அமனா: விசுவாசம் அல்லாவுக்கும் இறைத்தூதருக்கும் மட்டுமே, கிட் சியாங் மற்றும்…

  பாஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அமைத்த கட்சி அமனா. அது டிஎபியின் எடுபிடிக் கட்சி என்று சிலரால் கிண்டல் செய்யப்படுவதுண்டு. மெகாட் இப்ராகிம் என்ற ஒரு டிவிட்டர் பதிவாளர், அமனாவில் சேர்ந்தால் அது லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோருக்கு விசுவாசமாக இருப்பதாகப் பொருட்படும்…

பிகேஆர் எம்பியின் சமூக நலத் திட்டம் இரத்து: காரணம் கூறப்படவில்லை

கிளானா   ஜெயா   எம்பி   வொங்    சென்    அவரது   தொகுதி   மக்களுக்கான   சமூகநல   மாதத்   திட்டத்தை   இரத்துச்   செய்தார்.  ஆனால்,   அதற்கான   காரணம்   கூறப்படவில்லை. உதவி   கேட்டு   தம்   அலுவலகம்    வர    நினைப்போரை    வரவேண்டாம்    என்றவர்   கேட்டுக்கொண்டார். “இச்செய்தியை   விரைவாக   மக்களிடம்   கொண்டு    செல்ல     வேண்டும்.  என்னைப்    பார்க்க     வருவதற்காக  …

லியு: குளுவாங் பஜாரை இடமாற்றம் செய்ய விரும்பியது மசீச, டிஏபி…

டிஏபி    அல்ல     மசீசதான்   பத்தாண்டுகளுக்கு   முன்பு    ஜோகூர்,  குளுவாங்கில்   உள்ள   ரமலான்   சந்தையை     வேறோர்  இடத்துக்கு    மாற்ற   விரும்பியது   என    குளுவாங்    எம்பி    லியு     சின்   தொங்   கூறினார். குளுவாங்   நகரில்   அச்  சந்தை     செயல்படுவதை    மசீச    அரசியல்வாதி    ஒருவர்    எதிர்த்தார்    என்பதை    உள்ளூர்   மக்களிடமிருந்து    தெரிந்து   கொண்டதாக  …

குறைகூறுவதாக இருந்தால் அதையும் நியாயமான முறையில் செய்வீர்: பாஸுக்கு பினாங்கு…

பினாங்கில்,    சூதாட்ட     நடவடிக்கைகள்   உள்பட,   எது  குறித்து   குறை   சொல்வதாக   இருந்தாலும்   அதையும்      “அறிவார்ந்த    முறையில்”     செய்ய   வேண்டும்  என  பாஸுக்கு    அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும்  கட்சியாக    மாற   ஆசைப்படும்    பாஸ்,   மாநில     நிர்வாக,   நீதிமுறை   குறித்து   கற்றுக்கொள்வது    நல்லது     என   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்     கூறினார்.…

இசிக்கு எதிரான அன்வாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது

  சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் தாம் 2015 ஆம் ஆண்டு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் வாக்களிக்கவும் அதே போல் அனைத்து எதிர்கால தேர்தல்களிலும் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் அறிவிக்கும் பிரகடனம் கோரி முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக தள்ளுபடி செய்து…

கேஎல் மாநகராட்சிமீது குடியிருப்பாளர்கள் எம்ஏசிசியில் புகார்

பண்டார்   துன்   ரசாக்     குடியிருப்பாளர்கள்   அங்குள்ள    கால்பந்து   திடல்   விற்கப்பட்ட    விவகாரத்தை      மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்திடம்   புகார்    செய்துள்ளனர். குடியிப்பாளர்களுக்காக   வழக்குரைஞர்    சுல்ஹஸ்மி   ஷரிப்   அப்புகாரைச்   செய்தார். “ஒதுக்கப்பட்ட  பகுதி   என   அரசிதழில்  பதிவு  செய்யப்பட்ட   நிலத்தை   டிபிகேஎல்  (கோலாலும்பூர்   மாநாகராட்சி    மன்றம்)  மேம்பாட்டாளர்களிடம்   ஒப்படைத்தது   எப்படி   என்பதை   …

நஜிப்பிடமிருந்து ரிம10 மில்லியனா?, இல்லை என்கிறது சிலாங்கூர் மசீச

  13 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம10 மில்லியன் பெற்றதாக கூறப்படுவதை சிலாங்கூர் மசீசவின் பொருளாளர் லூ கூய் தியாம் மறுத்துள்ளார். இதற்கான எந்தப் பதிவும் சிலாங்கூர் மசீசவின் வங்கி அறிக்கையில் இல்லை. இது கட்சி மாசற்றது என்பதைக் காட்டுகிறது என்றாரவர். சரவாக் ரிப்போர்ட்டின் அடிப்படையில்…

