ஹங்ரி கோஸ்ட் திருவிழா என்று அழைக்கப்படும் தியோங் குவான் போ தோர் திருவிழா, பினாங்கு மாநில பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசியாவிலேயே இந்தத் திருவிழாவிற்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. ஜூன் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அங்கீகாரமானது, பினாங்கு சமூகங்களின்…
போலீசார் மகாதீரிடம் 37 நிமிடங்களில் 30 கேள்விகளைக் கேட்டனர்
முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டிடம் போலீசார் மொத்தம் 37 கேள்விகளை 30 நிமிடங்களில் கேட்டனர், ஆனால் அவற்றில் பெரும்பாலனவை குடிமக்கள் பிரகடனம் பற்றியதாகும் என்று அவரின் வழக்குரைஞர் அஹமட் பாஸ்லான் செ காசிம் கூறினார். முன்னதாக, பேரரசரும் இதர மாலாய் ஆட்சியாளர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று…
டிஏபி: பிஎன்-ஆதரவு வாக்குகள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருத்தல் வேண்டும்
சுங்கை புசாரில் மும்முனைப் போட்டி என்றால் பிஎன்னுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பதை ஒப்பிய சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா, பிஎன்னுக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார். அது, கடந்த காலத்தில் பிஎன்னின் கோட்டைகளாக திகழ்ந்த புறநகர் பகுதிகளில் அதற்கு ஆதரவு சரிந்து …
‘பலூன்களை வீசி எறிந்தது நாட்டை அவமதிக்கும் செயல்’
பிரதமரும் அவரின் துணைவியாரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ஒரு பெண் ஐந்தாவது மாடியிலிருந்து மஞ்சள்நிற பலூன்களைக் கீழே வீசி எறிந்தது மரியாதைக் குறைவான செயல் என கோலாலும்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று கூறப்பட்டது. அந்த மரியாதைக் குறைவான செயலைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுள்ள பில்கிஸ் ஹிஜ்ஜாஸின் வழக்கில் இன்று எட்டாவது …
பாஸ் உறுப்பினர் எண்ணிகையில் 200,000 குறைந்தது
கடந்த ஓராண்டில் பாஸ் கட்சியிலிருந்து 200,000 பேர் விலகியிருப்பதாக அதன் தலைமைச் செயலாலர் தகியுடின் ஹசான் கூறினார். இன்று கோத்தா பாருவில் பாஸ் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய தகியுடின், கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஒரு மில்லியனைத் தாண்டியதாக அறிவித்தார். அதே வேளை 200,000 பேர் கட்சியிலிருந்து …
கோலா கங்சார் இடைத் தேர்தலில் இன்னுமொரு சுயேச்சை வேட்பாளர்?
அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சுங்கை ரபாட் சட்டமன்ற உறுப்பினர் ஹமிடா ஒஸ்மான் எதிர்வரும் கோலா கங்சார் இடைத் தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்பது இன்னும் விடைதெரியாத கேள்வியாகவே இருக்கிறது. ஆனாலும், நடப்பு அரசியல் சூழலில் எதுவும் சாத்தியமே என்று அம்னோ கோப்பெங் தொகுதி முன்னாள் தலைவருமான ஹமிடா ஒஸ்மான் …
கோலகங்சார் இடைத்தேர்தலில் அமனா வேட்பாளர் ஓர் அணு விஞ்ஞானி
எதிர்வரும் கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அமனா கட்சி அணு விஞ்ஞானி அஹமட் தெர்மிஸி ரமலியை வேட்பாளராக இன்றிரவு அறிவித்தது.. இத்தொகுதி அம்னோவின் தொகுதியாக இருந்து வந்துள்ளது. இத்தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. நாடு 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில் தாம்…
‘வீட்டுக் காவலில் ஆட்சியாளர்கள்’ என்று கூறிய மகாதிரிடம் நாளை போலீஸ்…
போலீசார், பேரரசரும் மற்ற மலாய் ஆட்சியாளர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் நாளை வாக்குமூலம் பதிவு செய்வார்கள். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பிற்பகல் மணி 3-க்கு கோலாலும்பூரில் உள்ள யயாசான் அல்புகாரிக்குச் செல்வார்கள் எனத் தகவலறிந்த …
மகாதிர்: மக்கள் அன்வாரை அல்லது டிஏபி-யைத் தேர்ந்தெடுக்கலாம்; அது அவர்களின்…
