பெர்சே4 தடைக்கு எதிராக வழக்கு: ஜனவரியில் விசாரணை

பெர்சே 4 என்னும்  சொற்களைத்  தடை  செய்யும் உள்துறை  அமைச்சின்  உத்தரவைத்  தள்ளுபடி  செய்ய  பெர்சே  செய்து கொண்டிருக்கும்  மனு  ஜனவரி 7-இல்  விசாரணைக்கு  வருகிறது. நீதிபதி  அஸிமா  ஒமார்  அதை  விசாரிப்பார்  என  வழக்குரைஞர்  நியு  சின்  இயு  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “பெர்சே-இன் உறுதிமொழி  ஆவணத்துக்கு  நவம்பர் …

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: எண்மர் கைது , ஒருவர் அரசு அதிகாரி

பயங்கரவாதக்   கும்பல்களுடன்  தொடர்பு  வைத்திருப்பவர்கள்  என்ற  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டர்களில்  அரசு  அதிகாரியும்  ஒருவராவார். அக்டோபர்  30-இல்,  சிலாங்கூர்,  பேராக்,  ஜோகூர்  ஆகிய  மாநிலங்களில்  ஒரே  நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு  நடவடிக்கையில்  எட்டுப்  பேர்  கைது  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார். அவர்களில் …

குலா: தமிழ்ப்பள்ளிகளை பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்!

சிப்பாங் மாவட்டத்திலுள்ள டிங்கில்  தமிழ்ப் பள்ளிக்கு பிரதமர்  நஜிப் ரசாக் திடீர் வருகை அளித்தது எல்லோருடைய முகத்திலும்  ஒரு  அதிர்ச்சி கலந்த  ஆச்சரியத்தை  உண்டு  பண்ணியுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.   அதுவும்  இப்பள்ளி  அரசின் முழுமானியம் பெற்ற பள்ளி. அங்குள்ள  நிலவரம் குறித்து நேரடியாகக் கண்ட…

டிஏபி: ஹாடியின் பட்ஜெட் நிலைப்பாடு பாஸுக்கு பிஎன்னைத்தான் பிடிக்கிறது என்பதைக்…

பாஸ் 2016 பட்ஜெட்டுக்கு  எதிராக  வாக்களிக்க மறுப்பது  அது  எதிரணிக்  கட்சிகளுடன்  ஒன்றுபட்டிருப்பதாகக்  கூறுவது  பொய்  என்பதை  மெய்ப்பிக்கிறது. “அவர்கள்  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பை  ஆதரிக்கவில்லை  என்பது  எங்களுக்கு  ஏமாற்றமளிக்கிறது. “இது,  பாஸ்  எதிரணியுடன்  ஒன்றுபட்டிருப்பதாக  இதற்குமுன்  கூறியது  உண்மையில்லை  என்பதைக்  காட்டுகிறது. “உண்மையில்  அவர்கள்  பிஎன்னுடன்தான்  அணுக்கமாக  ஒத்துழைத்து…

பாஸ் பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிக்காது

2016  பட்ஜெட்டுக்கு  எதிரான  வாக்களிப்பில்  பாஸ்  கலந்துகொள்ளாது  என  அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறினார். அம்முடிவை  பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அனைவருமே  ஏற்றுக்கொண்டிருப்பதாக  சினார்  ஹரியான்  அறிவித்துள்ளது. “பட்ஜெட்டை  நிராகரித்தல்  என்னும்போது  நாங்கள்  வாக்களிப்பில்  கலந்துகொள்ள மாட்டோமே  தவிர  அதை  ஒட்டுமொத்தமாக  நிராகரிக்க  மாட்டோம்.  எதிர்மறையானவற்றை …

‘டிஏபி பாஸைப் போல் கூட்டாளிகளின் முதுகில் குத்தாது’

