பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா சைனுதீன் தொடர்ந்து நீடிக்கவே 69 எதிர்க்கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இது குறித்து தானா மேரா எம்பி இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் கூறுகையில், "கடந்த மாதம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்ற போதிலும், 43…
கிட் சியாங் இடைநீக்கத்தை எதிர்த்து எதிரணி முறையீடு
கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் இடைநீக்கம் செய்யப்பட்டதை மீள்ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை எதிரணி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். இடைநீக்கம் செய்யப்பட்டதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராய அத்தீர்மானம் கொண்டுவரப்படுவதாக பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறினார். “எங்களைப் பொறுத்தவரை …
கிட் சியாங் ஆறு மாத இடைநீக்கம்
லிம் கிட் சியாங் (டிஏபி- கேளாங் பாத்தா) மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவை அவமதித்து விட்டார் என்று அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்தீர்மானத்தை பிஎன் எம்பிகள் 107 பேர் ஆதரித்தனர். எதிரணியினர் 77 பேர் எதிர்த்தனர். அதன் பின்னர் லிம் …
ரசாலி: பிரதமரை வெளியேற்ற நினைக்கும் பிஎன் எம்பிகள் பட்ஜெட்டுக்கு எதிராக…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றுவது அவசியம் என்று பிஎன் எம்பிகள் நினைத்தால் 2016 பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்கிறார் அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா. “வழக்கப்படி பார்த்தால் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்தான். “ஆனால், எதிர்ப்பு பிரதமருக்குத்தான் பட்ஜெட்டுக்கு …
கல்வி அமைச்சிடம் புகைமூட்டத்துக்கு எதிராக உருப்படியான திட்டம் இல்லை
கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட், “எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்கும்” திட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும் அமைச்சு அவ்வப்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப செயல்படுதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்று பினாங்கு அரசு குறைகூறியது. “ஏ பிளான், பி பிளான், சி பிளான் என்று எஸ்பிஎம் வரை அமலாக்குவதற்குத் திட்டங்களைக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.…
1எம்டிபி நிதி அறிக்கையில் திருத்தம் செய்யவில்லை
அரசின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, 2014ஆம் ஆண்டுக்கான அதன் நிதி அறிக்கையில் திருத்தங்கள் எதையும் செய்யவில்லை என நிதி அமைச்சு கூறியது. 1எம்டிபி, தணிக்கை செய்யப்பட்ட அதன் நிதி அறிக்கையைத் திருத்தி இருந்ததா என்று வினவிய டோனி புவா(டிஏபி- பெட்டாலிங் ஜெயா உத்தாரா)வுக்கு கொடுத்த எழுத்துப்பூர்வமான பதிலில் நிதி …
ஜாஹிட்: பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? யார் அவர்கள்?
