பகாங் முப்திக்கு எதிராக வான் ஜி போலீசில் புகார்

டிஏபி-யை  ‘காஃபீர் ஹர்பி’  என்று  பிரகடனப்படுத்திய  பகாங்  முப்திக்கு  எதிராக   பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஒருவர்  போலீசில்  புகார்  செய்துள்ளார். இன்று காலை  மணி  11.45க்கு  அப்புகாரைச்  செய்த  பிகேஆர்  இளைஞர்  சமயப்  பிரிவின்  தலைவர்  வான்  ஜி  உசேன்,  அது  போலீஸ்  விசாரணை  செய்ய  வேண்டிய  முக்கிய …

சியா விமானத்தில் தீ: யாரும் காயமடையவில்லை

இன்று   அதிகாலை  மிலான்  சென்று  கொண்டிருந்த  சிங்கப்பூர்  விமான  நிறுவனத்தின்  விமானம்  ஒன்று  தீப்  பற்றிக்  கொண்டதால்  அது  மீண்டும்  சிங்கப்பூரின்  சாங்கி  விமான  நிலையத்துக்கே  திரும்பியது. விமானத்தில்  இருந்த  பயணிகள் எவரும்  காயமடைவில்லை என  விமான  நிறுவன,  விமான  நிலைய   அதிகாரிகள்  தெரிவித்தனர். அந்த  சியா விமானம் …

நஜிப் இன்று புதிய அமைச்சரவையை அறிவிப்பார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   புதிய  அமைச்சரவையை   இன்று  பிற்பகல்  மணி  3.15க்கு  அறிவிப்பார்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. புத்ரா  ஜெயாவில்,  பிரதமர்  அலுவலகத்தில்   நடைபெறவுள்ள  சிறப்புச்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  கலந்துகொள்ள  ஊடகங்களுக்கு  அழைப்பு  அனுப்பப்பட்டிருக்கிறது. நஜிப்   மூன்றாவது  முறையாக அவரது  அமைச்சரவையில்  மாற்றங்களைச்  செய்கிறார்.

முகைதின் -முக்ரிஸ் புதிய கட்சி தொடங்கலாமா?

முக்ரிஸ்  மகாதிரின்  ரசிகர்  மன்றம்  அதன்  முகநூல்  பக்கத்தில்  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  இணையத்தில்  ஓர்  ஆய்வைத்  தொடங்கியுள்ளது. அம்னோவிலிருந்து  வெளியேற்றப்பட்ட  அந்த  முன்னாள்  கெடா  மந்திரி  புசாரும்  அம்னோவின்  முன்னாள்  துணைத்  தலைவரான  முகைதினும்   இடைநீக்கம்  செய்யப்பட்ட  அம்னோவின்  முன்னாள்  உதவித்   தலைவர்  ஷாபி …

அரசாங்கம் வாடகை மட்டும் கொடுக்கிறது; வேறு பண உதவி செய்வதில்லை…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தலைமையில்  செயல்படும்  பெர்டானா  தலைமைத்துவ  அறக்கட்டளை   அரசாங்கம்   அதற்குப்  பண  உதவி   செய்திருப்பதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறது. அறக்கட்டளையில்  அமைந்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்    அலுவலகத்துக்கான   வாடகைப்  பணத்தை    மட்டும்   அரசாங்கம் கொடுப்பதாக  அது  நேற்றிரவு  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  கூறியது/ அம்னோ …

முகைதினையும் முக்ரிசையும் நீக்கும் முடிவுக்கு பெர்லிஸ் அம்னோ ஆதரவு

கட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  கட்சிநீக்கம்  செய்யும்  அம்னோ  உச்ச  மன்ற  முடிவை  பெர்லிஸ்   அம்னோ  முழுமையாக  ஆதரிக்கிறது. உச்ச  மன்றம்  கடந்த  வியாழக்கிழமை  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டாலையும்  இடைநீக்கம்  செய்தது. பெர்லிஸ்   அம்னோ  தலைவர் …

