மகாதிர்: அம்னோவின் வெற்றிக்கு நஜிப் உரிமை கொண்டாடக் கூடாது

அம்னோவின்  வெற்றிகள்  தம்மால்  சாதிக்கப்பட்டவை  என்று  கூறிக்கொண்டிருப்பதைப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்    விட்டொழிக்க  வேண்டும்  என்று முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்  வலியுறுத்தினார். “நாட்டை  மேம்படுத்துவதில்  அம்னோ  வெற்றி  அடைந்துள்ளது  என்று (நஜிப்) குறிப்பிட்டதை  ஒப்புக்கொள்கிறேன். “ஆனால், அது  அம்னோவின்  வெற்றி.  இந்தத்  தலவருடைய  வெற்றி …

ஜிஎஸ்டி இல்லையேல் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை

பொருள்  சேவை  வரியைக்  குறைகூறுவோர் அது  மக்களுக்குப்  பெருஞ்  சுமை  என்கிறார்கள்.  ஆனால்,  அதை  அமல்படுத்தாமலிருந்தால்  அரசுப்  பணியாளர்களுக்குச்  சம்பள  உயர்வு  கிடைத்திருக்காது  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். “ஜிஎஸ்டி-யை  அமல்படுத்தும்  அரசியல்  துணிச்சல்  அரசாங்கத்துக்கு  இல்லாமல்  போயிருந்தால்  அரசாங்கத்தின்  நடப்புக்  கணக்கில்  ரிம10.6 பில்லியன் …

மகாதிர்: நஜிப் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றார்

பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு கையூட்டு கொடுக்க முயன்றார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குற்றம் சாட்டினார். பல சந்தர்ப்பங்களில் நஜிப் தம்மைச் சந்தித்து தமக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளதாக மகாதிர் கூறினார். "இது கபடமற்றது என்று நினைத்து நாட்டிற்காக சில மேம்பாட்டு திட்டங்களை கூறினேன்.…

அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேச முகைதினுக்கு அனுமதி இல்லை

  அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மனம் நொந்து போய் இருக்கிறார். தாம் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்த முகைதின், அம்னோவுக்கு என்ன ஆயிற்று என்று விசனப்பட்டுக் கொண்டார். "எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், பொதுக்கூட்டம் முடிகிறவரையில் நான்…

ஷாரிஸாட்: திரும்பி வாருங்கள் மகாதிர், இல்லையேல் டிஎபி மலாய்க்காரர்களை விழுங்கி…

  முன்னாள் பிரதமர் மகாதிர், முகைதின் யாசின் மற்றும் முகமட் ஷாபி அப்டால் ஆகியோர் அம்னோபட்டிக்கே திரும்பி வர வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவு இன்று வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை விடுத்த அப்பிரிவின் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜாலில், மலாய்க்காரர்களை டிஎபி கட்டுப்படுத்துவதை தாம் விரும்பவில்லை என்றார். சரியோ…

ஒழுங்கு நடவடிக்கைக்கு அஞ்சாத முகைதின்

  பிரதமர் நஜிப்பை பற்றி முகைதின் யாசின் கூறியிருந்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொடர்ந்து அம்னோ உச்சமன்றம் இன்றிரவு ஒரு முடிவு எடுக்கும். ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வது பற்றி பயப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, இல்லை என்று கையை அசைத்து…

அம்னோ கூட்டத்தின் ‘மாய மனிதர்’

முகைதின்  யாசின்  அம்னோவில்  தலைவருக்கு  அடுத்து இரண்டாம்  நிலையில்  இருக்கலாம். ஆனால், அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  அவரது  நிழல்படத்தைக்  காண்பது  குதிரைக்  கொம்பாக  இருக்கிறது. ஒரே  ஒரு  சின்னப்  படத்தைத்தான்  பார்க்க  முடிகிறது.  மற்றபடி  துணைத்  தலைவரைக்  கிட்டதட்ட  “இருட்டடிப்பு”  செய்யும்  வேலைதான்  நடந்துள்ளது. புத்ரா  உலக  வாணிக …

அவைக்கு வராத செனட்டர்களை அவைத் தலைவர் கடிந்து கொண்டார்

அம்னோ  ஆண்டுக்  கூட்டத்துடன்  தொடர்பில்லாதவர்கள்  செனட்  கூட்டத்து  வராமல்  இருப்பதை  மேலவைத்  தலைவர்  அபு  ஜாஹார்  உஜாங் கடிந்து  கொண்டார். “அம்னோ  கூட்டத்துடன்  தொடர்புள்ள  அமைச்சர்கள்  பலர்  கூட்டத்துக்கு  வராமலிருக்க  நான்  அனுமதி  கொடுத்திருக்கிறேன். ஆனால். அதனுடன்  சம்பந்தமில்லாதவர்கள்  கண்டிப்பாக  வர  வேண்டும். ஏனென்றால் இது  ஒரு  முக்கியமான …

