மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 1 முதல் 26…
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை விபத்து, நால்வர் மரணம், 25 பேர் காயம்
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை 14 ஆவது மைல், ஜெலியில் இன்று முன்னேரத்தில் நடந்த ஒரு விரைவுப் பஸ் மற்றும் லோரி மோதலில் நால்வர் மரணமடைந்தனர், 25 பேர் காயமுற்றனர். பினாங்கு, பட்டர்வொர்த்திலிருந்து கோலதிரங்கானுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த விரைவு பஸ்சும் ஒரு கனரக லோரியும் காலை மணி 1.40…
அபு காசிம்: பிரதமர் “நன்கொடை” விவகாரத்தை உண்மை தெரியும் வரையில்…
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட பில்லியன் கணக்கான பணம் குறித்த விசாரணையை உண்மை தெரியும் வரையில் விடப்போவதில்லை என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் சூளுரைத்தார். முதல் தடவையாக, பதவியிலிருக்கும் ஒரு பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிப்பது சவால் மிக்க ஒன்றாக…
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாஸ் உதவித் தலைவர்: அம்னோ இழைத்த பாவங்களை மன்னிக்க வேண்டியவர்கள்…
அம்னோவுடன் ஒத்துழைக்கும் நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் பாஸ் கட்சியின் தலைமைத்துவதற்கு அக்கட்சியின் உதவித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சியின் உதவுத் தலைவர் இஸ்கந்தர் சாமாட், கடந்த காலத்தில் அம்னோ இழைத்துள்ள தவறுகளை யாராவது மன்னிக்க முடியுமா என்று கேட்கிறார். "அம்னோவின்…
நஜிப்: மலேசியர்கள் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்
வளர்ச்சியடைந்த நாடாகும் தகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மலேசியாவில் எந்த ஒரு மலேசியரும் பின்தள்ளப்பட மாட்டார்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார். நமது மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் நாம் உறுதியாக இருப்போம் என்று தமது வலைத்தளத்தில் நஜிப் கூறியுள்ளார்.…
விசா மோசடி: நான்கு தனியார் கல்விக் கழகங்களுக்கு எதிராக நடவடிக்கை
அன்னிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நான்கு தனியார் உயர்க் கல்விக் கழகங்களுக்கு இடைக்காலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ இன்று அறிவித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாணவர் விசாக்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டுக்குள் வந்து விடுவது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில, ‘விசா கல்லூரிகள்’ என்றே …
பெர்காசா, ஓராண்டுக்கு முந்திய தேவாலய-எரிப்பு புகாரை மறுபடியும் பதிவு செய்தது
2014 டிசம்பரில், ஜாலான் ராஜா லவுட் தேவாலயத்துக்கு தீ வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்தி பற்றிச் சரியாக ஒராண்டுக்கு முன்னர் புகார் செய்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படாததாலும் போலீஸ் அதன்மீது நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்துள்ள மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான பெர்காசா அதே …
இயல்பான வாக்காளர் பதிவு தேர்தல்முறையைப் பாதிக்கும்
இயல்பான வாக்காளர் பதிவுமுறையை அமல்படுத்துவது கடினம், ஏனென்றால் அது மலேசிய தேர்தல் முறையில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார். அரசமைப்பு பிரிவு 119, குடிமக்களுக்கு ஒரு விருப்புரிமை அளிக்கிறது என்றாரவர். அவர்கள் விரும்பினால் வாக்காளராகலாம், வேண்டாம் என்றால் பதிவு …
‘புத்ரா ஜெயா மக்கள் உரிமைகளைக் காக்கத் தவறிவிட்டது’