‘காஃபீர் ஹர்பி’சர்ச்சை கவனத்தைத் திசைதிருப்பும் மலிவான அரசியல் உத்தி

ஹுடுட்டை  எதிர்க்கும்  டிஏபி-யையும்  மற்றவர்களையும்  காஃபீர் ஹர்பி  என்று பகாங்  முப்தி  பிரகடனம்  செய்ததும்  அதைத் தொடர்ந்து   எழுந்துள்ள  சர்ச்சையும்  நாட்டின்  கவனத்தைத்  திசைதிருப்பும்  ஒரு  மலிவான  அரசியல்  தந்திரம்  என  பிகேஆர்  தலைவர்  ஒருவர்  வருணித்துள்ளார். “அம்னோ  பரிதவிக்கிறது,  மலேசிய   மக்களைக்  கவரவும்  அவர்களின்  ஆதரவைப்  பெறவும் …

நஜிப்: இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்தவர்களையும் நிராகரிப்போம்

  இஸ்லாமிய சமயத்தைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மலேசியர்களை கேட்டுக் கொண்டார். "இந்த புண்ணிய பூமியில் இஸ்லாம் மீதான போராட்டத்தில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இஸ்லாத்தை விரும்பாதவர்களை நாம் நிராகரிக்கிறோம். அவர்கள் யார் என்றும் அவர்களுடன்…

“கஃபீர் ஹார்பி” மீது கருத்துரைக்க மசீச தலைவர் மறுத்து விட்டார்

பகாங் மாநில முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் டிஎபி கட்சியை "கஃபீர் ஹார்பி" என்று முத்திரை குத்தி இருப்பது குறித்து கருத்துரைக்க மசீச தலைவர் லியோ தியோங் லாய் மறித்து விட்டார். தமது கருத்தை பின்னொரு சமயத்தில் தெரிவிப்பதாக அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்கள் இரண்டாவது தடவையாக கேட்ட கேள்விக்கு…

அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல், மா கூறுகிறார்

  சரவாக் மாநிலத் தேர்தல் மற்றும் இம்மாதம் நடைபெற்ற இரண்டு இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் பாரிசான் பெரும் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து மலேசியாவின் 14 ஆவது பொதுத் தேர்தல் 2017 ஆண்டில் நடைபெறும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியு கியோங் ஆருடம் கூறினர். இதற்கு காரணம்…

இடைத் தேர்தல் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழி போடுவதை நிறுத்துவீர்: எதிரணியைக்…

சிறையில்   இருக்கும்   முன்னாள்  எதிரணித்  தலைவர்   அன்வார்   இப்ராகிம்,   எதிரணியினர்  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத் தேர்தல்  தோல்விக்கு  ஒருவர்மீது  மற்றொருவர்  பழிபோடுவதை  முதலில்  நிறுத்த  வேண்டும்  என்று  கூறினார். “எதிரணி  தேர்தல்  முடிவை  அடக்கத்துடன்  ஏற்றுக்கொண்டு  அதன்  பலவீனங்களைக்  கவனமாகக்  கண்டறிய  வேண்டும். “சாக்குபோக்கு  சொல்லிக் …

அம்னோ கிளர்ச்சிக்காரர்கள் 3எம் கட்சி அமைக்க ஆலோசனை

கிளர்ச்ச்சிக்கார  அம்னோ  கிளைத்  தலைவர்களைக்  கொண்ட  கெராக்கான்  கெத்துவா  சாவாங்கான்  மலேசியா (ஜிகேசிஎம்),  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  ஆலோசித்து  வருகிறது. ஆண்டுத்  தொடக்கத்தில்  அம்னோவிலிருந்து   வெளியேறிய   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நேற்று  கட்சியிலிருந்து  நீக்கப்பட்ட   முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசின்,  அம்னோ …

