புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்று மருத்துவ அலுவலர்களின் (Medical Officers - MOs) கடுமையான பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் அதிக வேலைப்பளுவுக்கு ஆளாவதோடு, நோயாளிகள் காத்திருக்கும் நேரமும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், பணியாளர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்தால், நோயாளிகளுக்கு வழங்கப்படும்…
மலேசிய திரைப்படவிழாவில் பிரிவினை வேண்டாம்: மஇகா
மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 28வது மலேசிய திரைப்பட விழா(எப்எப்எம்)வில் படங்களை மொழிவாரியாக பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தை(பினாஸ்)க் கேட்டுக்கொண்டார். மலேசியர்களை ஒன்றிணைப்பதில் கலைத்துறை மற்ற தொழில்துறைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றாரவர். “ஏன் இந்தப் பாகுபாடு? ஒற்றுமை ஊடகங்களான பண்பாடு, …
‘நான் அமனாவின் மந்திரி புசார் வேட்பாளரா?’, மறுக்கிறார் பாஸ் திரெங்கானு…
தெபோ சட்டமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் அப்துல் கரிம் தாம் திரெங்கானு மந்திரி புசார் வேட்பாளர் என்றும் அதற்கு பார்டி அமனா நெகாரா ஆசி உண்டு என்றும் கூறப்படுவதை மறுக்கிறார். “என்னை அமனாவுடன் இணைத்துப் பேசப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதை நான் மறுப்பதே முறையாகும் என நினைக்கிறேன். இல்லையேல் …
நஜிப் இந்தியர்களுக்கு மகாதிரைவிட அதிகமாகச் செய்திருக்கிறாராம்
மகாதிருடன் ஒப்பிடுகையில் அவர் எப்படி இந்தியச் சமூகத்திற்கு அதிகமாகச் செய்திருக்கிறார் என்பதை பிரதமர் நஜிப் நேற்றிரவு மஇகாவின் 70 ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.. முன்னதாக இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இன்னும் அதிமாகச் செய்ய…
சிங்கப்பூர் பிரதமரின் மனைவி வைத்திருந்த சிறு கைப்பையின் விலை எஸ்$15-தான்
அமெரிக்கப் பயணம் மேற்கொண்டு வெள்ளை மாளிகை சென்றிருந்தபோது சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார் ஹோ சிங் அணிந்திருந்த உடைகள் குறித்து முதலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது உடைகளையும் அமெரிக்க அதிபரின் மனைவி மிட்சல் ஒபாமா அணிந்திருந்த உடைகளையும் ஒப்பிட்ட வலைமக்கள் இரண்டுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி குறைகூறினார்கள். “இன்னும் கொஞ்சம் பகட்டான …
எம்பி: திரெங்கானு அரசு உறுதியாக உள்ளது, திங்கள்கிழமை எதுவும் நிகழாது
திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் ரசிப் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை சட்டமன்றம் கூடும்போது அசம்பாவிதம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்றார். அவர் பதவி விலக வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட் கோரி வருவதை அடுத்து மாநில அரசில் நெருக்கடி நிலவுவதாகக் …
கேஜே, டிஓஜேமீது ஆத்திரம் ஏன்? அது உண்மையைத்தானே சொல்கிறது’
‘அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) 1எம்டிபி சொத்துப் பறிப்பு வழக்கில் புத்ரா ஜெயா குற்றம் புரிந்திருக்கிறது என்பதுபோல் நடந்து கொள்கிறது என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் குற்றம் சாட்டியிருப்பது தவறு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. “கைரி நீங்கள் சொல்வது தவறு- அமெரிக்க நீதித் துறை புத்ரா ஜெயாவைக் குற்றவாளி …
வழக்கு முடியும் முன்னரே புத்ரா ஜெயாவைக் குற்றவாளி ஆக்க முயல்வதா?…
1எம்டிபி தொடர்புடைய சிவில் வழக்கில் புத்ரா ஜெயாவும் ஒரு குற்றவாளிதான் என்பதுபோல் அமெரிக்க நீதித்துறையின் பேச்சும் நடவடிக்கைகளும் இருப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார். “அவர்கள் (விசாரணை முடிவுகளை) அறிவித்த விதம் ஒரு தீர்ப்புரை போலவும் (அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்) குற்றாவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது …
சமூக வலைத்தளங்களில் மகாதிர் ‘கிள்ளிங்’ என்று கூறும் காணொளி
