மோதலுக்குப் பின் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள சுத்தமான நீர் வழங்கல் அமைப்பைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது புனரமைக்க மலேசியா தயாராக இருப்பதாகத் துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சருமான டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் தெரிவித்தார். குனைமின்(Mazen Ghunaim) வேண்டுகோளின் பேரில் இன்று முடிவடைந்த 10வது…
எஸ்ஆர்சி புலனாய்வு அறிக்கையை எம்ஏசிசி இன்னும் ஒரு மாதத்தில் ஏஜியிடம்…
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து ரிம42 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றி விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மீதான விசாரணையை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் ஒரு மாதத்துக்குள் முடித்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. சட்டத்துறைத்துறை(ஏஜி)த் தலைவர் அபாண்டி அலி இதைத் தெரிவித்தார். புத்ரா ஜெயாவில் …
பின்னிரவில் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது பற்றிய சுல்தானின் அறிவுரைப் பின்பற்றுங்கள்,…
நாடாளுமன்ற கூட்டங்கள் நள்ளிரவுக்குப் பின்னரும் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் மீது பழிபோடாமல் சுல்தான் கூறிய அறிவுரைக்கேற்ப நடந்துகொள்ளுமாறு மக்களவைத் தலைவர் பண்டிகர் மூலியாவை எதிரணி பக்கத்தான் ஹரப்பான் இன்று கேட்டுக்கொண்டது. நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 80 நாள்களுக்கு நடப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்று…
புஜுட் தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பின் கைப்பற்றும் என்று ஸாகிட் நம்புகிறார்
சரவாக் மாநிலத்தில் புஜுட் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அத்தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பாரிசான் நேசனல் கைப்பற்றும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார். இத்தொகுதியை பின் வெற்றி கொண்டால், சரவாக் சட்டமன்றத்தில் அதன் எண்ணிக்கை தற்போதைய 72 லிருந்து 73 க்கு…
டிஎபியின் தொல்லையை நிறுத்துவதற்காக பாஸ் சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும்
டிஎபியின் தொல்லைகளை நிறுத்துவதற்காக பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சிக்குழுவில் இருப்பார்கள் என்று பாஸ் சிலாங்கூர் கமிஷனர் சாலேஹென் முக்கீ கூறிக்கொண்டார். பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படாததற்கு இதுதான் பாஸ் கட்சியின் மிக…
நீதியான போராட்டத்தில் கெஅடிலான் கட்சி தொடர்ந்து பங்கெடுக்கும்
இந்நாட்டு மக்களின் நலனைக் கருதியே, அடுத்த பொதுத்தேர்தலில் பல்முனைப் போட்டிகள் உருவாவதைத் தவிர்க்க கெஅடிலான் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. எந்த மாதிரியான சவால்களை எதிர்நோக்கினாலும் அதன் பணி தொடரும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற…
குவான்: சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்பது…
பாஸ் பிகேருடன் உறவுகளை முறித்துக்கொள்ள முடிவு செய்ததை அடுத்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்வது சரியான முடிவுதான் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். இதன் தொடர்பில் இதற்குமுன் தாம் கருத்துச் சொன்னதில்லை என்று குறிப்பிட்ட லிம், அம்மூவரையும் …
அன்வார்: பிகேஆர்-பாஸ் உறவுமுறிவுக்கு கூறப்படும் காரணம் சரி இல்லை
பாஸ் பிகேஆருடன் உறவுகளை முறித்துக் கொண்டதற்குக் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என அன்வார் இப்ராகிம் கூறுகிறார். ஷியாரியா குற்றவியல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் முயற்சிகளுக்கு பிகேஆர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அது குற்றஞ்சாட்டியிருப்பது “உண்மையல்ல” என்று அன்வார் கூறினார். “நானும் …
