மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
அம்னோவும் பாரிசானும் மக்களைத் திட்டி, மிரட்டி, ஏமாற்றி வாக்குகளை வாங்க…
மலேசியாவின் 60 ஆண்டுக் கால வரலாற்றில் பல முன்னேற்றங்களை நாடு அடைந்திருந்தாலும் வளர்ச்சியில் கைவிடப்பட்ட இனமாக, ஏற்றத்தில் ஓரங்கட்டப்பட்டப் பிரிவாக இந்தியர்கள் உள்ளனர் என்றால் அது மிகையாகாது என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். ஆக, அதனைச் சரி செய்ய,…
சீன நிறுவனத்துக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி விலக்கா? உள்ளூர் நிறுவனங்களுக்குஇல்லையா?
சீனக் கட்டுமான நிறுவனம் (சிசிசிசி) கிழக்குக் கரை இரயில் தொடர்பு(இசிஆர்எல்) திட்டத்துக்கான பொருள்களுக்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வழங்க வேண்டியதில்லை என்று விலக்களிக்கப்பட்டிருப்பதுபோல் உள்ளூர் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இசிஆர்எல் மக்கள் நலன்சார்ந்த திட்டம் என்பதால்தான் அதற்கு வரி விலக்கு என்று அரசாங்கம் தெரிவித்திருப்பதாக டிஎபி புக்கிட் மெர்தாஜாம் வேட்பாளர் …
பேராக்கில் அமனா 16 இடங்களில் போட்டி
பேரா அமனா நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். இதனைச் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்த மாநில அமனா தலைவர் அஸ்முனி அவி, தாம் மாஞ்ஜோல் சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாய்க் கூறினார். அமனா உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா அவரது …
ஜைட்- டுக்கு டிஏபிமீது அதிருப்தி?
பெரும்பாலும் சீனர்களைக் கொண்ட டிஏபி மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்குமுள்ள சிறப்புரிமைகளை எதிர்க்கும் கட்சி என்று கூறப்படுவதைப் பொய்யாக்கும் எண்ணத்துடன் அக்கட்சியில் சேர்ந்தவர் ஜைட் இப்ராகிம். 2017 ஒரு நேர்காணலில் மலாய் தீவிரவாதத்தை எதிர்ப்பதுபோல் டிஏபியில் சீன ஆதிக்கவாதம் நிலவினால் அதையும் எதிர்க்கப்போவதாகக் கூறினார் அந்த முன்னாள் சட்ட அமைச்சர். ஆனால், …
நூருல் இஸ்ஸா பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவாராம்
எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் பெர்மாத்தாங் பாவிலும் அவரின் தாயாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் போட்டியிடுவார்கள். ஆங்கில நாளேடான த ஸ்டார் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனை மேற்கோள்காட்டி இதைத் …
நஸ்ரி: மகாதிரால் லங்காவிக்கு எதுவும் செய்ய இயலாது
டாக்டர் மகாதிர் முகம்மட் 14வது பொதுத் தேர்தலில் லங்காவியில் வெற்றி பெற்றால்கூட அதன் மேம்பாட்டுக்கு அவரால் எதுவும் செய்ய இயலாது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசீஸ் கூறினார். கூட்டரசு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் அவரால் அதிகமாக எதுவும் செய்ய முடியாது. “எதிரணியில் உள்ள ஒருவருக்கு எப்படி …
செகாமாட்டை மிகப் பெரிய பெரும்பான்மையில் மஇகா தக்க வைத்துக்கொள்ளும்- சுப்ரா…
செகாமாட், ஜெமெந்தா, கெமாஸ் பாரு, பூலோ காசாப், பத்து அனாம் ஆகிய வட்டாரங்களில் உள்ள இந்தியர்களின் வலுவான ஆதரவு மஇகா-வுக்கு இருப்பதால் அக்கட்சி அந்த நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள நல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம். “எனக்கு வரும் அறிக்கைகள் அப்பகுதிகளில் மஇகாவுக்கு இந்திய சமூகத்தின் …
தெலுக் இந்தானை வென்றால் இங்ஙாவுக்கு அமைச்சர் பதவி, குவான் எங்…
தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுயில் டிஎபியின் வேட்பாளராக போட்டியிட பேராக் டிஎபி தலைவர் இங்ஙா கோர் மிங் அறிவிக்கப்பட்டார். அவர் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்வுடன் மோத வேண்டியிருக்கும். இன்றிரவு பண்டார் பாரு தெலுக் இந்தானில் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் இந்த அறிவிப்பைச்…