சிலாங்கூர் இரண்டு மாதச் சம்பளத்தை சிறப்பு அலவன்சாக வழங்குகிறது

  சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்தை ஹரி ராயா சிறப்பு அலவன்சாக ஜூன் 21 இல் அளிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார். மாநிலத்தின் 17,703 அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் அலவன்சின் மொத்தத் தொகை ரிம63.3 மில்லியன்…

இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணை சிங்கப்பூர் கைது செய்துள்ளது

  இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) சேர்ந்து கொள்வதற்கான முயற்சியிலும் சிரியாவில் ஒரு தீவிரவாத கணவரைத் தேடுவதில் ஈடுபட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்பட்ட ஒரு சிங்கப்பூர் குடிமகளை அந்நாட்டின் மிகக் கடுமையான, விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யும் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் தடுத்து வைத்துள்ளது. இப்பகுதியில் ஐஎஸ் சித்தாந்தம் பரவி வருவது…

கிட் சியாங்: தோல்வி கண்ட நாடாகிக் கொண்டிருப்பது மலேசியா, பினாங்கு…

  பினாங்கு ஒரு தோல்வி கண்ட மாநிலமாகப் போகிறது என்று பாரிசான் கூறியிருப்பதை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். "இதை நான் படித்த போது எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை", என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார். "பிஎன் தலைவர்கள் இதை…

முஸ்லிம்கள் தீவிரவாத இயக்கங்களுடன் சேரக்கூடாது, ஸாகிட் கூறுகிறார்

  தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து சமயத்தின் புனிதத்தன்மையையும் நாட்டின் நற்தோற்றத்தையும் கலங்கப்படுத்திவிடக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி நினைவுறுத்தியுள்ளார். இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) போன்ற தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள இந்நாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று…

‘மறைப்பதற்கு எதுவுமில்லை’ கருத்தரங்கில் கலந்துகொள்ளத் தயாரா? நஜிப்புக்கு பெர்சத்து இளைஞர்கள்…

பார்டி  பிரிபூமி  பெர்சத்து   மலேசியா  (பெர்சத்து)-வின்  இளைஞர்   பகுதி    ‘ஒளிப்பதற்கு   எதுவுமில்லை’   என்னும்   கருத்தரங்கை   இம்மாத    இறுதிவாக்கில்   நடத்தும்.  இரண்டாவது    தடவையாக    அது     நடத்தும்   இக்கருத்தரங்கில்  கட்சியின்   நிர்வாகத்    தலைவர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்   கலந்து  கொள்வார். கருத்தரங்கு    குறித்து   இன்று    அறிவித்த   பெர்சத்து   இளைஞர்   தலைவர்   சைட்   …

போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம், நோன்புப் பெருநாளுக்குப் பின்னர்

அரச    மலேசிய   போலீஸ்  தலைமையகமான   புக்கிட்   அமனானில்   எல்லாப்   பிரிவுகளையும்   சேர்ந்த    உயர்    அதிகாரிகள்   இடமாற்றம்     செய்யப்படுவார்கள்   என    அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்  பொருள்   குற்றப்  பிரிவில்(என்சிஐடி)   குறைந்தது   20   பேர்   ஏற்கனவே   இடமாற்றம்   செய்யப்பட்டு   விட்டதாக    இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்  அபு   பக்கார்    கூறினார். “எல்லாப்   …

‘அன்வார் ஹராபானின் நடப்பில் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டாராம்’

பக்கத்தான்  ஹராபான்,    அன்வார்   இப்ராகிமை     அதன்   நடப்பில்    தலைவராக   அறிவிப்பதற்கு   ஒருமனதாய்   ஒப்புக்கொண்டிருப்பதாக   சில  வட்டாரங்கள்    தெரிவித்தன. வெள்ளிக்கிழமை     ஹராபான்    தலைவர்   மன்றக்  கூட்டத்தில்   அப்பரிந்துரையைக்   கூட்டணிக்   கட்சிகள்  அனைத்தும்   ஏற்றுக்கொண்டதாக   மூன்று    வெவ்வேறு    வட்டாரங்கள்    உறுதிப்படுத்தின. அந்த   வட்டாரங்களில்   ஒன்று,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)தான்   அப்பரிந்துரையை   …

பிஎன் புஜூட் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

  ஜூலை 4 இல் நடைபெறவிருக்கும் புஜூட் இடைத்தேர்தலில் பிஎன் பங்காளித்துவக் கட்சிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது சரவாக் எஸ்யுபிபி-யா அல்லது யுபிபி-யா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை சரவாக் முதலமைச்சரிடம் விட்டுவிடுகிறோம் என்று சரவாக் பிஎன் தலைமைச் செயலாளர் ஸ்டீபன் ருண்டி…

டிஎபி எம்பி ரமதான் பஜாரிலிருந்து மீண்டும் விரட்டப்பட்டார்

  நேற்று, குளுவாங் ரமதான் பஜாரில் மக்களுக்கு பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங்கும் அவரது பரிவாரமும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். மூன்று வருடங்களில் இது லியுவுக்கு இரண்டாவது அனுபவம். இச்சம்பவம் சுமார் 5.45 க்கு நடந்ததாக லியுவின் உதவியாளர்…