ஊழல் குறித்து புகார் செய்ய ஒரு இணையத்தளம்: சி4 தொடங்கியது
ஊழல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சி4, வரவுமீறிய ஆடம்பர வாழ்க்கை வாழும் பிரமுகர்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்காகவே ஒரு இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளது. Kleptocrazy.my என்னும் இணையத்தளத்தில் புகார்களைப் பதிவிடலாம். தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக படங்கள், காணொளிச் சான்றுகளையும் பதிவிடலாம். இவை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு …
ஹரப்பான் வென்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும்
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிரணி மத்திய அரசைக் கைப்பற்றினால் ஐந்து ஆண்டுகாலத்தில் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று பக்கத்தான் இளைஞர்கள் கூறுகின்றனர். "அசுத்தமான வேலைகளை" ஈர்க்கும் தன்மையுடையவைகளாக மாற்றுவது மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறைப்பது ஆகியவற்றின் வழி இதனை அடையும் நோக்கத்தை கூட்டணி கொண்டிருப்பதாக…
மும்முனைப் போட்டியா?, பாஸுடன் மோதத் தயார் என்கிறார் அஸ்மின்
அடுத்தப் பொதுத் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியில் பாஸ் கட்சியுடன் மோதுவதற்கு பிகேஆர் தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் பிகேஆர் வரக்கூடிய எதையும் சந்திக்க தயாராக இருந்தாக வேண்டும். சூழ்நிலை அவ்வாறு அமைந்தால், நாம்…
இசியின் மலாக்கா தொகுதிமறுவரைவு முன்மொழிதலை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது
மலாக்கா மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் தொகுதிமறுவரைவு முன்மொழிதலை மலாக்கா உயர்நீதிமன்றம் தல்ளிவைத்துள்ளது. இன்று, நீதிபதி வாஸீர் அலாம் மைடின் மீரா அவரது அறையில் இந்த வழக்கு விசாரணக்கு ஜூன் 14 ஆம் தேதியை நிர்ணயித்தார் என்று என்எஸ்டி செய்தி கூறுகிறது. "இது…
நஜிப்புக்கு எதிராக கைருடின், மாத்தியாஸ் வழக்கு
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் ஆகிய இருவரும் தங்களை பாதுகாப்புச் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்காக பிரதமர் நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நஜிப்,…
பொதுப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயரும் என்பது பொய்யான செய்தி
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயரும் என்று சமூக வலைத்தளங்களில் உலாவரும் தகவலை நம்ப வேண்டாம் என உயர்க் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அது ஒரு பொய்யான செய்தி என்று அதன் அறிக்கை கூறியது. அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை அடுத்து செலவுகளைச் சரிக்கட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டியதாயிற்று …
ஆஸி குடியுரிமை வைத்திருந்த டிஏபி பிரதிநிதி சரவாக் சட்டமன்ற உறுப்பினர்…
சரவாக் சட்டமன்ற உறுப்பினர் (டிஏபி- புஜுட்) திங் தியோங் சூனின் பதவி பறிக்கப்பட்டது. திங் ஆஸ்திரேய குடியுரிமை வைத்துள்ளதால் அவரைச் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று சரவாக் அனைத்துலக வாணிக, மின் -வர்த்தக அமைச்சர் வொங் சூன் கோ (பிஎன் -பாவாங் அசான்) கொண்டுவந்த தீர்மானம் …
நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயாரா? நஜிப்புக்கு கைருடின் சவால்
நேற்றைய அம்னோ பேரணியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத்தேர்தல் திடீரென்று நடக்கலாம் என்று கோடிகாட்டியதைப் பிடித்துக்கொண்ட பத்து கவான் அம்னோ முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கும் துணிச்சல் உண்டா என்று நஜிப்புக்குச் சவால் விடுத்தார். “அதிகம் பேச வேண்டாம் என்று …
அம்னோ கூட்டம் பெர்சே 5, சட்டம் 355 பேரணிகளுக்குத் திரண்டதைவிட…
