நேற்றிரவு லாஹாட் டத்து, லெம்பா மக்சினாவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தைத் தொடர்ந்து மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் மூவரைக் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 25 மற்றும் 58 வயதுடையவர்கள், மலையேற்றத்திற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்த 17 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஐஜிபி: பாதிரியார் கோ கடத்தலில் சந்தேகிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தல் விவகாரத்தில் சந்தேகிக்கப்பட்ட நபர் வட மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். கோவின் கடத்தல் பற்றிய விசாரணையில் உதவுவதற்காக அந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக காலிட் கூறினார். "ஆம், ஓர் உள்ளூர்வாசி கைது…
சிவநேசன் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை, ஜெயகுமார்…
மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமாரின் சொத்துப் பிரகடனம் குறித்து டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் எழுப்பியுள்ள சந்தேகம் குறித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயெகுமார் கூறுகிறார். சிவநேசனின் குற்றச்சாட்டுகளை…
நஜிப் vs புவா வழக்கிலிருந்து நீதிபதி விலகினார்
கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் வான் அஹ்மட் பரிட் வான் சாலே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவுக்குமிடையிலான வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதியின் நலனை முன்னிட்டு விலகிக் கொண்டிருக்கிறார். நீதித்துறை ஆணையர் பொறுப்பை ஏற்பதற்குமுன் அப்துல்லா அஹமட் நிர்வாகத்தில் உள்துறை …
ஷாபி அப்டால்: 1எம்டிபி-இடமிருந்து பணம் பெற்றதில்லை
பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால், அம்னோவில் இருந்த காலத்தில் 1எம்டிபி-இலிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படுவதை மறுத்தார் என மலாய் மெயில் ஆன்லைன் கூறிற்று. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான அவரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசினும்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பெற்ற …
பேராக்கில் கட்சி பிரச்னைகளை எதிர்நோக்குவது உண்மையே: பெர்சத்து உதவித் தலைவர்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா உதவித் தலைவர் ஹமிடா ஒத்மான் பேராக்கில் கட்சிக்குள் உள்பூசல் நிலவுகிறது என்றார். பேராக் மாநில ஆட்சிக்குழு முன்னாள் உறுப்பினரான அவர், கட்சியில் அணிகளுக்குள் நடக்கும் பதவிப் போராட்டம்தான் பிரச்னைக்குக் காரணம் என்றார். “உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் உள்பூசல். அதுதான் பிரச்னை. வேண்டியவர் …
திரெங்கானுவில் ரமலான் மாதத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் உணவகங்கள் செயல்பட…
ரமலான் மாதத்தில் குறிபிட்ட நேரத்தில் மட்டுமே உணவகங்கள் செயல்படலாம். அதை மீறி செயல்படும் உணவகங்கள் இழுத்து மூடப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கசாலி தயிப் கூறினார். கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டிலும் ரமலான் சந்தைகளையும் உணவகங்களையும் கண்காணிக்குமாறு மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சமயத் துறையைப் பணித்துள்ளது.…
சீனக் கம்யூனிச கட்சியுடன் அம்னோவும் மசீசவும் ஒத்துழைப்பு, நாட்டிற்கு ஆபத்து:…
சீனக் கம்யூனிச கட்சியுடன் (சிபிசி) தொடர்பு கொண்டிருக்கும் அம்னோ மற்றும் மசீச பற்றிய தமது கவலை குறித்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு நாளை ஒரு கடிதம் எழுதப் போவதாக பெர்காசா தலைவர் கூறுகிறார்.. சீனக் கம்யூனிச கட்சியுடன் அம்னோவும் மசீசவும் கொண்டிருக்கும் ஒத்துழைப்பு…
இசி கதவை இழுத்துப் பூட்டிய பக்கத்தான் இளைஞர், மகளிர் அணிகள்
