அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரையோட்டும் மஇகா!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர் மஇகாவின் சாதனைகள் என்ற செய்திகள் அண்மைக் காலமாக  தமிழ் ஊடகங்களில் வெளிவருவது, வேதனைகள் படிந்த மஇகா  சுவருக்கு வெள்ளையடிக்கும் வெற்றுச் செய்திகளாகவே தோன்றுகிறது. ஆனால் மஇகா என்ற சுவர் வரலாற்றின் கடப்பாடு என்பதால் மட்டும் அது அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.…

இலங்கையில் உள்ள ஊடகவியளார்களின் நிலைகுறித்து சிறப்பு கூட்டம்

இலங்கைத் தீவில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான சண்டே லீடர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ள நிலையிலேயே…

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு

வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து இன்றே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை…

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா நடவடிக்கை

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து இந்தியா 12 ஹெலிகாப்டர்களை வாங்குகின்ற 75 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முறைப்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களில் பதிலும் கோரியிருக்கின்றது.…

திரைக்கு வருகிறது இலங்கையின் “கொலைக்களம்”

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.…

‘பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டனர்’

இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர். இவர்களுடன் குறித்த…

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து:

விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு…

கண்டனங்களை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுப்பதில்லை

எந்த கண்டனங்களையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இறுதியாக சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை குறித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில்…

யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார் :…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சட்டவிரோதமான ஆயதப் பிரிவுகளை இகரசியமான தங்குமிடங்களில் வைத்து நடத்திவருவதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்துப் பேசிய ரணில்,…

சண்டேலீடர் செய்தியாளர் ஆயுததாரிகளால் சுடப்பட்டார்

இலங்கையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார். சண்டேலீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஃபராஸ் சௌக்கத்அலி, கொழும்பில் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுடப்பட்டார். கழுத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் அருகிலுள்ள களுபோவில…

எப்பொழுது நான் காண்பேன்? (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

ரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்

ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல…

PBS : மாணவர்களை கொல்ல முஹிடினின் திட்டமா முருகா?

முருகா... நீ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன். சிவனே உங்கிட்ட கைக்கட்டி பவ்வியமா பாடம் கேட்டதா கதையெல்லாம் உண்டு. அப்படி இருக்கும் போது எங்க நாட்டுல மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கும் இந்த முஹிடினின் அட்டகாசத்தை நீ கொஞ்சம் அடக்க மாட்டியா? சும்மா வயலு வரப்பு…

தமிழின அழிப்பிற்காக ஐநா மீதான கண்டனமும் பரிந்துரைகளும்

2009-ஆம் ஆண்டில் நடந்த போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த இன அழிப்பு,  இன ஒழிப்பு, போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரணை செய்வதற்குச் சுயேட்சை ஆணையம் ஒன்றை அமைக்க ஐநா செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட சார்ல்ஸ் பெட்றே அறிக்கை கூறுகிறது என்ற வற்புறுத்தலுடன்…

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர் வினோதினி மரணம்

காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி (வயது 23).  இவர் ஒருதலைக்காதல் தோல்வியால் சுரேஷ் என்ற வாலி பர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித் தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். வினோதினி…

சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிசார்…

ராஜபக்சேவின் ஆட்சியைக் கவிழ்க்க ஓரணியில் எதிர்க்கட்சிகள்

இலங்கையிலுள்ள சகல இன மக்களினதும் சம உரிமை மற்றும் சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சி ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒன்பது கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று…

ஒப்பா காங்ணாத்தில் ஆப்பு அடிச்சிட்டாங்களே முருகா!

முருகா வேறு வழியே இல்லை. நான் நேரா உன்னைப் பார்த்து முறையிட ஆறுபடை வீட்டுக்கும் ஓர் அவசர பயணம் வரலாம் என நினைக்கிறேன். எங்க நாட்டுப் பிரதமர் அவ்வளவு குழம்பி போயிருக்கிறார் முருகா. மலேசிய வரலாற்றில  நஜீப் போல ஓர் அறிவு ஜீவிதமான பிரதமரை நான் கண்டதில்ல. இதை…

அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

மலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார். வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று…

அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி 36 பலி

அலகாபாத்: இந்தியாவின் உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் அங்கு 3 கோடி பேர் புனித நீராடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

உலக புகைப்படப் போட்டியில் மட்டக்களப்பு மாணவருக்கு புகைப்பட விருது

உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவரொருவரும் வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டு கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால்…

விஸ்வரூபம் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து விஸ்வரூபம் திரைப்படம் நாட்டின் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்று இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க கூறினார். முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு…

இலங்கை தலைநகரை நோக்கி வெளிநாட்டு எலிகள் படையெடுப்பு!

இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு…