அருள்: ரபிஸியை மதிக்கிறேன் ஆனால், மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  கந்தசாமி, டிஏபி-இன்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவுக்குப்  பதில்  பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸியுடன்  விவாதத்தில்  கலந்துகொள்ள  தம்மால்  இயலாது  என்று  கூறியுள்ளார். மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின் மூலியாவின்  சொல்லுக்கு மதிப்பளித்து  அருள்  அவ்வாறு  முடிவு  செய்திருக்கிறார். 1எம்டிபி …

அருள் கந்தாவுடன் விவாதிக்க புவாவுக்குப் பதில் ரபிஸி

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தாவுடனான  விவாதத்தில் பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர் டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி  பங்கேற்பார். அவரை பக்காத்தான் ஹராப்பான்  தேர்வு  செய்துள்ளதாக  டிஏபி  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக்  தெரிவித்தார். “அருள்  கந்தாவுடன்  புவா  விவாதமிடக்  கூடாது  என்ற  மக்களவைத் …

அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டம்: ஆதாரம் உண்டு

அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  திட்டம்  தொடர்பில்  புத்ரா  ஜெயாவுக்கு  ஆதாரங்கள்  கிடைத்திருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். ஆதாரங்கள்  கிடைத்திருந்தாலும்  அவற்றை  வெளியிடுவதற்கில்லை  என்றாரவர். “பாதுகாப்புக்  காரணங்களால்  ஆதாரங்களை  வெளியிட  முடியாது. போலீசார்  மேலும்  தகவல்களைத்  திரட்டி  வருகிறார்கள்”, என்று  சொன்ன  ஜாஹிட்  எந்தத்  தரப்பையும்  பெயர் …

காணாமல்போன ரிம2.6 பில்லியன் பற்றி இணையத்தில் உலா வரும் பாடல்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்பட்ட  ரிம2.6 பில்லியன் விவகாரத்துக்குத்  தீர்வு  காணப்படாதது  குறித்து  இணையத்தில்  பலர்  பல  மாதிரி  தங்கள்  ஆத்திரத்தை  வெளியிட்டிருக்கிறார்கள். பாடகர்  அமிருடின்  ஹிஸாடின்  பாடல்வழியே  தன்  மனக்குமுறலை  வெளிப்படுத்தி  இருக்கிறார். ரிம2.6 பில்லியனை,  தன் உலகை  இருளாக்கிய ‘காணாமல்போன  நட்சத்திரங்கள்’…

ஆர்டிஎம்-மில் 1எம்டிபி விவாதம் இரத்து

வெள்ளிக்கிழமை  ஆர்டிஎம்-மில்  இடம்பெறவிருந்த  1எம்டிபி  விவாதத்தின் நேரடி  ஒளிபரப்பு  இரத்துச்  செய்யப்பட்டிருப்பதாக  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக  இன்று  கூறினார். பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  விவாதத்தில் பங்கேற்காததே  இதற்குக்  காரணமாகும். “விவாதம்  நேரடியாக  ஒளிபரப்பப்பட  மாட்டாது. “புவா  1எம்டிபி தலைமைச்  செயல் …

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 10-இல், பத்து மலையில்

மஇகா  அதன்  தீபாவளி  திறந்த  இல்ல  உபசரிப்பை  நவம்பர்  10-இல்,  பத்து  மலையில்  நடத்தும்  எனக்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  ஏ.சக்திவேல்  தெரிவித்தார். அந்நிகழ்வு  பத்து  மலை  கோயில் வளாகத்தில்  காலை  மணி  9.30-இலிருந்து  பிற்பகல் 1மணிவரை  நடைபெறும். அனைவரும்  வந்து  கலந்துகொள்ள  வேண்டும்  என  அவர்  கேட்டுக்கொண்டார்.…

மாணவர் காணொளி: பெற்றோர் பிள்ளைகளுக்குக் கிழக்கத்திய கலாச்சாரத்தைக் கற்றுத்தர வேண்டும்

பெற்றோர்  பிள்ளைகளுக்கு  நல்ல  பழக்கவழக்கங்களைக்  கற்றுத்தர  வேண்டும்  அப்போதுதான்  அவர்கள்  கீழைநாட்டு  விழுமியங்களுக்கு  எதிரானவற்றைச் செய்ய  மாட்டார்கள்  என  பெற்றோர்- ஆசிரியர்  சங்கக்  கூட்டுமன்றத்  தலைவர்  முகம்மட்  அலி  ஹசான்  கூறினார். காணொளி  ஒன்றில்  மாணவி  ஒருவரைக்  கட்டிப்பிடித்து  கன்னத்தில்  முத்தமிடும் மாணவனின்  தாயார்  தெரிவித்த  கருத்துக்கு  எதிர்வினை …

1எம்டிபி விவாதம்: விட்டுகொடுக்க அவைத் தலைவர் மறுப்பு

டிஏபி  எம்பி  டோனி  புவா  1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  கந்தசாமியுடன்  விவாதமிட  விரும்பினால்  அவர்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  என்ற  விதியை  விலக்க  வேண்டும்  என்று  லிம் குவான்  எங்  விடுத்த  வேண்டுகோளை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  ஏற்க  மறுத்தார். 1எம்டிபி  மீதான …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் தீரவில்லை; நமக்குச் சம்பள உயர்வா? பாஸ்…

கிளந்தானில்  கடந்த  ஆண்டு  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர் இன்னமும்  துன்பப்பட்டுக்  கொண்டிருக்கும்போது  சட்டமன்ற  உறுப்பினர்கள்  ஆட்சிக்குழுவினர்  ஆகியோரின்  சம்பளம்  உயர்த்தப்பட்டிருப்பதை  சாலோர்  சட்டமன்ற  உறுப்பினர்  ஹுசாம்  மூசா  கண்டித்தார். மாநிலச்  சட்டமன்றம்  திங்கள்கிழமை   சட்டமன்ற  உறுப்பினர்களின்  சம்பளத்தை  ரிம4,600-இலிருந்து  ரிம8,000 ஆக  உயர்த்து  சட்டதிருத்தம்  ஒன்றை  ஏற்றுக்கொண்டது. அதன்படி  மந்திரி …

ஐஜிபி: போலீஸ் காவலில் நிகழ்ந்த இறப்புமீது விசாரணை நடைபெறுகிறது

போலீஸ்  காவலில்  இருந்த  சைட்  முகம்மட்  அஸ்லானின்  இறப்புமீதான  விசாரணை  முடிவடையும்  தருவாயில்  உள்ளது. விசாரணை  அறிக்கை  மேல்  நடவடிக்கைக்காக  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்துக்கு  அனுப்பப்படும்  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “அமலாக்க  நிறுவன நேர்மைகாப்பு  ஆணையத்தின்  அறிக்கை  இறந்துபோன சைட்  முகம்மட் …

முன்னாள் ஏஜி சோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார்

பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு  நடவடிக்கை)ச் சட்டம் (சோஸ்மா)  தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக்  கவலை தெரிவிக்கப்பட்டு  வரும்  வேளையில்  அச்சட்டம்   தேவையானதுதான்  என்று   தற்காத்துப்  பேசிய  முன்னாள்  சட்டத்துறை  தலைவர்  அப்துல் கனி  பட்டேல்  அது  தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத்  தடுக்க  அதில்  பல காப்புகள்  உண்டு  என்றும்  கூறினார். சோஸ்மா  வழங்கும்  சிறப்பு …

புவா 1எம்டிபி பற்றிப் பேசக் கூடாது: பிஏசி தலைவர் உத்தரவு

பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  1எம்டிபி  பற்றிப்  பொது  இடங்களில்  பேசுவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  எனப்  பொதுக்  கணக்குக்குழுத்  தலைவர்  ஹசான்  அரிப்பின்  கூறினார். டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  அல்லது  1எம்டிபி மீதான  விசாரணையில்  கலந்துகொள்வதைத்  தவிர்க்க …

மாணவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிடும் காணொளியை அமைச்சு ஆராய்கிறது

நேற்று சமூக வலைதளங்களில்  வேகமாக  பரவிய  இடைநிலப்பள்ளிச்  சீருடை  அணிந்த மாணவனும்  மாணவியும்  கட்டிப்பிடித்து முத்தமிடுவதைக்  காண்பிக்கும் காணொளியின்  பின்னணியைக்   கல்வியமைச்சு  ஆராய்ந்து வருகிறது. இதனைத்  தெரிவித்த  கல்வி  துணையமைச்சர் பி.கமலநாதன்  மாணவர்களின்  செய்கை  மிகுந்த  ஏமாற்றம்  அளிப்பதாகக்  கூறினார். கமலநாதன்  இன்னும்  அந்த  15-நிமிட  காணொளீயைப்  பார்க்கவில்லை.…

புவா: 1எம்டிபி விவாதம் எந்த நிலை ஆணையை மீறுகிறது, சொல்வீர்

1எம்டிபி  விவாதம்  நடந்தால்  நாடாளுமன்ற  நிலை  ஆணை  மீறப்படும்  என்று  கூறப்படுகிறதே,  மீறப்படும்  நிலை  ஆணை  எது  என்ற  கேள்வியை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாமுன்  வைத்துள்ளார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக …

1எம்டிபி விவாதம்: விதிகள் புறக்கணிக்கப்பட்டால் பண்டிகார் பதவி விலகுவார்

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,   1எம்டிபி  விவாதத்துக்குத்  தாம்  விதித்த  நிபந்தனைகள்  புறக்கணிக்கப்பட்டால்  பதவி  விலகப்  போவதாக  எச்சரித்துள்ளார். டிஏபி  எம்பி  டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  அல்லது  1எம்டிபி மீதான  விசாரணையில்  கலந்துகொள்வதைத்  தவிர்க்க  வேண்டும்  என்பது  மக்களவைத் …

யார் அந்த அம்னோ எழுவர்? தெங்கு அட்னான் மெளனம்

அம்னோவில்  ஒழுங்கு  நடவடிக்கையை  எதிர்நோக்கும்  எழுவர்  பற்றி  வினவியதற்கு  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்   தெங்கு  மன்சூர் பதில்  அளிக்காமல்  மெளனம்  சாதித்தார். இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  அவரிடம்  அக்கேள்வியை  முன்வைத்தபோது  பதிலளிக்காமல்  நடந்து  கொண்டே  இருந்தார். ஆண்டு  இறுதிக்குள்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின் …

அருள்-புவா விவாதத்தை வெள்ளிக்கிழமை வைத்துக்கொள்ளலாம்- ஆர்டிஎம் பரிந்துரை

ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும்   பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி புவாவுக்கும்  1எம்டிபி  தலைவர்  அருள் கந்தா  கந்தசாமிக்குமிடையிலான  தொலைக்காட்சி  விவாதம்  வரும்  வெள்ளிக்கிழமை  நடைபெறலாம். அவ்விவாதத்தை  வெள்ளிக்கிழமை  இரவு  9மணியிலிருந்து  10வரை  வைத்துக்கொள்ளலாம்  என  தேசிய  ஒலி-ஒளிபரப்பு  நிலையமான  ஆர்டிஎம்  பரிந்துரைத்திருப்பதாக  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே சைட் …

பெர்சே4: ‘தெரியப்படுத்தவில்லை’ குற்றச்சாட்டுக்கு எதிராக மரியா சின் விசாரணை கோரினார்

