மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 1 முதல் 26…
மசீச: நட்புக்கரம் நீட்டுவது சரி, ஆனால் பாஸ் பிஎன்னில் சேர…
மசீச, மலேசியாவில் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவரும் பாஸ் முயற்சிகளை நெடுகிலும் எதிர்த்து வந்திருந்தாலும் பாஸுக்கு நட்புக்கரம் நீட்டும் அம்னோவின் முடிவில் தலையிடாது. ஆனால், பாஸ் பிஎன்னில் சேர்வதை மசீச எதிர்க்கும் என அதன் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். “அம்னோவின் உள்விவகாரங்களில் மசீச தலையிடாது. “ஆனால், பாஸை …
கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிரான கருத்தரங்கில் போலீஸ் பங்கேற்பு
கடந்த சனிக்கிழமை, மலாக்கா லெண்டு மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் (யுஐடிஎம்) கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்றம் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கருத்தரங்கில் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தவர்களில் ஒருவர் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்தவர். அந்த கருத்தரங்கின் படம் ஒன்று ஓன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "Ancaman…
புலம்பாமல் உருப்படியாக செயல்படுங்கள்: கெவியஸுக்கு மஇகா பதிலடி
மைபிபிபி கட்சித் தலைவர் எம்.கெவியஸ் மற்ற பிஎன் பங்காளிக் கட்சிகள் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொண்டு அடுத்த பொது தேர்தலில் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்த பாடுபடத் தொடங்க வேண்டும் என்று மஇகா மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.வேள்பாரி கேட்டுக் கொண்டிருக்கிறார். கெவியஸ் இந்திய சமூகத்துக்கான ஒதுக்கீடுகள் …
நாய் வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே அவற்றை வைத்திருக்க வேண்டும்
பெர்லிசில் வெறிநாய்க்கடி நோய் மீண்டும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாய் வைத்திருப்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அந்நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றாலும் நாய் வைத்திருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மாநில விவசாய, விவசாயம் சார்ந்த தொழில்குழுத் தலைவர் அஹ்மட் …
மகாதிர் அம்னோ ஏஜிஎம் பற்றி தம் வலைப்பதிவில் கருத்துரைப்பார்
அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைக்குள் வைத்திருப்பவராக விளங்குகிறார் பிரதமரும் கட்சித் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக். இது பற்றி அவரைப் பதவி இறக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கேட்டதற்கு அவர் கருத்துரைக்காமல் புன்னகைத்தார். திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டதற்கு,…
அம்னோ- ஆதரவு மாணவர் தலைவருக்குக் கண்டனம்
கடந்த வார அம்னோ பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) மாணவப் பேராளர் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அதில் உரையாற்றி “சுயப் பிரதாபம்” தேடிக் கொள்ளும் நோக்கில் செயல்பட்ட பல்கலைக்கழக மாணவர் முகம்மட் பர்ஹான் கைருடின், மாணவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.…
சவூதி அராபிய தேர்தலில் முதல்முறையாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
சவூதி அராபியாவில் ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. முதல்முறையாக இத்தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் வேட்பாளர்களாக போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர். 280 ஊராட்சி மன்றங்களுக்குப் போட்டியிட்ட 6,917 வேட்பாளர்களில் 979 பேர் பெண்கள். அவர்களில் 15 பேர் ஊராட்சி மன்ற கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நஜிப்: விரைவில் 2020-க்குப் பிந்திய திட்டம் மீதான கலந்துரையாடல்