பக்கத்தான் ஹராபான் இளைஞர், மகளிர் அணிகள் ஒரு மகஜர் கொடுப்பதற்காக தேர்தல் ஆணைய(இசி)த் தலைமையகம் சென்றனர். இசி அதிகாரிகள் மகஜரைப் பெற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து அவர்கள் இசி கட்டிடத்தின் வெளிவாயில் கதவுகளைச் சங்கிலி கொண்டு பூட்டினர். இசி தலைமையகத்துக்கு வெளியில் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக …
தனியார் நிறுவனங்கள் பினாங்கு அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விவரங்களைப் பகிரங்கமாக…
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மாநிலச் சட்டமன்றத்துக்கு அளித்த எழுத்து வடிவிலான மறுமொழி ஒன்றில், இரகசியக் காப்பு விதிமுறை இருந்தாலும்கூட மாநில அரசுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின் விவரங்களைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும் என்று கூறினார். “தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாலும் …
மகாதிர்: நெருக்கமான நண்பர்களுக்கு ஐஆர்பி நெருக்குதல்
தம் நெருக்கமான நண்பர்களுக்கு உள்நாட்டு வருமான வாரியம் (ஐஆர்பி) நெருக்குதல் கொடுப்பதாக கூறுகிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். மகாதிர் பிரதமராக இருந்தபோது பல கோடீஸ்வரர்கள் அவருக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் மகாதிரின் அல்லக்கைகள் என்றும் மகாதிர் அரசாங்கத்தில் குத்தகைகளைப் பெற்று பயனடைந்தவர்கள் என்றும் விமர்சிப்போரும் …
பாதிரியார் கோ கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன, அவரை விடுவிக்கக்…
பாதிரியார் ரேமண்ட் கோ பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைத்தப்பாடில்லை. இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவரது துணைவியார் சூசானா லியு அவரது கணவரை விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். "நானும் எனது குழந்தைகளும் அதிகமாக…
யுகே கலை நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர்
பிரிட்டீஷ் நகர் மான்செஸ்டரில் அமெரிக்க பாடகர் அரியனா கிராண்டே பங்கேற்றிருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்புக் காரணம் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பாளர் என்று சந்தேகிப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம்…
முகைதினை ஆதரிக்கும் மகாதிர், பெர்சத்துவில் இருக்கும் கலகக்காரர்கள் நஜிப்பின் கையாட்கள்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) அவைத் தலைவர் மகாதிர் அக்கட்சியின் தலைவர் முகைதின் யாசினை தற்காத்து பேசியதோடு அவரை பதவியிலிருந்து விலகக் கோருகிறவர்களை நஜிப்பின் கையாட்கள் என்று கூறினார். ஈப்போ பெர்சத்துவின் தலைவர் அஸ்ருல் சுஹாடி அஹமட் மொக்தார் கட்சியின் தலைவர் முகைதின் பதவியிலிருந்து விலக…
பினாங்கு சட்டமன்ற கூட்டத்திலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டனர்
இன்று இரு பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதோடு அவைத் தலைவர் லா சூ கியாங்கின் உத்தரவுக்குப் பணியத் தவறியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவ்விரு உறுப்பினர்களும் - டிஎபியின் ஆர்எஸ்என் ராயர் மற்றும் பிஎன்னின் ஷா ஹெட்னான் அயூப் ஷா - அவையின் இன்றைய நடவடிக்கைகளில்…
பெர்காசா-வை எண்ணி வேள்பாரி கவலையுறவில்லை
பெர்காசா தமக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறித்து கவலைப்படவில்லை என்கிறார் மஇகா பொருளாளர் எஸ். வேள்பாரி. “நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். நான் அவர்களைப் பற்றி நியாயமற்ற கருத்து தெரிவித்திருந்தால் பெர்காசா, தெரு ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யாமல் என்மீது தாராளமாக வழக்கு தொடுக்கலாம். அது என்மீது அவர்கள் கூறியுள்ள …
நெல் விளையும் நிலத்தில் சிலாங்கூர் பாஸ் தலைவர்களுடன் அஸ்மின் கலந்துரையாடல்
