புவாட் : முஹைதீனின் தோல்வியடைந்த பிம்பம் இஸ்மாயில் சப்ரி அரசை…

அம்னோ உச்சமன்ற (எம்டி) உறுப்பினர் புவாட் ஸர்காஷி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான நிர்வாகம், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கமாக இருக்கலாம் என்றக் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, "அசல் திரும்பியதன் விளைவு," என்று கூறினார். முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினைத் தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக…

அபிம் : அமைச்சர் அந்தஸ்தில் தனிநபர் நியமனம், விளக்கம் தேவை

மலேசிய இஸ்லாமிய இளைஞர் படை (அபிம்), அமைச்சர் அந்தஸ்தில் தனிநபர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. இன்று ஓர் அறிக்கையில், கடந்த ஆண்டு 'ஷெரட்டன் நடவடிக்கை’க்குப் பின்னர், அமைச்சக அளவிலான நியமனங்கள் இப்போது நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது என்று…

கே.ஜே. : எஸ்.ஓ.பி.-களுக்கான பொது வழிகாட்டிகள்

கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) சிக்கலானவை, மற்றும் புரிந்துகொள்வதற்குக் கடினமான என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். சமீபத்தில் ஒரு சிறப்பு ஊடக நேர்காணலில் பேசிய கைரி, இதனால்தான் பல அமைச்சர்களுடன் சேர்ந்து தானும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் "மலை…

20,396 புதிய நேர்வுகள், மொத்த இறப்பு விகிதம் 18,000-ஐ தாண்டியது

கோவிட்- 19 | கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,396 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 336 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 18,219- ஆக உயர்த்தியுள்ளது. இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (171)…

மாமன்னரின் அதிகாரம் குறித்த  ஏஜி ட்ருஸ் ஹருன் கருத்தில் குழப்பம் –  குலசேகரன்

பிரதமர்  இஸ்மாயில் சப்ரியை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படத்     தேவையில்லை என்று   இட்ருஸ் ஹருன் கூறியிருப்பது  வியப்பாக இருக்கிறது. அவரின் கூற்றுப்படி  பிரதமர் இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்புச் சட்டப்படி  நிமியக்கப் பட்டிருக்கிறார். அப்படி  அவர் நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு   உட்படுத்தப்படுவாரேயானால்   அது பேரரசரின் அதிகாரத்தை  அவமதிப்பதாக   கருதப்படும் என்று அவர்  கூறியிருக்கின்றார். பேரரசரைத் தவிர்த்து வேறு யாரேனும் பிரதமரின் பதவியை  மறு…

தவா மரண விசாரணை : ஆவணங்களைப் போலீசார் ஏஜி அலுவலகத்தில்…

ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், விருந்தினரால் தாக்கப்பட்டு, இறந்துபோன பாதுகாவலரின் வழக்கு விசாரணை அறிக்கையைக் காவல்துறை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் கையளித்தது. பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித், சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தனது துறை காத்திருப்பதாகக்…

எம்.பி.என். தலைவராக முஹைதீன், பிரதமர் அமைச்சரவையை நம்பவில்லையா? – சைஃபுதீன்

தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக, முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டது குறித்து, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கேள்வி எழுப்பினார். இந்த நியமனம், நாட்டின் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையற்ற அதிகாரத்துவத்தைச் சேர்க்கிறது என்று அவர் கூறினார். “ஏனெனில், முஹைதீன் இன்னும் எம்.பி.என்.-இன் பரிந்துரையை…

தவா மரண வழக்கு : பேராக் காவல்துறைத் தலைவர் தவறாக…

பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித், எஸ் தவசகாயத்தின் மரணத்தில் சந்தேக நபரை ஏன் காவல்துறையால் மீண்டும் கைது செய்ய முடியவில்லை என்பதை விளக்குவதில், ஃபெடரல் அரசியலமைப்பின் பிரிவு 7 (2)-ஐ மேற்கோள் காட்டும் போது, ​​தவறான வழிநடத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டார். மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள்…

முஹைதீன் தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் – கேஎஸ்என்

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின், அமைச்சர் அந்தஸ்தில், தேசிய புனர்வாழ்வு மன்றத்தின் (பிபிஎன்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சரவை செயலாளராக இருக்கும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஸூகி அலி கூறினார். செப்டம்பர் 1, 2021, நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முன்னாள் 8-வது பிரதமராக இருந்த முஹைதீன் யாசின்,…

அக்டோபரில் ஐபிதி-களை மீண்டும் திறக்க கே.பி.தி. திட்டமிட்டுள்ளது

இந்த ஆண்டு அக்டோபர் முதல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பி.பி.என்) அனைத்து கட்டங்களிலும், 2021/2022 கல்வி அமர்வுக்காக மாணவர்களின் நேரடி சேர்க்கைக்காக உயர்க்கல்வி நிறுவனங்களை (ஐபிதி) மீண்டும் திறக்க உயர்க்கல்வி அமைச்சு (கே.பி.தி.) திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் ஐபிதி புனர்வாழ்வு திட்டத்தின் மூலம், ஆகஸ்ட் 22-ம் தேதி பிரதமர்…

எம்.ஆர்.எஸ்.எம். தேசியப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே! – புதிய நிபந்தனைக்கு…

மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்), தேசிய இடைநிலைப் பள்ளி மற்றும் தேசியப் பள்ளி மாணவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற புதிய நிபந்தனைக்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். 2022 மாணவர் சேர்க்கைக்கான எம்.ஆர்.எஸ்.எம்.-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், மற்றவற்றுடன், படிவம் ஒன்று மற்றும் நான்கிற்கான சேர்க்கை,…