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் “கிள்ளிங்” என்று கூறுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் குறிப்பாக வாட்ஸ்எப்பில் வேகமாக பரவி வருகிறது. மஇகாவின் 70ஆம் ஆண்டுநிறைவு விருந்து இன்றிரவு நடைபெறவுள்ள வேளையில் அக்காணொளி வெளிவந்துள்ளது. அதை அக்கட்சி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காத்துப் பேச …
திரெங்கானு பாஸ்: அஹ்மட் சைட்டும், கசாலியும் அம்னோவிருந்து விலக நினைத்தால்…
அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான அஹ்மட் சைட்டும் கசாலி தயிப்பும் அக்கட்சியிலிருந்து விலக விரும்பினால் உடனே முடிவு செய்தாக வேண்டும், மாநிலத்தில் குழப்படி செய்து கொண்டிருக்கக் கூடாது என திரெங்கானு பாஸ் கூறியது. அவ்விருவரும் அம்னோவிலிருந்து வெளியேறினால்தான் சட்டமன்றத்தில் எதிரணிக்குப் பெரும்பான்மை கூடியுள்ளதா என்பதை திரெங்கானு சுல்தானால் தீர்மானிக்க முடியும் …
டான்ஸ்ரீ மூவர் மீதான புகார் ஒன்றும் லேசுபட்ட புகார் அல்லவே:…
பிரதமரைக் கவிழ்க்க சதி நடப்பதாக அம்னோ இளைஞர் உதவித் தலைவர் அஸ்வான் ஹருன் செய்த புகார்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற போலீசாரின் முடிவு பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட்டுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அச்சதித் திட்டத்தில் பேங்க் நெகரா முன்னாள் ஆளுனர் ஸெட்டி அக்தார் அசிஸ், மலேசிய …
திருடர்களின் இருப்பிடத்தை ‘செல்பி’ காட்டிக் கொடுத்தது
பாகிஸ்தானி ஒருவரிடம் கொள்ளையிட்ட திருடர்களை பொந்தியான் போலீசார் 24 மணி நேரத்தில் பிடித்ததாக சினார் ஹரியான் கூறுகிறது. இரண்டு நாள்களுக்குமுன் பொந்தியான் நகரில் இரு ஆடவர்கள் ரேம்போ-பாணி கத்தியை அந்த பாகிஸ்தானியர் கழுத்தில் வைத்து அழுத்தி அவருடைய கைபேசியையும் ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்ததோடு போகாமல் கைபேசியைக் …
கேஎல்ஐஏ-இலும் கேஎல்ஐஏ2-இலும் சேவைக் கட்டணம் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும்-…
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் கேஎல்ஐஏ 2-இலும் பயணிகள் சேவைக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ்) தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெல்லூ நடப்புக் கட்டணங்கள் போட்டிகரமாக இல்லை என்றார். மாஸ் ஆதாயம் காணும் நிறுவனமாக விளங்க அது அவசியம் …
புதிய கட்சி மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்குமானது- காடிர் ஜாசின்
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பதிவு செய்யும் கட்சி மலாய்க்காரர்/ பூமிபுத்ரா கட்சியாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஏ. காடிர் ஜாசின் கூறினார். “உலகமயமும் சீர்திருத்தமும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்த காலக்கட்டத்தில் மலாய்க்காரர் மற்றும் பூமிபுத்ராக்களின் போராட்டத்தைத் தொடர்வதும் புதிப்பிப்பதும் அக்கட்சியின் குறிக்கோளாகும்”, என காடிர் அவரது …
முகைதினின் புதிய கட்சியில் சேர கைருடின் விரும்பவில்லை
பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹாசன் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் பதிவு செய்யப்போகும் புதிய கட்சியில் சேர மாட்டார். கைருடின் இன்று விடுத்த அறிக்கையில் தனக்கு “அரசியல் ஆசை” கிடையாது என்றும் கட்சிக்கு வெளியில் இருந்துகொண்டேகூட ஊழலை எதிர்க்கலாம் …
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 3,266 பட்டதாரிகளில் 1,520 பட்டதாரிகள் இந்தியர்கள் –…
கடந்த சில நாட்களில், வாட்ஸ்அப் புலனம் மற்றும் ஓன்லைன் செய்தி தளம் வழியாக கெடா மாநிலத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக பல் மருத்துவத்துறையில், குறித்து கடுமையான விமர்சனத்துடன் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில், பல் மருத்துவத்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மொத்தம் 75 மாணவர்களில் மூவர்…
‘மாநில அரசைக் குறைகூறும் கசாலி தயிப் ஆட்சிக்குழுவிலிருந்து விலக வேண்டும்’