டிஏபி  அடுத்த  பொதுத்  தேர்தலில்  இடப்  பங்கீடு  என்று  வரும்போது பார்டி  அமானா  நெகாரா  கூட்டணியில்  உள்ள தன்  பங்காளிக்  கட்சிகளின்  முதுகில்  குத்தாது. “டிஏபி (கூட்டாளிகளின்) முதுகில்  குத்தாது.  பாஸ், கோட்டா  டமான்சாராவில்  பிகேஆருக்கு  ஒதுக்கப்பட்ட  இடத்தில்  அதன் வேட்பாளரை  நிறுத்தியது. அதனால்  அம்னோ  அங்கு  வென்றது”,…

பிரதமர்: சிங்கப்பூர் பண உதவி செய்யும்போது மலேசியா செய்யக்கூடாதா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1மலேசியா  மக்கள்  உதவி(பிரிம்)த் திட்டத்தின்கீழ்  பணம்  வழங்கப்படுவதைத்  தற்காத்துப்  பேசியுள்ளார். சிங்கப்பூரும்  அவ்விதமே  செய்வதாக  அவர்  சொன்னார். “சிங்கப்பூர்  ரொக்கம்   கொடுத்து  உதவும்போது  மலேசியா  பிரிமைக்  கொடுக்கக்கூடாதா? “வானளாவும்  கட்டங்கள்,  நெடுஞ்சாலைகள்  அமைத்தால் மட்டும்  போதாது. கிராமப்புறத்தில்  இருப்பவர்களுக்கும்  உதவி  தேவைப்படுகிறது”, என …

அருள்: நான் அரசியல்வாதி அல்ல

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா கந்தசாமி   தாம்  அரசியல்வாதி  அல்ல  என்றும்  அதனால்  “அரசியல்  விவகாரங்கள்”  பற்றிய  கேள்விகளுக்குப்  பதிலளிக்க  இயலாது  என்றும்  கூறினார். “நான்  இதைத்  தெளிவுபடுத்த  வேண்டும். நான்  அரசியல்வாதி  அல்ல. நான் ஒரு  தொழில் நிபுணன். “எனவே, அரசியல்  விவகாரங்களையும்  கேள்விகளையும்  அரசியல்வாதிகளிடம்தான்  கேட்க …

எம்பி: பெர்சே தலைவர்மீது நடவடிக்கை; சிகப்புச் சட்டைகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

அடுத்த செவ்வாய்க்கிழமை  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்டப்படவுள்ள  வேளையில்  சிகப்புச்  சட்டைகள்  மட்டும்  சுதந்திரமாக  திரிகிறார்களே  என  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  குறைப்பட்டுக்  கொண்டிருக்கிறார். “சிகப்புச்  சட்டைகளின்  பேரணிக்கு  எதிராக  26 போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டுள்ளன. “தேர்ந்தெடுத்த …

புவா: அருளைச் சந்திப்பேன். கேள்விகளை நான்தான் கேட்பேன்

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  தொலக்காட்சி  விவாதத்தில்  கலந்துகொள்ள  விதித்திருந்த  நிபந்தனை  மீட்டுக்  கொண்டதைத் தொடர்ந்து  அவருடன் மோத பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவும்  தயாராகி  விட்டார். இதற்குமுன்  அருள்    தொலைக்காட்சி  விவாதத்தில்  கலந்துகொள்ள  வேண்டுமானால்  புவா 1எம்டிபிமீது  விசாரணை  நடத்திவரும்  நாடாளுமன்ற  பொதுக் கணக்குக்…

நிபந்தனையைக் கைவிட்டு புவாவுடன் வாதமிட அருள் தயார்

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா   பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவுடன்  வாதமிடுவதற்கு  விதித்திருந்த  நிபந்தனையைக்  கைவிட்டார். “டோனி   புவாவுடன்  வாதமிடுவதற்கு  விதித்திருந்த  நிபந்தனையை   மீட்டுக்கொள்கிறேன். நிபந்தனையின்றி  அவரைச்  சந்திப்பேன்”, என  அருள்  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். புவா, 1எம்டிபி  விவகாரங்கள்  பற்றி  அருளுடன் தொலைக்காட்சியில்  உரையாட …

லிங்கிற்கு எதிரான நஜிப்பின் வழக்கில் மகாதிர் நட்சத்திர சாட்சியாக இருப்பாரா?

  மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக பிரதமர் நஜிப் ரசாக் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் நட்சத்திர சாட்சியாக தோன்றக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது குறித்து லிங்கின் வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கிடம் கேட்ட போது அவர் எதுவும் கூறவில்லை. இதற்கு…

பெர்சே 4 சம்பந்தமாக மரியா சின் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்

பெர்சே 4 பேரணி தொடர்பாக அதன் தலைவர் மரியா சின் குற்றம் சாட்டப்படவிருக்கிறார் என்று அந்த இயக்கத்தின் அதிகாரி மன்டீப் சிங் கூறுகிறார். அமைதியான ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் மரியா குற்றம் சாட்டப்படுவார் என்று மன்டீப் டிவிட் செய்துள்ளார். 34 மணி நேரத்திற்கு நடைபெற்ற அந்தப் பேரணியில் திரண்ட…

முகைதின் இடைநீக்கம் செய்யப்படுவாரா? அம்னோ தலைவர்கள் மெளனம்

அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  கட்சியிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்படுவார்  என்று  வதந்தி  பரவி வருகிறது. தலைமைச் செயலாளர்  தெங்கு  அட்னானைக்  கேட்டால்  அவர்  மெளனம்  சாதிக்கிறார். “எனக்குத்  தெரியாது, அதைப்  பற்றிக்  கருத்துரைக்க  விரும்பவில்லை”, என்றாரவர். ஆனால்,  முகைதினுக்கு  எதிராக  புகார்  வந்திருப்பதை  அவர்  ஒப்புக்கொண்டார். புகார்கள்மீது …

‘பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைக்கும் என்று கூறியதை நஸ்ரி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்’

அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்   பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைக்கத்  தயார்  என்று கூறியதைத்  தவறாக அர்த்தம்  செய்து  கொண்டிருப்பதாக  பாஸ் தலைமைச்  செயலாளர்  தகியுடின் ஹசான்  கூறினார். இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  தகியுடின்,  ஒத்துழைப்பு  என்றால்  அரசியல்  ஒத்துழைப்பு  அல்ல  என்றார். “அவர்…

குவான் எங்: டிஏபியைக் கீழறுப்பதில் உள்துறை அமைச்சரும் ஆர்ஓஎஸ்-ஸும் தீவிரம்

டிஏபி  1எம்டிபி ஊழலைத்  தொடர்ந்து  எதிர்த்து  வருவதாலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட  ரிம2.6பில்லியன்  பற்றி  விடாமல்  கேள்வி  எழுப்பி  வருவதாலும் உள்துறை  அமைச்சர்  அக்கட்சியைப்  பழிவாங்கும்  முயற்சியில் இறங்கியிருப்பதாகக்  குறைகூறுகிறார்  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங். சங்கப்  பதிவகம்  எத்தனை  தடவை …

மசீச முன்னாள் தலைவர்மீது நஜிப் அவதூறு வழக்கு

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மசீச  முன்னாள்  தலைவர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்மீது  அவதூறு  வழக்கு  தொடுத்துள்ளார். நஜிப் பொதுமக்கள்  பணத்தை  எடுத்துக்  கொண்டார்  என்று சொன்னதற்காக  லிங்மீது  அவதூறு  வழக்கு  தொடரப்பட்டுள்ளது. மலேசியாகினியிடம்  பேசிய  நஜிப்பின்  வழக்குரைஞர்  ஹவாரிசாம்  ஹருன்  நேற்று  வழக்கு  பதிவு  செய்யப்பட்டதாக …

‘நஜிப் பதிலளிக்க வேண்டியதில்லை’ என்பதா: அஸலினாமீது கிட் சியாங் பாய்ச்சல்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக் விரும்பினால்  கேள்விகளுக்குப்  பதிலளிக்காமல்  இருக்கலாம்  என்று  கூறியதன்வழி  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  நாடாளுமன்ற  நடைமுறைகளைத்  தலைகீழாக  மாற்றப்  பார்க்கிறார்  எனக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  கேள்விகளுக்கு எப்போது  பதிலளிக்கலாம்  என்பதைத்  தீர்மானிக்கும்  அதிகாரம்  இருப்பதாகவும்  அதன்படி  அவர் …

