பஸ் கட்டணத்தை உயர்த்த இது சரியான நேரமல்ல- ஃபோம்கா

“சரியான  நேரத்துக்குக்  காத்திராமல்”  பேருந்து  கட்டணத்தை  அதிகரிக்க  அவசரம்  காட்டும்  கொன்சோர்டியம்  ட்ரேன்ஸ்நேசனல்  பெர்ஹாட்டை   மலேசிய  பயனீட்டாளர்  சங்கச்  சம்மேளனம்  கண்டித்துள்ளது. இவ்வாண்டில்  பல  பொருள்களின் விலைகள்  கூடியிருப்பதால்  மக்கள்,  குறிப்பாக  குறைந்த  வருமானம்  பெறுவோர்  மிகவும்  துன்பப்படுகிறார்கள்  என  ஃபோம்கா  தலைவர்  மாரிமுத்து  நடேசன்   கூறினார். “இது…

தற்காப்புக் கொலை விவகாரத்தில் வழக்குரைஞர் மன்றம் மெளனம் சாதிப்பதை ஐஜிபி…

தற்காப்புக்காக  என்றாலும்  ஒருவரைக்  கொல்வது  சரியல்ல  என்பதைப்  பொதுமக்களுக்கு  எடுத்துரைக்காத  வழகுரைஞர்  மன்றத்தையும்  மனித  உரிமை  வழக்குரைஞர்களையும்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்   சாடினார். கொள்ளையன்  ஒருவனைக்  குத்திக்கொன்ற  ஒருவர்மீது கொலைக்குற்றம்  சாட்டப்பட்டிருப்பது  குறித்து  பொதுமக்கள்  தங்கள்  ஆத்திரத்தை  இணையத்தில்  பதிவு  செய்திருப்பது  குறித்து …

ஒபாமா பிப்ரவரியில் ஆசியான் தலைவர்களைச் சந்திப்பார்

அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமா,  அடுத்த  ஆண்டு  பிப்ரவரி  15, 16ஆம் நாள்களில்  ஆசியான்  நாடுகளின்  தலைவர்களை   கலிபோர்னியாவின்   சன்னிலாண்ட்சில்  சந்திக்கிறார். இந்த அமெரிக்க- ஆசியான்  உச்சநிலை  மாநாடு  பற்றி  வெள்ளை மாளிகை  டிசம்பர்  30-இல் அறிவித்ததாக  வியட்நாம்  செய்தி  நிறுவனம்  கூறிற்று. இப்படி  ஒரு  மாநாடு  இதற்குமுன் …

ரோன்95 விலை அடுத்த மாதம் குறையும்: ரபிஸி ஆருடம்

ஜனவரியில்  ரோன்95  விலை  10-இலிருந்து 15 சென்வரை  குறைந்து  ஒரு  லிட்டருக்கு  ரிம1.80-க்கும்  ரிம1.85-க்குமிடைப்பட்ட  விலையில்  விற்கப்படும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  ஆருடம்  கூறியுள்ளார். இக்கணிப்பு  கச்சா  எண்ணெயின் இப்போதைய  விலையை  அடிப்படையாகக்   கொண்டது  என்றவர்  சொன்னார். ஆனாலும்,  இந்த விலைக்  குறைப்பு  உலக …

‘அமைதிகொள்வீர்’-மஇகா-வினருக்கு சாமிவேலு கோரிக்கை

மஇகா  முன்னாள்  தலைவர்  ச.சாமிவேலு, அக்கட்சியில்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருக்கும்  தரப்பினர் முதலில்  அமைதி  கொள்ள  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். “அது (நெருக்கடிக்குத்  தீர்வு) உடனே  வந்து  விடாது. முதலில்  நீங்கள்  அமைதி கொள்ள  வேண்டும். “அரசியலில் எவ்வளவுக்கு  அமைதியாக  இருக்கிறீர்களோ  அவ்வளவுக்கு  விரைவில்  அமைதி  உங்களை  நாடி …

பாஸுக்கு அம்னோ தேவை, அம்னோவுக்கு பாஸ் தேவை

பாஸ், அம்னோ இரண்டுக்கும்  ஒன்றின் உதவி மற்றொன்றுக்குத்  தேவை   அதனால்தான்  அவை  தோழமை  உடன்பாடு  செய்துகொள்ள  விரும்புகின்றன  என்று  அம்னோ மூத்த  தலைவர்  தெங்கு  ரசாலி  தெங்கு  ஹம்சா  கருதுகிறார். அடுத்த  பொதுத்  தேர்தலில்  மலாய்க்காரர்- அல்லாதார்  ஆதரவு  கிடைக்காது  என  அம்னோ  நம்புவதால்  அது  பாஸுடன்  ஒத்துழைக்க …

