பிரதமரின் போக்கு மிதவாதமா?, சந்தர்ப்பவாதமா?

- டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 19,2013. நல்லதொரு நாட்டுக்கும், அதன்  தலைவர்களுக்கும் நிலையான கொள்கைகளிருக்க வேண்டும்.  நம் நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் கொண்டவைகளாகவும் நகைச்சுவையாகவும் உள்ளன. ஆனால், இதுவரை  இவர்கள்  பேசியதையும், செய்தவற்றையும்  ஆழமாகக் கவனித்தால்,  இவர்கள் தேசத்திற்கும், மக்களுக்கும் ஆற்றியுள்ளது…

சுவா: லியோ கண்டனத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கில்லை

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியோ தியோங் லாய்மீது  கொண்டுவரப்படவுள்ள கண்டனத் தீர்மானத்தை மீட்டுக்கொள்வது தம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்கிறார். கண்டனத் தீர்மானம் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) கடிதம் வரப் பெற்றதை உறுதிப்படுத்திய…

இன்று அம்னோ தேர்தல்

அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் இப்போது உதவித் தலைவருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக அறுவர் போட்டியிடுகின்றனர். நடப்பு உதவித் தலைவர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், ஷாபி அப்டால் ஆகியோரை எதிர்த்து…

லியோவிடம் கருணை காட்டுங்கள்: மசீசவுக்கு ஆர்ஓஎஸ் வேண்டுகோள்

நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் (இஜிஎம்), துணைத் தலைவர் லியோ தியோங் லாய்க்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டாம் எனச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி முற்றுவதைத் தவிர்க்க அத்தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய்…

பிசிஏ தொடர்பில் மாமன்னருக்கு மகஜர் கொடுத்தார் கர்பால்

குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தத்துக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் என மாமன்னரைக் கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை டிஏபி தலைவர் கர்பால் சிங் இஸ்தானா நெகாராவிடம் ஒப்படைத்துள்ளார். அகோங்கின் ஒப்புதல் இல்லாவிட்டாலும்கூட அத்திருத்தங்கள் 30 நாள்களில் இயல்பாகவே சட்டமாகிவிடும் என்பதை உணர்ந்தே கர்பால் அம்மகஜரைக் கொடுத்துள்ளார். “அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டாம்…

என் மகன் ஆசிபெற்ற வேட்பாளர் அல்லவே: மகாதிர் அங்கலாய்ப்பு

அம்னோ பேராளர்கள் நாளைதான் வாக்களிப்பார்கள்.  ஆனாலும்  அக்கட்சியின் முன்னாள் தலைவர்  டாக்டர் மகாதிர், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  ஆறு வேட்பாளர்களில்  ஒருவராகிய தம் புதல்வர் முகிரிஸ் வெற்றிபெற மாட்டார் என்பது தமக்கு இன்றே தெரிந்து விட்டது  எனக் கூறிக்கொள்கிறார். “அம்னோவில், தலைவர்  யாரை விரும்புகிறாரோ அவர்களைத்தான் பேராளர்கள்…

லிம்: நஜிப்பின் மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கியது

நாட்டில் இரண்டுவகை சட்டம் என்பதை அமைச்சரவை நிலைநாட்டியதை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருந்த மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கிப் போயிற்று என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அரசாங்கம் வலச்சாரி தரப்புகளின் நெருக்குதலுக்குப் பணிந்து ‘அல்லாஹ்’ என்னும்…

தனியார் மருத்துவமனையால் பெட்ரோனாசுக்கு ரிம1 பில்லியன் இழப்பு

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ்,  பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையம் என்னும் ஆடம்பரமான மருத்துமனையின்வழி ரிம1 பில்லியனுக்குமேல் இழப்பை எதிர்நோக்கி  இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். ரிம 544 மில்லியன்  செலவில் கட்டப்பட்ட அம்மருத்துவமனை,  ஒவ்வோர் ஆண்டும் நட்டப்பட்டு வந்திருப்பதாகவும் மொத்த நட்டம் ரிம1 பில்லியனைத் தாண்டி…