அம்னோவில் முகைதினைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை

அம்னோவின்  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  முகைதின்  யாசினை  அகற்றக்  கட்சிக்குள்  திட்டமிடப்படவில்லை  என  உச்சமன்ற  உறுப்பினர்  ஷாஹிடான்  காசிம்  திட்டவட்டமாகக்  கூறினார். “துணைத்  தலைவரைக்  கவிழ்க்கும்  திட்டம்  இருப்பது  எனக்குத்  தெரியாது  என்பதை  உச்சமன்ற உறுப்பினர்  என்ற  முறையிலும்  பெர்லிஸ்  அம்னோ  தலைவர்  என்ற  முறையிலும்  கூறிக்கொள்கிறேன்”, என …

மடத்தனமான காரணங்கள் வேண்டாம், துணிச்சலிருந்தால் மோதிப் பாருங்கள்: அருளுக்கு புவா…

1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  “மடத்தனமான  காரணங்களை”ச்  சொல்லிக்  கொண்டிருக்கக்  கூடாது  என்கிறார்  டிஏபி  எம்பி  டோனி  புவா. அருள்  ஓர் “ஆண்மகன்”போல்  நடந்துகொண்டு  நேரடியாக   ஒளிபரப்படும்  1எம்டிபி  மீதான  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்து  கொள்ள  வேண்டும்  என்றவர்  குறிப்பிட்டார். ஊடகங்களில் தம்மை  இழிவுபடுத்துவதை வழக்கமாகக்  கொண்டிருக்கும்  அருளுக்கு …

1எம்டிபி அருள் புவாவுடன் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தயார் ஆனால்………

தொலைக்காட்சி  நேரலை  விவாதத்தில்  கலந்துகொள்ளத்  தயரா  என்று  டிஏபி  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  விடுத்த  சவாலை  ஏற்றுக்கொள்ள 1எம்டிபி  தலைவர்  அருள் கந்தா  முன்வந்துள்ளார். ஆனால்,  ஒரு  நிபந்தனை. புவா  நாடாளுமன்றக்  கணக்குக்குழுவிலிருந்து  விலக  வேண்டும். நேற்று  புவா  விடுத்த  சவாலை  ஏற்றுக்கொண்டு  1எம்டிபி …

அடுத்த ஆண்டில் வெளிநாட்டவருக்கு இரட்டிப்பு மருத்துவக் கட்டணம்

அடுத்த  ஆண்டு  அரசாங்க மருத்துவ  நிலையங்களில்  சிகிச்சை  பெறும்  வெளிநாட்டவர்  கிட்டத்தட்ட  இரட்டிப்பு  மருத்துவக்  கட்டணம்  செலுத்த  வேண்டியிருக்கும். இப்போது  வெளிநாட்டவருக்குச்  சிகிச்சைக்  கட்டணம்  ரிம23. “புதிய  கட்டணம்  சுமார் ரிம40 ஆக  இருக்கும். ஐந்து  நாளைக்கான மருந்துகள்  வழங்கப்படுவதற்கு  இந்தக்  கட்டணம்”,  எனச்  சுகாதார  அமைச்சர்  டாக்டர் …

நஜிப் வழக்கு தொடுப்பதை ஏன் தாமதப்படுத்துகிறார்? லிங்குக்குப் புரியவில்லை

தம்மை  ஒரு  பொறுமைசாலி  என்று  கூறிகொள்கிறார்  மசீச  முன்னாள்  தலைவர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக். ஆனால்,  அவருக்கே  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  அவருக்கு  எதிராக  வழக்கு  தொடுப்பதைத்  தாமதப்படுத்துவது  வியப்பளிக்கிறது. “காத்திருக்கிறேன். நான்  பொறுமைசாலி. “ஆனால்,  அவர் (வழக்கு தொடுக்க)  இத்தனை  நாள்  எடுத்துக்  கொண்டிருப்பது …