ஷா ஆலம்: ஒன்பது மாத கர்ப்பிணியான ஒரு பெண், நேற்றிரவு இங்குள்ள செக்சன் 23 இல் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கழிப்பறையில் இருந்தபோது அவரது முதுகுப்பையைப் பறித்துச் சென்ற திருடன் ஒருவரைத் துரத்திக் கொண்டு தொடர்ந்து 50 மீட்டர் ஓடினார். பாதிக்கப்பட்டவரின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்களின்…
‘நீர்’ தொடர்பில் பிகேஆர் விடுக்கும் எச்சரிக்கை
கூட்டரசு அரசாங்கம் நீர் சேவை தொழில் சட்டத்தின் 114-ஆம் பகுதி வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலாங்கூரில் நீர் கட்டணத்தை உயர்த்தவும் நீர் சேவை வழங்க சலுகை பெற்றுள்ள நிறுவனங்களுக்கு நியாயமற்ற இழப்பீடுகளைக் கொடுக்கவும் முற்படக் கூடாது என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி எச்சரித்துள்ளார். அச்சட்டத்தைப் பயன்படுத்த …
‘மலாக்கா சுல்தான்’ விருதுகள் வழங்க திட்டமாம்
‘மலாக்கா சுல்தான்’ எனத் தம்மைச் சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் ராஜா நூர் ஜான் ஷா ராஜா துவா, மலாக்காவுக்கு அருகில் பூலாவ் புசாரில், ‘அரச’ விருதுகளையும் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கும் சடங்கு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதற்கு எதிராக இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயர் கெரோ போலீஸ் …
சுவாராம்: பேரணிகளில் குழப்பம் ஏற்பட போலீசே காரணம்
மலேசியாவில் அமைதி ஆர்ப்பாட்டம் என்பதே கிடையாது என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் கூறி இருப்பதை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான சுவாராம் மறுத்துள்ளது. அமைதிப் பேரணி நடத்த அரசியலமைப்பு இடமளிக்கிறது. ஆனால், அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை போலீசார் மதிக்கத் தவறும்போதுதான் அமைதிப்பேரணி திசைமாறிப் போய்விடுகிறது என்றது கூறிற்று. “பொதுமக்களால் …
அஸ்மின் நீக்கப்பட்டது ஏன் என்று சிலாங்கூர் எம்பி விளக்க வேண்டும்
சிலாங்கூர் பிகேஆர், அதன் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நிறுவன (பிகேஎன்எஸ்) இயக்குனர் வாரியத்திலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்பதை மந்திரி புசார் அப்துல் காலிட் விளக்க வேண்டும் என விரும்புகிறது. அரசியல் நியமனங்களைச் செய்யும்போது கட்சியுடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் …
என்ஜிஓ-கள்: சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் செயல்படாமல் கிடக்கின்றன
சிலாங்கூர் அரசாங்கம், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் நியமனத்தைத் தாமதப்படுத்துவதானது, செயல்படும் ஊராட்சி மன்றங்களைப் பெற்றிருக்கும் சிலாங்கூர் மக்களின் “அடிப்படை உரிமை”யை மறுப்பதற்கு ஒப்பாகும் என நல்ல நிர்வாகத்துக்கான கூட்டமைப்பு (சிஜிஜி) கூறியுள்ளது. 2008 தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் அரசின் செயல்பாட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட அந்த என்ஜிஓ-களின் கூட்டமைப்பு, 2014…
கேவியஸுக்கு ரிம200,000 கொடுக்குமாறு என்எஸ்டிக்கு நீதிமன்றம் உத்தரவு
பிபிபி தலைவர் எம்.கேவியஸை அவதூறு செய்த குற்றத்துக்காக ரிம200,000 இழப்பீடு கொடுக்குமாறு கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்(என்எஸ்டி) நாளேட்டுக்கு உத்தரவிட்டது. வழக்குச் செலவாக மேற்கொண்டு ரிம5,000 கொடுக்குமாறும் நீதி ஆணையர் சித்தி கத்திஜா எஸ். ஹசான் பட்ஜெனிட் ஆணையிட்டார். அச்செய்தித்தாளில் “கேவியஸ் கட்சிக் கணக்குச் …
பக்தர்கள் நிர்வாணமாக காவடி எடுத்தால்…?