ஜாஹிட்: முகைதின் தலைவிதி நஜிப்பின் கைகளில்

அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்மீது  நடவடிக்கை  எடுப்பது  பற்றி  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  முடிவு  செய்வார். இதைத்  தெரிவித்த  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  ஆகக்  கடைசியாக  முகைதின்  கட்சி  விதிகளை  மீறும்  வகையில்  பேசினாரா  என்பதைத்  தீர்மானிக்க  விசாரணை  நடத்தப்பட்டு விசாரணை …

மரியாவுக்கும் அம்பிகாவுக்கும் இரவுநேர ஆபாச தொலைபேசி அழைப்புகள்

கடந்த  மூன்று  மாதங்களாக  அறிமுகமற்ற  பேர்வழிகள்  இரவு  நேரங்களில்  தொலைபேசிகளில்  அழைத்து  ஆபாசப்  பேச்சுப்  பேசி பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லாவுக்கும்  அவருக்குமுன்  அப்பதவில்  இருந்த  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கும்   தொல்லை  தருகிறார்களாம். இப்படிப்பட்ட  ஆபாச  தொலைபேசி  அழைப்புகள்  முதன்முதலாக  செப்டம்பர்  மாதத்தில்  பின்னிரவு  மணி  2-க்கும்  4-க்குமிடையில் …

‘1எம்டிபி: நஜிப்பின் விளக்கம் மேலும் கேள்விகளைத்தான் எழுப்புகிறது’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  பற்றியும்  1எம்டிபியின்  செயல்பாடுகள்  பற்றியும்  அண்மையில்  அளித்த  விளக்கங்கள்  மேலும் பல  கேள்விகளுக்கு இடமளித்துள்ளதாக  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறுகிறார். கேள்விகளின்  பட்டியலில்  முதல்  கேள்வி  என்று  குறிப்பிட்ட  அவர்,  நேர்காணல்களிலும்   பூட்டப்பட்ட  கதவுகளுக்குப் …

அன்னிய சக்திகளின் உதவியுடன் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி: அம்னோ மகளிர்…

அரசாங்கத்தைக்  கவிழ்க்க  அன்னிய  சக்திகளுடன்  சேர்ந்து  சதித்  திட்டம்  உருவாகி  வருவதாகவும்  அதற்கு  எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்  என அம்னோ  மகளிர்  தலைவர்   ஷரிசாட்  அப்துல்  ஜலில்  அரசாங்கத்தைக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். “அது  எளிய  செயலல்ல. மக்களின்  வரவேற்பைப்  பெறும்  செயலுமல்ல. ஆனால்,  நாட்டைப்  பாதுகாக்க …

கைரி: போதுமய்யா, போதும்; இதற்கு மேலும் வேண்டாம் விலை உயர்வு

அம்னோ  இளைஞர்  பகுதி  பொருள்,  சேவைகளின்  விலை  உயர்வைத்  தடுத்து  நிறுத்த  வேண்டும்  எனக்  கட்சித்  தலைமைத்துவத்தையும்  அரசாங்கத்தையும் கேட்டுக்  கொண்டிருக்கிறது. “விலை  உயர்வை  இரத்துச்  செய்ய  வேண்டும்  என்று  சொல்லவில்லை,  ஆனால்,  கட்சித்  தலைமைக்கும்  அரசாங்கத்துக்கும்  அம்னோ  இளைஞர் பிரிவு  இதை  மட்டும்  தெரிவித்துக் கொள்ள  விரும்புகிறது-…

பிபிஐஎம் எச்சரிக்கை: சாயம் தெளிக்கப்பட்டதை விட மோசமான சம்பவங்கள் நடைபெறலாம்

  இன்று காலையில் டாமாய் மருத்துவமனைக் கட்டடத்தில் சாயம் வீசப்பட்ட சம்பவம் தமக்கு திகைப்பளிக்கவில்லை என்று மலேசிய முஸ்லிம் நுகர்வோர் மன்றத்தின் (பிபிஐஎம்) தலைமை ஆர்வலர் நாட்ஸிம் ஜோகன் கூறினார். இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும் என்று தாம் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசாரிடம்…

குவான் எங்: ரிம2.6பி. கொடுக்கும் கொடையாளர் இருக்க முடியாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தம்  வங்கிக்  கணக்குக்கு  வந்து சேர்ந்த  ரிம2.6 பில்லியன்  தாராள  மனம்கொண்ட  ஒருவர் அளித்த  ‘நன்கொடை’  என்று  கூறியிருப்பதை  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  நம்பவில்லை. “இவ்வளவு  பெரிய  தொகையை  எந்த  நிபந்தனையுமின்றி  வாரி  வழங்கிய  அந்தக்  கருணை  உள்ளம்  கொண்டவர் …