ஏமாற்றும் வணிகர்கள் ஏன் கைதாவதில்லை: பயனீட்டாளர் சங்கம் கேள்வி

வாடிக்கையாளர்களை  ஏமாற்றியதாகக்  கூறப்படும்  கோட்டா  ராயா  வணிகர்கள்  எவரும்  கைது  செய்யப்படாதது  ஏன்?  மலேசிய  முஸ்லிம்  பயனீட்டாளர்  சங்க(பிபிஐஎம்)த்  தலைவர்  நட்சிம்  ஜொஹான்  இவ்வாறு வினவினார். அதற்கு  மாறாக, ஏமாற்றப்பட்டவர்களுக்கு  உதவச்  சென்ற  சக  சமூக   ஆர்வலர்  முகம்மட்  யூசுப்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்  என்றாரவர். “நான்  போலீசைக்  கேட்கிறேன்:…

சாலே: பாதகமான கருத்துகள் குறித்து முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்

மற்றவர்கள்  பற்றிய  தப்பான  கருத்துகளை  முஸ்லிம்கள்  அப்படியே  நம்பி  விடக்  கூடாது. இணையத்தின்  வழியாகவும்  செய்தித்தாள்கள்,  சஞ்சிகைகள்  வழியாகவும்  தெரிவிக்கப்படும்  கருத்துகள்  எல்லாமே  உண்மையானவை  அல்ல  என்று  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கூறினார். “அவதூறுகளும்  பொய்களும்  பொறாமையும்,  பதவி  ஆசையும்  நிரம்பிய  காலத்தில்  வாழ்கிறோம்.…

விசாரணைக்காக பிஎஸ்எம் தலைவரைத் தடுத்துவைக்க மெஜிஸ்ட்ரேட் மறுப்பு

பிஎஸ்எம்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  கைருல்  நிஜாம்  அப்ட்  கனியை  விசாரணைக்காகக்  காவலில்  வைக்க  போலீசார்  விடுத்த  கோரிக்கையை  மெஜிஸ்ட்ரேட்  ஏற்கவில்லை. வழகுரைஞர்களின்  வாதங்களைச்  செவிமடுத்த  மெஜிஸ்ட்ரேட்  விசாரணைக்காக  அவரைத்  தடுத்து  வைக்க  வேண்டியதில்லை  என்ற  முடிவுக்கு  வந்ததாக பிஎஸ்எம்  தலைமைச்  செயலாளர்  ஏ,சிவராஜன்   தெரிவித்தார். “கைருல்  நிஜாம் …

பயங்கரவாத- தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாக இந்தோனேசியர்மீது குற்றச்சாட்டு

பயங்கவாதத்துடன்  தொடர்புள்ள  பொருள்களை  வைத்திருந்ததற்காக இம்மாதத்  தொடக்கத்தில்  கைது  செய்யப்பட்ட  31-வயது இந்தோனேசியர்  இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார். அவர்மீதான  குற்றப்  பத்திரிகையை  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்  சுஹாய்லி  சாபுன்  வாசித்தார். ஈசான்  என்ற  அந்த  இந்தோனேசியரின்  கைபேசியில்  ஐஎஸ்  இஸ்லாமிய  தீவிரவாதிகள்  பற்றிய  196  படங்களும்  200  காணொளிக்  காட்சிகளும் …

ஜனவரி 26, 27-இல் டிபிபிஏ மீது நாடாளுமன்ற விவாதம்

நாடாளுமன்றம், பசிபிக்  மண்டல  நாடுகளுக்கிடையிலான  பங்காளித்துவ ஒப்பந்தத்தை  விவாதிக்க  சிறப்புக்  கூட்டமொன்றை  ஏற்பாடு  செய்துள்ளது. ஜனவரி 26, 27 ஆகிய  இரண்டு  நாள்கள் அதன்மீது விவாதம்  நடத்தப்பட்டு  முடிவெடுக்கப்படும். மக்களவை  துணைத்  தலைவர்  ரோனால்ட்  கியாண்டி,  பெரித்தா  ஹரியானுக்கு  வழங்கிய  நேர்காணலில்  இதைத்  தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்களில் அமானாவுக்கு இடமளிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை

சிலாங்கூர்  அரசாங்கம்  ஊராட்சி  மன்றங்களில்   அமானாவுக்கு  இடமளிப்பது   பற்றி  இன்னும்  முடிவுக்கு  வரவில்லை. ஊராட்சி  மன்றங்களில்  இப்போதுள்ள  கவுன்சிலர்களின்  பதவிக்  காலம்  வியாழக்கிழமையுடன்  முடிவுக்கு  வருகிறது. பாஸ்  கட்சியிலிருந்து  பிரிந்து  சென்றவர்களால்  உருவாக்கப்பட்டு  மூன்று  மாதங்களே  ஆகும்  அமானாவுக்கு  மாநில  அரசு  ஊராட்சி  மன்றங்களில்  கவுன்சிலர்  பதவி  வழங்குமா …

நீலாய் தமிழ்ப்பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதா?

இன்று  அதிகாலை  மணி  2.25 அளவில்  நீலாய் தேசா  செம்பாகா  தேசிய  வகை  தமிழ்ப்  பள்ளியின்  கீழ்த்  தளத்தில்   தீ  பற்றிக் கொண்டது.  அதில்  மூன்று  வகுப்பறைகளின்  கூரை,  கதவுகள்,  சன்னல்கள்,  கோப்புகள்,  நூல்கள்  முதலியவை  எரிந்து  போயின. நீலாய்  தீ அணைப்புப் படையினர்  10  நிமிடத்தில்  தீயை …

பாதுகாப்புக் காரணங்களால் பெர்லிஸ் குகை ரயில் சேவை நிறுத்தப்பட்டது

மூன்றாண்டுகள் நடத்தப்பட்டு  வந்த  பெர்லிஸ்  காக்கி புக்கிட்டில்  குவா கெலாம் 2( இருட் குகை2)-க்கான  ரயில்  சேவை  மக்களின்  பாதுகாப்பைக்  கருத்தில்கொண்டு  2013-இல்  நிறுத்தப்பட்டது. இதனை இன்று தெரிவித்த  பெர்லிஸ்  சுற்றுலாக் குழுத்  தலைவர்   அப்துல்  ஜமில்   சாஆட், குகையின்  சுவர்களால்  ரயில்  வண்டி  அதிர்வுகளை  நீண்டநாள்  தாங்கிக் …

போலீஸ்: சுங்கை பீசியில் டோல் கட்டண எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது

புத்தாண்டுக்கு  முதல்நாள்  சாலைக்கட்டண  உயர்வுக்கெதிராக சுங்கை  பீசி  டோல்  சாவடியில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  ஆர்ப்பாட்டம்  தொடர்பில்  ஏற்பாட்டாளர்கள்  முறையான  விண்ணப்பங்களை  இன்னும்  செய்யவில்லை. “அவர்கள் முறையாக  விண்ணப்பம்  செய்யவில்லை  என்றால்  அது  குற்றமாகும். “இதுவரை  விண்ணப்பம்  எதையும்  பெறவில்லை. ஆனால், (ஆர்ப்பாட்டம் பற்றி)  தகவல்  கிடைத்துள்ளது. நிலவரத்தைக்  கண்காணித்து …

வருமானத்தைப் பெருக்க இன்னொரு வேலையும் செய்யலாம் என்ற அமைச்சரின் கருத்துக்குக்…

அனைத்துலக  வாணிக,  தொழில்  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்,  குறைந்த  வருமானம்  ஈட்டுவோர்  வரவு-செலவைச்  சரிக்கட்ட  இன்னொரு  வேலையும்  செய்யலாம்  என்று சொல்லி  நன்றாக  வாங்கிக்  கட்டிக்  கொண்டிருக்கிறார். அது  ஒரு  ஆக்கப்பூர்வமான  கருத்தல்ல  என்று மலேசிய  தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியூசி)  நினைப்பதாக  அதன்  தலைமைச்  செயலாளர்  என். கோபாலகிருஷ்ணன் …

துணை அமைச்சர் பதிலடி: நான் மூன்று வேலைகள் செய்கிறேன்

மலேசியர்கள்  வருமானத்தைப்  பெருக்கிக்கொள்ள  பல  வேலைகள்  செய்வது  சாத்தியமான  ஒன்றுதான்  என்கிறார்  அனைத்துலக  வாணிக,  தொழில்  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான். அவரே  மூன்று  வேலைகளைச் செய்கிறாராம். “எனக்கு, எம்பி, துணை  அமைச்சர்,  அம்னோ  தகவல்  தலைவர்  என  மூன்று  வேலைகள்.  மலேசியாவில்  பலர்  இரண்டு  வேலைகள்  செய்கிறார்கள்.…

