அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் மகாதிரை அவமதிக்கும் முயற்சிகள் நடக்குமாம்

நாளை  தொடங்கும்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்துக்கு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  செல்வாரானால் அங்கு  அவர் அவமானத்து  ஆளாகக்  கூடும்  என்கிறார்  அவரின்  தீவிர  ஆதரவாளரான  சைட்  அக்பர்  அலி. கூட்டத்தின்  தொடக்கவிழாவுக்கு  வரும்  மகாதிரை  நோக்கிக்  கூச்சலிடவும்  கிண்டலடிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக  வதந்திகள்  உலவுகின்றனவாம். காப்பிக்  கடைகளில் …

டிஎபி சவால்: மசீச செனட்டர்கள் என்எஸ்சி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க…

  மசீசவின் செனட்டர்கள், குறிப்பாக இளைஞர் பிரிவு தலைவர் சோங் சின் வூன், தேசிய பாதுகாப்பு மன்றம் மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் வாக்களிக்க வேண்டும் என்று டிஎபி அவர்களை வலியுறுத்தியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று…

என்எஸ்சி பற்றி விவாதம் நடத்த ஹமிடிக்கு கிட் சியாங் சவால்

தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) மசோதா குறித்து தம்மோடு பகிரங்க விவாதம் நடத்த வருமாறு டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கு சவால் விடுத்துள்ளார். அந்த மசோதா பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வகைசெய்யவில்லை. மாறாக அது சர்வாதிகார ஆட்சிக்கு…

முகைதின் யாசின் நாளை கம்போங் பாருவில் பேசுகிறார்

  அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் நாளை இரவு கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் பேசவிருக்கிறார். அம்னோ இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற முகைதின் யாசினுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்களுக்கு கம்போங் பாரு கூட்டம் ஓர் ஆறுதலாக இருக்கும் என்று…

பிரதமரிடம் எம்ஏசிசி விசாரணை

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) இன்று  காலை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  அவரது  வங்கிக்  கணக்குக்கு   மாற்றிவிடப்பட்ட  ரிம42 மில்லியன்  பற்றியும்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  பற்றியும்  விசாரணை  செய்தது. மலேசியாவில்  நாட்டின்  தலைமை  நிர்வாகியை  ஊழல்தடுப்பு  நிறுவனம்  ஒன்று  விசாரணை  செய்வது …

சட்ட வல்லுனர்: என்எஸ்சி-யை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்

நாடாளுமன்றத்தில்  சர்ச்சைக்குரிய தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)ச்  சட்டம்   எளிதில்  நிறைவேற்றம்  காண்பதைத்  தடுத்து  நிறுத்த  முடியாது  என்றே  தோன்றுகிறது. ஆனால்,  வேறு  வழியில்  அதைத்  தோற்கடிக்கலாம்  என்கிறார்  அரசமைப்புச்  சட்ட  நிபுணர்  அப்துல்  அசீஸ்  பாரி. அச்சட்ட  வரைவை  எதிர்ப்போர்  கடைசி  முயற்சியாக  கூட்டரசு  நீதிமன்றத்துக்குச்  செல்லலாம்  என்றாரவர்.…

பணப் பிரச்னையால் ஸ்குவாஷ் போட்டி தள்ளிவைக்கப்பட்டது

உலக  ஸ்குவாஷ்  போட்டி  ஒத்திவைக்கப்பட்டதற்குப்  பணப்  பற்றாக்குறையும்  காரணமாகும்  என்று  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். “ஏற்பாட்டாளர்கள்  நேற்று  அமைச்சுக்குத்  தெரிவித்த  மறுமொழியில்  பாதுகாப்புப்  பிரச்னை  மட்டும்  காரணமல்ல  என்பதை  ஒப்புக்கொண்டனர். அவர்கள்  பணப்  பிரச்னையை  எதிர்நோக்கி  வருகிறார்கள். “ஏற்பாட்டு ஆதரவு  கிடைக்காததுதான் முக்கிய  காரணம் …