குறைபாடுள்ள சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்பு(திருத்த)ச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என என்ஜிஓ-களும் வழக்குரைஞர் மன்றமும் கருதினால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறி இருப்பது நாடாளுமன்ற நடைமுறையைக் கேலி செய்வதாக உள்ளதென மாற்றரசுக் கட்சி எம்பி ஒருவர் சாடியுள்ளார்.…

செர்டாங் மருத்துவமனை கூரை மீண்டும் இடிந்து விழுந்தால் அமைச்சர் பதவி…

செர்டாங் மருத்துவமனையில் நான்காவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்தால் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் பதவி விலக வேண்டும் என கூலாய் எம்பி தியோ நை ச்சிங் கோரியுள்ளார். ஏற்கனவே, கூரை இடிந்துவிழுந்த சம்பவங்களின்போது, அவற்றுக்காக காரணங்கள் ஆராயப்பட்டு மீண்டும் அவ்வாறு நிகழாதிருக்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும்…

சுங்கை லிமாவில் பாஸ் தேர்தல் இயந்திரம் அமைந்தது

பாஸ் கட்சி, நேற்றிரவு கெடா, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை அமைத்தது.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டதானது அந்த இடைத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. கட்சி உறுப்பினர்கள்,  மழையினால் சேறும் சகதியுமான மாறிப்போன நிலப்பகுதியில் குடைகளைப் பிடித்தவாறு நிகழ்வினைப் பார்த்துக்…

விதிமுறைகள் சரியாகத்தான் உள்ளன ஆனால், தவறிழைக்கும் அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவதில்லை

தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங்,   தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுப்பதில்  அரசுத்துறை தலைவர்கள் கண்டிப்பு  காட்டுவதில்லை என்கிறார். தவறு செய்தால் தண்டனை என்னவென்பதை விவரிக்கும்  விதிமுறைகள் எல்லாம்  சரியாகத்தான் உள்ளன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில்லை. அம்ப்ரின், நேற்று, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில்…

பக்காத்தான்: முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்

பக்காத்தான் ரக்யாட், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அதன்  நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அண்மைய முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க இன்று ஒன்றுகூடிய பக்காத்தான் தலைவர்கள் இதை அறிவித்தார்கள். அது பற்றி மேலும் விவரிக்க அவர்கள் மறுத்தனர். நெருக்கிக் கேட்டதற்கு, “முன்பிருந்த நிலைதான் இப்போதும். நாங்கள்…

ஜாஹிட்: பிசிஏ-இல் மாற்றம் செய்ய அரசாங்கம் தயார்

சர்ச்சைக்குரிய  குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த்தைக் குறைகூறியுள்ள தரப்புகளுடன் பேச்சு நடத்திய பின்னர்,  தேவையென்றால்  அதில் மேலும் திருத்தங்கள் செய்ய அரசாங்கம்  தயாராக இருக்கிறது என  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். பிரதமர் பணித்திருப்பதை அடுத்து,  அஹ்மட் ஜாஹிட், பிசிஏ-யைக் குறைகூறியுள்ள வழக்குரைஞர் மன்றம், என்ஜிஓ-கள் ஆகிய தரப்பினருடன்  பேச்சு…

‘நஜிப்பின் பூமிபுத்ரா கொள்கை என்இபி-இலிருந்து மாறுபட்டதல்ல’

அண்மையில்,  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பிஇஇ), 1970-இல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையைப் போன்றதுதான் என நாட்டின் மிகப் பெரிய சீன வணிகக் கூட்டமைப்பு கூறுகிறது. ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவுவதுதான் பிஇஇ-யின் தலையாய நோக்கம் என்று கூறப்படுவதைத் தாம் சந்தேகிப்பதாக…

