“நீதிபதிகள் கல்நெஞ்சர்கள்” என்ற தமது குற்றச்சாட்டு மீதான விசாரணையை எதிர்கொள்வேன்,…

  நீதிபதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்று கூறியதற்காக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். நீதிபதிகளை அவ்வாறு வர்ணித்ததற்காக தாம் நீதிமன்றத்தில் நிருத்தப்படும் சாத்தியம் குறித்து அவர் கவலைப்படவில்லை. இது சம்பந்தபமாக எழும் எந்த ஒரு வழக்கும் தம்மைப் பற்றியதாக இருக்கும் என்று புத்ராஜெயாவிலுள்ளவர்கள் தவறாகக்…

பிஎன்: எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்பதற்காக, வெறுமனே எதிர்க்க மாட்டோம்

பினாங்கு  எதிரணி(பிஎன்),  அம்மாநிலத்துக்கான  ரிம27 பில்லியன்  போக்குவரத்து  பெருந்  திட்டம்(டிஎம்பி) இன்னும்  ஆய்வுநிலையில்  இருப்பதால்  அதைப்  பற்றிக்  கருத்துரைக்க  இது  பொருத்தமான  நேரமல்ல  எனக்  கருதுகிறது. நேற்று  மாநில  அரசும்  அத்திட்டத்தை  மேற்கொள்ளவிருக்கும்  எஸ்ஆர்எஸ்  கொன்சோர்டியமும்  அளித்த  விளக்கத்தில்  பிஎன்  திருப்தி  கொள்கிறதா  என்று  வினவியதற்கு  மாநில  எதிரணித் …

நஜிப் ‘டிஏபி மிரட்டல்’ என்று கூறி மலாய்க்காரர் புத்திசாலித்தனத்தைப் பழித்துரைக்கிறார்

அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ  தோற்றுப்போனால்   மலாய்க்காரர்கள்  டிஏபி-இடமும்  சீனர்களிடமும்  அரசியல்  அதிகாரத்தைப்  பறிகொடுப்பார்கள்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அம்னோ  பரப்புரையாளர்களும்,  சொல்லி  வருவது  மலாய்க்கார்களை  மட்டம்  தட்டுவதன்  உச்சக்  கட்டமாகும். இது  நஜிப்புக்கும்  அவரின்  கையாள்கள்களுக்கும்  மலாய்க்காரர்களின்  அறிவாற்றல்மீது  நம்பிக்கை  இல்லை  என்பதைக்  காண்பிக்கிறது …

1எம்டிபி கடன்களைத் தீர்க்க பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படவில்லை: நஜிப் மறுப்பு

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  நிதிப்  பிரச்னைகளைத்  தீர்க்க  பொதுப்பணம்  பயன்படுத்தப்படவில்லை  என்பதை  வலியுறுத்தியுள்ளார். “ஆறு  மாதங்களுக்குமுன்  நான்  உறுதி  அளித்தது  போன்று 1எம்டிபி  பிரச்னைகளுக்கு  முடிவு  நெருங்கிக்  கொண்டிருக்கிறது. “இதில்  மகிழ்ச்சி  தரும் விசயம்  என்னவென்றால்,  புரிந்துணர்வுக்  குறிப்பு (எம்ஓயு)  மூலமாக  அல்லாமல், …

பாக்சைட் கையூட்டு தொடர்பில் மேலும் அறுவர் கைது

பகாங்கில், சட்டவிரோத  பாக்சைட் சுரங்க  நடவடிக்கை  மீதான  விசாரணைக்கு  உதவுவதற்காக  மேலும்  ஆறு  நில  அலுவலக  அதிகாரிகளை மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  கைது  செய்துள்ளது. 42-வயதுக்கும்   57-வயதுக்குமிடைப்பட்ட  ஐந்து  ஆடவர்களும்  ஒரு  பெண்ணுமான  அவர்கள்  எம்ஏசிசி  சட்டம்  பிரிவு  17(ஏ)-இன்கீழ்  கைது  செய்யப்பட்டதாக   ஆணையத்தின்   விசாரணை  பகுதி  இயக்குனர் …

பிரதமர்: அரசு ஊழியர்களுக்கு ‘மாறுபட்ட சிந்தனை தேவை’

