மரத்தடியில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

  சீ போர்ட் தொடக்க தமிழ்ப்பள்ளியின் சுமார் 20 மாணவர்கள் அப்பள்ளிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் மரங்களின் கீழ் அமர்ந்து தாங்களாகவே கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியை கல்வி இலாகா திடீரென்று கடந்த மாதம் மூடிவிட்டது. இப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று இம்மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 80 ஆண்டுகள்…

ஜயிஸ் சுல்தான்கீழ் செயல்படுகிறது, எம்பி-இன்கீழ் அல்ல

கிறிஸ்துவ அமைப்பு ஒன்றில்  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்)  அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தில்  சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட வேண்டும் என்று  கோரிக்கை  விடுப்பவர்கள் விசயம் அறியாமல் பேசுகிறார்கள்  என்கிறார் சட்ட நிபுணர் ஒருவர். ஜயிஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இல்லை,  அது சிலாங்கூர்  சுல்தானின்…

மரத்தடியில் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

80ஆண்டுக்காலமாக கிளானா ஜெயாவில் செயல்பட்டுவந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி கடந்த மாதம் இழுத்து மூடப்பட்டது. இப்போது அப்பள்ளி அதே பெயரில் சுபாங், கம்போங் லிண்டோங்கில் இயங்கி வருகிறது. ஆனால்,அது வெகு தொலைவில் இருக்கிறது என்றுகூறி  கிளானா ஜெயா பெற்றோர்  தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்ப மறுக்கின்றனர். அப்பள்ளி கிளானா ஜெயாவுக்கே …

‘கொல்ல’த் தூண்டும் முப்திக்குக் கடும் கண்டனம்

புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில் டாட்டாரான் மெர்டேகாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவுக்கு எதிராக டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரைப் ‘போப்பாண்டவர்’ ஹருஸ்ஸானி என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வி மரினா மகாதிர் (இடம்).…

ஜயிஸ், பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை: மலாய்மொழி பைபிள்கள் பறிமுதல்

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில்(பிஎஸ்எம்) அதிரடிச் சோதனை நடத்தி அங்கிருந்த  மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது. மலேசியாகினி, பிஎஸ்எம் தலைவர் லீ முன் சூனைத் தொடர்புகொண்டு பேசியபோது இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள்  16 பெட்டிகளில் இருந்த 321 பைபிள் பிரதிகளை எடுத்துச்…

அல்லாஹ் சொல் தொடர்பில் த ஹெரால்ட் ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சிலாங்கூர்  தேவாலயங்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதன்  தொடர்பில்  த ஹெரால்ட் வார இதழ் ஆசிரியர்  பாதர் லாரன்ஸ் அண்ட்ருவை போலீசார் விசாரணைக்கு அழைப்பர். அச்சொல் மாநில தேவாலயங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அண்ட்ரு கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்துடனும் ஆலோசனை கலக்கப்படும்  என  சிலாங்கூர்…

டிசம்பர் 31 பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள்

புத்தாண்டுக்கு  முதல்நாள்  டாட்டாரான் மெர்டேகாவில் நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள் என பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியா கூறியுள்ளார். பேராணியில் கலந்துகொண்டது ஹராமான செயல் என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறிற்று. பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் கண்டிப்புக் குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு இப்போதே…

ஜோகூரில் டிஏபி-யை வலுப்படுத்துவேன்: லியு சூளுரை

டிஏபி-இல் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் லியு சின் தோங், ஜோகூரில் எதிரணிக்கு வலுச் சேர்க்க புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இதற்காக அவர் மாநிலக் கட்சித் தேர்தலில்  போட்டி இடுவார். நடப்புத் தலைவர் பூ செங் ஹாவ், கட்சி விவகாரங்களில் வெறுப்படைந்தவராக இனியும் தலைவராக இருக்கப்போவதில்லை என்று இரண்டு…

எஸ்ஏஎம்எம், அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும்

விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்புகளில் ஒன்று, அப் பேரணியை ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் என்று கூறிய அரசாங்கத்தின்மீது  வழக்குத் தொடுக்க எண்ணுகிறது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) என்னும் அமைப்பு,  சுமார் 10,000பேர் கலந்துகொண்ட  அப்பேரணி  அமைதியாகவே நடந்தேறியது; …