முப்தியின் தீவிரவாத கருத்தைக் கேட்டு ‘மிதவாத’ நஜிப் மெளனம் காப்பது…

ஹுடுட்  சட்டம்  கொண்டுவரப்படுவதை  எதிர்க்கும்  டிஏபி-யை   'kafir harbi' என்று  பகாங்  முப்தி   முத்திரை  குத்தியிருப்பது   குறித்து   எதுவும்  கருத்துரைக்காமல்  மெளனம்  சாதிக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  பிகேஆர்  சாடியது. “வன்முறையைத்   தூண்டிவிடக்  கூடியது  பகாங்  முப்தியின்  அடாவடிப்  பேச்சு.  இது  மோசமான,  கொடூரமான  விளைவுகளை  ஏற்படுத்தலாம்”,…

கட்சிநீக்கம் நியாயமானதே- ஜோகூர் எம்பி

கட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  விலக்கும்  கட்சி   உச்சமன்றத்தின்  முடிவை  ஏற்பதாக  ஜோகூர்  அம்னோ  அறிவித்துள்ளது. அம்முடிவு  நியாயமானது  என  ஜோகூர்  அம்னோ  நம்புவதாக  ஜோகூர் மந்திரி  புசார்  காலிட்   நோர்டின்  தெரிவித்தார்  என  பெர்னாமா  கூறியது.…

பிரதமர் பதவி துறக்கிறார்

  ஆம். பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கெமருன் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய யூனியனிலிருந்து அந்த அமைப்பின் உறுப்பினர் நாடான பிரிட்டன் விலக வேண்டும் என்பதற்கு பிரிட்டீஷ் மக்கள் 51.7/48.3 விழுக்காடு ஆதரவை பொதுவாக்களிப்பின் வழி தெரிவித்துள்ளனர். பிரிட்டீஷ் மக்களின் இத்தீர்ப்பை தொடர்ந்து, தமது நாட்டின்…

துங்கு அசீஸ்: மகாதிருக்குக் கல்-இதயம், சீனர்கள் வெற்றி பெறுவார்களே என்ற…

மலாய்க்காரர்கள்  தங்களுக்கு  அடித்துக்கொள்ளும்  வேளையில்  சீனர்கள்  வெற்றி  பெறுவார்களே  என்ற  கவலை  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  இல்லை  என்று  கடிந்து  கொண்டிருக்கிறார்  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)  ஆலோசனை  வாரியத்  தலைவர்  துங்கு  அப்துல்  அசீஸ்  துங்கு  இப்ராகிம். ஏனென்றால்,  அவரது  இதயம்  “கல்லாகி  விட்டது”.  சொந்த  நோக்கத்தை …

மூசா அமான் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிடு: யுபிஎஸ் வங்கிக்கு சிவீஸ்…

சுவீஸ்  உச்ச  நீதிமன்றம்,  யுபிஎஸ்  வங்கி  அதற்கும்  சாபா  முதலமைச்சர்  மூசா  அமானுக்குள்ள  வர்த்தகத்  தொடர்புகள்  சம்பந்தப்பட்ட   ஆவணங்களை  அந்நாட்டுச்  சட்டத்துறைத்  தலைவரிடம்  கொடுக்க  வேண்டும்  என  உத்தரவிட்டுள்ளது. அந்த  ஆவணங்களைக்  குற்றவியல்  வழக்குத்  தொடுப்பதற்கும்  பயன்படுத்திக்  கொள்ளலாம்  என்றும்  அது  கூறியது. இந்த  முக்கியமான  தீர்ப்பை  வரவேற்ற …

‘அஸ்மின் முகாம்’, ‘ரபிசி முகாம்’ என்பதெல்லாம் பிகேஆரில் இல்லை

பிகேஆர்  துணைத்  தலைவர்   அஸ்மின்  அலி,  கட்சியில்  தம்  ஆதரவாளர்கள்  ரபிசியின்  ஆதரவாளர்கள்  என  இரண்டு   பிரிவினர்  இருப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். “அஸ்மின்  முகாம்”,  “ரபிசி  முகாம்”  என்பதெல்லாம்  பிகேஆரில்  கிடையாது  என்றாரவர். “பிகேஆர்  தனித்துவம்  வாய்ந்தது.  அதன்  உறுப்பினர்களும்  தலைவர்களும்  பல  பின்னணிகளைக்  கொண்டவர்கள். “எங்கள்  கட்சியில் …

