயிலுக்குப் போனாலும் போகா விட்டாலும் நஜிப்புக்கு அவர் தலையிடிதான்

"எந்த வகையிலும் அது பிஎன் வாக்குகளை இழக்க வழி வகுத்து விடும். எதிர்தரப்புத் தலைவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர்." அன்வார் குற்றவாளியாக்கப்படுவார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கை ஆரூடம் கூறுகிறது பேஸ்: எல்லாம் தெரிந்த விஷயம்தான் - அன்வார்…