அஹமட் மஸ்லானைத் தற்காக்க வந்தார் பங் மொக்தார்

உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவினத்தைச்  சரிக்கட்ட  “இரண்டு  வேலைகள்”  செய்யலாம்  என்று  சொல்லிக்  கடும்  குறைகூறலுக்கு  இலக்கான  அனைத்துலக  வர்த்தக,  தொழில்  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானைத் தற்காத்துப்  பேசியுள்ளார்  கினாபாத்தாங்கான்  எம்பி  பங்  மொக்தார்  ரடின். “அந்த  யோசனை மக்களைத்  துன்பப்படுத்துவதற்காக  சொல்லப்பட்டதல்ல. வருமானத்தைப்  பெருக்கிக்  கொள்வதற்காக  சொல்லப்பட்டது”,…

வாழ்த்து சொல்லப்போய் வம்பில் மாட்டிக்கொண்டார்

சமூக  மேம்பாட்டுத் துறை (கெமாஸ்)  அதிகாரி  ஒருவர்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூருக்கும்  புத்தாண்டு  வாழ்த்துச்  சொல்லிச்  சிக்கலில்  மாட்டிக்  கொண்டிருக்கிறார். முகநூலில்   புத்தாண்டு  வாழ்த்து  தெரிவித்த  அவர், 'Sedar diri' (உங்களை உணர்ந்து  நடந்து  கொள்ளுங்கள்) என்று  குறிப்பிட்டிருந்தார். அத்துடன்  அனைத்துலக …

பாஸ் பிஎன்னில் சேராது, ஷுரா மன்றம் திட்டவட்டம்

பாஸ்  பிஎன்னில்  சேரப்போவதில்லை  என்பதை  மீண்டும்  வலியுறுத்தியுள்ளது. ஆனால்,  இஸ்லாத்தின்  நலனுக்காக  எந்தக்  கட்சியுடனும்  அது  ஒத்துழைக்கும். கடந்த  சனிக்கிழமை  நடந்த  கூட்டத்தில்  பாஸின்  ஷுரா மன்றம்  இம்முடிவை  எடுத்தது. “பாஸ்  பிஎன்னில்  சேராது  என்பதை  மன்றம்  மீண்டும்  வலியுறுத்துகிறது. “இஸ்லாத்தின்  நன்மைக்காகவும்  அதை  வலுப்படுத்தவும்  எந்தக்  கட்சியுடனும் …

மகாதிர்: ரிம2.6பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி விசாரணை முடிவுகள்மீது ஏஜி நடவடிக்கை…

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ரிம 2.6 பில்லியன்  அரசியல்  நன்கொடை,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம42 மில்லியன்  ஆகியவை  பற்றிய  விசாரணைகளின்  முடிவுகள்மீது  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  நடவடிக்கை  எடுக்காது  என்று  நினைக்கிறார். அவ்விரு  விவகாரங்கள்மீதும்  மலேசிய  ஊழல்தடுப்பு …

அபாண்டி: மகாதிர் நேர்மாறான உளவியல் தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்

ரிம 2.6 பில்லியன்  அரசியல்  நன்கொடை,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம42 மில்லியன்  ஆகியவை  பற்றிய  விசாரணைகளின்  முடிவுகள்மீது  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  நடவடிக்கை  எடுக்காது  என்று  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியிருப்பதைச்  சட்டத்துறைத்  தலைவர்  நிராகரித்தார். அவ்விவகாரங்களில் …

அஸ்மின்: குரைப்பதை நிறுத்து, ஆதாரம் எங்கே?

சிலாங்கூர்  அரசு  வெட்டுமர  திட்டம் தொடர்பில்  வெளியிட்டதாகக்  கூறப்படும்  கடிதத்தை  வைத்திருந்தால்  சேகுபார்ட்  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  சமூக  ஆர்வலர்  பத்ருல்  ஹிஷாம்  ஷஹாரின்,  அதைக்  காண்பிக்க  வேண்டும். வெறுமனே  ஊடகங்களிடம்  “குரைப்பதை” நிறுத்திவிட்டு  பத்ருல்  கடிதத்தை  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்திடம்  ஒப்படைக்க  வேண்டும்  என  சிலாங்கூர் …

சீனாவுடனான விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்

1எம்டிபி,  பண்டார்  மலேசியாவில்  60 விழுக்காடு  பங்குரிமையை  சீனாவுக்கு  விற்றது  தொடர்பில்  செய்துகொள்ளப்பட்ட   விற்பனை கொள்முதல்  ஒப்பந்தத்தைப்  பகிரங்கப்படுத்த  வேண்டும்  என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  வலியுறுத்தினார். “1எம்டிபி  ரியல்  எஸ்டேட்,  இஸ்கண்டர்  வாட்டர்ஃபுராண்ட்  ஹொல்டிங்ஸ்- சைனா  ரயில்வே  எஞ்சினியரிங்  கார்ப்பரேசன்(IWH-CREC)  கூட்டமைப்புடன்  செய்துகொண்ட …