அரசாங்கத்தில்  உற்பத்திப்  பெருக்கத்துக்கு  உதவ  அரசு  ஊழியர்கள்  “மாறுபட்ட  முறையில்  சிந்திக்க  வேண்டும்”  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசு  ஊழியர்கள், உலகில்  எண்ணெய்  விலை  குறைந்து  வருவதால்  எழுந்துள்ள  சவால்களைச்  சமாளிக்க  வேண்டும் என்பதையும்,   அவர்கள்  செலவு  செய்யலாம்  ஆனால்,  செலவிடபப்டும்  பணத்தில்  சிறந்த …

குலா: மத மாற்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உடனடியான தீர்வு…

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திரா காந்தியின் குழந்தைகள் மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திற்கு தீர்வு காணும் பொறுப்பை மூன்று அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டது. மஇகாவின் தலைவர் எஸ். சுப்ரமணியம், அம்னோக்காரர்களான முகமட் நஸ்ரி மற்றும் ஜமில் கிர் ஆகியோரே அந்த மூவர் ஆவர். 2009 ஆம் ஆண்டில்,…

பாஸ் தலைவர்: ஹராபான் நீடித்திருக்க ‘தொங்காட் அலி’தேவை

புதிதாக  அமைக்கப்பட்டிருக்கும்  கூட்டணி  அரசியல்  அரங்கில்  நீடித்து  நிலைத்திருக்க  அதற்கு “தொங்காட்  அலி”  தேவைப்படலாம்  என  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார்  நிக்  அப்துல்லா  கூறினார். இன்று  ஷா  ஆலமில்  அதன்  முதலாவது  தலைமைத்துவ  மாநாட்டை  நடத்திய   எதிரணிக்  கூட்டணியின்  எதிர்காலம்  பற்றி செய்தியாளர்கள்  மாநில …

டிஏபி மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கவனம் தேவை

டிஏபி  ஜோகூர்  சட்டமன்ற  இடங்களுக்கு  மாலாய்க்கார  வேட்பாளர்களைக்  களம்  இறக்குவதில்  கவனத்துடன்  செயல்பட  வேண்டும்  என  ஜோகூர்  அமானா  பேராளர்  ஒருவர்  எச்சரித்துள்ளார். டிஏபி  மலாய்க்காரர்களுக்கு  எதிரி,  இஸ்லாத்துக்கு  எதிரி  என்று  சொல்லிச்  சொல்லியே  அம்னோ  ஜோகூர்  புறநகர்  மலாய்க்காரர்களை  நம்ப  வைத்துள்ளது  என  ஜோகூர்  அமானா  துணைத் …

ஜனவரி-இறுதியிலிருந்து மார்ச் வரை ‘எல் நின்யோ’வறட்சிக் காலம்

2016-இன்  முதல்  காலாண்டில்  மலேசியாவில்  வழக்கத்துக்கு  மாறாக  வறட்சி  நிலவும்,  மழை  பெய்வது  குறையும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  எல் நின்யோ  வானிலைதான்  இதற்குக்  காரணம்  என  அறிவியல்,  தொழில்நுட்ப, புத்தாக்க  அமைச்சு  நேற்று  தெரிவித்தது. எல் நின்யோ  வானிலை  ஆசியாவிலும்  கிழக்கு  ஆப்ரிக்காவிலும்  கடும்  வறட்சியைக்  கொண்டுவரும்  ஆனால், …

குவான் எங்: ‘டிஏபி- இஸ்ரேல்’ உறவு இருப்பதாகக் கூறியவர்மீது வழக்கு…

டிஏபி  இஸ்ரேலுடன்  இரகசிய தொடர்புகளைக்  கொண்டிருப்பதற்கு பாஸ்  ஆராய்ச்சி இயக்குனர்  முகம்மட்  ஸுஹாடி  மர்சுகி-இடம் ஆதாரம்  இருப்பதாகக்  கூறப்படுவது  பற்றிக்  கவலை  இல்லை  என்கிறார்  அக்கட்சித்  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங். “அவர்  ஆதாரத்தை வெளியிடட்டும். நாங்கள்  அவரை  நீதிமன்றத்தில்  சந்திக்கப்  போகிறோம். “ஆதாரம்  இருப்பதை அவர் …

சமூகவலைதளங்களில் ஆட்சேபத்துக்குரிய படங்களையும் பொய்த் தகவல்களையும் போலீஸ் கண்காணிக்கிறது

சமூகவலைதளங்களை  போலீசார்  கண்காணித்து  வருகிறார்கள். அங்கு  ஆட்சேபத்துக்குரிய  படங்கள், பொறுப்பற்ற  தகவல்கள்  பரிமாறிக் கொள்ளப்படுவதைக்  கண்ணுற்றால்  அவர்கள்  நடவடிக்கை  எடுப்பார்கள். போலீஸ்  இணையக் குற்றப்புலனாய்வு நடவடிக்கை  மையம் (PCIRC) இப்பணியை  மேற்கொண்டு  வரும்  என  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். “சமூகவலைதளத்தைப் பயன்படுத்துவோர்…

