அந்தந்த வளாகத்தில் விரும்பிய தூய்மையை பராமரிக்கத் தவறிய உணவு வளாக உரிமையாளர்கள் தங்கள் வணிக உரிமத்தை இழக்க நேரிடும். அவர்களின் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் நகரத்தலைவர் (மைமூனா ஷெரீப்) நகரில் உள்ள வளாகங்களை, குறிப்பாக உணவு வளாகங்களை சுத்தம்…
ஹுடுட் பற்றி அன்வார் வாயைத் திறக்காதது ஏன்?
கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்துவதற்கு, பாஸ் நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினர் சட்டவரைவு ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டனத்துக்கு ஆளானார். “பிகேஆர் அலோசகரும், நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவருமான அன்வார், அவ்விவகாரம் பற்றிப் பேசாதிருப்பது ஏன்? “எதற்காக …
பேரணி பற்றி முன்கூட்டியே தெரிவிக்காததற்காக தண்டிப்பது அரசமைப்புக்கு விரோதமானது
முறையீட்டு நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை இன்று வழங்கியது. பேரணி நடத்துவது பற்றி 10 நாள்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தாத குடிமக்களைத் தண்டிக்கும் அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) பகுதி9 (5), அரசமைப்புக்கு விரோதமானது என அது கூறியது. இத்தீர்ப்பை வழங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு, பிஏஏ-இன்கீழ் சிலாங்கூர் …
அன்வார்: ஆமாம், நான் சிறை செல்வது உறுதி
ஏற்கனவே இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஆறாண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறும் அன்வார் இப்ராகிம், இப்போது 2-வது குதப்புணர்ச்சி வழக்கிலும்- இதுவும் தம் அரசியல் எதிரிகளால் ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்குத்தான் என்கிறார்- தாம் சிறைக்கு அனுப்பபடும் சாத்தியம் நிறைய இருப்பதாகக் கூறுகிறார். முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிதான் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, …
பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்……
அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும். “ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு …
எம்ஐஇஆர்: பிரிம் தீர்வைக் கொண்டுவரவில்லை; பணவீக்கத்தைத்தான் தூண்டி விடுகிறது
அரசாங்கம் ஏழை-பணக்காரர் இடைவெளியைக் குறைக்க பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம்(எம்ஐஇஆர்) வலியுறுத்தியுள்ளது. பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்) பணவீக்கத்தைத்தான் உண்டாக்கும் என்கிறார் எம்ஐஇஆர் செயல்முறை இயக்குனர் சக்கரியா அப்துல் ரஷிட். “நம் உற்பத்தித்திறன் கூடுகிறது.......வருமானம் கூடுவதில்லை....என்பதே ஒரு பொருத்தமற்ற நிலையாகும்”, …
ஹுடுட் திட்டத்துக்கு ‘அறுவை-சிகிச்சை துணைபோவதா?’ ஒத்து வராது என்கிறார்கள் மருத்துவர்கள்
கிளந்தான் அரசு, ஹுடுச் சட்டத்தைச் செயல்படுத்த முடிந்தால் அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு உறுப்புகள் வெட்டி எடுக்கும் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பதைக் கேட்டு மலேசிய மருத்துவர் சங்கம் (எம்எம்ஏ) அதிர்ச்சி அடைந்துள்ளது. ஹுடுட் சட்டத்தின்படி குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் உடலுறுப்புகளை வெட்டி எடுப்பது “மருத்துவ நெறிகளுக்கும் நடைமுறைகளுக்கும் …
எம்எச்370: கடலடித் தேடலில் இதுவரை தடயம் எதுவும் கிடைக்கவில்லை
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடும்பணி பெர்த்துக்கு வடமேற்கே கிட்டத்தட்ட 1584 கிலோ மீட்டர் தொலைவில் இன்று தொடரும் என ஆஸ்திரேலியாவில் உள்ள கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்துள்ளது. 11 விமானங்களும் 11 கப்பல்களும், 49,567 சதுர கிலோ மீட்டர் கடல்பரப்பில் தேடும் பணியை மேற்கொள்ளும். சிறு நீர்மூழ்கிக் …
