குறைபாடுகள் அரசாங்கத்தில் இருந்தால்கூட ஊடகங்கள் அறிவிக்க வேண்டும்

குறைபாடுகளைக் காணும்  ஊடகங்களுக்கு  அவற்றை  வெளிப்படுத்தும்  வாய்ப்பும்  இருக்கிறது பொறுப்பும்  இருக்கிறது. அவற்றை  வெளிப்படுத்தினால்தான் அவற்றுக்குத் தீர்வுகாண  முடியும். இதனைத்  தெரிவித்த  சரவாக்  முதலைமைச்சர்  அடினான்  சத்தேம் சமுதாயத்துக்குக்  கேடு  விளைவிக்கக்கூடிய  ஒன்றைப்  பார்த்துக்கொண்டு  அவை  மெளனமாக  இருக்கக்  கூடாது   என்றார். அதையும்விட  மோசமாக  அதைக்  “கண்டுக்கொள்ளாமல் ”…

விசாரணை பற்றி வெளியில் தெரிவித்த பிஏசி உறுப்பினர்களுக்குக் கண்டனம்

பொதுக் கணக்குக்குழு(பிஏசி)  உறுப்பினர்  ஒருவர்,  நேற்றைய  விசாரணை  பற்றி  ஊடகங்களிடம்  விவரித்த  சக  பிஏசி  உறுப்பினர்களைக்  கடிந்து  கொண்டார்.  நேற்று  பிஏசி 1எம்டிபி  தலைவர் அருள்  கந்தா கந்தசாமியை  விசாரணை  செய்தது. ஊடகங்களிடம்  பேசிய  அவ்விருவரும்  பிஏசி  விசாரணை  பற்றி  பிஏசி  தலைவர்  மட்டுமே  அறிக்கை விடுக்க  முடியும் …

இஆர்எல் பயணக் கட்டண உயர்வு டெக்சிகளுக்கு ஆதாயம்

ஜனவரி  முதல்  விரைவு  ரயில் தொடர்பு (இஆர்எல்)  பயணக்  கட்டணம்  உயர்வதை  அடுத்து  மீட்டரில்  ஓடும்  டெக்சிகளே  கோலாலும்பூரிலிருந்து  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்துக்குச்  சென்றுவர  பலரும்  விரும்பிப்  பயன்படுத்தும்  வாகனங்களாக  விளங்கும். குழுவாக    பயணம்  செய்வோர்  டெக்சி கட்டணங்கள்  கட்டுப்படியாக இருப்பதைக்  காண்பார்கள்  என  சியாரிகாட்  பிக்…

1எம்டிபி மீதான ஏஜியின் இறுதி அறிக்கை பிப்ரவரியில்தான் தயாராகும்

பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வில்  தாக்கல்  செய்யப்பட  வேண்டிய  தலைமைக்  கணக்காய்வாளரின் (ஏஜி) 1எம்டிபி  மீதான  அறிக்கை  அடுத்த  ஆண்டு  பிப்ரவரி  மாதத்தில்தான்  தயாராகுமாம். பிஏசி  உறுப்பினர்களில்  ஒருவரான  டோனி  புவா  இன்று  இதை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  தெரிவித்தார். ஏஜி-க்கு  இன்னும்  சில  ஆவணங்கள்  வந்து  சேராததே தாமதத்துக்குக்  காரணமாம். “தேசிய …

கோலாலும்பூரிலும் வேப்புக்குத் தடை

கிளந்தான்,  ஜோகூரை  அடுத்து  கோலாலும்பூர்  மாநகராண்மைக் கழகமும்   வேப் சிகரெட்டுக்குத் தடை விதித்துள்ளது. டிபிகேஎல்  உரிமம்  வழங்குதல்  மற்றும்  சில்லறை  வர்த்தக  நிர்வாகத் துறை  இயக்குனர்  இப்ராகிம்  யூசுப், இனி மின்  சிகரெட்  விற்பதற்கான உரிமம் வழங்கப்படாது  என்றார். இதுவரை ஒரே  ஒரு  விண்ணப்பம்தான்  வேப்  விற்பனைக்கு  உரிமம் …