அஜில் சட்டமன்ற உறுப்பினர் கசாலி தயிப் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து விலகிக்கொள்வது நல்லது என்று அம்னோ திரெங்கானு தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் வான் அப்துல் ஹகிம் வான் மொக்தார் அறிவுறுத்தியுள்ளார். அது ஒரு கடுமையான நடவடிக்கைதான் என்றாலும் திரெங்கானு மாநில அரசு மந்திரி புசார் அஹ்மட் ரசிப் அப்துல் …
ரபிசி: அரசாங்கம் எரிபொருள் விலை நிர்ணயக் கொள்கையை மீறுகிறது
அரசாங்கம் அது வகுத்த எரிபொருள் கொள்கையை அதுவே மீறுவதாக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றம் சாட்டினார். உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் எரிபொருளில் மறைமுக வரிகள் இருப்பது தமக்குத் தெரியாது என்றும் எரிபொருள் சில்லறை விலை மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் …
திரெங்கானுவில் திடீர் தேர்தலா? தெரியாது என்கிறார் அஹமட் சைட்
திரெங்கானுவில் திடீர் தேர்தல் நடத்தப்படுவது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறிய கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் சைட், திடீர் தேர்தல் நடத்த மந்திரி புசார் ரசிப் அப்துல் ரஹ்மான் திரெங்கானு சுல்தானின் அனுமதியைப் பெற வேண்டும் என்றார். “எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால், திடீர் …
பெர்சே பேரணி நடப்பது உறுதி
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே 2.0, ஐந்தாவது தடவையாக பேரணி நடத்தப் போகிறது. இம்முறை 1எம்டிபி வழக்கின்மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அது பேரணி நடத்தும். இன்று பெட்டாலிங் ஜெயாவில், பெர்சே அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, …
திரெங்கானுவில் திடீர் தேர்தல்?
அம்னோவைக் குறைகூறிய கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் சைட் கட்சிநீக்கம் செய்யப்படும் சாத்தியம் இருப்பதால் திரெங்கானுவில் திடீர் தேர்தல் நடக்கலாம். திரெங்கானு சட்டமன்றத்தில் பிஎன்னுக்கு 17 இடங்கள். பாஸ் கட்சிக்கு 14. பிகேஆருக்கு ஒரே ஒர் இடம். அஹமட் சைட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அவர் எதிரணியில் சேர்ந்து கொண்டால் …
என்எஸ்சி சட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை
தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)ச் சட்டம் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உள்பட்டது என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்கிறார் சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன். “அதிகாரம் பிரதமருக்குத்தான். பிரகடனம் செய்யப்பட்ட பிறகு அது நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. “எனவே, நாடாளுமன்றத்துக்குக் கண்காணிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றோ பாதுகாப்புப் பகுதியாக பிரகடனம் …
குரங்குக் கூட்டம் அஞ்சல்காரரைத் தாக்கி இராணுவ இரகசியங்களைத் திருடிச் சென்றது
மலாக்கா இராணுவ முகாமுக்குள் புகுந்த குரங்குக் கூட்டம் ஒன்று இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள் சிலவற்றைத் திருடிச் சென்றதாம். திரெண்டாக் முகாமில் அஞ்சல்காரர் ஒருவர் கடிதங்களைப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது அவரைத் தாக்கிய குரங்குக் கூட்டம் அவரிடமிருந்த மூன்று இரகசிய ஆவணங்களைப் பறித்துச் சென்றதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. சில …
நம்வீ அவரது புதிய காணொளி தொடர்பில் கைது செய்யப்படுவார்
நம்வீ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சர்ச்சைக்குரிய ரேப் இசைக்கலைஞரான வீ மெங் சீ வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார். நம்வீ ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் காணொளியில் இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் இழிவுபடுத்தியிருப்பதால் அது குறித்து விசாரிக்க அவர் கைது செய்யப்படுவார் என பினாங்கு வடகிழக்கு போலீஸ் …