ஆலய கொள்ளை தொடர்பில் இருவர் கைது

கடந்த மாதம்,  மலாக்கா  ஆலயங்களில் திருடுபோன ரிம20,000 மதிப்புள்ள பொருள்களின் தொடர்பில் போலீசார் இருவரைக்  கைது  செய்துள்ளனர். செப்டம்பர் 19-இல்,  பத்து பிரண்டம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி கோயிலில்  எட்டு சிலைகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில்  தஞ்சோங் கிளிங்,  தாமான் தாங்கா பத்துவில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக  மலாக்கா குற்றப் புலனாய்வு…

லாவோஸ் விமான விபத்தில் பலியான 49 பேரில் ஒருவர் மலேசியர்

நேற்று, லாவோஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்  தென் லாவோசில், மீகோங் ஆற்றில் விழுந்து நொறுங்கியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவ்விபத்தில் விமானத்தில்  இருந்த  49 பேரும் உயிர் இழந்தனர்  என லாவோஸ் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.   10 நாடுகளைச் சேர்ந்த…

கிழக்கு மலேசியாவில், கிறிஸ்துவர்கள்‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை இல்லை

சாபாவிலும் சர்வாக்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் வழிபாட்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தாராளமாக பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.  மலாய்மொழி பைபிளிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர்  ஜோசப் குருப் கூறினார்  என சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது. “முறையீட்டு…

ஜாகார்த்தா போஸ்ட் ஆசிரியர்: இறைவன்மீது யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை

இறைவன் ஒருவனே என நம்பும் எவரும் முஸ்லிம்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும்  கிறிஸ்துவர்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும் கூற முடியாது.   ‘அல்லாஹ்’  என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது  என  மலேசிய முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்வினையாற்றியுள்ள  இந்தோனேசிய நாளேடான  ஜகார்த்தா போஸ்ட்-இன் ஆசிரியர்  இவ்வாறு…

உதவித் தலைவர் தேர்தல்: ஹிஷாமையும் முக்ரிசையும் முந்திக்கொண்டு செல்கிறார் அலி…

அம்னோவில் உதவித் தலைவர் தேர்தலில் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் பரவலாக நிலவும் எதிர்பார்ப்பைக் கவிழ்த்து விடுவார்போலத் தெரிகிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் தேர்தல் பற்றிய அண்மைய கணிப்பு இது: குற்றத்தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வந்ததாலும் பல்வேறு விவகாரங்களில் கடுமையான போக்கை…

கேஎல்ஐஏ2 கிட்டத்தட்ட தயாராகி விட்டது

குறைந்த கட்டண விமானச்சேவைக்கான  மிகப் பெரிய விமான நிலையமான கேஎல்ஐஏ2,  திட்டமிட்டபடி  2014 மே 2-க்குள் செயல்படத் தயாராகிவிடும். அதன் முனையக் கட்டிடம் 99 விழுக்காடு தயாராகிவிட்டது என்றும் “முடியும் தருவாயில் உள்ளது” என்றும் மலேசிய விமான நிறுவன ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி) தலைமை நடவடிக்கை அதிகாரி அப்ட் ஹமிட்…

‘கெராக்கான் தேசிய தலைவர் பதவிக்கு தெங் சரியானவர் அல்லர்’

பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ, தேசிய தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மாநில கெராக்கானில் உள்ள அனைவரும் வரவேற்பதாகக் கூறுவதற்கில்லை. தேசிய தலைவர் பதவிக்கு தெங்கைக் காட்டிலும் சிறந்த தலைவர்கள் உண்டு என வழக்குரைஞர் பல்ஜிட் சிங் கூறினார். பல்ஜிட், செப்டம்பர் மாதம் மாநிலத் தலைவர் பதவிக்கு…

மசீச இளைஞர் தலைவர் கட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதியில்லை

டாக்டர் சுவா சொய் லெக் கட்சித் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்றளித்த வாக்குறுதியை மீறினால் தாம் எந்தவொரு பதவிக்கும் போட்டியிடப்போவதில்லை என்று மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார். தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என மே 6-இல் வாக்குறுதி அளித்த சுவா, அவ்வாக்குறுதியைக்…