அன்வார்: என்னைச் சந்திக்காதிருக்க ஒபாமாவுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்கிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அவரது மலேசிய வருமையின்போது தம்மைச் சந்திக்க வேண்டாம் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறார். “அமெரிக்க அதிபர் அடுத்த வாரம் பசிபிக்-வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிடுவதற்காக மலேசியா வரும்போது என்னைச் சந்திக்க வேண்டாமென்று பிரதமர் நஜிப்…
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் மே 25
கர்பால் சிங் காலமானதால் காலியான புக்கிட் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மே 25-இல் நடைபெறும். அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் மே 12. தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் இன்று இதனை அறிவித்தார். 2004-இலிருந்து கர்பால் வசமிருந்த தொகுதி அது. அங்கு களமிறங்கும் …
மகாதிர்: குறைகூறலுக்கு இடமளியுங்கள், இல்லையேல் விளைவு விபரீதமாக இருக்கும்
தலைவர்கள் குறைகூறல்களுக்குக் காது கொடுக்க வேண்டும். தவறினால் வன்முறைகளை எதிர்நோக்கக் கூடும், அரசாங்கம் கவிழ்க்கப்படும் அபாயமும் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ‘ஆட்சியில் இருப்பவர்களுக்கு’ என்ற தலைப்பில் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் ஒரு கட்டுரையில், தலைவர்கள் ஆலோசகர்களை மட்டுமே நம்பி இருப்பது ஆபத்தானது …
காலிட்: நீர் நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும், நம்புங்கள்
சிலாங்கூரில் நீர்ப் பங்கீடு தொடர்வதால் வெறுப்பு வளர்ந்துவரும் வேளையில். நீர் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்படும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் ஆறுதல் கூறுகிறார். “ஐந்திலிருந்து ஆறு மாதங்கள்வரை நீடிக்கக்கூடிய எதிர்வரும் கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டோம். எனவே, மக்கள் தொடர்ந்து பொறுமைகாத்து அரசு …
மே 1 பேரணி: அமைதிக்கு மிரட்டல் என்றால் போலீஸ் நடவடிக்கை…
மே1 ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி பொது ஒழுங்குக்கு மிரட்டலாக இருக்கும் எனத் தெரிந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என கோலாலும்பூர் குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) துணைத் தலைவர் ஏசிபி கைரி அஹ்ராசா கூறினார். பேரணி நடப்பதைத் தடுக்க போலீசார் முன்- கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு கைரி …
டயிம்: டான்சான்யாவில் வங்கி வைத்திருப்பதில் என்ன தப்பு?
டான்சான்யாவில் வங்கி வைத்திருந்தால் அது தப்பா என்று கேட்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின். மலேசியாவில் சுருட்டிய பணத்தை அங்கு வைத்திருப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், கெஅடிலான் டெய்லியில் கூறி இருப்பதற்கு எதிர்வினையாக டயிம் இவ்வாறு கேட்டதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. அன்வார் ஒரு "kaki…
புக்கிட் குளுகோரில் மசீச போட்டி
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற கோரிக்கையை பிஎன் ஏற்காது. அங்கு வேட்பாளரைக் களமிறக்கப் போவதை மசீச உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங் தெரிவித்தார். கர்பால் சிங் காலமானதால் அத்தொகுதி காலியாகியுள்ளது. “அவசரமாக …
சிறையில் இறப்பு: மரண விசாரணை தேவை
தொழிற்சாலை ஊழியரான கமருல்நிஸாம் இஸ்மாயில், கடந்த மாதம் தாப்பா சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்துபோனதன் காரணத்தைக் கண்டறிய நீதிவிசாரணை தேவை என அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்பில், அவரின் குடும்பத்தார் என்ஜிஓ-கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் ஐந்து-அம்ச மகஜர் ஒன்றை மாநில போலீஸ் தலைவர் அப்துல் …
ஹிஷாம்: நிபுணர்களுக்காக ‘சல்லிக்காசு’ செலவில்லை