2010-க்குப் பிந்திய திட்டம்மீதான கலந்ந்துரையாடலும் விவாதங்களும் விரைவில் தொடங்கும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். அப்போதுதான் அதன் இலக்கை அடையும் முயற்சிகளை அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தொடங்க முடியும். 2020-க்குப் பிந்திய திட்டத்தை உருவாக 2020-வரை காத்திருக்க முடியாது என்றாரவர். “அக்கலந்துரையாடலில் அறிஞர் பெருமக்கள், அரசு-…
டிஏபி: பக்கத்தான் ரக்யாட் 13வது பொதுத் தேர்தலில் தோற்றதிலும் ஒரு…
இப்போது நினைத்துப் பார்க்கையில் 13வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ரக்யாட் தோற்றதுகூட ஒரு “மறைமுகமான வரப்பிரசாதம்”தான் என்கிறார் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங். பக்கத்தான் ரக்யாட் வெற்றி பெற்றிருந்தால் அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இணங்கி இருக்க மாட்டார். “பிரதமராக …
உலகின் முதல் தமிழ்ப் பிரதமர் வீராசாமி கயானாவில் முதலீடு செய்ய…
-மு. குலசேகரன், டிசம்பர் 12, 2015. கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 1 ஆம் தேதி வரையில் இரண்டு நாள்களுக்கு , தென் அமெரிக்காவிலுள்ள எல்சல்வடோரில் பாராளுமன்ற மன்ற உறுப்பினர்களின் உலக அமைதிக்கான மாநாடு நடைபெற்றது. மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு தென் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிகமானோர் வாழும் நாடானா கயானாவை காணவேண்டும் என்ற…
அம்னோ ஏஜிஎம்-மில் முகைதினைத் தற்காக்கும் துண்டு வெளியீடுகள்
அம்னோவில் படிப்படியாக பிடிமானத்தை இழந்துவரும் முகைதின் யாசினைத் தற்காத்துப் பேசும் துண்டு வெளியீடுகள் அம்னோ பேராளர்களிடையே இன்று விநியோகிக்கப்பட்டன. ‘நான் துரோகி அல்ல’ என்ற தலைப்பில் 28-பக்கம் கொண்ட அத்துண்டு வெளியீட்டில் முகைதின் தன்னிலையை எடுத்துரைக்கிறார். தாம் எப்போதுமே கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்திருப்பதாகவும் நஜிப் அப்துல் ரசாக் …
தவ்கேகளுக்கு பெரிய குத்தகைகளைக் கொடுக்காதீர்
டிஏபி-யை ஆதரிக்கும் தவ்கேகளுக்குப் பெரிய குத்தகைத் திட்டங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பேராளர் அப்துல்லா மாட் யாசிம். அத்திட்டங்களை எடுத்து நடத்தும் நிறுவனங்கள் டிஏபி-க்கு உதவி வருவதாகக் கூறினார். “டிஏபி-யை ஆதரிக்கும் தவ்கேகளுக்குப் பெரிய குத்தகைத் திட்டங்கள் கொடுக்கப்படுவதை நிறுத்த …
அம்னோ ஏஜிஎம்-மிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்பட்டது
மலேசியாகினி செய்தியாளர்கள் அம்னோ பேரவைக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க இன்று தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. மலேசியாகினி அம்னோவின் நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டதுதான் இதற்குக் காரணம். அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மலேசியாகினி செய்தியாளர்களுக்கு அம்னோ பொதுப் பேரவையில் செய்திகள் திரட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றும்…
நஜிப், ஹாடி அடுத்த வாரம் சந்திப்பு
அம்னோ தலைவர் பாஸுக்கு நட்புக் கரம் நீட்டியிருப்பதை அடுத்து அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் அடுத்த வாரம் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. அல்- அஸ்ஹார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் தலைவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என …
முகைதின் யாசின்: கறைபடியாத தலைவர்கள் மட்டுமே விசுவாசத்திற்கு உரியவர்கள்
கறைபடியாத மற்றும் எந்தத் தவறும் புரியாத தலைவர்கள் மட்டுமே மக்களின் விசுவாத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார். தலைவரைப் பின்பற்றுகிறவர்கள் தலைவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாக பிரதமர் நஜிப் நேற்று அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்…
