‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’- பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள்

பக்காத்தான் ராக்யாட் 55வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரத்துவ 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்னும் கருபொருளுக்கு மாற்றாக 'Sebangsa, Senegara, Sejiwa' ('ஒரே இனம், ஒரே நாடு, ஒரே ஆன்மா') என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. மின் அஞ்சல் வழியாக பெறப்பட்ட 250க்கும் மேற்பட்ட நுழைவுகளிலிருந்து அல்ஹைமி…

பிகேஆர் ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்

பிகேஆரின் வியூக இயக்குனர் ரபீஸ்சி ரமலி தேசிய தீவன கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டத்தில் உட்பட்டிருந்ததற்காக இன்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். "நான் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (பாபியா) கைது செய்யப்பட்டுள்ளேன். இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவேன்", என்று…

பிகேஆர்: கார்களுக்கான கலால் வரி படிப்படியாக அகற்றப்படும்

கார்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை அகற்றுவதற்கு பிகேஆர் தெரிவித்த யோசனை படிப்படியாக அமலாக்கப்படும். அவ்வாறு செய்வதால் பழைய கார் விற்பனைச் சந்தையில் ஏற்படக் கூடிய தாக்கத்தைத் தணிக்க முடியும். இவ்வாறு அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். "கலால் வரியைக் கைவிடுவது படிப்படியாக…

AIMST கணக்காய்வு அறிக்கையில் காணப்படுகிற ‘பொய்யான கோரிக்கைகளை’ பிகேஆர் சுட்டிக்…

மஇகா-வுக்குச் சொந்தமான  ஏய்ம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் மீதான கணக்காய்வு அறிக்கையின் சில பகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. பல மஇகா தலைவர்களை 'பணக்காரர்களாக்குவதற்கு' அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவனம் ஒன்று 'ஏமாற்றியதை' அவை காட்டுவதாக அது கூறிக் கொண்டது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியை நடத்தி வரும் ஜெயா கபே…

ஹிஷாமுடின்: பக்காத்தான் ‘ஊடுருவல்’ இன்னும் தேசிய மருட்டலாக மாறவில்லை

பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட், ஜெம்மா இஸ்லாமியா சித்தாந்தங்கள் ஊருருவியுள்ளதாகக் Read More

பக்காத்தானில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது பற்றி ஹிஷாமுக்கு “உறுதியாகத் தெரியவில்லை”

பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது மீது தமக்கு 'உறுதியாகத் தெரியாது' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். "என்னிடம் அந்த விவகாரம் தொடர்பில் இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது," என ஹிஷாமுடின் சொன்னதாக…

‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார். "மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு…

முடிவை மறுபரிசீலினை செய்யுமாறு லத்தீபாவுக்கு பிகேஆர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை லத்தீபா கோயா மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். லத்தீபாவுக்கு அதன் தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்படும் என சேவியர் இன்று…

லத்தீபா ராஜினாமா மீது சிலாங்கூர் பிகேஆர், மாநில அரசைச் சாடுகிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனக்கு எதிராக கூறப்படும் குறைபாடுகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த மாநில பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு குறைகள் தெரிவிக்கப்பட்டது லத்தீபா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு வழி வகுத்து விட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து…

இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு ரிம600 பக்காத்தான் வழங்கும்

பக்காத்தான் ரக்யாட்டில் உள்ள கட்சிகளின் மகளிர் பகுதிகள் மகளிருக்கான ‘புக்கு ஜிங்கா’ ஒன்றை வெளியிட்டுள்ளன.அதில், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் மகளிர் மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மலேசிய மகளிர் திட்டம் (Agenda Wanita Malaysia ,AWM) என்று அழைக்கப்படும் அதைச் செயல்படுத்த ரிம5பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.…

லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திலிருந்து ராஜினாமா

லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற  (MBPJ) உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு மாநில ஆட்சிமன்றம் திட்டமிடுவதாக வதந்திகள் பரவி வரும் வேலையில் அவர் அந்தப் பதவியைத் துறந்துள்ளார். அந்த ஊகங்கள் பொது மக்களிடையே பரவத் தொடங்கி விட்டதால் தமது பதவியில்…