சொத்தின் மதிப்பில் திருத்தம் செய்யப்படும்: 1எம்டிபி விளக்கம்

பண்டார்  மலேசியா நிலத்தில் 60 விழுக்காடு   இஸ்கண்டர்  வாட்டர்ஃபுராண்ட் ஹோல்டிங்ஸ்- சைனா  ரயில்வே  எஞ்சினியரிங்  கார்ப்பரேசன்(IWH-CREC) கூட்டு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டதில்  விலை  தொடர்பில்  நிலவும்  குழப்பத்துக்கு  மலேசிய  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி  விளக்கம்  அளித்துள்ளது. முதலில்  1எம்டிபி   அந்த  நிலத்தை  ரிம7.41 பில்லியனுக்கு  விற்பனை  செய்திருப்பதாகக்  கூறியிருந்தது.  ஆனால்,…

ராஜா மூடாவை நிந்தனை செய்யும் நோக்கம் இல்லை: முன்னாள் சிஎம்

முன்னாள் மலாக்கா  முதலமைச்சர்  அப்துல்  ரஹிம்  தம்பி  சிக்-கின்  வழக்குரைஞர்கள்  அவருக்கு  எதிரான  அரச  நிந்தனைக்  குற்றச்சாட்டு  கைவிடப்பட  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும் மனுவைத்  தாக்கல்  செய்திருக்கிறார்கள். அதனை  அடுத்து  அப்துல்  ரஹிம்  மீதான  விசாரணையை  நீதிபதி  சிலாமாட்  யாஹ்யா  தள்ளி  வைத்தார். “நிந்தனை  செய்யும்  நோக்கம்  எதுவும் …

ஜோகூர் சுல்தான் மூவார் மக்களுடன் பசியாறினார்

ஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இன்று  காலை மூவாருக்கு  திடீர்  வருகை  புரிந்து  மக்களுடன்  மக்களாக  அமர்ந்து  காலை  உணவை  உட்கொண்டார். சுல்தான்,  மூவார்  மாவட்ட  ஆட்சியர்  ரம்லி  ஏ. ரஹ்மானுடன் காலை  மணி  6.45க்கு  ஜாலான்  சாலேயில்  உள்ள  மாஸ்  ஜெயா  வணிக  மையத்துக்கு  வந்தார். வந்தவர் …

அம்னோவுடன் ஒத்துழைப்பு பற்றி ஹாடி பாஸ் தலைவர்களுக்கு விளக்குவார்

வரும்   சனிக்கிழமை  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,   சிறப்பு விளக்கக்  கூட்டம்  ஒன்றை  நடத்துவார்.  அதில்  அவர்  அம்னோவுடன்  ஒத்துழைப்பது  என்றால்  என்னவென்பதைக்  கட்சியின்  மற்ற  தலைவர்களுக்கு  விளக்குவார்  எனக்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  தகியுடின்  ஹசான்   கூறியதாக  சினார்  ஹரியான்  செய்தி  வெளியிட்டுள்ளது. ஆனால்,  தகியுடின் …

சட்டத்தில் சீர்குலைவு: குழந்தை மதமாற்ற வழக்கே சான்று

உங்கள்  கருத்து: ‘50 ஆண்டுகளுக்குப்  பிறகும்  சிவில்  சட்டத்தின்  எல்லை  எது,  ஷியாரியா  சட்டத்தின்  எல்லை  எது  என்பது  தெரியாமலேயே  இருக்கிறது’ நெகாராவான்: மலேசியா  ஒரு  தோல்விகண்ட  நாடு  என்பதற்கு  இது  மற்றுமொரு  எடுத்துக்காட்டு.  50 ஆண்டுகளுக்குப்  பின்னரும்  சட்டம்  இன்னும்  சீர்குலைந்துதான்  கிடக்கிறது. சிவில்  சட்டத்தின்  எல்லை …

பாக்ஸைட் கழிவுகளைத் துப்புரவுபடுத்த மாதம் ரிம1மி. செலவாகிறது

பாக்ஸைட்டைச்  சேமித்து  வைக்க  தனி  இடம் இல்லை  என்பதால்  குவாந்தான்  துறைமுகத்தில்   பாக்ஸைட்  மண்  பெருமளவு  குவித்து  வைக்கப்பட்டு   தூய்மைக்கேட்டை  ஏற்படுத்தியுள்ளது. கடும் மழையால்  தூய்மைக்கேடு   மேலும்  மோசமடைந்துள்ளது. இதைச்  சமாளிக்க   ஒரு  திட்டம்  தயாரித்திருக்கிறார்  குவாந்தான்  துறைமுக  கொன்சோர்டியம்  சென்.பெர்ஹாட் (கேபிசி)  தலைவர்    கஸ்புல்லா  ஏ.காடிர். ஆனால், …

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோள்: அம்னோவுக்கு நன்றி!