டிஏபி பிரதிநிதி காரின்மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது

டிஏபி  டமன்சாரா  சட்டமன்ற  உறுப்பினர்   இயோ  பீ  இன்னின்  கார்மீது  சாயம்  வீசியடிக்கப்பட்டிருந்தது.  சுங்கை  புசார்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்குச்  சென்று விட்டு  திரும்பிய  அன்று   அது  நிகழ்ந்ததாக  அவர்  சொன்னார். இப்படி  நடப்பது   இரண்டாவது  முறை  என்று  குறிப்பிட்ட  அவர்,  கடந்த  மூன்று  ஆண்டுகளாக  தமக்குத்  தொந்திரவு …

மைவாட்ச் தலைவர் பலரை மிரட்டிப் பணம் பறித்தாராம்

மலேசிய  குற்றக் கண்காணிப்பு  அமைப்பு(மைவாட்ச்)  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்  தங்களிடமும்  மிரட்டிப்  பணம்  பறித்திருக்கிறார்  என்று  மேலும்  மூவர்  முன்வந்து  புகார்  செய்திருக்கிறார்கள்  என   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்   காலிட்  அபு  பக்கார்  கூறினார். இன்று   அம்பாங்கில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  பேசிய  அவர்,  சஞ்சீவன்  கைது  செய்யப்பட்ட  செய்தி  வெளியானதும் …

உலக இந்துக்களை அவமதித்த யுடிஎம்மிற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 23, 2016.   அண்மையில்,  யுடிஎம்  எனப்படும் மலேசிய தொழிநுட்ப பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்கு போதிக்கும் இஸ்லாமிய நாகரீகம் மற்றும் ஆசியா நாகரீகம் என்கின்ற  பாடத்திட்டங்களின் உள்ளடக்கமாக  இஸ்லாம் மதம் இந்தியவிற்கு வந்த பிறகு அங்குள்ள இந்துக்களுக்கு சுத்தத்தை கற்றுக்கொடுத்ததாகவும் ,அதற்கு…

புக்கிட் அமானில் அமைதி இருக்காது: ஐஎஸ் எச்சரிக்கை

“புக்கிட்  அமானில்  உள்ளவர்களே,  உங்களுக்கு  அமைதி  என்பதே  கிடையாது. திரும்பி  வந்து........உங்களைக்  கொல்லப்  போகிறோம். தாயக  நண்பர்கள்  உங்களை  வேட்டை  ஆடுவார்கள்”. ஆகக்  கடைசியாக  செவ்வாய்க்கிழமை  வெளியான  அதன்  பிரச்சாரக்  காணொளியில்  இஸ்லாமிய  பயங்கரவாத  அமைப்பான  ஐஎஸ்  இந்த  எச்சரிக்கையை விடுத்துள்ளது.  காணொளியில்  காணப்படும்  ஒரு  மலேசியர்  இந்த …

சிலாங்கூர் அரசு திடமாகவே உள்ளது: எம்பி திட்டவட்டம்

சிலாங்கூர்  அரசிலிருந்து  பாஸ்  வெளியேறினால்  அது  கவிழ்ந்து  விடும்  என்று  கூறப்படும்  வேளையில்  அப்படி  எதுவும்  நடக்காது  என்று  அடித்துக்  கூறுகிறார்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலி. சிலாங்கூர்  பாஸ் தலைவர்  இஸ்கண்டர்  அப்துல்  சமட்,  சிலாங்கூர்  அரசுக்கு  அந்த  இஸ்லாமியக்  கட்சியின்  ஆதரவு  தொடரும்  என …