பெர்சே  தலைவர்  மரியா சின்  அப்துல்லாமீது  ஆகஸ்ட் 29-30  பேரணி  குறித்து  10 நாள்களுக்கு  முன்னதாகவே  போலீசுக்குத் தெரியப்படுத்தவில்லை  என்று கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  அமைதிப்  பேரணிச்  சட்டம்  பிரிவு  9-இன்கீழ்  இன்று  குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை  எதிர்த்து  அவர்  விசாரணை  கோரினார். மரியா  சின்  அச்சட்டத்தின்கீழ்க்  குற்றம் …

மகாதிர்: நாசவேலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட வேண்டியவர் நஜிப்தான்

  மலேசிய வங்கி மற்றும் நிதி அமைவுமுறைகளுக்கு எதிராக நாசவேலையை மேற்கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட வேண்டியவர் நஜிப்தான் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார். அரசாங்கத்திடமிருந்து ஒரு சதுர அடி ரிம60.00 க்கு வாங்கிய நிலத்தின் விலைக்கு மேலாக 5,000 விழுக்காடு கூட்டி விற்று கடனை திருப்பிக்…

பிஏசி பதவி உறுதிமொழி எடுப்பது தேவையற்றது

பொதுக் கணக்குக்ழு(பிஏசி)  உறுப்பினர்கள் இரகசியம்  காக்க  உறுதிமொழி  எடுக்க  வேண்டியதில்லை. இதனைத்  தெரிவித்த  பிஏசி  தலைவர்  ஹசான்  அரிபின்,  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  என்ற  முறையில்  அவர்கள்  ஏற்கனவே  உறுதிமொழி  எடுத்துக்  கொண்டிருக்கிறார்கள்  என்றார். “பிஏசி  உறுப்பினர்கள்  உறுதிமொழி  எடுக்க  வேண்டிய  அவசியமில்லை  என்பதைத்தான்  முதன்முதலாக  வலியுறுத்தினேன்”. நான்கு  மாதங்களுக்குப்பின் …

நூர் ஜஸ்லான்: மற்றவர்களோடு ஓப்பிடும்போது அன்வாருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது

நாட்டில்  உள்ள  மற்ற  50,000  சிறைக் கைதிகளுக்குக்  கிடைக்காத  சிறப்புச்  சலுகையை   அரசாங்கம்,  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு மனிதாபிமான  அடிப்படையில் வழங்கி  வருவதாக  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  கூறினார். அன்வாரின்  மகள்  நுருல்  இஸ்ஸா  அன்வார்  கேள்விகளால்  அவரை வறுத்தெடுத்தபோது  நூர்  ஜஸ்லான் …

அன்வாரை விடுவிக்க ஐநா பணிக்குழு வலியுறுத்து

ஐநா  குழுவொன்று  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமைச்  சிறையில்  தடுத்து  வைத்திருப்பது  தேவையற்றது  என்றும்  அவரை  உடனடியாக  விடுவிக்க  வேண்டும்  என்றும்   வலியுறுத்தியது. அன்வாரின்  வழக்கை  ஆராயும்போது  அவருக்கு  ஏற்பட்ட  துன்பங்கள்  அநியாயமானவை   என்று  தன்னிச்சை  தடுப்புக்காவல்  மீதான  அக்குழு  கூறிற்று. “இதற்குத்  தீர்வு  அவரை  உடனடியாக …

கேடிஎம் கம்யுடர் கட்டணம் உயர்கிறது

கெரேதாஅபி  தானா மலாயு(கேடிஎம்),  கிள்ளான் பள்ளத்தாக்கில்  கேடிஎம் கம்யுட்டர்  சேவைக்கான  கட்டணம்  டிசம்பர் 2-இலிருந்து  கூடும்  என  அறிவித்துள்ளது. “ஆண்டுதோறும்  நடைமுறைச் செலவும்  பராமரிப்புச்  செலவும்  அதகரித்து  வருவதால்  புதிய  கட்டண  அமைப்பு  அதை  ஈடு  செய்யும்”, என  கேடிஎம்  தலைவர்  சர்பினி  திஜான்  கூறினார். ரிங்கிட்  மதிப்பு …