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அதற்கெதிராக வாக்களிப்பார்கள் என்று கூறப்படும் ஐந்து பிஎன் எம்பிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஜாஜிட் ஹமிடியிடம் ஒரு செய்தியாளர் வினவினார். அதற்கு அஹ்மட் ஜாஹிட், “யார் அவர்கள்?”, என எதிர்க் கேள்வி போட்டார். முன்னாள் துணைப் பிரதமர் …
எரிபொருள் உதவித் தொகையை நீக்கிய மலேசியாவுக்குப் பாராட்டு
கடந்த ஆண்டில் மலேசியா எரிபொருள் உதவித் தொகையை அகற்றியதை ஐநா மேம்பாட்டுத் திட்ட (யுன்டிபி) நிர்வாகி ஹெலன் கிளார்க் பாராட்டினார். எரிபொருள் உதவித் தொகைகள் அகற்றப்பட வேண்டும் என்ற அனைத்துலக பண நிறுவனத்தின்(ஐஎம்எப்) கோரிக்கையை யுன்டிபி ஏற்கிறது என்றும் அவர் சொன்னார். “எல்லா நாடுகளிலும் படிம எரிபொருளுக்கு உதவித் …
காட்டுத் தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும்: இந்தோனேசியா எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுமத்ராவிலும் போர்னியோவிலும் தோட்டங்களிலும் காடுகளிலும் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரியும் தீ நவம்பர் இறுதிவரை தொடரலாம் என இந்தோனேசிய அதிகாரி ஒருவர் எச்சரித்தார். தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைப் புகைமூட்டத்தில் மூழ்கடித்த நெருப்பை அணைக்க நிலத்திலும் ஆகாயத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. “நவம்பரில் மழை…
1எம்டிபிமீது ‘ஊடக விசாரணை’ வேண்டாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபிமீதான விசாரணைகள் தடையின்றி நடப்பதற்கு இடமளிக்க வேண்டுமே தவிர ஊடகங்களில் அதன்மீது விசாரணை நடத்துவது தேவையற்றது எனக் கூறினார். அவ்விவகாரம்மீது சுயேச்சை விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தாமே சில விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். “ஊடகங்களில் விசாரணை நடத்திக் கொண்டிருக்காமல் இந்த விசாரணைகளின் …
பெர்சே சாபா தலைவர்மீது பேரணிச் சட்டத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு
அமைதிப் பேரணிச் சட்ட(பிஏஏ)த்தை மீறியதாக பெர்சே சாபாவின் உதவித் தலைவர் ஜைன்னி லாசிம்பாங் கோட்டா கினாபாலு மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டார். அவர்மீது ஆகஸ்ட் 29,30-இல் நடைபெற்ற பெர்சே 4 பேரணி பற்றி 10-நாள்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம், பிஏஏ-இன்படி 10-நாள்களுக்கு முன்பே …
மகாதிர்: ஆட்சியாளர்கள் வெறும் ரப்பர் முத்திரைகள் அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆட்சியாளர்கள் வெறும் இரப்பர் முத்திரைகள் அல்ல என்றும் அவர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகளும் உண்டு என்றும் கூறினார். ஆட்சியாளர்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிட் நினைவுறுத்தியிருப்பதற்கு எதிர்வினையாக மகாதிர் இவ்வாறு கூறினார். “ஆகோங்கும் மற்ற …
புவாவை நீக்கும் அதிகாரம் பிஏசி-க்கு இல்லை
பொதுக் கணக்குக்குழுவின் புதிய தலைவர் ஹ்சான் அரிப்பின் அக்குழுவுக்கு டிஏபி எம்பி டோனி புவாவை நீக்கும் அதிகாரம் கிடையாது என்றார். “பிஏசிக்கு அந்த உரிமை இல்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இதற்குமுன் ஹசான், 1எம்டிபி பற்றி புவா தொடர்ந்து குறை சொல்லி வருவதால் …
நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போதைக்கு இல்லை
நடப்பு நாடாளுமன்றக் கூட்டம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று விவாதம் நடத்துவது சந்தேகமே. ஏனென்றால், அப்படிப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு 14 நாள்களுக்கு முன்னரே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என மக்களவைத் …
பிகேஆர்: தோற்றுப்போன கொள்கையைத் தூக்கி எறிவீர்
கார் விலைகளைக் குறைக்கும் புத்ரா ஜெயாவின் கொள்கை, விலைகள் உயர்ந்ததால் தோற்றுப் போனதால் அதைத் தூக்கி எறிய வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் மாட் கூறினார். பிஎன் அதன் 2013 தேர்தல் அறிக்கையில் காரின் விலைகள் 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கப்படும் என …
புதிய பிஏசி தலைவர் 1எம்டிபி பற்றி விசாரிக்கப் போகிறாரா, டோனி…