இந்தியர்களின் எதிர்காலம் குறித்து அம்னோவுடன் விவாதம் செய்ய பிகேஆர் விருப்பம்

பிகேஆர், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்து பொது விவாதம் செய்ய அம்னோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது மஇகா-வுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. “மஇகா, இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது அதனால்தான் அம்னோவுடன் விவாதம் செய்ய விரும்புகிறோம்”, என்று பிகேஆர் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் கே குணசேகரன்…

நாடற்ற மலேசியருக்கு குடியுரிமை இயல்பாகவே கிடைக்க வேண்டும்

நாடற்ற மலேசியர்கள்- பிறப்புச் சான்றிதழ் அல்லது நீலநிற மைகார்ட் வைத்திராதவர்கள்-வெளிநாட்டவர் அல்லர். எனவே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறது பிகேஆர். இன்று கிள்ளான் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குப் பின்னர் இவ்வாறு கூறிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அந்த…

அரசியல் வன்முறைகள்: இரு தரப்புக் குழுவை அமைக்க பக்காத்தான் யோசனை

அரசியல் வன்முறைகள் கவலை தரும் வகையில் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கு இரு தரப்பு குழுவை அமைக்கலாம் என்று பக்காத்தான் ராக்யாட் யோசனை தெரிவித்துள்ளது. அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அண்மைய காலத்தில் 'அச்சமூட்டும்' நிலையை எட்டி விட்டதாக டிஏபி தலைவர் ரோனி லியூ கூறினார். வன்முறை மருட்டல்களும் வழக்கமாகி விட்டதையும்…

ராபிஸி: எல்ஆர்டி டெண்டர் வழங்கப்பட்டதில் நஜிப் தலையிட்டார்

ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங்  எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட்டதை நிரூபிக்கும் முயற்சியின் கீழ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று அரசாங்க ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்தக் குத்தகை தொடக்கத்தில் Balfour என்ற Balfour Beatty-Invensys Consortiumக்கு…

என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது

960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது. அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட…

ரபிஸி பாண்டான் தொகுதி பிகேஆர் வேட்பாளராக அறிமுகம்

நேற்றிரவு சிலாங்கூர் பாண்டானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அத்தொகுதியின் நீண்ட கால எம்பியான ஒங் தி கியாட்டை எதிர்த்து நிற்பதற்குப் பொருத்தமான வேட்பாளர் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அவரது சகாக்கள் அறிமுகப்படுத்தினர். சுமார் 2,000பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பேசிய டிஏபி தெராதாய் சட்டமன்ற உறுப்பினர்…

பிகேஆர்: கடற்படை இரகசியம் ‘விற்கப்பட்டதை’ நஜிப் விளக்க வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று கடற்படை இரகசிய ஆவணம் ஒன்றை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு ‘விற்பனை’ செய்திருப்பதை பிரான்சின் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக பிகேஆரும் குரல் கொடுத்துள்ளது. அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படத்தில்…

பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை

14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித்…

பிகேஆர் தலைமைச் செயலாளருக்கு எதிராக இசி துணைத் தலைவர் போலீசில்…

தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், தம்மை முன்னாள் அம்னோ உறுப்பினர் என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். ஒரு மாதத்துக்குமுன் சைபுடின் அவ்வாறு கூறியது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்…

இசி தலைவர் இன்னும் அம்னோ உறுப்பினர்தான், பிகேஆர்

சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இசி (தேர்தல் ஆணையம்) தலைவர் அப்துல் அசிஸ் யுசுப் அம்னோ உறுப்பினராக இல்லை ஏனென்றால் ஆண்டு சந்தாவைக் கட்டாததால் அவருடைய உறுப்பினர் தகுதி காலாவதியாகி விட்டது என்று நேற்று கூறினார். அவ்விளக்கத்தை இன்று பிகேஆர் நிராகரித்து விட்டது. "அம்னோ இளைஞர் பிரிவின்…