லியோ பெந்தோங்கில் தோல்வியடைவார் என்று பாஸ் வேட்பாளர் கூறுகிறார்
மே 9 பொதுத் தேர்தலில் மசீச தலைவர் லியோ தியோங் லாய் அவரது பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வியடைவார் என்று எதிர்பார்ப்பதாக பாஸ் கட்சியின் பெலாஙை மாநில சட்ட மன்ற வேட்பாளர் அப்துல் ஹமிட் பாஹாதிம் கூறுகிறார். பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியின் நான்கு மாநிலத் தொகுதிகளில் பெலாஙை…
ஷரிசாட் பண்டார் துன் ரசாக்-கில் போட்டியிட மாட்டாராம்
அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பண்டார் துன் அப்துல் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுவதை மறுத்தார். “பலர் என்னிடம் வந்து பண்டார் துன் அப்துல் ரசாக்கில் போட்டியிடுவீர்களா என்று வினவுகிறார்கள். “இல்லை என்பதே என்னுடைய பதில். இவ்வளவுக்கும் …
ஜிஇ14 வாக்களிப்பு நிலையங்கள் எங்கே? இன்று தெரிந்து கொள்ளலாம்
14வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் எங்கெங்கு உள்ளன என்ற விவரத்தை இன்று தெரிந்து கொள்ளலாம். வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல், அது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணைய வலைத்தளமான pengundi.spr.gov.my-இல் இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள் MySPR Semak என்ற செயலி வழியாகவும் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெற முடியும். …
உங்கள் கருத்து: ரபிடாவுக்கு பிஎன் அளித்த விளக்கம் மேலும் பல…
நஜிப்பின் ரிம2.6 பில்லியனுக்கு வருமான வரி விதிக்கப்பட்டதா? ரபிடா கேட்கிறார் சூசாகேஸ்: ஒருவர் வருமான வரி கட்டாதிருக்க வரிவிலக்குக்கு விண்ணப்பத்திருக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன், சுப்பன் எல்லாருமே தங்கள் வருமானம் நன்கொடையாக வந்தது என்று கூறத் தொடங்கி விடுவார்கள். நானும்கூட ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் ‘அண்ணன்’, ‘தம்பி’, …
ஜிஇ14: பெரும்பாலான இடங்களில் பாஸ் போட்டி
பாஸ் கட்சி எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் 222 நாடாளுமன்ற இடங்களில் 150க்கு மேற்பட்ட இடங்களுக்கும் 587 சட்டமன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களுக்கும் போட்டியிடும். சரவாக்கில் மட்டும் அது போட்டியிடாது. மலேசியாவில் எந்தவொரு கட்சியும் ஒரு பொதுத் தேர்தலில் இத்தனை இடங்களுக்குப் போட்டியிட்டது இல்லை. 13வது பொதுத் தேர்தலில் …
மகாதிர் லங்காவி வேட்பாளர், வான் அசிஸா அறிவித்தார்
பக்கத்தான் ஹரப்பானின் லங்காவி நாடாளுமன்ற வேட்பாளராக அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் முகமட்டை பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்றிரவி அறிவித்தார். 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட செராமாவில் வான் அசிஸா இந்த அறிவிப்பைச் செய்தார். முன்னதாக, பெர்சத்துவின் கெடாவுக்கான மாநில மற்றும் நாடாளுமன்ற…
டாக்டர் பூ : ஸ்கூடாயிலிருந்து அகற்றப்பட்டபோது, என் அரசியல் வாழ்க்கை…
ஜொகூர் மாநில முன்னாள் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், தான் லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்; அதன் விளைவாக, இம்முறை அவர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று தெரிகிறது. “லாபிஸ் நாடாளுமன்றத்தில் போட்டியிட விரும்பவில்லை எனப் பல பலமுறை கூறியும், நான்…
14 ஆவது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி இருக்காது என்பதை…
14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு மலாய் சுனாமியைத் தூண்டிவிடக் கூடாது என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார், ஏனென்றால் அம்னோவும் பிஎன்னும் எப்போதும் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளன. ஒரு காலத்தில் டிஎபி போராடிய "மலேசியன்…
ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில் ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும், குடியிருப்பாளர்கள் கோரிக்கை
இன்று, ஜொகூர், ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில், ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்க வேண்டுமெனக் கோரி கலந்துபேசிய சுற்றுவட்டார மக்கள், ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்தனர். ஜொகூர் பாரு மாநகரில் இருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தாமான் யூனிவர்சிட்டி (தாமான் யூ), அதிகமான இந்தியர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புப்…
கூட்டரசுப் பிரதேச இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் உடன்படிக்கை கிடையாது, மசீச
மசீச அதன் பாரம்பரிய இருக்கைகளான பண்டார் துன் ரசாக் மற்றும் வங்சா மாஜூ ஆகிய இரண்டயும் விட்டுக்கொடுக்கும் சமாதான பேச்சுக்கே இடமில்லை என்று தொகுதித் தலைவர் சியு இன் கீன் வலியுறுத்திக் கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தலில் மசீச போட்டியிட விரும்பும் ஐந்து கூட்டரசு பிரதேச…
1எம்டிபி நஜிப் பற்றி செங் கியாவ் கூறியதை பிஎன் பெரிதுபடுத்துகிறது
1எம்டிபி விவகாரத்தில் பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக்கை சிக்கவைக்கும் எதுவும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் (பிஎசி) அறிக்கையில் இல்லை என்று டிஎபியின் மூத்த தலை"வர் டான் செங் கியாவ் கூறியிருந்ததை பிஎன் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது. 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்புக்கு எதிரான பக்கத்தான் ஹரப்பான் தாக்குதலை எதிர்க்கும் வகையில்…
பிஎன் வேட்பாளர்கள் நியமன நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்
14 ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்களின் பட்டியல் வேட்பாளர் நியமன நாளுக்கு ஏழு அல்லது 10 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிஎன்னின் தலைமைச் செயலாளர் தங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். இருப்பினும், அந்த அறிவிப்பு நாள் குறித்து பிஎன் தலைவர் நஜிப் ரசாக்…
அஸ்மின் அள்ளிக் கொடுத்தார்: மடிக்கணிகள், ரொக்கம், ஐபேட்ஸ்
சிலாங்கூர் பராமரிப்பு அரசின் மந்திரி பெசார் அஸ்மின் அலி அன்பளிப்புகளை ரொக்கமாகவும், மடிக்கணிகளாகவும், ஐபேட்களாகவும்கூட தமது தொகுதி மக்களுக்கு புக்கிட் அந்தாராபங்சா மற்றும் கோம்பாகில் இன்று அள்ளிக்கொடுத்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அஸ்மின் இந்த உதவிப் பொருள்களை வழங்கினார். அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகளில் மலேசியாகினி பங்கேற்க முடிந்தது. யுகே…
அமானாவில் இந்திய முஸ்லிம் பிரிவு, மாட் சாபு அறிவித்தார்
அமானா கட்சியின் தேசியத் தலைவர், முகமட் சாபு, கட்சியின் இந்திய முஸ்லிம் வம்சாவளி உறுப்பினர்களுக்கு ஒரு தனிப் பிரிவை இன்று அறிமுகப்படுத்தினார். சுபாங்கில், இந்திய முஸ்லிம் சமூக உறுப்பினர்களுடனான ஒரு சந்திப்பின் போது, அவர் இந்த விஷயத்தை அறிவித்தார். ஓர் இந்திய முஸ்லீம் அக்கட்சியில் சேர்ந்தவுடன், அவர்களுக்கான ஒரு…
அரசு ஊழியர்கள் கிறிஸ்துவ இவேஞ்சலிஸ்ட் பற்றி ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும்,…
பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் டிஎபியின் செல்வாக்கு பற்றி அரசாங்க ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிஎபி அதிகமான கிறிஸ்துவ நற்செய்தியாளர்களைக் (இவேஞ்சலிஸ்ட்) கொண்டிருக்கிறது என்று அவர் கூறிக்கொண்டார். நாம் மிக வெளிப்படையான சவாலை எதிர்கொண்டுள்ளோம். ஒரு கூட்டணி இருக்கிறது. அதன்…
