தலைமை நீதிபதி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவது வழக்கமானதே, வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்

  நீதிமன்ற வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்கும்படி மலேசியாவின் தலைமை நீதிபதி உத்தரவிடுவது வழக்கமானது என்று வழக்குரைஞர்களில் சிலர் கூறுகின்றனர். "ஆம், அவர் அவ்வாறு செய்கிறார், கிரிமினல் வழக்குகள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குக்களில்கூட", என்று வழக்குரைஞர் பல்ஜிட் சிங் சிது இன்று தொடர்பு கொண்ட…

புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவுபெறும்?, வட்டாரப்…

    இன்று காலை, புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்து, வட்டார அரசுசார இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். ஜொகூர், ஸ்கூடாயிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் கடந்த செப்டம்பர்…

ஷாபி: அறிக்கை வெளியிடுவேன் ஆனால், இன்றல்ல

மூத்த     வழக்குரைஞர்     முகம்மட்      ஷாபி   அப்துல்லா,    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    தமக்கு      ரிம9.5 மில்லியன்   ரிங்கிட்   அளித்ததாகக்  கூறப்படுவது    குறித்து    விரைவில்  அறிக்கை   வெளியிடப்போவதாகக்  கூறினார். இன்று   கோலாலும்பூர்   ஜாலான்   டூடா    நீதிமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்கள்   அவரைச்  சூழ்ந்துகொண்டு    இவ்விவகாரம்   குறித்து   வினவினர். “நான்   ஓர்   அறிக்கை  …

நஜிப் இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் உண்மையான நோக்கத்தைக் கக்கி விட்டாரா?

  மறைமுகமாக எச்சரிக்கை விடுபவர் அரசியல் மேதையாகிவிட முடியாது. அது அவரை நம்பிக்கை இழந்தவராகவோ மூர்க்கத்தனமானவராகவோ காட்டி விடும். இதற்கு எடுத்துக்காட்டு மலேசியப் பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை: இந்தியர்கள் தொடர்ந்து அடுத்த பொதுத்தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசிய இந்தியன் பெருந்திட்டம்…

இசி: எங்களால் முடியும், பெர்சேயுடன் சேர்ந்து பணியாற்றத் தேவையில்லை

தேர்தல்   சீரமைப்புக்காக   போராடும்   அமைப்பான   பெர்சேயுடன்  சேர்ந்து   பணியாற்ற  வேண்டிய   அவசியம்   இப்போதைக்கு    இல்லை    என்கிறார்    தேர்தல்    ஆணைய (இசி)  தலைவர்    ஹஷிம்  அப்துல்லா. இசி   அதிகாரிகள்   மற்ற     நாடுகளுக்கு   அனுப்பப்பட்டு    அங்குள்ள    தேர்தல்  முறைகளை   நன்கு   கற்றறிந்து    வந்திருக்கிறார்கள்.  எனவே,  மலேசியாவில்    தேர்தல்   நடத்த    அவர்கள்   போதுமான    …

ஜிஎல்சி-க்கு அரசியல்வாதிகளை நியமிப்பதை நிறுத்துவீர்: எம்ஏசிசி வாரியம் கோரிக்கை

அரசுத்   தொடர்பு   நிறுவனங்களுக்கு    அரசியல்வாதிகளைத்   தலைவர்களாக   நியமிக்கும்   பழக்கத்தை     நிறுத்த    வேண்டும்     என்று   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய (எம்ஏசிசி)   ஆலோசனை   வாரியம்    அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. “அப்பதவிக்கு    எதிர்பார்க்கப்படும்   நன்னடத்தைத்   தரம்       அவர்களிடம்   இருப்பதில்லை”,  என   அவ்வாரியத்   தலைவர்    துங்கு    அப்துல்   அசிஸ்   கூறினார். சில   விதிவிலக்குகள்   இருந்தாலும்    அரசாங்கம்   …

ஜைட்: ஹராபான் கட்சிகள் பெர்சத்துவைத் தலைமை தாங்க வைப்பதே புத்திசாலித்தனம்

பக்கத்தான்  ஹராபான்  கட்சிகள்  எதிரணிக்   கூட்டணிக்குத்    தலைமையேற்கும்  பொறுப்பை   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)விடம்   ஒப்படைப்பதே   “நடைமுறைக்கு  உகந்ததும்   புத்திசாலித்தனமுமாகும்”   என்கிறார்   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம். பிகேஆர், டிஏபி,  அமனா   ஆகியவை  புத்திசாலித்தனமாக    நடந்துகொண்டு  தலைமைப்  பொறுப்பை    பெர்சத்துவிடம்   ஒப்படைத்தால்  14வது   பொதுத்   தேர்தலில்   வெற்றிபெறலாம். …