துணைப் பிரதமரின் மெய்க்காவலர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

சுமார்  மூன்று  வாரங்களுக்குமுன்  துணைப்  பிரதமர்  அஹமட் ஜாஹிட்  ஹமிடியின்  மகள்  வீடு  கொள்ளையிடப்பட்டது. நேற்று  அவரின்  மெய்க்காவலர் வீடு. வெட்டுக் கத்திகள்  ஏந்திய  கொள்ளையர்  கும்பல்  ஒன்று, நேற்று  காலை  மணி  9.30க்கு  பண்டார்  புக்கிட்  மக்கோத்தா-வில்  உள்ள  துணைப்  பிரதமரின்  மெய்க்காவலரான  ஒரு  போலீஸ்  அதிகாரியின் …

தலைமை நீதிபதி: தீர்ப்பைப் படிக்காமல் எங்கள்மீது தீர்ப்புச் சொல்லாதீர்

நாட்டின்  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியா,  நீதித்துறை  விமர்சனங்களை  வரவேற்பதாகக்  கூறினார்.  ஆனால்,  மக்கள்  குறைகூறுவதற்குமுன்  தீர்ப்புகளை  நன்கு  படித்துப்  பார்க்க  வேண்டும். “மக்கள்  தீர்ப்புகளை  நன்கு  அலசி  ஆராய்ந்து  எங்கு  தவறு  செய்தோம்  என்பதைத்  தெரிவிக்க  வேண்டும். “ஆனால்,  அவர்கள்  அப்படிச்  செய்யாமல்  எங்களை  இதயமற்றவர்கள்  என்றெல்லாம்…

1எம்டிபி விசாரணைகளில் குறுக்கீடு இல்லை: அபாண்டி வலியுறுத்து

சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி,  1எம்டிபி விசாரணைகளில் குறுக்கீடும்  கிடையாது  என்பதை  இன்று  மீண்டும்  வலியுறுத்தினார். விசாரணைகளில்  தலையீடு  நிகழ்ந்திருப்பதாகக்  கூறப்படுவது  குறித்து  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  திரு  கவலை  தெரிவித்திருப்பது  பற்றி  வினவியதற்கு  அதற்கு ஆதாரமில்லை  என்று  அபாண்டி  கூறினார். “தவறான  தகவல்களின்  அடிப்படையில்  அவ்வாறு  கூறப்பட்டுள்ளது. …

அமானா: நாங்கள் பதவிவெறி பிடித்தவர்கள் அல்ல

அமானா  கட்சியினருக்குப்  பதவி  ஆசை  கிடையாது. இருந்திருந்தால்  அவர்கள்  பாஸ்  கட்சியிலேயே  இருந்திருப்பார்கள்  அல்லது  அம்னோவில்  சேர்ந்திருப்பார்கள்  என  பார்டி  அமானா  நெகாரா  தொடர்பு இயக்குனர்  காலிட்  சமாட்  கூறினார். பாஸிலிருந்து  பிரிந்து  வந்தபோதே  பதவிகளை  இழக்க  நேரும்  என்பதை  அறிந்தே  இருந்ததாக  அவர்  சொன்னார். “ஆனாலும்  பாஸிலிருந்து …

விடுமுறை முடிந்து நாடு திரும்பினார் முகைதின்

டுபாயில்  இரண்டு-வார விடுமுறையைக்  கழித்து  விட்டு  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  நாடு  திரும்பினார். நாடு  திரும்பிய  அவர்  அம்னோ  அரசியல்  பற்றியோ  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பற்றியோ கருத்துரைக்க  விரும்பவில்லை. “அரசியல்  பற்றிப்  பேச  விரும்பவில்லை. திரும்பி  வந்ததில்  மகிழ்ச்சி”,  என்று  மட்டும்  கேஎல் …

டிபிபிஏ: மிகவும் பயனடையும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று

பசிபிக்- மண்டல  பங்காளித்துவ  ஒப்பந்தத்தால்(டிபிபிஏ)  பெரிதும்  பயனடையும்  நாடுகளில்  மலேசியாவும்  ஒன்றாக  இருக்கும்  என  வால்  ஸ்திரிட்  ஜர்னல் (WSJ)  கூறியுள்ளது. “அந்த  ஒப்பந்தத்தில்  சேராத  இப்பகுதியில்  உள்ள  போட்டி  நாடுகளுடன்  ஒப்பிட்டால்  மலேசியப்  பொருளாதாரம்  8% அதிகரிக்கும்”, என்று  அது  கூறிற்று. டிபிபிஏ,  உறுப்பு  நாடுகளிலும்  உறுப்பினரல்லாத …

