தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின் இறந்ததைத் தொடர்ந்து, கினாபதாங்கன் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 16 அன்று கூடும். மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் மற்றும் சபா…
நஜிப், வாக்களியுங்கள் என்ற Undilah வீடியோவை புறக்கணிப்பதை ஏற்க முடியாது
'அந்த வீடியோவில் கட்சி சார்புடைய விஷயங்கள் ஏதுமே இல்லை. அம்னோவை அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் வாட்டுகிறது. அதனால் அது தனது சொந்த நிழலைக் கண்டு கூட பயப்படுகிறது' வாக்களியுங்கள் என்ற 'Undilah' வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’ பெண்டர்: அந்த 'Undilah' வீடியோவை நாட்டிலுள்ள…
ஹூடுட் சட்டம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த டிஎபி…
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து விவாதிக்கவும் ஒரு முடிவு எடுக்கவும் ஓர் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபி பக்கத்தான் கூட்டணியைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓர் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்படுவதை தமது கட்சி எப்போதுமே எதிர்க்கும் என்று கூறிய டிஎபியின்…
பிஎன் கள்ள நண்பர்களுக்குத்தான் சிலாங்கூர் பக்கத்தான் ஆட்சி சித்திரவதையாகும்
மாநில பக்கத்தான் ஆட்சி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சித்திரவதையாகத்தான் இருந்துள்ளது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியதை அதாவது "அம்னோ-பிஎன் கள்ள நண்பர்களுக்கு", சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது. "இத்துறையினர் (பக்கத்தான் ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள்) அம்னோ-பிஎன்னின் கள்ள நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினருமாவர். இவர்கள் …
அம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருது
மனித உரிமைக்காக வாதாடும் மலேசிய பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரான அம்பிகாவின் சேவையை அங்கீகரித்து அவருக்கு பிரான்ஸ் அந்நாட்டின் மிக உன்னத செவாலியர் (Chevalier de Legion d'Honneur) விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருது அந்நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதாகும். நேற்று, கோலாலம்பூர் பிரன்ச் தூதரகத்தில் அவ்விருதை…
எம்சிஎம்சி விளக்கம் மீது வீடியோ தயாரிப்பாளர் ஆத்திரமடைந்துள்ளார்
வாக்களியுங்கள் என்ற 'Undilah' பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவை தயாரித்த பீட் தியோ, அந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள உத்தரவு குறித்து மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) அளித்த விளக்கம் மீது ஆத்திரமடைந்துள்ளார். அந்த பொதுச் சேவை ஒளிநாடா ஒளிபரப்பாவதற்கு முன்னரே…
பேராக் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பிரதமர் பஸ்ஸில் சென்றார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடு முழுவதும் தாம் மேற்கொண்டு வரும் பயணத்தின் ஒரு பகுதியாக பேராக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அவரது குழுவினரும் பஸ்ஸில் பயணம் செய்தனர். "வழக்கமாக காரில் செல்வோம். இந்த…
இசா சட்டத்தை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் நிராகரிக்கிறது
சிங்கப்பூரில் விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் பிரிட்டிஷ் காலனித்துவச் சட்டம் ஒன்றை ரத்துச் செய்யுமாறு முன்னாள் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. அந்த முன்னாள் இசா கைதிகள் 'கீழறுப்பு நடவடிக்கைகளுக்காக' தடுத்து வைக்கப்பட்டனரே தவிர அவர்களுடைய அரசியல் சிந்தனைகளுக்காக அல்ல…
மாட் சாபுவை நோபள் பரிசு பெற்ற இலக்கியவாதி ஒருவருடன் ஒப்பிடுகிறார்…
பாஸ் துணைத் தலைவர் மாட் சாபுவை, துருக்கிய வரலாறு குறித்து துணிச்சலாகப் பேசிய நோபள் பரிசு பெற்ற அந்த நாட்டு இலக்கியவாதியான ஒர்ஹான் பாமுக்-குடன் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். "நோபள் பரிசு பெற்றவரான ஒர்ஹான் பாமுக் முதலாவது உலகப் போரின் போது ஆர்மினியர்கள்…
‘Undilah’ வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’
வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டதற்கான காரணத்தை மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) விளக்கியுள்ளது. இசைக் கலைஞர் பீட் தியோ தயாரித்த நான்கரை நிமிடங்களுக்கு ஒடும் அந்த பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவுக்கு திரைப்படத்…
எப்படி நல்ல திருடர்களாக இருப்பது என திருடர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்
"உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்பது இங்கு கேள்வியே அல்ல. நீங்களும் மக்களைப் போல ஏழைகள் என்று அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்பதே முக்கியம்." உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என மகாதீர் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை யார்…
மனோகரன் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தேசியக் கொடி மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக கோத்தா அலம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரனை டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர்…
பெர்க்காசா: ஹுடுட் மீதான பாஸ்-டிஏபி பிணக்கு வெறும் ” நாடகம்…
ஹுடுட் சட்டம் மீதான பாஸ்-டிஎபி பிணக்கு வெறும் நாடகம், அந்த இஸ்லாமியக் கட்சிக்கு மலாய் ஆதரவை அதிகரிப்பதே அதன் நோக்கம் எனப் பெர்க்காசா கூறுகிறது. பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதை உறுதி செய்வதற்காக அந்த இரண்டு எதிர்க்கட்சிளும் தங்களுடைய பழைய நாடகத்தை மறு அரங்கேற்றம் செய்கின்றன…
தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்க, பெர்சே
தேர்தல் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), சீரமைப்புகளை ஆராய்வதுடன் தேர்தல் ஆணைய(இசி)த்திலும் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)யிலும் ஏற்படும் தொழில்நுட்பக் குறைகளுக்குத் தீர்வு காணவும் முயல வேண்டும். இவை கவலை தருவதாக பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் ஏ.சுப்ரமணியம் பிள்ளை இன்று கூறினார். மாற்றரசுக் கட்சியும்…
சாமிவேலுவுக்கு எதிரான வழக்கைப் பேசித் தீர்க்க முடிவு
மாஜு கல்வி மேம்பாட்டுக் கழக(எம்ஐஇடி) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.சித்ரகலா மஇகா முன்னாள் தலைவருக்கும் மேலும் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்குகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார். தம் கட்சிக்காரர் நீதிமன்றத்துக்கு வெளியில் விவகாரத்துக்குத் தீர்வுகாண விரும்புவதாக அவரின் வழக்குரைஞர் பிரகாஷ் லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.…
‘Undilah’ வீடியோ மீட்டுக் கொள்ளப் பட்டதை எம்சிஎம்சி விளக்க வேண்டும்
வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும், கட்சிச் சார்பற்ற வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என உள்ளூர் ஒளிபரப்பு நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். ""பொதுச் சேவை அறிவிப்பான வாக்களியுங்கள் (…
நகல் வாக்காளர் பட்டியலிலிருந்து 200 அந்நியர்கள் நீக்கப்படுவர்
சிலாங்கூர் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதிக்கான 2011ம் ஆண்டு இரண்டாவது கால் பகுதிக்கான நகல் துணை வாக்காளர் பட்டியலிலிருந்து குடிமக்கள் அல்லாத 220 பேரை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் உள்ளூர் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்த 222 பெயர்கள் மீது…
பினாங்கு முதலமைச்சர் பதவி மீது ஆரூடங்கள் வேண்டாம் என்கிறார் கோ
பொதுத் தேர்தலுக்கான தேதியைப் பிரதமர் அறிவிக்கும் வரையில் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்கள் மீதும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் பொருத்தமான வேட்பாளர்களுடைய…
உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறாரே…
தூதுவன்: இண்ட்ராஃப் மனித உரிமை கட்சியின் உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறா Read More
நஜிப் கழுத்தைச் சுற்றியுள்ள கழுகுகள்
இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும். நஜிப் உண்மை நிலைக்கும் கானல் நீருக்கும் இடையில் அல்லாடுகிறார்…
பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக் கூடும் என்னும் அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "வால் ஸ்டீரிட் என்ற நியூயார்க் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். ஆகவே நாம் சூழ்நிலையை மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது," என அவர்…
சடலம் குறித்த தகராற்றில் புதிய திருப்பம்
இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் எனக் கூறப்படும் லாரன்ஸ் செல்வநாதனுடைய சடலத்தை அவரது நண்பர்கள் சுயமாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்து விட்டதால் லாரன்ஸின் குடும்பத்துக்கு புதிய பிரச்னைகள் தோன்றியுள்ளன. இறுதிச் சடங்களுக்காக லாரன்ஸின் சடலத்தை சிரம்பானில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குக் கொண்டு சென்ற அவரது நண்பர்கள் அந்த சடலத்தித்…