எம்எச்370-இன் தேடும்பணி ஒருங்கிணைக்கப்படும் பெர்த் நகருக்குச் செல்லத் திட்டமிடுவதாக இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். “அது பற்றி (கூட்டு ஒருங்கிணைப்பு மையத் தலைவர்) ஆங்குஸ் ஹூஸ்டனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை புளுபின் மிச்சமுள்ள 20 விழுக்காட்டு தேடலையும் முடித்த பிறகு செல்லக்கூடும்”, என்றாரவர். மேலும், காணாமல்போன …
எம்எச்370: அடுத்த கட்ட தேடும்பணி பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடும்பணியில் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில் அடுத்த கட்டத் தேடும்பணி குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டன் கூறுகிறார். அடுத்து மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியா இப்போது மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய …
செயற்கை மழை பெய்விக்க தாய்லாந்து விமானங்கள் அமர்த்தப்படலாம்
அரசாங்கம் மேக விதைப்பு முறையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செயற்கை மழை பெய்விப்பதற்கு தாய்லாந்து விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளக் கூடும். இதனைத் தெரிவித்த எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், தண்ணீர் வள துணை அமைச்சர் மஹாட்சிர் காலிட், இப்போது அப்பணிக்கு அரச மலேசிய ஆகாயப் படை விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆனால் மேக …
இறந்துபோனவர்கள் மற்ற சமயத்தாராக இருந்தாலும் முஸ்லிம்கள் மரியாதை காண்பிக்க வேண்டும்
பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹரோம், இறந்துபோனவர்கள் மற்ற சமயத்தாராக இருந்தாலும் அவர்களுக்கு முஸ்லிம்கள் மரியாதை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். “மனிதர்கள் என்ற முறையில் நாம் ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும்.......இறப்பு போன்ற விவகாரங்களில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது நல்லுறவைக் கட்டிக்காக்க உதவுகிறது”, என்றாரவர். கர்பால் சிங்கின் …
சீன என்ஜிஓ கூட்டமைப்பு பாஸின் ஹுடுட் திட்டத்துக்கு எதிர்ப்பு
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தவும் அதற்காக நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினர் சட்டவரைவு ஒன்றைக் கொண்டுவரவும் பாஸ் திட்டமிட்டிருப்பதற்கு சீன என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்பதைக் கூட்டரசு அரசமைப்பு தெளிவாக எடுத்துரைக்கிறது என்றும் அதை 1988ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியது …
சிஎம்: பினாங்கில் நீர்ப் பங்கீடு வந்தால் பல தலைகள் உருளும்
பினாங்கு நீர் விநியோக கார்ப்பரேஷன் (பிபிஏபிபி) மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டைக் கொண்டுவந்தால் “பல தலைகள் உருளும்” என முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். “ தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் மாநில அரசு அதை அனுமதித்துள்ள வேளையில் நீர்ப் பங்கீட்டைக் கொண்டு வந்தால் …
பிங் ஒலிகளுக்கு வேறு மூலகாரணங்கள் இருக்கலாம்
எம்எச்370-ஐத் தவறான இடத்தில் தேடுகிறார்கள் என்று கூறும் கூட்டத்தாருடன் ஜெர்மனியின் பியோமார் ஹெல்ம்ஹோல்ட் ஆழ்க்கடல் ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹெர்ஜிக்-கும் சேர்ந்து கொண்டிருக்கிறார் என புளும்பெர்க் செய்தி தெரிவிக்கிறது. ஏப்ரல் 5-இலும் ஏப்ரல் 8-இலும் கேட்கப்பட்ட பிங் ஒலிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வந்ததாக நம்பி …
சிலாங்கூரில் நீர் இருப்பு 29 நாள்களுக்கு மட்டுமே போதுமானது
நேற்று சிலாங்கூரில் கடும் மழை பெய்து அதன் விளைவாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் நீர்ப் பங்கீடு முடிவுக்கு வரும் என்று நினைத்தால் அது தவறாகும். “முக்கிய அணைக்கட்டான சுங்கை சிலாங்கூர் அணையில் நீரின் அளவு குறைவாகவே உள்ளது. நீர்ப் பங்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் 29 …