கூரையின் சிலுவை போன்ற தோற்றத்தால் வந்தது பிரச்னை

லங்காவில்  ஒரு  வீடமைப்புத்  திட்டத்தில்  புதிதாக  கட்டப்பட்ட  வீடுகளின்  கூரைகள்  வெள்ளைச்  சிலுவை  போன்ற  தோற்றத்தைக்  கொண்டிருப்பதால்  அதைப்  பற்றிப்  பேசுவதற்காக  லங்காவி  மாவட்ட  மன்றம்  வீடமைப்பாளரை  அழைத்துள்ளது. அச்சந்திப்பு  நாளைக்  காலை   நடைபெறும்  என  கெடா  வீடமைப்புக்  குழுத்  தலைவர்  தாஜுல்  உருஸ்  மாட்  ஸைன்  கூறினார்.…

ரிம2.6 பில்லியன், எஸ்ஆர்சி விசாரணை அறிக்கைகளை எம்எசிசி அடுத்த வாரம்…

  மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி ஆகியவை பற்றிய அதன் விசாரணை அறிக்கைகளை அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என்று கூறுகிறது. அந்த இரு விசாரணைகளும் சுயேட்சையாகவும்,…

ஜோகூர் சுல்தான்: நஜிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு   அவரது  தவறுகளைச்  சரிசெய்ய  ஒரு  வாய்ப்பு  கொடுக்கப்பட  வேண்டும்  என்கிறார்  ஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்கண்டர். “பிரதமர்  மிகுந்த  குறைகூறல்களுக்கு  இலக்காகி  இருப்பதை  அறிவேன். ஆனாலும்  அவருக்கு  வாய்ப்பு  அளிக்கப்பட   வேண்டும்  என  நினைக்கிறேன். “தீர்க்கப்பட  வேண்டிய  விவகாரங்கள்  உள்ளன.  அதே …

தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்’: வசூலில் உலக சாதனை

உலக  முழுவதும்  வெளியிடப்பட்டுள்ள  Star Wars: The Force Awakens’ திரைப்படம்  வசூலில்  பெரும்  சாதனையை  ஏற்படுத்தியுள்ளது. இவ்வார  இறுதியில்  அதன்  வசூல்   யுஎஸ்$1 பில்லியனைத்  தாண்டும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும்  உலகின்  சில  பகுதிகளிலும்  டிசம்பர்  16-இல்  வெளியிடப்பட்ட  அத்திரைப்படம்  கிறிஸ்மஸ்  வரை  யுஎஸ்890 மில்லியனை  ஈட்டியிருப்பதாக …

இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்குத் தடைவிதித்த கைரிக்கு அஸ்ரி பாராட்டு

கருத்துகளைத்  துணிச்சலாக  சொல்லும்   பெர்லிஸ்  முப்தி  அஸ்ரி  ஜைனுல்  அபிடின்  windsurfing  விளையாட்டில்  கலந்துகொள்ள  இஸ்ரேலிய விளையாட்டு  வீரர்கள்  இருவருக்கு  விசா  கொடுக்க  மறுத்த  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினைப்  பாராட்டினார். இன்று  லங்காவியில்  தொடங்கவுள்ள  ஒரு  போட்டியில்  நடப்பு  வெற்றியாளர்களான  அவ்விருவரும்  கலந்துகொள்ள  விருந்தனர்.…

வேப் தடையைச் சர்ச்சையாக்கும் ‘புத்திகெட்ட அரசியல்வாதிகள்’:ஜோகூர் சுல்தான் சாடல்

“புத்திகெட்ட அரசியல்வாதிகள்”  வேப்  விவகாரத்தை  அரசியலாக்கக்  கூடாது  என  ஜோகூர் ஆட்சியாளர்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்கண்டர்   கடிந்து கொண்டிருக்கிறார். வேப்புக்குத்  தடை  விதித்தால்  அடுத்த  தேர்தலில்  பிஎன்  வாக்குகளை  இழக்க  நேரும்  என்று  பூமிபுத்ரா  என்ஜிஓ-கள்  எச்சரித்திருப்பது  பற்றிக்  குறிப்பிட்டபோது சுல்தான்  இவ்வாறு  கூறினார். “மாநில  அளவிலும்  மத்தியிலும் …