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையில் பிடிபட்டவர்களில் ஒருவர் ரேலா உறுப்பினர்

பயங்கரவாதக்  கும்பல்களுடன்  தொடர்பு  வைத்துள்ளவர்கள்  என்ற  சந்தேகத்தின்பேரில்  கைதானவர்களில்  ஒருவர்  மக்கள்  தன்னார்வப்  படை(ரேலா) உறுப்பினர். நவம்பர் 17-க்கும்  டிசம்பர் 1-க்குமிடையில்  ஐவர்  சந்தேகத்தின் அடிப்படையில்  கைது  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார். 25-க்கும்  59  வயதுக்குமிடைப்பட்ட அந்த  ஐவரில்  ஒருவர்  மலேசியர் …

அதிகமான பணம் செலவிடுவதால் மட்டும் மலேசியா சிறந்த கல்வியை வாங்கிவிட…

  அதிகமான பணம் செல்விடுவதால் மலேசியாவின் அடிப்படைக் கல்வி முன்னேற்றம் கண்டுவிடும் சாத்தியக்கூறு இல்லை என்று உலக வங்கியின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் தலைமை பொருளியலாளர் சுதிர் ஷெட்டி கூறினார். "இது பணம் செலவிடுவது பற்றியதல்ல. உண்மையில், மலேசியா அடிப்படைக் கல்விக்கு ஏராளமான பணம் செலவிடுகிறது",…

சொசிலாவத்தி கொலை: நால்வரின் மரண தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

ஐந்தாண்டுகளுக்குமுன்,  அழகுப்பொருள்  விற்பனை நிறுவனத்தின்  உரிமையாளர்  கோடீஸ்வரி  சொசிலாவத்தி  லாவியாவையும்  அவரின்  உதவியாளர்கள்  மூவரையும்  கொன்றதற்காக   நால்வருக்கு  விதிக்கப்பட்ட  மரண  தண்டனையை  முறையீட்டு  நீதிமன்றம் இன்று  நிலைநிறுத்தியது. மரண  தண்டனை  விதிக்கப்பட்டவர்கள்  முன்னாள்  வழக்குரைஞர்  என்.பத்மநாபனும்  அவரது  பண்ணையில்  பணிபுரிந்த  டி.தில்லையழகன்,23, ஆர்.மாடன், 24, ஆர்.காத்தவராயன்,35, ஆகிய  மூவரும்.…

தேடப்படும் நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும்போது ஹிஷாமுக்கு ஏன் விதிக்கப்பட்டது…

சமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  நாட்டை விட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டிருப்பது  ஏன்  என்று  அரசாங்கம்  விளக்கமளிக்க  வேண்டும்  எனத்  தேர்தல்  சீர்திருத்தங்களுக்குப்  போராடும்  பெர்சே  கேட்டுக்  கொண்டிருக்கிறது. அதிகாரிகளால்  தேடப்படும்  நபர்கள்  எல்லாம்  சுதந்திரமாக  உலகைச்  சுற்றிக்  கொண்டிருக்கும்போது  ஹிஷாமுடின்  மட்டும்  வெளிநாடு  செல்ல  முடியாமல்  தடுக்கப்படுவது …

நஜிப்பின் பதவி விலகலுக்குக் கோரிக்கை விடுத்த ஜைட்மீது வழக்கு

அறிக்கைகள்  மூலமாக  மற்றவர்  மனத்தை  நோகடித்தார்  என்று  முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  இன்று  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றம்  சாட்டப்பட்டார். ஜைட்  குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரினார்.  ஜனவரி  22ஆம்  நாள் விசாரணை  என  நீதிபதி  ஜக்ஜிட்  சிங்  விசாரணைக்கு  நாள்  குறித்தார். ஜைட்டுக்கு பிணை  விதிக்க …