மலேசிய அரசியல் வானில் எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அப்படி ஒன்று அண்மையில் நிகழ்ந்தது. டாக்டர் மகாதிர் முகம்மட்டின் நேர்காணல் ஒன்று டிஏபி செய்தித்தாளான ராக்கெட்கினி-இல் வெளிவந்திருந்தது. வழக்கம்போல் மகாதிர் அதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறை கூறியிருந்தார். பிரதமர் ஊழல் செய்திருப்பதாக சொன்னார்.அவரைப் பதவியிலிருந்து நீக்க …
மாநில பிரச்னை குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்யாதீர்: திரெங்கானு எம்பி…
திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் ரசிப் அப்ட் ரஹ்மான் பொறுப்பற்ற தரப்பினர் பெர்னாமாவிலும் வாட்ஸ்எப்பிலும் மாநில அரசியல் குறித்து பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அது பொதுமக்களிடம் தப்பான எண்ணத்தைத் தோற்றுவித்து திரெங்கானுவின் நிலைத்தன்மையையும் கெடுத்து விடும் என்றாரவர். “இவ்விவகாரம்மீது போலீசும் எம்சிஎம்சி (மலேசிய …
கருத்துக்கணிப்பு: சுங்கை புசாரில் பிஎன்னுக்கே வெற்றி வாய்ப்பு
ஜூன் 18-இல் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சுங்கை புசாரில், வாக்காளர்கள் பிஎன்னை அதிகம் ஆதரிப்பதாக தெரிகிறது. இன்று அங்கு இடைத் தேர்தல் நடந்தால் 44.75 விழுக்காட்டு வாக்காளர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என்பதை யுசிஎஸ்ஐ அண்மையில் அங்கு நடத்திய …
கோலாலும்பூரில் சிறார்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டேன்: பிரிட்டிஷ் குடிமகன் ஒப்புதல்
பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹக்கல், 30, கோலாலும்பூரில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களிடம் பாலியல் வல்லுறுவு புரிந்ததை ஒப்புக் கொண்டார். 2006-க்கும் 2014-க்குமிடையில் சுமார் 200 சிறார்களிடம் அவர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பிபிசி ஒலிபரப்புக் கழகம் கூறியது. ஹக்கல்மீதான வழக்கு பிரிட்டனில், இங்கிலாந்து வேல்ஸின் …
வீடற்றுச் சுற்றித்திரிவோரைப் பிடிப்பது எங்கள் வேலை அல்ல- டிபிகேஎல்
மே 22-இல் கோலாலும்பூரில் வீடற்றுச் சுற்றித் திரிந்தோரைப் பிடித்து அவர்களைத் தொலைதூர இடங்களில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுவதை கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்தது. “அது தப்பான ஒரு புரிதல். அதைச் செய்தது இன்னொரு அரசு அமைப்பு. டிபிகேஎல் அல்ல. “டிபிகேஎல் லாரிகளையும் சில உதவியாளர்களையும் மட்டுமே கொடுத்துதவியது”, என கூட்டரசுப் …
ஹூடுட் விவகாரத்தில் பங்காளிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைத்த பிரதமரை நீக்க…
மலேசியப் பிரதமர் நஜிப் மிக ஆபத்தானவர். அவர் பணம், பதவிக்காகச் சொந்தக் கட்சிக்காரர்கள், பங்காளிக் கட்சித் தலைவர்கள் என்ற பாகுபாடின்றி எவருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் இழைப்பவர் என்பதை ஹூடுட் விவகாரத்தின் வழி மீண்டும் நிரூபித்து விட்டார். அவரின் தலைமைத்துவம் நாட்டு மக்களுக்கு எப்படி நன்மைபயக்கும் என்பதை…
தேர்தல் குற்றங்கள்மீதான புகார்களை எம்ஏசிசி, இசி இரண்டுமே ஏற்க மறுத்தன
தேர்தல் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கா அல்லது தேர்தல் ஆணையத்(இசி)துக்கா? தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே இக்கேள்வியை எழுப்பியுள்ளது. பெர்சே 13வது பொதுத் தேர்தலின்போதும் அண்மைய சரவாக் மாநிலத் தேர்தலிலும் நிகழ்ந்த தேர்தல் குற்றங்களை இரண்டு ஆணையங்களிடமும் புகார் செய்ய முயன்றது. ஆனால், இரண்டுமே புகார்களை …
மகாதிர்: ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள்
ஆட்சியாளர்கள் தலையிட்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அதிகார அத்துமீறல்களை” நிறுத்துவார்கள் என டாக்டர் மகாதிர் முகம்மட் நம்புகிறார். சட்டத்தில் அதற்கு இடமில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். “ஆனாலும், நஜிப்பின் அதிகார அத்துமீறல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ஆட்சியாளர்களுக்கு வழிவகைகள் உண்டு. “மக்கள் ஆட்சியாளர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்று …
ஹுடுட் சர்ச்சைக்கு ‘நல்ல முடிவு’: ரஹ்மான் டஹ்லான் நம்பிக்கை