பொதுக் கணக்குக் குழு (பிஏசி) வின் புதிய தலைவர் ஹசான் அரிப்பின் 1எம்டிபி-இன் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதில் உண்மையில் கடப்பாடு கொண்டிருக்கிறாரா என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார். பிஏசி-இல் டோனி புவா-வின் நிலை பற்றி அக்குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் …
‘பேரணி பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் சுற்றுலாவுக்கு நல்ல விளம்பரமாக…
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், பெர்சே 4 பேரணி, செப்டம்பர் 16 சிகப்புச் சட்டைப் பேரணி ஆகியவை பற்றி செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். அச்செய்திகளால் சுற்றுலா விளம்பரங்களுக்குச் செலவிடும் பணம் மிச்சமானது. “ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பெர்சே பேரணி பற்றிய செய்திகளை …
ரிம2.6 பில்லியன் பற்றிய கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கப்படும்
அரசாங்கம் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் நன்கொடை பற்றியும் அது தொடர்பான மற்ற கேள்விகளுக்கும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பதில் அளிக்கும். 1எம்டிபி-இலிருந்து இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவன (ஐபிஐசி)த்துக்கு அனுப்பப்பட்டு காணாமல்போனதாகக் கூறப்படும் யுஎஸ்$993 மில்லியன் பற்றிய கேள்விகளுக்கும் அரசாங்கம் பதிலளிக்கும். எப்போது என்பது பின்னர் ஒரு …
அம்பாங் பார்க்கை உடைப்பதற்கு அங்குள்ள கடைக்காரர்கள் எதிர்ப்பு
அம்பாங் பார்க் கடைக்காரர்கள் 100-க்கு மேற்பட்டவர்கள் அந்த வர்த்தக மையத்தை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மையத்தை உடைக்காதீர்”, “அம்பாங் பார்க்கைக் காப்பாற்றுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன். “அம்பாங் பார்க் வாழ்க” என்றும் முழக்கமிட்டனர். நாட்டின் பழைமையான வர்த்தக …
அன்னிய தொழிலாளர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தைக் குறைக்கும் திட்டம்
அரசாங்கம் மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தைக் குறைத்து அதன்வழி ரிங்கிட் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ஒரு திட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்வழி அன்னிய தொழிலாளர்கள் அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் அமைக்கும் ஒரு …
நஜிப்பின் கணக்கில் ரிம42 மில்லியன் மாற்றிவிடப்பட்டதா என்ற கேள்வியை நாடாளுமன்றம்…
நாடாளுமன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேசனலுடன் தொடர்புள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ரிம42 மில்லியன் பெற்றாரா என்ற கேள்வியைத் தள்ளுபடி செய்தது. வால் ஸ்திரிட் ஜர்னலில் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து கூய் ஹிஸியாவ்- லியோங் அக்கேள்வியைக் கேட்டிருந்தார். பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு மக்களவையில் …
டிஏபி: நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோலி விளையாட்டல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் எதிரணி பிளவு பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தீர்மானத்தைத் தாக்கல் செய்த பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியானிடம் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியதிலிருந்து இது தெரிய வருகிறது.…
முதல் நாள்: டோல் விவகாரத்தில் இரண்டு டிஏபி எம்பிகள் வெளியேற்றப்பட்டனர்
சூடான விவாதங்களுடன் இன்று நாடாளுமன்றம் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் இரண்டு டிஏபி எம்பிகள் அவைநீக்கம் செய்யப்பட்டனர். முதலில் வெளியேற்றப்பட்டவர் லிம் லிப் எங் (டிஏபி- செகாம்புட்). நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டோல் கட்டண உயர்வுமீது தாம் தாக்கல் செய்த அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன் என்றவர் வினவினார்.…
பண்டிகார்: துணை அமைச்சர் இருக்கும்போது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியதில்லை
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு துணை அமைச்சர்களால் பதில் அளிக்க முடியும் என்கிறபோது அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று மக்களைவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார். அந்தோனி லோக்( டிஏபி- சிரம்பான்) நிதி அமைச்சரான நஜிப்பைக் குறிவைத்துக் கேட்ட கேள்விக்கு நிதி துணை அமைச்சர் சுவா டீ …