தாய்மொழிப்பள்ளிகளுக்கு பிஎம் பாடநூல்களின் மின்-நகல்களை தற்போதைக்கு கொடுக்க வேண்டும்

  மாற்றம் செய்யப்பட்ட பகசா மலேசியா பாடநூல்கள் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் வரையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு அப்பாடநூல்களின் மின் - நகல்களைக் கொடுக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பாடநூல்கள் தயார் செய்யப்படுவது சாத்தியமில்லை என்பதால், பகசா மலேசியா பாடநூலின் மின்…

அம்னோ குழு முகைதினின் காட்டமான பேச்சை ஆராயும்

நேற்று,  கம்போங்  பாரு,  கிளப்  சுல்தான்  சுலைமானில்  ‘அம்னோ  துணைத்  தலைவருடன்’  என்ற  நிகழ்வில்  முகைதின்  யாசின்  ஆற்றிய  உரையை  அம்னோ  சிறப்புக்  குழு  ஒன்று  ஆராயும். அதில்  கட்சி  விதிகள்  மீறப்பட்டுள்ளனவா  என்பதை  அக்குழு  ஆராயும்  என  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர் …

‘என்எஸ்சி சட்டவரைவுக்குப் பின்னே உள்நோக்கம் இருக்குமோ?’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  செல்வாக்கு  சரிவுகண்டு  வருவதைக்  கருத்தில்கொண்டு  பார்க்கையில்,  அவசரம்  அவசரமாக தேசிய பாதுகாப்பு  மன்ற (என்எஸ்சி) சட்டவரைவை  நிறைவேற்றப்பட்டதிம்  பின்னணியில் ஏதோ உள்நோக்கம்  இருக்கலாம்  என்று   அமானா  தகவல்  பிரிவுத்  தலைவர்  காலிட்  சமாட்  கூறினார். “அச்சமாக  இருக்கிறது.  ஏனென்றால்  அவரது  உள்நோக்கம்  என்னவென்று …

தாப்பா கொலைச் சம்பவம்: விடுவிக்கப்பட்ட தந்தையும் மகனும் மீண்டும் கைது

தாப்பா,  ஜாலான்  பகாங்கில் நான்கு  பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டிருந்த  மெக்கானிக்கான ஒரு  தந்தையும் அவரது மகனும்  இன்று  விடுவிக்கப்பட்டு  மீண்டும்  கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும்  1959-ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டதாக  மாநில  சிஐடி  தலைவர்  கோ  கொக் …

போட்டி லவ் யாட் பிளாசாவுக்கு வருக: மலாய்க்காரர்- அல்லாதாருக்கு அமைச்சர்…

கோலாலும்பூரில்  ஐடி  கருவிகள்  விற்பனைக்காக  திறக்கப்பட்டுள்ள  மாரா  டிஜிட்டலுக்கு  மலாய்க்காரர்- அல்லாத  பயனீட்டாளர்களும்  வர  வேண்டும்  எனக்  கிராம,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி யாக்கூப்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். “இங்குள்ள  கடைகள்  முழுக்க முழுக்க  பூமிபுத்ராக்களுக்குச்  சொந்தமானவை. ஆனால், வரும்  பயனீட்டாளர்கள்  எல்லா  இனங்களையும்  சார்ந்தவர்களாக  இருக்க …

நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்பதை கிட் சியாங் வரவேற்கிறார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் குற்றமற்றவர்  என்று  நிறுவப்படும்வரை   அவர்  “சற்றே  விலகி இருக்க”  வேண்டும்  என்று  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியிருப்பதை  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  வரவேற்றுள்ளார். “1எம்டிபி  மீதான விசாரணை  தடையின்றி  நடைபெற நஜிப்  பிரதமர்  பதவியிலிருந்து ‘சற்றே…

மகாதிர்: சோஸ்மா சட்டத்தின் கீழ் நஜிப் தடுத்து வைக்கப்பட வேண்டும்

  ஜனநாயகத்தை கீழறுப்பு செய்ததற்காக பிரதமர் நஜிப் ரசாக் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று கூறினார். 1எம்டிபி பற்றி போலீஸ் புகார் செய்ததற்காக சோஸ்மா சட்டத்தின் கீழ் கைருடின் அபு ஹசான் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்று…

அம்னோ மாறாவிட்டால், மக்கள் அம்னோவை மாற்றுவார்கள், முகைதின் கூறுகிறார்

  அம்னோ புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அந்த புற்றுநோய் கூறுகள் அகற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார். "அம்னோவுக்குள்ளிருக்கும் புற்றுநோயாளிகள் நிராகரிக்கப்பட வேண்டும்", என்று கோலாலம்பூர் கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் கூடியிருந்த ஆதரவாளர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையில் முகைதின்…