காடழிப்பே குரங்கு மலேரியா பரவலுக்குக் காரணமாம்

மலேசியாவில்  காடழிப்பு  வேலைகளாலும்  அதனால்  சுற்றுச் சூழலுக்கு  ஏற்படும்  மாற்றங்களாலும்தான்  குரங்குகளுக்கு  வரும்  மலேரியா  நோய்  இப்பொது மனிதர்களிலும்  அதிகம்  காணப்படுவதாக   லண்டனில்  அறிவியலாளர்கள்  தெரிவித்துள்ளனர். கொசுக்களால்  பரப்பப்படும்  asmodium knowlesi malaria என்னும்  இந்நோய்  காடுகளில்  வாழும்  மஹாக்  வகை  குரங்குகளில்தான்  வழக்கமாகக்  காணப்படும். அண்மையில்  இது …

பாஸ் உதவித் தலைவர்: கொள்ளையர்களுடன் உறவு தேவையில்லை

அம்னோ விரும்புவதுபோல்  அதனுடன்  கூட்டுச்  சேர பாஸ்  விரும்பவில்லை. இப்படிப்பட்ட  கூட்டு  நீண்டநாள்  நிலைக்காது, சண்டை சச்சரவுக்குத்தான்  இட்டுச்  செல்லும்  என  அம்னோ  உதவித்  தலைவர்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா  கூறினார். அவ்விரண்டு  கட்சிகளுக்குமிடையிலான  ஒத்துழைப்பு  இஸ்லாத்துக்கு  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  ஒத்துழைப்பதற்கு  இரண்டுமே   மனப்பூர்வமாக  விரும்ப …

பேராக் முப்தி: மகாதிர் பாஸ்-அம்னோ இணைப்புக்கு என் உதவி நாடினார்

பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியா,  அம்னோவையும்  பாஸையும்  இணைப்பதற்கு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  ஒரு  முறை  அவரது  உதவியை  நாடியதாகக்  கூறினார். மகாதிரின்  வேண்டுகோளை  ஏற்று  அவர்  உடனே  இரு  தரப்பினரையும்  சந்தித்துப்  பேசினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  இரு  கட்சிகளையும்  இணைக்க  வழியுண்டா …

பிஏசி விசாரணையில் ஊடகங்களுக்கு இடமில்லை

இன்று  பொதுக் கணக்குக்குழு(பிஏசி) 1எம்டிபி  தலைவர்  அருள் கந்தாவிடம்  விசாரணை  நடத்தப்போவதாகக்  கூறப்பட்டிருந்ததால் விசாரணைக்குச் சென்று  செய்தி  சேகரிப்பதற்காக  நாடாளுமன்றத்துக்குள்  நுழைய  முயன்ற  செய்தியாளர்கள்  வாசலிலேயே  தடுத்து  நிறுத்தப்பட்டனர். அங்கிருந்த  போலீசார்  இன்று  ஊடகங்களுக்கு  அனுமதி  இல்லை  என்றனர். “இது  மேலிட  உத்தரவு. காரணம்  தெரியவில்லை”, என்று  கூறி …

என்எப்சி அரசாங்கக் கடனைச் செலுத்தும் பேச்சுகளை இன்னும் தொடங்கவில்லை

தேசிய  பீட்லோட்  கார்ப்பரேசன்(என்எப்சி) அரசாங்கம்  அளித்த  ரிம250 மில்லியன்  எளிய  நிபந்தனை  கடனைத்  திருப்பிச்  செலுத்துவதற்கான   பேச்சுகளை  இன்னும்  தொடங்கவில்லை  என  அதன்  தலைவர்  முகம்மட்  சாலே  இஸ்மாயில்  கோலாலும்பூர் உயர்  நீதிமன்றத்தில்  தெரிவித்தார். பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லிக்கும்  மலேசியாகினிக்கும்  எதிராக  தாம்  தொடர்ந்துள்ள  அவதூறு  வழக்கில் …

சீனப் பெருநாளுக்குச் ‘சீனர்களுக்கு மட்டுமே’ விற்பனை உரிமத்துக்கு டிஏபி எதிர்ப்பு

கோலாலும்பூர்  மாநகரராண்மைக்  கழகம்,  சீனப்  புத்தாண்டு  விற்பனைக்கான   உரிமத்தைச்  சீனர்களுக்கு  மட்டுமே  கொடுக்க  உத்தேசித்திருப்பதை  டிஏபி  செராஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  டான்  கொக்  வாய்  எதிர்க்கிறார். நேற்று  மாநகராண்மைக்  கழகம்,  சீனப்  புத்தாண்டு  விற்பனைக்கான  தற்காலிக  கடைகளுக்கு  உரிமைகளுக்கு  விண்ணப்பிக்கலாம்  என்றும்  சீனர்களுக்கு  மட்டுமே  அவை  வழங்கப்படும்  என்றும்…

என்எஸ்சி சட்டவரைவில் தேசிய பாதுகாப்புக் கொள்கை இல்லையே- அனைத்துச் சமய…

அண்மையில்  நிறைவேற்றப்பட்ட  தேசிய  பாதுகாப்பு  மன்ற (என்எஸ்சி) சட்டவரைவை  வரைந்தவர்கள்  அதில்  தேசிய பாதுகாப்புக்  கொள்கையை  இணைத்துக்  கொள்ள   வேண்டும்  என்பதைப்  புறக்கணித்திருப்பதுபோல்  தெரிகிறது  என  அனைத்துச்  சமயக்  குழு  கூறியது. “அது (என்எஸ்சி) பிரதமருக்கு அதிகாரமளிப்பதற்கு  அளவுமீறி  முக்கியத்தும்  கொடுக்கிறது  ஆனால்  சட்டவரைவை  வரைந்தவர்கள்  என்எஸ்சி  தேசிய …

நஜிப் பதவிவிலக மேலும் பல அம்னோ கிளைகள் கோரிக்கை

மேலும்  ஐந்து  அம்னோ  கிளைத்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர். கோம்பாக்  தொகுதியில்  உள்ள  டெலிமா  லெம்பா  கிராமாட், கம்போங்  கெமென்சா  ஹிலிர்,  ஜெலாதெக்  பெர்மாய்,  லேக்  வியூ  பத்து  கேவ்ஸ், தாமான்  மெலாவாதி ஆகியவையே  அவ்வைந்து  கிளைகளுமாகும்.…

விமான நிலைய வரியும் அதிகரிக்கலாம்

விமான  நிலைய  வரி- இது  பயணிச்  சேவைக்  கட்டணம்  என்றும் அழைக்கப்படுகிறது-  அதிகரிக்கப்படலாம்  எனப்  போக்குவரத்து  அமைச்சர்   லியோ  தியோங்  லாய்  கூறியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு  ஒரு  முறை  விமான  நிலைய  வரியைப்  பரிசீலிக்க மலேசிய  விமான  நிலைய ஹோலிடிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி)  அரசாங்கத்துடன்  செய்து  கொண்டுள்ள  ஒப்பந்தம்  இடமளிக்கிறது  என்றாரவர்.…

பிரதமருக்கு எதிரான மகாதிரின் சதித்திட்டக்கு கோடீஸ்வரர்கள் பண உதவியா? போலீஸ்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கும்  சதித்  திட்டத்துக்குப்  பிரபலமான தொழில்  அதிபர்கள்  சிலர் பண  உதவி  செய்ததாகக்  கூறும்  மலேசியா டுடே கட்டுரையை  போலீசார்  ஆராய்ந்து வருகின்றனர். அத்  தொழில்  அதிபர்கள்  டாக்டர்  மகாதிரையும்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடினையும்  லண்டனில்  சந்தித்துப்  பேசினார்களாம். அக்கட்டுரை …

துணைப் பிரதமர் மகளின் வீட்டில் கொள்ளை

காஜாங்  கண்ட்ரி ஹைட்ஸில்  உள்ள  நூருல்ஹிடாயா  அஹ்மட்  ஜாஹிட்டின்  வீடு  இரண்டாவது  தடவையாகக்  கொள்ளையிடப்பட்டது. துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியின்  மகளான  நூருல்ஹிடாயா, 36, கொள்ளையர்கள்  வீட்டுக்குள்  புகுந்தபோது தாமும்  தம்  கணவரும்  இரண்டு  வீட்டுப்  பணியாளர்களும்  வீட்டில்  இருந்ததாக   தெரிவித்தார். ஆனால்,  அனைவரும்  ஆழ்ந்த  உறக்கத்தில் …

பெர்சே: புதிய இசி தலைவர் பழைய தவறுகளைச் செய்யக் கூடாது

தேர்தல்  ஆணைய (இசி) தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  விரைவில்  பணி ஓய்வு பெற  விருப்பதால்  அவருக்கு  அடுத்து  அப்பதவிக்கு  வருகின்றவர்  பழைய  தவறுகளை  மீண்டும்  செய்யக்கூடாது  என்று  பெர்சே  விருப்பம்  தெரிவித்துள்ளது. அப்துல்  அசீசின்  செயல்பாடு  திருப்திகரமாக  இல்லை  என்று  கூறிய  பெர்சே 2.0  தலைவர் …

