வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கவும்

புகை மூட்ட நெருக்கடியால் மூவாரிலும் மலாக்காவிலும் ஊரடங்கை விதிக்கும்  போது தொழிலாளர்களையும் அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சேர்த்துக்  கொள்ள   வேண்டும் என தேசிய வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது. காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 'மிகவும் அபாயகரமான' அளவை எட்டிய  பகுதிகளில் பள்ளிக் கூடங்களை…

குவாந்தானில் பள்ளிகள் நாளை திறக்கப்படும்

குவாந்தானில் புகை மூட்டம் காரணமாக இன்று மூடப்பட்ட 120  பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படும் என பாகாங் கல்வித் துறை இயக்குநர்  ரோஸ்டி இஸ்மாயில் கூறினார். என்றாலும் வகுப்பறைகளுக்கு வெளியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  அந்தப் பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட மாட்டா என அவர் சொன்னார். "எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை பள்ளிக்கூடங்களுக்குத்…

காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியாவுக்கு 2 மில்லியன் டாலர் தேவை

இந்தோனிசியா ரியாவ் மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத் தீயை அணைக்க  அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 20 பில்லியன்  ரூப்பியாவையை செல்வு செய்ய வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தொழில்  நுட்ப மதிப்பீடு பயன்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அந்த காட்டுத் தீயிலிருந்து எழுந்த புகை, ரியாவ் மாநிலத்தையும்…

பதவி விலக முடியாது : இசி மீண்டும் வலியுறுத்து

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி என்னதான் வாய்கிழிய கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் மன்ற (இசி) உயர் அதிகாரிகள் பதவிவிலகும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவ்வாணையத்தின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார். தங்களைப் பதவிவிலகக் கோருவது பொறுப்பற்றதாகும் என்பதுடன் அது அரசமைப்புக்கு விரோதமான செயலுமாகும் என்றாரவர். “இசி சட்டப்படி தவறு…

கல்வியில் தகுதிமுறை என்பது சீனர்களுக்குதான் நன்மையாக உள்ளது

மலாய் ஆலோசனை மன்றத் தலைவர் இப்ராகிம் அபு ஷா, கல்வியில் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நடைமுறை அகற்றப்பட வேண்டும் என்று கூறியிருப்பதை மலாய்க் கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். “தகுதிமுறையால் கல்வியில் சீனர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். அது மலாய் மாணவர்களுக்கு நன்மை செய்யவில்லை. உயர்கல்வி நிலையங்களில் மலாய் மாணவர்களின்…

புகைமூட்டம் மோசமானால் வெளிவேலைகளை நிறுத்த வேண்டும்

புகைமூட்டம்  வருந்தத்தக்க அளவுக்கு  மோசமடையுமானால் வெளிவேலைகளைக் குறைப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிறுத்துவது நல்லது என பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (டோஷ்) தலைமை இயக்குனர் டாக்டர் ஜொஹாரி பஸ்ரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். “வெளி இடங்களிலும் கட்டுமானப் பகுதிகளிலும் வேலை செய்வோரின் நலங்காக்க முதலாளிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். “பாரம்…

தவறு செய்துள்ள மலேசிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என…

இந்தோனிசியா,  மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் புகை மூட்ட  நிலவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சுகாதார அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். "புகை மூட்டத்துக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமாக இருந்தாலும் கூட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்தோனிசிய அதிகாரிகளைக்  கேட்டுக் கொள்கிறேன்," என…

ஜாலான் பார்லிமெண்டில் போராளிகள் போராட்டம், 26 பேர் கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் தங்கள் முகாம்களிலிருந்து  அகற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் போராட்டத்தை ஜாலான்  பார்லிமெண்டுக்கு  இன்று தொடர்ந்தனர். அவர்களில் மாணவர் போராளி அடாம் அட்லி அப்துல் ஹலிமும் ஒருவர்  ஆவார். நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில்  காலை பத்து மணி தொடக்கம்…

அல்டான்துயா கொலை: மேல்முறையீடு மீது விசாரணை தொடங்கியது

மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷரீபு கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுமீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிபதிகள் குழு அதை விசாரிக்கிறது.…

கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் 13வது நாடாளுமன்றம் கூடியது

13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவை சபாநாயகர் தேர்வு, உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்  கொள்வது ஆகியவை இன்றைய முக்கிய நிகழ்வுகளாகும். நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு செல்லும் சாலையில் சீருடையணிந்த 50க்கும்  மேற்பட்ட போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அருகிலுள்ள பாடாங் மெர்போக்கில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால்…

புகைமூட்டத்துக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பீர்: குவான் எங்

புகைமூட்டத்துக்குக் காரணமானவை என்று இந்தோனேசியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். எட்டு மலேசிய நிறுவனங்கள் தோட்டங்களை எரித்து துப்புரவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பல்தசார் கம்புவாயா…

மக்களவை சபாநாயகராக பண்டிக்கார் அமீன் மீண்டும் தேர்வு பெற்றார்

பண்டிக்கார் அமீன் முலியா மக்களவை சபாநாயகராக இன்று மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டார். 13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தின் முதல் நாளான இன்று காலையில்  'வாக்கெடுப்பு' நடந்த பின்னர் அவர் சபாநாயகராக பதவி உறுதி மொழி எடுத்துக்  கொண்டார். வாக்கெடுப்பில் பண்டிக்காருக்கு 133 வாக்குகள் கிடைத்தன. அவர் பக்காத்தான்  ராக்யாட் முன்மொழிந்த…

புகைமூட்டம் மூவாரில் குறைந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் மோசமானது

காற்றுத்தூய்மைக்கேடு குறியீடு (ஏபிஐ) ஜோகூரின் மூவாரில் ‘அபாய எல்லை’யான 746-இலிருந்து இன்று காலை 7மணிக்கு 148ஆகக் குறைந்தது. ஆனால், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், திரெங்கானு ஆகியவற்றில் நிலமை மோசமடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. சிலாங்கூரில் கிள்ளானிலும் திரெங்கானுவில் கெமாமானிலும் காற்றின் தரம் முறையே 296 ஆகவும் 249 ஆகவும்…

பாடாங் மெர்போக்கிலிருந்து எதிர்ப்பாளர்கள் அகற்றப்பட்டனர்.