தைப்பூசத்தன்று முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது தைப்பூச திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். காவடி எடுப்பது என்பது ஒரு புதிய முறை இல்லை என்றாலும், காவடி எடுக்கும் பக்தர்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து பல ஆட்சேபங்களும் குறைகூறல்களும் எழுந்துள்ளன. பக்தர்கள் எடுக்கும் காவடிகள் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு இருக்க…
ரயில் வண்டி தடம்புரண்ட சம்பவங்களுக்கு ஹிஷாமுடின் பொறுப்பேற்க வேண்டும்
கடந்த ஓராண்டுக் காலத்தில் தீவகற்ப மலேசியாவில் ரயில்கள் தடம்புரளும் எட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஐந்து ஹிஷாமுடின் உசேன் போக்குவரத்து அமைச்சரான பின்னர் ஏற்பட்டவை. எனவே, இச்சம்பவங்களுக்கு அவர்தான் பொறுப்பேற்க வெண்டும் என டிஏபி-இன் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரன் கூறினார். “ரயில்கள் தடம்புரள்வதால் காயங்களும் …
ராஜா பெட்ராமீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது
லெப்டனெண்ட்- கர்னல் அப்துல் அசீஸ் பூயோங்கும் அவரின் துணைவியார் லெப்டனெண்ட்- கர்னல் நோர்ஹயாதி ஹசனும் ரிம2 மில்லியன் கோரி வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின்மீது தொடுத்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டதை ராஜா பெட்ராவின் வழக்குரைஞர் ஜே.சந்திராவும் உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன நிபந்தனைகளின்பேரில் அது திரும்பப் பெறப்பட்டது …
என்எப்சி, இகோ சிட்டி கொண்டோமினியம் தொடர்பில் நுருல், சைபுடின் ஆகியோர்மீது…
தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் சென். பெர்ஹாட்(என்எப்சி)-டும் அதன் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார்மீதும் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்மீதும் அவதூறு வழக்கு தொடுத்துள்ளனர். என்எப்சி, கேஎல் இகோ சிட்டி-இல், ரிம12 மில்லியனுக்கு எட்டு கொண்டோமினியம்கள் வாங்கி இருப்பதாக …
பிரதமர் கிளந்தானுக்குரிய எண்ணெய் உரிமப் பணத்தை மறந்து விட்டாரா?
ஓராண்டுக்கு முன்னர், கிளந்தானின் எண்ணெய் உரிமப் பணம் பற்றி பாஸுடன் கலந்துரையாட முன்வந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதை அடியோடு மறந்து விட்டாரா என்று வினவுகிறார் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹுசாம் மூசா. கிளந்தானுக்கு எண்ணெய் உரிமப் பணம் வழங்குவதை விவாதிக்க அமைக்கப்படும் புதிய குழுவில் சேர்ந்துகொள்ள …
பெர்சே: பிரச்னைகளுக்குப் பேரணிகளே தீர்வாகிடமாட்டா
பெர்சே என்றதும் அது நடத்திய மிகப் பெரிய பேரணிகள்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், பேரணிகள் நடத்தியே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது என்கிறார் அக்கூட்டமைப்பின் புதிய தலைவர் மரியா சின் அப்துல்லா. வரும் ஆண்டுகளில், தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை…
பிகேஎப்எஸ் வழக்கில் சான் கொங் சாய்-க்கு விடுதலை
முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் முன்னாள் மசீச தலைவருமான சான் கொங் சோய்மீது கிள்ளான் துறைமுக தீர்வையற்ற மண்டல (பிகேஎப்எஸ்) ஊழல் வழக்கில் மோசடி செய்ததாக சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது அந்த ஊழல் வழக்குக்குக் கிடைத்த இரண்டாவது அடியாகும். இதற்குமுன்…
தமிழர்களே, ஒரு முக்கியமான வேலை!
இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சார்பாக ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் விவாதம் நடைபெரும். அதில் பலத்த தாக்கத்தை உருவாக்க தமிழர் நிவாரண நிதியின் காப்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கணேசலிங்கம், உலக தமிழர்கள் செய்ய வேண்டி ஒரு வேலையை முன்வைக்கிறார். அவரின் கடிதம்…
சிறைச்சாலையை விடுங்கள், புத்ரா ஜெயா பற்றிப் பேசுங்கள் : குவான்…
டிஏபி, சீனர்- அல்லாதாரின் ஆதரவைப் பெற விரும்பினால் கடந்தகால, கடினப்போக்குக் கொண்ட அணுகுமுறைகளைக் கைவிட்டு பரிவுமிக்க, இதமான அணுகுமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார். இன்று, பத்து பகாட்டில், ஜோகூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய பினாங்கு முதலமைச்சருமான லிம், …
கைரி: பிஎன் தலைவர்களின் இணைய அணுகுமுறை எடுபடவில்லை
பிஎன் தலைவர்கள் சிலரது இணைய அணுகுமுறை பொதுமக்களைக் கவரவில்லை என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். “பிஎன் தலைவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டுவதைப் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பேசுகிறார்களே தவிர அவர்களுக்கு அப்பாற்பட்டவர்களுடன், யாரையும் சாராமல் தனியே இருப்பவர்களுடன் பேசுவதாகத் …
ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமரை…
மலேசிய பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை நடத்தி மலாய்மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமர் அப்துல் ரசாக்கை சரவாக்கின் இபான் கிறிஸ்துவ சமூகத்தினர் சாடியுள்ளனர். ஜனவரி 2-இல், சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்) மேற்கொண்ட அச்சோதனை, அமைச்சரவையின் 10-அம்ச ஒப்பந்தம் …
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி: வகுப்புகளை நடத்த பெற்றோர்களே ஏற்பாடு செய்கின்றனர்
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி இதுவரையில் கிளானாஜெயாவில் இயங்கிய இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராடி வரும் பெற்றோர்கள் அப்பள்ளியில் பாட வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கின்றனர், ஏனென்றால் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அப்பள்ளியில் வகுப்புகளை நடத்துவதற்கு ஆசிரியர்களை தர மறுத்து விட்டது. இன்று பின்னேரத்தில் துணைக் கல்வி அமைச்சர் பி.…
பாஸ்: தீர்த்தம் முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக மாற்றாது
முஸ்லிம்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் காலடி வைத்தாலோ, தீர்த்தம் அவர்களுடைய உடம்பில் பட்டுவிட்டாலோ அவர்கள் எப்படியோ கிறிஸ்துவர்களாகி விடுவார்கள் என்ற அவர்களின் பயம் அறிவுக்கு ஒவ்வாதது என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா கூறுகிறார். "தேவாலயத்திற்கு போனதும் திடீரென்று கிறிஸ்துவர் ஆகிவிடுவது…
தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றதிற்கு போர்கால நடவடிக்கைகள் தேவை!
-மு. குலசேகரன், ஜனவரி 11, 2014. சுதந்திரம் பெற்ற பொழுது நமக்கு 1000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது காலச்சக்கரத்தினால் நசுக்கப்பட்டு மிஞ்சி இருப்பவை வெறும் 523 பள்ளிகளே ! தமிழ் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளைவிட தேசியப்பள்ளிகளில் சேர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.…
சீக்கியர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்
சீக்கியர்கள் இறைவனைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். அச்சொல்லைப் பயன்படுத்த சீக்கிய சமூகத்துக்குத் தடை இல்லை என மூத்த வழக்குரைஞர் கர்பாலா சிங் கூறினார். “அது சீக்கியர் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் உள்ளது. எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவோம்.…
பெர்சே 3.0 வழக்கில் அன்வார், அஸ்மின் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், 2012 பெர்சே 3.0 பேரணியில் கலந்துகொண்டதற்காக அன்வார் இப்ராகிம், அஸ்மின் அலி, பட்ருல் ஹிஷாம் ஷரின் ஆகியோர் மீதும் மேலும் மூவர்மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை இன்று தள்ளுபடி செய்தது. கடந்த வாரம் மேல்முறையீட்டு நிதிமன்றம், பேரணிக்குத் தடைபோட்ட ஒரு மெஜிஸ்ட்ரேட்டின் ஆணை சட்டவிரோதமானது என்று …
போலீஸ் ‘இரத்தம் சிந்த’ச் சொன்ன முப்தியையையும் விடவில்லை, விசாரித்தது
புத்தாண்டுக்கு முதல்நாள் விலை-உயர்வை எதிர்த்து பேரணி நடத்தியவர்களைக் கொல்வது தப்பில்லை என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவிடம் போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்து விட்டனர். “அதில் (தேசியப் பாதுகாப்புக்கு) மிரட்டல் விடுவதாக எதுவும் இருக்குமானால் அதன்மீது விசாரணை நடத்தப்படும். “குறிப்பிட்ட சிலர்தான் பாதுகாப்புக்கு மிரட்டல் என்பதில்லை.…