முகைதின்: ஜோகூர் மக்கள் பின்வாங்குவதில்லை; 1946 எழுச்சியே சான்று

அம்னோ  துணைத் தலைவர்  முகைதின்  யாசின்  1946-இல்  மலாயன்  யூனியனுக்கு  எதிராக  மூண்டெழுந்த  மலாய்க்காரர்  எழிச்சியை  நினைவுபடுத்தி (அதுவே அம்னோ  தோன்றுவதற்கு  வழிகோலியது)  ஜோகூர்  மலாய்க்கார்கள்  ஒருபோதும்  பின்வாங்குவதில்லை  என்றார். அடுத்த வார  அம்னோ  பேரவையில்  பேசுவதற்கு  அவருக்குத்  இடமளிக்காதது  பற்றி  பொதுமக்களின்   பின்னூட்டத்தை  அறிய   முகநூலை  நாடியுள்ள …

அன்வாருக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்க பாபாகோமோவுக்கு உத்தரவு

வலைப்பதிவர்  பாபாகோமோ  அல்லது  வான்  முகம்மட்  அஸ்ரி  வான்  டெரிஸ்  அன்வார்  இப்ராகிமுக்கு  ரிம800,000 இழப்பீடு  கொடுக்க  வேண்டும்  என  முறையீட்டு  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அவதூறு  குற்றம்  புரிந்திருப்பதாக  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம் அளித்த  தீர்ப்பை  எதிர்த்து  பாபாகோமோ  செய்திருந்த  மேல்முறையீட்டை  முறையீட்டு  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது. அன்வாருக்குச் …

என்எஸ்சி சட்டவரைவை நிராகரிப்பீர்: அனைத்துலக என்ஜிஓ மேலவைக்கும் பேரரசருக்கும் வேண்டுகோள்

அனைத்துலக  ஜூரர்கள்  ஆணையம் (ஐசிஜே)  பிரதமருக்கு  விரிவான  அதிகாரங்களை  வழங்கும்  தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்ட(என்எஸ்சி) வரைவைப்  புறந்தள்ளும்படி  மேலவையையும்  பேரரசரையும்  கேட்டுக்  கொண்டிருக்கிறது. “முழுமையான  வாதமின்றியே அந்தச்  சட்ட  வரைவு  மேலவையில்  நிறைவேற்றப்பட்டு  பேரரசரால்  ஏற்கப்படும்  என  ஐசிஜே  எதிர்பார்க்கிறது. “என்றாலும், அச்சட்ட  வரைவை இப்போதைய  வடிவில் …

பயணிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது; அப்படியிருக்க போக்குவரத்துக் கட்டணம் ஏன் உயர…

பொதுப்  போக்குவரத்தைப்  பயன்படுத்துவோர்  எண்ணிக்கை  கூடியிருக்கும்போது  அதன் கட்டணம்  உயர்த்தப்பட்டது  அநியாயம் என்கிறார்  பிகேஆர்  தகவல்  தலைவர்  சைட்  இப்ராகிம்  சைட்  நோ. 2014 அரசாங்கப்  போக்குவரத்து  திட்ட (ஜிடிபி)  அறிக்கையைச்  சுட்டிக்காட்டிய  அவர்  2014-இல்  685,706   பேர்  ரயிலைப்  பயன்படுத்திப்  பயணம் செய்திருக்கிறார்கள்  என்றார்.  இது  முந்திய…

மொராய்ஸ் கொலை விசாரணையில் தாமதம் இல்லை

அரசாங்க  வழக்குரைஞர்  அந்தோனி  கெவின்  மொராய்ஸ்  கொலைமீதான  விசாரணையில்  தாமதம்  என்ற  பேச்சுக்கே இடமில்லை  என  உள்துறை  அமைச்சு  கூறியது. மொராய்ஸைக்  காணவில்லை  என்று  தகவல்  கிடைத்தவுடனேயே  போலீசார்  புலனாய்வைத்  தொடங்கி  விட்டார்கள்  என  சுவா  தியான்  சாங்குக்கு  அளித்த  எழுத்துப்பூர்வமான  பதிலில்  உள்துறை  அமைச்சு  கூறியது. “போலீசார் …