மலேசிய அரசாங்கம் மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியைக் காக்கத் தவறிவிட்டது. நேற்றிரவு தேசிய பாதுகாப்பு மன்ற( என்எஸ்சி) சட்டவரைவு மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து மனித உரிமை என்ஜிஓ சுவாராம் இவ்வாறு தெரிவித்துள்ளது. “மலேசிய மக்களின் பிரதிநிதிகளான அவர்கள் மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி, அந்த உரிமைகளை அழிப்பதில் …
பிடிபிடிஎன் பிடித்தம் செய்வதற்குக் கொடுத்த அங்கீகாரத்தை கியூபெக்ஸ் மீட்டுக் கொள்ளக்…
தேசிய உயர்க்கல்விக் கடன் நிதி(பிடிபிடிஎன்) அரசாங்கப் பணியாளர்களின் சம்பளத்தில் கூடின பட்சம் பிடித்தம் செய்யும் நடவடிக்கையைத் தொடருமானால் சம்பள வெட்டுக்குக் கொடுத்த ஒப்புதலை அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மீட்டுக் கொள்ளக்கூடும். பிடிபிடிஎன் கடன்களுக்காக அரசாங்கப் பணியாளர்களின் சம்பளத்தில் உயர்ந்த பட்சம் பிடித்தம் செய்யப்படுவதால் அவர்களுக்கு மிகுந்த நிதிச்…
டிஏபி: என்எஸ்சி சட்டவரைவில் திருத்தம் செய்ய குழு அமைப்பீர்
அரசியலின் இரு தரப்பு எம்பிகளையும் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்து தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி) சட்டவரைவுக்குத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். அத் திருத்தங்களை ஜனவரி மாத இறுதியில் பசிபிக் மண்டல நாடுகளுக்கிடையிலான பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யலாம். .…
ரிம2.6 பில்லியன் சுவரொட்டிகள் தொடர்பில் டிஏபி கட்சிக்காரர் போலீஸ் நிலையம்…
டிஏபி கட்சிக்காரர் ஒருவரின் காரில் 'Mana RM2.6 billion?'(ரிம2.6 பில்லியன் எங்கே?) என்று வினவும் ஒரு கட்டு சுவரொட்டிகள் இருந்ததால் அவர் இப்போது போலீஸ் நிலையம் சென்றிருக்கிறார். பகாங்கிலிருந்து கோலாலும்பூர் சென்று கொண்டிருந்த டிஏபி உறுப்பினர் லவ் யோங் ஷாவ், செராஸ், தாமான் மிடாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த …
பாதுகாப்புப் பகுதி என்று பிரகடனப்படுத்தும் தகுதி பேரரசருக்கு மட்டுமே உண்டு
ஒரு பாதுகாப்புப் பகுதியைப் பிரகடனப்படுத்த மிகவும் தகுதியுடையவர் மாட்சிமை தங்கிய மாமன்னர் மட்டுமே என்கிறார் சாபாவைச் சேர்ந்த பிஎன் செனட்டர் ஒருவர். எனவே, தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி) சட்டவரைவின்கீழ் பிரதமருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை மாற்றிப் பேரரசருக்கு வழங்கப்பட வேண்டும் என உப்கோ செனட்டர் லுக்காஸ் உம்புல் கூறினார்.…
ஃபாட்வே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுகாதார அமைச்சு ‘வேப்பு’க்குத் தடை விதிக்காது
தேசிய ஃபாட்வா மன்றம் மின் சிகரெட்டுகளைத் தடுக்கப்பட்ட பொருள்களாக அறிவித்திருந்தாலும் சுகாதார அமைச்சு வேப்புக்குத் தடை விதிக்கவில்லை எனச் சுகாதார துணை அமைச்சர் ஹில்மி யாஹ்யா இன்று கூறினார். இப்போதைக்கு அதற்குத் தடை இல்லை என்றாரவர். “நாங்கள் அதைத் தடை செய்யவில்லை. தடை செய்தல்மீது அமைச்சரவை என்ன முடிவு …
பேருந்து விபத்தில் பலியான மலேசியர் சடலங்கள் நாளை கொண்டுவரப்படும்
தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்தில் பலியான 13 மலேசியர்களின் சடலங்கள் நாளை மாலை அரச மலேசிய ஆகாயப்படை விமானத்தின் ஹெர்குலிஸ் சி-130 விமானத்தில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அதே விமானத்தில் காயமடைந்தவர்களும் விபத்தை அடுத்து அங்கு விரைந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களின் குடும்பத்தாரும்கூட திரும்பி வருவார்கள் …