கடந்த 12மாதங்களில் நடந்தேறிய மிகப் பெரிய பேரணி என்றால் அது நேற்றைய அம்னோ பேரணிதான். அம்னோவின் வலிமையைக் காண்பிக்கும் முகமாக 80ஆயிரம் ஆதரவாளர்கள் புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டரங்கில் கூடியிருந்தனர். 71ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடிய கூட்டம் அரங்கை முழுமையாக நிறைக்கவில்லைதான் -மூன்றில் ஒரு பகுதி இருக்கைகள் …
பாஸ் – பிகேஆர் உறவு முறிந்தது
பிகேஆர் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள பாஸ் கட்சியின் முக்தாமர் எடுத்திருந்த முடிவை அக்கட்சியின் ஷியுரா மன்றம் நிலைநிறுத்தியது. இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளர் நிக் முகம்மட் ஸவாவி சாலே இதனை அறிவித்தார். அரசியல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த கூறுகளின்…
மலேசியா- வட கொரியா ஆட்டம் நடுநிலை இடத்தில் நடத்தப்படுவதையே டிஎம்ஜே…
மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஆசிய கிண்ண தகுதிப் போட்டியில் மலேசியா வட கொரியாவை பியோங்காங்கில் சந்தித்து விளையாடுவதை விரும்பவில்லை. ஜோகூர் பட்டத்திளவரசருமான துங்கு இஸ்மாயில், ஆட்டக்காரர்கள் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு நடுநிலையான இடத்துக்கு ஆட்டத்தை மாற்ற வேண்டும் …
ஐஎஸ்- தொடர்பு நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்பு நிலையில் மலாக்கா போலீசார்
மலாக்கா போலீசார் சீரியாவில் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடியுடன் தொடர்புள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் அம்மாநிலத்தில் இல்லை என்று உறுதியாக நம்புகிறார்கள். என்றாலும் போலீசார் விழிப்பாக இருந்து கண்காணிப்பைத் தொடர்வார்கள் என மாநிலப் போலீஸ் தலைவர் அப்துல் ஜலில் ஹசன் கூறினார். “அந்த ஐஎஸ் …
எண்ணெய் விலை குறைந்துள்ளதைப் பார்த்தீர்களா: எதிரணியைக் கலாய்க்கிறார் ரோஸ்மா உதவியாளர்
மூன்றாவது வாரமாக எரிபொருள் விலை குறைந்துள்ளதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு எதிரணியை வறுத்தெடுக்க முடிவு செய்துள்ளார் ரிசால் மன்சூர். எரிபொருள் விலை குறைவது, அரசாங்கம் எரிபொருள் விலையில் தில்லுமுள்ளு செய்து ஆதாயம் காண முயல்வதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டி வந்தது பொய்யென்பதைக் காண்பிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் …
ரீஸால்: வட கொரியாவுக்கு தூதரைத் திரும்ப அனுப்பும் திட்டம் இல்லை
வட கொரியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தூதரை மலேசியா திரும்ப அனுப்பப்போவதில்லை என ஓரியெண்டல் டெய்லி நியுஸ் செய்தி ஒன்று கூறுகிறது. பிப்ரவரி 12-இல், கேஎல்ஐஏ2-இல் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்-நாம் கொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட நெருக்கடி …
அம்னோவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஊழலை எதிர்த்துப் போராட எம்ஏசிசி…
71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அம்னோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்ட மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அக்கட்சி ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. “அதிகமான (நாடாளுமன்ற) இடங்களைக் கொண்ட கட்சி என்ற முறையில், நாட்டின் நிர்வாகத்துக்கும் முன்னேற்றத்துக்கும் கொள்கைகள் வகுப்பதில் (அம்னோ) தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு”, …
கைருடின், மாத்தியாஸ் ஆகியோருக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டு திரும்பப்பெறப்பட்டது
வெளிநாட்டில் 1எம்டிபி பற்றி செய்த புகார்கள் சம்பந்தமாக கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த நிதி நாசவேலை குற்றச்சாட்டை அரசு தரப்பு மீட்டுக்கொண்டுள்ளது. வழக்கைத் தொடர வேண்டாம் என்று தமக்கு பணிக்கப்பட்டிருப்பதாக துணை அரசு தரப்பு வழக்குரைஞர் அவாங் அர்மடாஜெயா…