பனிப்போர்காலத் தந்திரங்கள் பலிக்கவில்லை, பூச்சாண்டி காட்டும் வேலை மக்களிடம் எடுபடவில்லை

உங்கள் கருத்து ‘ஆக, பொய் சொல்பவர் யார்?  40 ஆயிரம் வங்காள தேசிகள் வாக்களித்தனர்  என்ற அன்வாரா?  குண்டுகள் வெடிக்கப் போகிறார்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று கூறிய நஜிப்பா?’ எச்சரிக்கையையும் மீறி 10,000பேர் திரண்டனர், போலீசார்  வழிவிட்டனர் ஜெரார்ட் லூர்துசாமி:  தங்கள் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும்  போராட முனைந்த…

போலீஸ்: பெரியதோர் திட்டத்தின் முன்னோடிதான் இப்பேரணி

  நேற்றிரவு புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவதற்கென்று டாத்தாரன் மெர்தேக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்சியை சீர்குலைத்த அரசாங்க எதிர்ப்பு பேரணி ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கு கையாளப்பட்ட ஒரு தந்திரமான செயல் என்று புக்கிட் அமான் மூத்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். நாட்டின் ஜனநாயக வழிமுறையை முடக்குவதற்காக ஒரு…

விலை ஏற்றத்திற்கு எதிரான போராட்டம் பெரும் வெற்றி

  பொருள்களின் விலை ஏற்றத்தை எதிர்ப்பதெற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு நேற்று அதன் தலைமையில் டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற மக்கள் பேரணியை ஒரு மகத்தான வெற்றி என்று கூறிக்கொண்டுள்ளது. நேற்றிரவு டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற அப்பேரணியில் மலேசியவின் அனைத்து இன மக்களும் பங்கேற்றனர். அப்பேரணியில்…

10,000க்கு மேற்பட்டோர் எச்சரிக்கையை மீறினர், போலீசார் வழி விட்டனர்

  இன்று கோலாலம்பூர் டாத்தாரன் மெர்தேக்காவில் 10,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் எச்சரிக்கையும் மீறி விலை ஏற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 2014 ஆண்டு மக்களுக்கு கடும் பொருளாதார பிரச்னைகளை உருவாக்கும் என்பதலால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று கோலாலம்பூர்…

மலரும் புத்தாண்டு சவால் மிக்கது; மலேசிய இந்திய சமுதாயம் விழிப்படைய…

மலரும் ஆங்கிலப் புத்தாண்டு மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினருக்கு சவால் மிக்கதாக இருக்கும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள மலேசிய இந்தியர்களுக்கு புத்தாக்க சிந்தனை   வேண்டும் என்று மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதன் தேசியச் செயலாளர் ச.பாரதிதாசன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்…

மக்களுக்குத் தேவை சிக்கனம், பினாங்கு சிஎம்முக்குத் தேவை புத்தம் புது…

முதலமைச்சர் லிம் குவான் எங்  சிக்கனத்துக்குப் பேர் பெற்றவர்.  விமானப் பயணம் செய்வதாக இருந்தால்கூட ஏர்ஏசியா  பட்ஜெட் விமானத்தில்தான்  பறப்பார். அப்படிப்பட்டவர் இனி, ரிம657,218 மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S300L-இல்   பவனி வருவார். அரசாங்கச் செலவுகளைக் குறைக்க புத்ரா ஜெயா 11 நடவடிக்கைகளை அறிவித்துள்ள வேளையில்,  பினாங்கு…

மின்கட்டண உயர்வை எதிர்க்கும் 10,000 பேரிடம் கையெழுத்தைத் திரட்டியது பாஸ்

கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பகுதி,  மின்கட்டண உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும்  10,000 பேரின்  கையொப்பம் அடங்கிய  மகஜர்  ஒன்றை  மின் விநியோகிப்பாளரான தெனாகா நேசனல் பெர்ஹாட்டிடம்(டிஎன்பி)  இன்று வழங்கியது.  பாஸ்  இளைஞர் தலைவர் கைரில் நிஜாம் கிருடின்  பங்சார் தெனாகா நேசனல் அலுவலகத்தில் மகஜரை…

மலேசியர்கள் மனிதர்கள் என்ற உணர்வால் எழுவார்கள்!