கோவிட் -19 : 362 இறப்புகள், 19,057 புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 19,057 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. இன்று 362 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 17,883- ஆக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 28 அன்று உச்சத்தில் இருந்த, செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை எட்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.…

பள்ளிகளைத் திறப்பதில் அவசரப்பட வேண்டாம் – ஜாஹிட்

பள்ளி அமர்வை நேருக்கு நேர் திறப்பதில், அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கல்வி அமைச்சை வலியுறுத்தினார். பல விஷயங்களை ஆழமாக செம்மைப்படுத்த வேண்டும், பள்ளி அமர்வை திறப்பதற்கான புதிய தேதி துல்லியமாகவும் சரியானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்…

பிஎஸ்எம் : அமைச்சர் அந்தஸ்தில் சிறப்பு தூதர் பதவி, மக்கள்…

அமைச்சர் அந்தஸ்தில் பல சிறப்பு தூதர்களை, பிரதமருக்காக மீண்டும் நியமிப்பது நாட்டின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) விமர்சித்துள்ளது. பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், இந்த நியமனம் பொது நிதியை வீணடிப்பதாக உள்ளது என்றார்.…

ஆசிரியர்களுக்குக் கட்டாயத் தடுப்பூசி : சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் விவாதிக்கும்…

ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடினுடன் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய கைரி, ஆசிரியர்களுக்குக் கோவிட் -19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கலாமா, அது தொடர்பான சட்டச் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார். "நாம்…

‘தடுப்பூசியை ஏற்க மறுத்த 2,500 ஆசிரியர்களுக்கு வகுப்பறை கற்பித்தலில் அனுமதி…

கோவிட் -19 தடுப்பூசியைப் பெற மறுத்த 2,500 ஆசிரியர்கள், அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளி அமர்வு தொடங்கும் போது, நேருக்கு நேர் கற்பித்தலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராட்ஸி ஜிடின் கூறினார். தடுப்பூசி போட விரும்பாத கல்வியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மூத்தக் கல்வி அமைச்சர்…

பாதுகாவலர் மரணம் : நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – பிரதமர்

ஆகஸ்ட் 28-ம் தேதி, பேராக், ஈப்போவைச் சார்ந்த பாதுகாவலர் தவ சகாயம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உறுதியளித்தார். "தவ சகாயம் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம், என்னை வருந்தச் செய்தது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். "சட்டத்தின் பிடியில் இருந்து யாரும்…

கோவிட் – 19 : 19,378 புதிய நேர்வுகள், 330…

கடந்த 24 மணி நேர நேரத்தில், 19,378 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை சபா மற்றும் சரவாக் மாநிலங்களைவிட குறைவாக இருந்தன. கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மிகக் குறைந்த புதிய…

தடுப்பூசிகள் ‘லோங் கோவிட்’ அறிகுறிகளிலிருந்து பாதுகாக்கிறது – ஆய்வு

தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளைப் பெற்றவர்கள், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைப் போல, தொற்றின் நீண்டகால விளைவுகளை அனுபவிக்க வாய்ப்பில்லை. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்றுநோயின் ஆபத்து குறையலாம். "நோய்த்தொற்றுக்குப் பிறகு (கோவிட் -19) 28 அல்லது அதற்கு…

மைசெஜாத்தெரா இப்போது ‘செக்-அவுட்’ செயல்பாட்டையும் தடுப்பூசி நிலையையும் கொண்டுள்ளது,

மைசெஜாத்தெரா செயலி, நேற்றிரவு தொடங்கி பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது, இனி இதில் ஒருவரின் தடுப்பூசி நிலையை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பகிர்ந்த திரைகாட்சிகள் (ஸ்கிரீன் ஷாட்ஸ்) அடிப்படையில், திரையில் பயனர்களின் ‘செக்-இன்ஸ்’, அவர்களின் கோவிட் -19 ஆபத்து நிலை மட்டுமல்லாது, தடுப்பூசி…

உரிமம் புதுப்பித்தல், சாலை வரி மீதான தடை காலம் டிசம்பர்…

மோட்டார் வாகன உரிமம் (எல்.கே.எம்.) மற்றும் மலேசிய ஓட்டுநர் உரிமம் (எல்.எம்.எம்.) புதுப்பித்தல் மீதான தடை காலம், டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறினார். எவ்வாறாயினும், செல்லுபடியாகும் காலம் காலாவதியான எல்.கே.எம். உரிமையாளர்கள், தங்கள் வாகனங்கள் செல்லுபடியாகும் காப்பீட்டால்…

மேலும் 7 #லாவான் ஆர்வலர்களைப் போலீசார் அழைத்தனர்

இரத்து செய்யப்பட்ட இரண்டாவது #லாவான் பேரணி தொடர்பாக மக்கள் ஒற்றுமை செயலகத்தின் (எஸ்எஸ்ஆர்) செயல்பாட்டாளர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசத்துரோகம் தொடர்பான விசாரணையில், கூடுதல் விளக்கங்களை வழங்க, நாளை, சனிக்கிழமை காலை 10 மணிக்கு, டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு (ஐபிடி) ஏழு ஆர்வலர்கள்…

கோவிட்- 19 : குழந்தைகள், இளையர்கள் சம்பந்தப்பட்ட நேர்மறை வழக்குகள்…

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், 310,074 குழந்தைகளும் 17 வயதிற்குட்பட்ட இளையர்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 2020-ல் பதிவான எண்ணிக்கையை விட, 24 மடங்கு அதிகமாகும். கடந்தாண்டு, 12,620 நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நேற்று, கே.கே.எம்.…