இன்று செகிஞ்சானில் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, சிலாங்கூர் பாஸ் தலைவர்களுடன் ஆழ்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். அஸ்மினும் மற்ற மாநில அரசுத் தலைவர்களும் சிலாங்கூர் ஆட்சியாளர் ஷராபுடின் இட்ரிஸ் நெல் விளையும் பூமிக்கு வருகை மேற்கொள்வதையொட்டி அங்கு குழுமி இருந்தனர். மந்திரி புசார் சிலாங்கூர் பாஸ் …
கைருடின்: உயர் அதிகாரிகளைக் கைது செய்த எம்ஏசிசிக்குப் பாராட்டுகள் ஆனாலும்……
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அண்மைக்காலமாக உயர் அதிகாரிகள் பலரைக் கைது செய்து பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டு வந்துள்ளது என்றாலும் 1எம்டிபிமீது நடவடிக்கை எடுக்காதவரை அது நம்பத்தக்கதுதானா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்கவே செய்யும் என்கிறார் கைருடின் அபு ஹசான். “ஊழலை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் எம்ஏசிசி தலைவருக்குப் …
கள்ளத் தொடர்பால் வெந்தது முதுகு
நேற்று சுங்கை பூலோவில் கம்போங் பாயா ஜராஸ் ஹிலிரில் 15 பேர் சேர்ந்து ஒரு ஆடவரைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அந்த 25வயது ஆடவரின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்தன. அவரது முதுகுப் பகுதியும் கழுத்தும் இடது தோள்பட்டையும் சுடுநீர் ஊற்றப்பட்டதால் வெந்து போயிருந்தன. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் …
மக்களவையில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும், பாஸ்…
அரசியல் இஸ்லாதை வலுப்படுத்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நாடாளுமன்ற மக்களவையில் முஸ்லிம்கள் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாஸ் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் இஸ்லாம் வலுப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை இஸ்லாத்தின் குரல்களாக இருக்க வேண்டும் என்று பாஸின் தகவல் பிரிவுத்…
மஇகா தலைமையகத்தில் பெர்காசா கொடிகள் பறக்கின்றன
மலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் கொடிகள் மஇகா தலைமையகத்தின்முன் பறக்க விடப்பட்டன. அது மஇகாவிற்கு விடப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும். இந்த நடவடிக்கைக்குத் தலைமையேற்றிந்தவர் பெர்காசாவின் இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷஹாருடின். பறக்கவிடப்பட்டிருந்த அக்கொடிகளின் கீழ் நின்று கொண்டு அஸ்ருல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஇகாவின் பொருளாளர்…
தேசியப்பள்ளிகளிலும் ஓர் இனத்தவரே, ஒப்பாரி வைக்கும் அம்னோ இளைஞர் தலைவர்
இன்றையத் தேசியப்பள்ளிகள்கூட ஓர் இனம் சார்ந்தவைகளாகிவிட்டன என்று கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ரஸ்லான் முகம்மட் ராபீ கூறுகிறார். நேற்று தித்திவங்சாவில் நடைபெற்ற ஒரு டிஎன்50 (TN50) கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒருவர் ஒரே-வகைப் பள்ளி முறையை வலியுறுத்தி அதில் மலேசியாவின் பல்வேறு சமூகங்களின் அடையாளங்களும்…
‘அன்வார் 7வது பிரதமர்’-அறிவிப்பு அட்டைகளுடன் காணப்பட்டார்கள் ஹராபான் தலைவர்கள், ஆனால்…….
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்றால் அன்வார் இப்ராகிம்தான் பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் பெரும்பாலோரின் முதன்மைத் தேர்வு என்பது தெளிவாக தெரிகிறது. இன்று ஷா ஆலமில், பிகேஆர் தேசிய காங்கிரசில் சுமார் ஆயிரம் பிகேஆர் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், பிகேஆர் தலைவர்கள் ‘அன்வார் 7வது பிரதமர்’ என்ற …
பிகேஆர் நவீன தாலிபான்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்
பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் பேசிய ஒரு பிகேஆர் இளைஞர் பிரிவு பேராளர் நவீன தாலிபான்களிடமிருந்து கட்சி ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நாட்டு அரசியல் கட்சிகளில் இந்த தாலிபான்களைக் காணலாம் என்று பினாங்கு பேராளர் ஃபஹாமி ஸைனால் கூறினார். அவர்கள் தங்களுடைய சுயநலன்களுக்காக சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்…