விமானங்களுக்கு சரக்கு நிறுவனம் உரிமை கொண்டாடுகிறது
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைவிடப்பட்டுக் கிடக்கும் மூன்று போயிங் 747-ரக விமானங்களும் தன்னுடையவை என்று விமானவழி சரக்கு ஏற்றி-இறக்கும் நிறுவனமொன்று கூறியது. கோலாலும்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சுவிவ்ட் ஏர் கார்கோ, இப்போது அந்நிறுவனம் ஸ்பலங் என்’ டேஷ் சென். பெர்ஹாட் என்று விளங்குகிறது, கேஎல்ஐஏ-இல் …
14வது போதுத் தேர்தல் முடிவு மோசமாக இருந்தால் அதற்கு மகாதிரே…
அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் அடைவுநிலை மோசமாக இருந்தால் அதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் காரணமாக இருப்பார் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். 12வது பொதுத் தேர்தலில் நடந்ததுதான் மீண்டும் நடக்கும் என சாலே குறிப்பிட்டார். அப்போது மகாதிர் தொடர் …
மகாதிரைக் குறை சொன்னவர்மீது மற்ற பேராளர்கள் பாய்ச்சல்
அம்னோ பேரவையில் பேராக் பேராளர் ஒருவர் அம்னோவுக்கு டாக்டர் மகாதிர் முகம்மட் என்ன செய்து விட்டார் என்று கேள்வி எழுப்பி . மற்ற பேராளர்களின் ஆத்திரத்துக்கு ஆளானார். அம்னோவின் வெற்றிக்கு 20 ஆண்டுகளுக்குமேல் அதற்குத் தலைமை தாங்கிய மகாதிர் காரணமல்ல என்று ஹம்சா முகம்மட் காசிம் கூறப்போக பேராளர்கள் …
முதல் டிங்கி தடுப்பூசி மெக்சிகோவில் அறிமுகம்
டிங்கிக் காய்ச்சலுக்கு எதிரான முதலாவது தடுப்பூசிக்கு மெக்சிகோவில் புதன்கிழமை அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மலேசியா அதை இங்கு அறிமுகப்படுத்த தயக்கம் காட்டுகிறது. சுகாதார அமைச்சு அத்தடுப்பூசியை மேலும் ஆராய்ந்து வருகிறது. மலேசியாவில் பரவலாகக் காணப்படும் DEN2 டிங்கிக்கு எதிராக அத்தடுப்பூசி அவ்வளவாக பலனளிப்பதில்லை என சுகாதார அமைச்சின் துணை …
நஜிப் உரையில் இனவாதம் தெரிவதாக ஹராபான் சாடல்
பக்கத்தான் ஹராபான் உயர் தலைவர்கள், நேற்று அம்னோ ஏஜிஎம்-மில் அம்னோ தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றிய தொடக்க உரை இனவாத அடிப்படையில் அமைந்திருந்ததாக சாடியுள்ளனர். நஜிப், 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தோற்றால் ஹராபான் இஸ்லாத்துக்காகவோ மலாய்க்காரர்களுக்காகவோ பூமிபுத்ராக்களுக்காகவோ பாடுபடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க முனைந்தார் …
கூ லி: முகைதின் வாயடைக்கப்பட்டதில் பேராளர்களுக்கு உடன்பாடில்லை
அம்னோ பொதுப் பேரவையில் பேசிய பேராளர்கள், துணைத் தலைவர் முகைதின் யாசின் பேச முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாக அம்னோ மூத்த உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா கூறினார். “அவை நடவடிக்கைகளிலிருந்து அவர்(முகைதின்) ஒதுக்கப்பட்டிருப்பதைப் பேராளர்கள் நக்கல் செய்து பேசியதிலிருந்து அதை உணர முடிகிறது. “பேராளர்களுக்கு …
நஜிப்: தொடர்ந்து தலைமைத்துவம் வழங்கும் கடப்பாடு எனக்கு உண்டு
அம்னோ தலைவர் பதவியைத் துறப்பது கோழைத்தனமானதும் பொறுப்பற்றதுமாகும் என்று நஜிப் அப்துல் ரசாக் கருதுகிறார். எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் கட்சியின் நிலை, அதன் உறுப்பினர்கள் பழைய நிலைக்குத் திரும்புவது ஆகியவற்றை முதலில் உறுதி செய்யாமல் நமது இலக்கையும் பணித்திட்டத்தையும் தம்மால் கைவிட்டுவிட முடியாது என்று…
எம்எசிசி சந்தித்தது ஒரு நன்கொடையாளர், நன்கொடையாளர்கள் அல்ல
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் "அரசியல் நன்கொடை" சம்பந்தமாக மத்தியக் கிழக்கில் சந்தித்தது ஒரே ஒருவரைத்தான் என்று ஒரு வட்டாரம் கூறிற்று. கிடைக்கப்பட்ட தகவலின்படி, ஒரே ஒரு நன்கொடையாளர்தான் என்று இந்த விசாரணையை நன்கு அறிந்துள்ள…