பாஸ் அம்னோவின் தந்திரங்களைக் கையாண்டு முஸ்லிம்-அல்லாத தலைவர்களுக்குக் குழி பறிக்க…

பாஸ்,  டிஏபி-யைச்  சாடுவதற்கு   அம்னோவின்  தந்திரங்களைக்  கடைப்பிடிக்கிறதாம். கடந்த  பொதுத்  தேர்தலில்  டிஏபி  வென்று  ஆட்சி  அமைத்தால்  அது  போர்ட்  டிக்சனில்  விமானத்  தளம் அமைக்க  இடம்   ஒதுக்கித்தர  வேண்டும்  அதற்குக்  கைம்மாறாக  இஸ்ரேல்  யுஎஸ்300 மில்லியன் (ரிம1.2 பில்லியன்)  கொடுக்கும்  என்று  பேரம்  பேசப்பட்டதாகக்  கூறப்படுவதும்   அந்த …

பல்கலைக்கழகங்கள் அங்கு பயிலும் மாணவர்களுக்குப் பகுதி-நேர வேலைகளைக் கொடுக்கலாம்

பல்கலைக்கழக  மாணவர்கள்  உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவினத்தைச்  சமாளிக்க அந்த  உயர்க்  கல்விக்  கழகங்களே  அவர்களுக்குப்   பகுதி-நேர  வேலைகளை   வழங்கலாம். இப்படி  ஒரு  ஆலோசனையை  முன்வைத்துள்ள  யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா   விரிவிரையாளர்  பேராசிரியர்    முகம்மட்  அஸ்லாம்  ஹனிப்,  நிர்வாகம்,  கூட்டுறவு,  நூலகப்  பிரிவுகளில்  இப்படிப்பட்ட  வேலைகள்  கிடைப்பதாகக்  கூறினார். “இங்கு …

கொழுப்பைக் குறைக்கும் போராட்டத்தில் போலீசார்

போலீஸ் படையினர்  உடலைக்  கட்டு  செட்டாக வைத்துக்கொள்ள  முன்னோடித்  திட்டமொன்று  தொடங்கப்பட்டுள்ளது. “Trim N Fit” என்று  பெயரிடப்பட்டிருக்கும்  அத்திட்டம் நேற்று  தொடங்கியது.  போலீஸ்  நிர்வாகத் துறையிலிருந்து  “கொழுகொழு”வென்றிருக்கும்  33  அதிகாரிகள்  அத்திட்டத்தில்  கலந்து  கொண்டிருக்கிறார்கள். போலீஸ்  அதிகாரிகள்  உடல்  பருமனாக  இருந்தால்  அவர்களுக்குப்  பணி  உயர்வு  கிடைக்காமல் …

வட கொரிய அணுக்குண்டுச் சோதனைக்கு மலேசியா கண்டனம்

நேற்று வடகொரியா  தரைக்கடியில் நடத்திய ஹைட்ரஜன் குண்டுச் சோதனைக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சோதனை  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு  மன்ற தீர்மானங்களுக்கு  எதிரானது  என்பதுடன்  உலகளாவிய  ஆயுதக்  களைவு  மற்றும்  ஆயுதப்  பரவல்   தடைக்கும்   பெரிய  பின்னடைவு  என  வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார். “இச்சம்பவம் …

பாக்சைட் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கு என்ஜிஓ பாராட்டு

பாக்சைட்  தூய்மைக்கேட்டை  நிறுத்தும்  மக்கள்  இயக்கம் (கிராம்),  பகாங்கில்  ஜனவரி  15 தொடங்கி  மூன்று மாதங்களுக்கு  பாக்சைட்  சுரங்க  நடவடிக்கைகள்  நிறுத்தி  வைத்திருப்பதற்காக  அரசாங்கத்தைப்  பாராட்டியுள்ளது. தூய்மைக்கேட்டுப்  பிரச்னையைத்  தடுப்பதற்குப் பல்வேறு  முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு  பலனளிக்காத  நிலையில் இப்படி  ஒரு  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருப்பதை  கிராம்  தலைவர்  அலி  அக்பர்…