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு  ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் பாடாங் மெர்போக்கில் எதிர்ப்பாளர்கள்  அமைத்திருந்த கூடாரங்களை அதிகாரிகள் இன்று காலை மணி 4.30 வாக்கில்  அகற்றினர். அந்தத் திடலிலிருந்து கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் கோலாலம்பூர்  மாநகராட்சி மன்ற (DBKL) அமலாக்க அதிகாரிகளும் ஆயுதமேந்திய  போலீஸ்காரர்களும் ஈடுபட்டதாக…

புகைமூட்டத்துக்கு எதிராக விழிப்புநிலையில் பினாங்கு

புகைமூட்டத்தைச் சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளையும் வழிகாட்டிமுறைகளையும் பின்பற்றுமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மாநிலச் செயலாளருக்கும் ஆட்சிக்குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளார். போதுமான முகமூடிகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள் வேண்டும் என்றாராவர். ஆனால், சிங்கப்பூர் ஒரு மில்லியன்  N95வகை முகமூடிகளை முன்கூட்டியே வாங்கிவிட்டதால் அந்த வகை முகமூடிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது.…

‘பெரிய தொழில்கள் பாதுகாக்கப்படும் வரையில் புகை மூட்டம் தொடரும்’

உங்கள் கருத்து : "சுமத்ராவில் உள்ள தோட்டங்களில் அரசாங்கத்துக்கு பெரிய அளவில் பங்குகள்  உள்ளன. ஆகவே புகை மூட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் அது உண்மையில்  ஆர்வம் காட்டப் போவதில்லை." புகை மூட்டம்: மூவாரிலும் லேடாங்கிலும் பிரதமர் அவசர காலத்தைப் பிரகடனம்  செய்தார். பார்வையாளன்: ஒரு நாட்டில் அந்நிய நிறுவனம்…

ஹூசாம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், கிட் சியாங்

  பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா இரு நாள்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டைருப்பது அதிகார மீறலாகும்.  இது நற்சிந்தனையுடைய அனைத்து மலேசியர்களின் கண்டனத்திற்கும் உரியது என்று டிஎபியின் மூத்த தலைவர் இன்று விடுத்த செய்தி அறிக்கையில் கூறியுள்ளார். தேசநிதனைச் சட்டம் 1948 செக்சன் 4 இன்…

பாடாங் மெர்போக்கில் சில கூடாரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் SAMM அங்கு…

பாடாங் மெர்போக்கில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எண்ணிக்கையை  பாதியாக குறைக்க Solidariti Anak Muda Malaysia (SAMM) முடிவு செய்துள்ளது. கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்துடன் (DBKL) சமரசம் செய்து கொள்ளும்  முயற்சி அதுவெனக் கருதப்படுகின்றது. இன்று நண்பகலுக்குள் அந்தத் திடலைக் காலி செய்யுமாறு DBKL நோட்டீஸ்  கொடுத்த பின்னர் 40…

அன்வார்: இனிமேல் ‘505 கறுப்பு தின’ பேரணி இல்லை

தேர்தல் மோசடிக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் மேலும் '505 கறுப்பு தின'  பேரணியை நடத்தும் திட்டம் எதுவும் பக்காத்தான் ராக்யாட்டிடம் இல்லை. இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அரசு சாரா அமைப்புக்கள் அத்தகைய பேரணிகளை நடத்தக் கூடும் என அவர்  சொன்னார். "நான் அரசு…

டிஏபி: அரசாங்கம் புகை மூட்ட நெருக்கடியைக் காட்டிலும் பண்டா கரடிகளுக்கு…

இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல், புகை மூட்ட  நெருக்கடிக்குப் பதில் சீனாவிலிருந்து இங்கு கொண்டு வரப்படவிருக்கும் பண்டா  கரடிகளுக்கு முதலிடம் கொடுப்பதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சாடியுள்ளார். "அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை புகை மூட்டம்  பற்றியதல்ல. மாறாக அந்த பண்டா…

ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு தீ தேர்வு செய்யப்பட்டார்

ஜோகூர் சுல்தானுக்குத் தாம் பரிந்துரை செய்த பல வேட்பாளர்களில் தீ சியூ  கியோங்-கும் ஒருவர் என அந்த மாநில மந்திரி புசார் காலித் நோர்டின்  கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் விடுத்த  அறிக்கைக்குப் பதில் அளித்த காலித், ஆட்சி…

அன்வார்: நமது போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது

கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும்  மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது என பிகேஆர்  மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். சில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களிடையே அத்தகைய அரசியல் தளர்வு  ஏற்பட்டு வருவதாக அவர் சொன்னார். பாஸ் உதவித் தலைவர் ஹுசாம்…

இரண்டுநாள் தடுப்புக் காவலில் ஹுசாம்

விசாரணைக்காக பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவை இரண்டு நாள் தடுத்துவைக்க போலீசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். திங்கள்கிழமை, கட்சி செய்தித்தாளான ஹராகாவில் வெளிவந்திருந்த கட்டுரையில் ஹுசாம் தேச நிந்தனைக் கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்,  நேற்று பிற்பகல் கோலாலும்பூரில்  கைது செய்யப்பட்டு கிளந்தான் கொண்டு செல்லப்பட்டார்.