விளக்கமளிக்கக் கூடாது என்பது ஏஜி-இன் அறிவுரையாம்- அமைச்சர் கூறினார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை பற்றி  விளக்கம்  அளிக்க  இன்று  நாடாளுமன்றம்  வரவில்லை.  ஏனென்றால்  அதைப்  பற்றி  விளக்கமளிக்க வேண்டாம்  என்று  சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி  அறிவுறுத்தியுள்ளாராம். . பிரதமர்துறை  அமைச்சர்  அஸ்லினா  சைட்  ஒஸ்மான்  இதனைத்  தெரிவித்தார். “விசாரணைக்கு  உள்பட்ட  விவகாரங்கள் …

லியோ சீனப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடுகள் கிடைக்க உதவுவார்

மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்,  தேசிய  வகை சீன  இடைநிலைப்  பள்ளிகளுக்கு  ஒதுக்கப்பட்ட  நிதிகள்  அவற்றுக்குக்  கிடைப்பதற்குத்  தடையாகவுள்ள  பிரச்னைகளைக்  களைவதற்கு  உதவ  முன்வந்திருப்பதாக  இடைநிலைப் பள்ளி  மேம்பாட்டு  மன்றம்  இன்று  தெரிவித்தது. ஆண்டு  இறுதிக்குள் பிரச்னைகளுக்குத்  தீர்வுகண்டு  அப்பள்ளிகளுக்கு  ஒதுக்கப்பட்ட  ரிம25 மில்லியன்  அவற்றுக்குக் கிடைக்க…

ரிம2.6பி. விவகாரத்தில் ஒரு எண்டி-கிளைமெக்ஸ்: 3-நிமிட விளக்கம் கொடுத்து முடித்தார்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாடாளுமன்றத்தில் ரிம2.6 பில்லியன் விவகாரம்  பற்றி   விளக்கமளிக்கப்  போகிறார்  என்பது  கடந்த  சில  வாரங்களாக  பெரும்  எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி  இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பு  ஏமாற்றத்தில்  முடிந்தது. விளக்கம்  அளிக்கப்பட்டது.  விளக்கம்  அலித்தவர்  பிரதமர்  அல்ல.  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. அதுவும் …

எம்ஏசிசி இன்று நஜிப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடும்

மலேசிய  ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  அவரது வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட பெருந் தொகை  தொடர்பில்  வாக்குமூலம்  பதிவு  செய்யும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு  வட்டாரத்தை  மேற்கோள்  காட்டி  ராய்ட்டர்ஸ் செய்தி  நிறுவனம்,  எம்ஏசிசி  பிரதமரிடம்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல் நிறுவனத்திடமிருந்து  வந்த  நிதி பற்றி …

மசீச: கல்வி அமைச்சு பாடப்புத்தங்களை “குட்டி நெப்போலியன்கள்” மீது எறிய…

  அமைச்சரவையின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்ட "குட்டி நெப்போலியன்களை" கல்வி அமைச்சு அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மசீச கேட்டுக் கொண்டுள்ளது. பல சீனமொழிப்பள்ளிகளுக்கு தேசியமொழிப்பள்ளிகளுக்கான பகசா மலேசியா பாடநூல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது. இச்செயல் கல்வி அமைச்சு இரகசியமாக தேசிய…

உள்சண்டையை நிறுத்தி பிஎன் எதிர்ப்பில் கவனம் செலுத்துவீர்: எதிரணியிடம் பாஸ்மா…

பாஸ்மா (Pertubuhan Sejahtera Ummah Malaysia) தலைவர்   பாரோல்ரஸி  ஸவாவி,  எதிரணியினர்  தங்களுக்குள்  அடித்துக்  கொள்வதை  நிறுத்திக்கொண்டு  பிஎன்னை  எதிர்ப்பதில்  கவனம்  செலுத்த வேண்டும்  என்று கேட்டு  கொண்டிருக்கிறார். டிஏபி, பிகேஆர்,  பாஸ், பார்டி  அமானா  நெகாரா(அமானா)  ஆகியவை  தங்களுக்குள்  சேற்றைவாரி  வீசிக்  கொள்வது  நேரத்தை  விரயமாக்கும்  செயல்…