கோத்தா ராயா ஆர்ப்பாட்டம் தொடர்பில் அலி திஞ்சு தடுத்து வைக்கப்பட்டார்
கடந்த வாரம் தலைநகர் கோத்தா ராயா விற்பனை வளாகக் கடைக்காரர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அலி திஞ்சு என அழைக்கப்படும் முகமட் அலி பகாரோம் இரண்டு நாள்களுக்கு போலீசால் தடுத்து வைக்கப்பட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-இன்கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கோலாலும்பூர்…
அம்னோ செனட்டர்: என்எஸ்சி சட்டவரைவு அரசமைப்புக்குப் புறம்பானதாக இருக்கலாம்
தேசிய பாதுகாப்பு மன்ற (என்எஸ்சி) சட்டவரைவு பாதுகாப்புப் பகுதிக்கு இயக்குனராக நியமிக்கப்படுபவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதைப் பார்க்கையில் அது அரசமைப்புக்கு விரோதமானதாகவும் மற்ற சட்டங்களுக்கு முரணாக இருக்கலாம். இவ்வாறு தெரிவித்த மலேசிய செனட்டர் மன்ற(எம்எஸ்எம்)த் தலைவர் அப்துல் ரஹிம் அப்துல் ரஹ்மான், செனட் ஒரு ரப்பர் முத்திரை என்று …
கோத்தா ராயா அடிதடிச் சண்டை தொடர்பில் ஒருவர் கைது
நேற்று பிற்பகல் கோத்தா ராயா விற்பனை வளாகத்தில் நிகழ்ந்த அடிதடிச் சண்டை தொடர்பில் 38-வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். “அவர் அந்த விற்பனை வளாகத்தில் வாகன நிறுத்தமிடப் பணியாளராக வேலை செய்கிறார்”, என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்பிரெண்டெண்ட் ஹபிபி மஜிஞ்சி …
அறிவிப்பாளரின் சொதப்பல்: மிஸ் பிலிப்பீன்சுக்குப் பதிலாக மிஸ் கொலம்பியாவை உலக…
நேற்று மிஸ் பிலிப்பீன்ஸ் உலக அழகியாக முடி சூட்டப்பட்டார். ஆனால், அதற்குமுன் அந்நிகழ்வுக்கு அறிவிப்பாளராக பணியாற்றிய ஸ்டீவ் ஹார்வே மிஸ் கொலம்பியாவை உலக அழகி என்று அறிவித்து விட்டார். அதனால் கொலம்பியா அழகி அட்ரியாட்னா குடிரெஸ் அறிவாலோ,21, உலக அழகியாக முடி சூட்டப்பட்டார். அப்போது ஹார்வே தம் தவற்றை …
விபத்தில் பலியானவர் குடும்பத்தார் பெங்கோக் பயணம்
நேற்று பிற்பகல் வட தாய்லாந்தின் சியாங் மாயில் நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த மலேசியர்களின் குடும்பத்தார் 15 பேர் இன்று பெங்கோக் பயணமாவார்கள் என்று தெரிகிறது. “அவர்கள் விபத்தில் மரணமடைந்தவர்களையும் தப்பித்தவர்களையும் அடையாளம் காட்டுவார்கள்”, என சியு போக்குவரத்து நிறுவன பொது நிர்வாகி டெரென்ஸ் யங் கூறினார்.…
தாவாவைக் குலுக்கிய 6.2 சக்தி கொண்ட நில நடுக்கம்
இன்று அதிகாலை ரைட்டர் கருவில் கிட்டதட்ட 6.2 என்று பதிவான நில நடுக்கமொன்று தாவாவைக் குலுக்கியதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது. அந்நில நடுக்கம் இந்தோனேசியாவின் தராகானில் மையமிட்டிருந்ததாகவும் ஆனால் அதன் அதிர்வுகள் 96 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தாவாவில் உணரப்பட்டதாகவும் அது கூறிற்று. சேதம் …
மலேசியப் பெண் போதைப் பொருளுடன் பிடிபட்டார்
மோட்டார் சைக்கிள் ஓட்டிசென்ற 23-வயது மலேசியப் பெண் சிங்கப்பூரில் ஊட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1.4கிகிராம் போதைப் பொருள்களுடன் பிடிபட்டார். மாலை மணி 4.20க்குச் சோதனைச் சாவடி வந்து சேர்ந்த அவரைச் சோதனையிட்டபோது அவரது பையில் 470 கிராம் ஹெரோய்னும் 980 கிராம் கெனாபிஸும் இருப்பதை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார் …
காசிம் அஹ்மட்டை ஜாவி கைது செய்தது சட்டவிரோதமான செயல்
முஸ்லிம் கல்வியாளரான காசிம் அஹ்மாட் ஃபாட்வாவுக்குக் கட்டுப்படாமல் இஸ்லாத்தை இழிவு செய்தார் எனக் கூட்டரசு பிரதேச இஸ்லாமியத் துறை தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, கடந்த ஆண்டு மார்ச் 26-இல் அந்த 82-வயது கல்வியாளர் கைது செய்யப்பட்டது …