ஹுடுட் சட்டவரைவுமீதான சர்ச்சை ஓய்ந்ததும் ஒரு “நல்ல முடிவு” கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார் பிஎன் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டஹ்லான். அச்சட்டவரைவு குறித்து பிஎன் பங்காளிக் கட்சிகள் கவலை கொண்டிருப்பதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் ஆனால், சட்டவரைவு தாக்கல் செய்யப்படுவது ஒரு தொடக்கம் மட்டுமே …
எதை எங்களுக்கு இரவல் கொடுத்தீர்கள்? பாஸ் இளைஞர் தலைவரைச் சாடுகிறது…
பாஸ் கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி-க்கு சில இடங்களை இரவல் கொடுத்ததாகவும் அந்த இடங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கட்சியின் இளைஞர் தலைவர் நிக் முகம்மட் அப்டு நிக் அப்துல் அசீஸ் கோரிக்கை விடுக்க அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று டிஏபி தலைவர் ஒருவர் மறுக்கிறார். அப்படிப்பட்ட …
அந்த ஓஎஸ்ஏ கடிதம் உண்மையானது என்றால் போலீஸ் பேங்க் நெகரா…
வால் ஸ்திரிட் ஜர்னல் வெளியிட்ட ஓஎஸ்ஏ கடிதம் உண்மையானதுதான் என்றால் அது எப்படி கசிந்தது என்பதை போலீஸ் விசாரிக்கும். இதைத் தெரிவித்த தேசிய போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார், முதலில் அது அதிகாரத்துவ இரகசியக் காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ் வரும் கடிதம்தானா என்பதை முடிவு செய்தாக வேண்டும் என்றார்.…
1எம்டிபி குறித்து, ஹூடுட் மசோதா குறித்தல்ல, பதவி விலகுங்கள், பிஎன்…
பாஸ் கட்சியின் ஹூடுட் மசோதா சம்பந்தமாக மூன்று பாரிசான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள பதவி துறக்கும் மிரட்டலை பாஸ் கட்சியின் தலைவர் ஒருவர் குறைகூறியுள்ளார். அந்த மூன்று மசீச, மஇகா மற்றும் கெராக்கான் தலைவர்களும் 1எம்டிபி சம்பவம் குறித்து அவர்கள் தங்களுடைய அமைச்சரவை பதவிகளைத் துறக்க…
பெர்மாத்தா நிகழ்வில் பிரதமரின் மாற்றான் பிள்ளை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் பிள்ளை ரிஸா அசீஸ்- அவருடைய படநிறுவனமான ரெட் கிரைனைட் பிக்சர்ஸ்தான் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட த வுல்ஃவ் அஃப் வால் ஸ்திரிட் படத்தைத் தயாரித்திருந்தது- இன்று கோலாலும்பூரில் புத்ரா உலக வாணிக மையத்துக்கு வந்திருந்தார். பெர்மாத்தா அனைத்துலக மாநாட்டுக்காக அவர் வந்திருந்தார். …
1எம்டிபி அறிக்கை இரகசியமானது என்று பிஏசிக்கு எச்சரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது
1எம்டிபி தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கம் வெளியில் தெரியக்கூடாது என்று தேசிய கணக்காய்வுத் துறை நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு (பிஏசி) உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது என அத்துறையின் துணைத் தலைவர் நோர் சல்வானி முகம்மட் கூறினார். அந்த அறிக்கையை பிஏசி-இடம் ஒப்படைத்தபோதே தலைமைக் கணக்காய்வாளர் அம்ரின் புவாங் அந்தக் கடும் …
குடிநுழைவுத் துறை: கீழறுப்பில் ஈடுபட்ட 15பேர் பணிநீக்கம், 14பேர் இடைநீக்கம்
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மலேசியக் குடிநுழைவு முறையில் (MyIMMs-சில்) மென்பொருள் திருடியிருக்கிறார்கள், கீழறுப்புச் செய்திருக்கிறார்கள் என அத்துறை தலைமை இயக்குனர் சகிப் குஸ்மி கூறினார். அதன்மீது நடக்கும் விசாரணையில் இதுவரை 15பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் 14பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குடிநுழைவுத் துறை அதிகாரிகளில் சிலருக்கு …
இசி: வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் நேரில் வர வேண்டும்…
வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் வேட்பாளர் நேரில் வராவிட்டால் வேட்புமனு செல்லாமல் போகும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று தேர்தல் ஆணையம் (இசி) விளக்கம் அளித்தது. வேட்புமனுவை வேட்பாளர் அல்லது வேட்பாளரை முன்மொழிபவர் அல்லது வழிமொழிபவர்- இவர்களில் யாராவது ஒருவர் தாக்கல் செய்ய தேர்தல் விதிமுறை இடமளிப்பதாக இசி …