கா. ஆறுமுகம். மலேசியர்களின் சிறந்த ஆண்டாக 2013 திகழ்ந்தது. ஒட்டு மொத்த நாட்டு நடப்பில் ஒவ்வொருவரும் உணர்வுடன் செயல்பட்ட அனுபவம் மகிழ்வைக் கொடுக்கிறது. அரசியலைப் பேசாத ஆளே இல்லை எனலாம். பொதுத்  தேர்தல் முதல் கட்சித் தேர்தல் வரை மூலை முடுக்கெல்லாம் முனகலும் கூச்சலுமாக ஆதரித்தும் எதிர்த்தும் மக்கள் தங்களின்…

இன்றைய பேரணிக்கு பக்காத்தான் இளைஞர்கள் ஆதரவு

இன்றிரவு  டாட்டாரான் மெர்டேகாவில்  நடைபெறும்  விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக  பக்காத்தான் கட்சிகளின் இளைஞர் பகுதிகள் உறுதி  அளித்துள்ளனர். அன்வார் இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்கின்போதுகூட குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி  பரபரப்பை உண்டாக்கி, பிறகு அது கண்டுபிடிக்கப்படாமலேயே போனது என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான்…

அலவன்ஸ் குறைப்பு விரயங்களை எவ்வகையிலும் தடுக்காது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரின் கேளிக்கை அலவனஸில் 10 விழுக்காடு குறைக்கப்படும் என அறிவித்திருப்பது அரசாங்கத்தில் விரயங்களைக் குறைக்க “எவ்வகையிலும் உதவாது” என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. “கேளிக்கை அலவன்ஸ் குறைப்பு, அண்மைய விலை உயர்வுகளால் மக்கள்…

2013-இல் செய்திகளின் நாயகர்………….

கடந்த பத்தாண்டுகளாக மலேசியாகினி வாசகர்கள் அந்தந்த ஆண்டில் செய்திகளின் நாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். எவரொருவர் “அவரது செயல்களால் செய்தித் தலைப்புகளில் இடம்பெற்று, பொதுமக்களிடையே வாத-எதிர்வாதங்களைத் தோற்றுவித்து, நல்லதாகவோ கெட்டதாகவோ ,அரசியலில் தாக்கத்தையும் உண்டுபண்ணுகிறாரோ” அவரே செய்திகளின் நாயகர் ஆகிறார்.  அந்த வகையில் 2013-இல் செய்திகளின் நாயகராக தேர்வு…

ஊடகங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது வழக்குரைஞர் மன்றம்

வார இதழ் த ஹீட் மீதான தடை விதிப்பைக் குறைகூறும் “சில தரப்புகளுக்கு” உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்திருப்பது வருத்தம் அளிப்பதாக வழக்குரைஞர் மன்றம் கூறியது. நிர்வாகத்தின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் கருத்துரைப்பதும் ஜனநாயகத்தின்  இன்றியமையாக் கூறாகும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிரிஸ்டபர் லியோங் கூறினார்.…

பிரதமரின் முகநூலில் அதிருப்தியாளர் கருத்துகள் குவிந்தன

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்தவர்கள் தங்கள் மனக்குறைகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முகநூலில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். பெரும்பாலோர் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்தி அவை மீறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.  

போலீஸ்: என்ஜிஓகள் குண்டுவெடிக்கத் திட்டமிட்டிருப்பதாக சொல்லவில்லை

கோலாலும்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங், டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளும் 4 என்ஜிஓ-கள்  குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன எனத் தாம் சொன்னதில்லை என்கிறார். பேரணியில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் குண்டுகளை வெடிக்கும் அபாயம் இருப்பதை மட்டுமே தாம் சுட்டிக்காட்டியதாக அமர் கூறினார். அவரின் விளக்கம்…