  தேசியப்பள்ளியில் அமலாக்கம் செய்வதற்காக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருக்கும் இருமொழித் திட்டம் தமிழ்மொழிப்பள்ளிகளுக்குத் தேவையில்லை இல்லை என்ற கருத்து இன்று கோலாலம்பூர், துன் விஸ்மா சம்பந்தனில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் ஏகமனதாகத் தெரிவிக்கப்பட்டது. அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு  மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய பாடங்களை ஆங்கிலம் மற்றும்…

இந்திராவின் நிலை யாருக்கும் ஏற்படலாம்: துணை அமைச்சர் எச்சரிக்கை

ஒரு தாயான    இந்திரா   காந்திக்கு   ஏற்பட்ட    நிலைமை   இந்நாட்டில்    இன, சமய வேறுபாடின்றி   யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என இளைஞர், விளையாட்டுத்துறை   துணை   அமைச்சர்     எம். சரவணன் கூறினார். “நமது   நீதிமுறை…

பிகேஆர் சரவாக்கில் இருக்கப்போவது உறுதி: சரவாக் சிஎம்-முக்கு அஸ்மின் பதிலடி

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தன் கட்சி சரவாக்கில் தொடர்ந்து இருப்பது உறுதி என்பதை வலியுறுத்தினார். மேற்கு   மலேசியக்   கட்சிகள்   சரவாக்கில்   தலையிடுவதை   சரவாக்   முதலமைச்சர்    அடினான்  சாத்தேம்   கண்டிருப்பது   பற்றிக் கருத்துரைத்தபோது  …

அன்வாரை விடுவிக்க மகாதிர் உதவி?

முன்னாள் பிரதமர்   டாக்டர் மகாதிர் முகம்மட்   நடப்புப் பிரதமர்   நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்து    வருவதால்    சிறையில் உள்ள     எதிரணித் தலைவர்    அன்வார் இப்ராகிமை விடுவிக்க    அவரின்    உதவியை     நாடப்போவதாகக்  …

இந்திரா காந்தி வழக்கு தீர்ப்பில் மஇகா ஏமாற்றமடைந்துள்ளதாம்

  இந்திரா காந்தியின் குழந்தைகள் ஒருதரப்பினால் மத மாற்றம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மீது மஇகா ஏமாற்றமடைந்துள்ளது என்று அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். இந்திரா காந்தியின் வழக்கில் சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் மஇகா மிகச் சஞ்சலமடைந்துள்ளது என்று…

டுபாயில் ஒரு பக்கம் கட்டிடத்தில் தீ, மறுபுறம் புத்தாண்டுக் கொண்டாட்டம்

டுபாயில்   நேற்றிரவு    63-மாடி கட்டிடத்தில்     தீ பற்றிக் கொண்டது.    ஆடம்பர தங்கும் விடுதியான    Address Downtown Dubai hotel-லையும் குடியிறுப்பு வீடுகளையும் கொண்ட    அக்கட்டடத்தில்    பற்றிய     தீ    அக்கட்டிடத்தின்    ஒரு பக்கமாக…

பக்கத்தான் தேர்தல் திட்டம், விரைவில்

பக்கத்தான் ஹராபான்,  அம்னோ- தலைமையில்   அமைந்த   பிஎன் அரசாங்கத்தைத்   தேர்தல்வழி   கவிழ்க்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்கும். “இறைவன்  அருளால்,   விரைவிலேயே    ஹராபான்,    எங்கள்    தலைமைத்துவத்தை   வலுப்படுத்தி   அம்னோ- பிஎன்    அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான  …

அம்னோ தரப்பு நஜிப்பின் பதவி விலகலைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும்

புத்தாண்டில்  அடியெடுத்து   வைத்துள்ள   காபோங்கான்   கெத்துவா   அம்னோ  சாவாங்கான் மலேசியா,   அம்னோ தலைவர்   நஜிப்   அப்துல் ரசாக்கின்    பதவி விலகலுக்குத்   தொடர்ந்து    கோரிக்கை  விடுவதில்    உறுதியாக உள்ளது. அத்தரப்பு   மக்களின்  …

முகைதின்: மக்களுக்கு அரசாங்கத்திடம் இன்னும் நம்பிக்கை வரவில்லை

2015 மக்களுக்கு அரசாங்கத்தின்மீது நம்பிக்கை தளர்ந்த போயிருந்த நிலையில்தான் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அதனாலேயே  2016   சவால்மிக்க ஆண்டாக   விளங்கும்   என்கிறார்   முன்னாள் துணைப் பிரதமர்  முகைதின் யாசின். நிர்வாகத்தில் நேர்மையின்மை,  வெளிப்படைத்தன்மையின்மை   ஆகியவற்றின்  காரணமாக  2015 ஒரு மந்தமான ஆண்டாக…

நள்ளிரவிலிருந்து பெட்ரோல் கட்டணம் குறைகிறது

  பெட்ரோல் நிலையத்தில் விற்கப்படும் ரோன்95, ரோன் 97 மற்றும் டீசல் கட்டணம் இன்று நள்ளிரவிலிருந்து இறக்கம் காண்கின்றது. ரோன்95 10 சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம1.85 க்கும், ரோன்97 20 சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம2.45 க்கும், டீசல் 30 சென் குறைந்து ஒரு…