செனட் தலைவர் என்எஸ்சி சட்டவரைவு மீது அம்பிகாவைச் சந்திக்க விரும்பவில்லை

தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவு  மீதான  விவாதங்களைத் தாமதப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்வதற்காக  சமூக  ஆர்வலர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  இன்று  நாடாளுமன்றத்துக்குச்  சென்றார். ஆனால்,  செனட்  தலைவர்  அபு ஸஹார்  உஜாங்  அவரைச்  சந்திக்க  மறுத்தார். அவர் “யாருடைய  தாக்கத்துக்கும்  ஆளாக  விரும்பவில்லை”  அதனால்தான்  தேசிய  மனித  உரிமை …

ஐஜிபி: மகாதிர் மீதான விசாரணை விரைவில் முடிவு பெறும்

போலீஸார்  ஆகஸ்ட்  மாதம்  பெர்சே 4 பேரணியின்போது  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தெரிவித்த  கருத்துகள்மீதான  விசாரணையை  விரைவில்  முடிந்துக்  கொள்வார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. “விசாரணை  ஆவணங்களை  இற்றைப்படுத்தி  வருகிறோம். சட்டத்துறைத்  தலைவருடனும்  விவாதித்து  வருகிறோம். விரைவில்  அது  முடிவுறும்”, எனப்  போலீஸ்  படைத்  தலைவர்   காலிட்  அபு  பக்கார் …

பெர்சே: மகாதிரும் முகைதினும் அரசியல் நிதியளிப்பைச் சீரமைக்கப் பாடுபட வேண்டும்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினும்  அம்னோவை  ‘பண  அரசியலி’லிருந்து  காப்பாற்ற  நடைமுறைக்கு  ஏற்ற  பரிந்துரைகளை  முன்வைக்க  வேண்டும்  என  பெர்சே கேட்டு  கொண்டிருக்கிறது. அவ்விருவரும்  பண  அரசியலையும்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்   தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்  அரசியல் …

பயங்கரவாதத்தை எதிர்க்கும் இஸ்லாமிய இராணுவக் கூட்டணியில் மலேசியா

பயங்கரவாதத்தை  எதிர்க்க  34  இஸ்லாமிய  நாடுகளின்  இராணுவக்  கூட்டணி  அமைக்கப்பட்டிருப்பதாக  சவூதி  அராபியா  இன்று  அறிவித்தது. அக்கூட்டணி  விடுத்த  கூட்டறிக்கை  அதைத்  தெரிவித்ததாக  சவூதி  அரசாங்க  செய்தி  நிறுவனம், எஸ்பிஏ  கூறிற்று. “இதில்  குறிப்பிடப்பட்டிருக்கும்  நாடுகள்  சவூதி  தலைமையில்  பயங்கரவாதத்தை  எதிர்க்க  இராணுவக்  கூட்டணி  ஒன்றை  அமைப்பதென  முடிவு …

நஜிப்பின் ரிம2.6 பில்லியன்மீது வழக்கு தொடுக்க அனினாவுக்குச் சட்டத் தகுதி…

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  சேர்ப்பிக்கப்பட்ட  ரிம2.6 பில்லியன் தொடர்பில்  வழக்கு  தொடுக்கும்  தகுதி   முன்னாள்  லங்காவி  அம்னோ  உறுப்பினர்  அனினா  சாடுடினுக்குக்  கிடையாது  என  நஜிப்பையும்  அம்னோ  நிர்வாகச்  செயலாளர்  அப்துல்  ரவுஃப்  யூசுப்பையும்  பிரதிநிதிக்கும்  வழக்குரைஞர்  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  கூறினார்.…

இஸ்மாயில் சப்ரி: பூமிபுத்ரா டிஜிட்டல் மையங்கள் நாடு முழுக்க திறக்கப்படும்

மாரா  டிஜிட்டல்  போன்ற  ஐடி  விற்பனை  மையங்கள்  நாடு  முழுவதிலும்  திறக்கப்படும்  எனக்  கிராம,  வட்டார  மேம்பாடு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறினார். மாரா  டிஜிட்டலின்  விரிவாக்கம்  மேலும்  பல  பூமிபுத்ரா  டிஜிட்டல்  விற்பனையாளர்கள்  உருவாவதற்கு வழிகோலும்  என்று  முகநூல்  பதிவில்  குறிப்பிட்ட  இஸ்மாயில்,   இதுகாறும்  அவர்கள்  அப்படிப்பட்ட …