கடற்படை தாக்குதல் ஏவுகணை (NSM) அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுகணை ஏவுதள அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்வதற்கான நார்வேயின் முடிவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாக சாடியுள்ளார், மேலும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விவரித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு…
‘ஆவணங்கள் பெருவாரியாக இருப்பதால் தாயிப் மீதான புலனாய்வுக்கு காலம் பிடிக்கிறது’
சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட்-டுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள் பெருவாரியான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் சாட்சிகளும் நாடு முழுவதும் நிறைய உள்ளனர். அதனால் தாயிப் மீதான புலனாய்வு நீடித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு அதன்…
மசீச: மதம் மாற்ற மசோதா தேசிய சமரசத்துக்கு எதிரானது
குழந்தைகள் மதம் மாற்றம் சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத் திருத்தம் 'வஞ்சமாக' தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மசீச சாடியுள்ளது. அந்த மசோதா முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளை மீறுவதால் 'அதிர்ச்சியளிக்கிறது' என்றும் அதன் உதவித் தலைவர் கான் பிங் சியூ ஒர் அறிக்கையில் கூறினார். "அந்த மசோதா அதிகம்…
பணி ஓய்வு வயதுக்காக போராடாத சங்கத்துக்கு ஊழியர்கள் எதிர்ப்பு
தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு, அச்சங்கம் 60வயது பணி ஓய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி தெலிகாம் மலேசியா (டிஎம்) நிர்வாகத்தை வற்புறுத்தவில்லை என்பதற்காக பங்சாரில் உள்ள சங்கக் கட்டிடத்தில் நேற்றுக் காலை கண்டனக் கூட்டமொன்றை நடத்தியது. குறைந்தபட்ச பணிஓய்வு வயது சட்டம் ஜூலை…
குழந்தைகள் மதம் மாற்றம் மீதான மசோதா ‘அத்துமீறல்’ என்கிறார் ஒர்…
குழந்தைகள் மதம் மாற்றம் மீதான இஸ்லாமிய சட்ட நிர்வாகத்திற்கு (கூட்டரசுப் பிரதேசம்) முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் "கூட்டரசு அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மனிதர்கள் சமமானவர்கள்" என்ற கூற்றை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். 'parents' (பெற்றோர்கள்) என்ற சொல்லுக்குப் பதில்…
முதலில் காலித் இப்போது ஸாஹிட் பிரதமருக்கு இந்த வாரம் நன்றாக…
"அத்துமீறலுக்காக உள்துறை அமைச்சரும் ஐஜிபி-யும் விலக வேண்டும் என நாம் சொல்கிறோம். நஜிப்பும் விதி விலக்கல்ல' பூச்சோங் எம்பி: ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர் எங்கள் வாக்கு: ஆகவே போலீஸ் படைக்குப் பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் மீது வணிகர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டுள்ளது. அதே…
‘யென் யென்னை நான்தான் நியமனம் செய்தேன்’, அமைச்சர் உறுதிப்படுத்தினார்
டாக்டர் இங் யென் யென்னை மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துக்கு நியமனம் செய்தவர் சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ். இதை அமைச்சரே உறுதிப்படுத்தினார். சுற்றுலா துணை அமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளதால் யென் யென்னின் (இடம்) அனுபவம் சீனச் சுற்றுலா பயணிகளைக் கவர உதவும் என்ற நம்பிக்கையில் அவரை…
‘ஜோங்கர் சாலை ஒரு நடைபாதை;அது காரோடும் வீதியல்ல’: நஸ்ரி
ஜோங்கர் சாலையை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்குப் போக்குவரத்துக்குத் திறந்து வைப்பது சரி ஆனால், அதன்பின்னர் வார இறுதிகளில் போக்குவரத்துக்கு அது மூடப்பட வேண்டும் என்று விரும்புகிறார் சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ். சுற்றுலாத் தொழில் மலாக்காவுக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதையும் ஜோங்கர் சாலை…
மெகா கோபுரத் திட்டத்தை எதிர்க்க பல அமைப்புக்கள் தயாராகின்றன
அண்மையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 118 மாடி மெகா கோபுரக் கட்டிடம் மீது நோட்டீஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அதற்கு, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அந்த மெகா திட்டத்துக்கான வரைபடத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாநகர மேயர் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.…
தேசிய குத்துச் சண்டை வீரரைத் தாக்கியதற்காக அரச குடும்பத்தைச் சேர்ந்த…
தேசிய குத்துச் சண்டை வீரர் முகமட் பர்ஹான் முகமட் ஹரோனுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மேலும் இருவருக்கும் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 28 வயதான துங்கு நிக் தாஜுடின் இஸ்வான் ஷா…
சிலாங்கூர் சுல்தான்: சட்டங்களுக்கு தவறான விளக்கங்களைக் கொடுக்க வேண்டாம்
சில பிரிவுகளுடைய நன்மைக்காக சட்டங்களுக்குத் தவறான விளக்கம் கொடுக்க வேண்டாம் என சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "கூட்டரசு அரசமைப்பு, மாநில அரசமைப்பு, நாட்டின் சட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக மதித்து சட்டங்களில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என நான் எல்லாத்…
‘தேக்க நிலை உருவானால் சுல்தான் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும்’
திரங்கானு சுல்தான் தேக்க நிலை ஏற்பட்டு மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு யார் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்க முடியாது போனால் அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும் என அரசமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார். சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்படுமானால் மந்திரி புசார் நியமனத்தை சுல்தான் முடிவு…
இந்தோனிசியா, எட்டு நிறுவனங்கள் மீது புகைமூட்டம் தொடர்பில் வழக்குத் தொடுக்கத்…
இந்தோனிசிய புலனாய்வாளர்கள், சுமத்ராவில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீ-க்கு காரணமானவை எனச் சந்தேகிக்கப்படும் எட்டு தென் கிழக்காசிய நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் போடுவதற்குத் தயாராகி வருகின்றனர். அந்தப் புகை மூட்டம் இந்தோனிசியாவின் அண்டை நாடுகளான மலேசியாவையும் சிங்கப்பூரையும் கடுமையாகப் பாதித்தது. காற்றுத் தூய்மைகேட்டுக்கு காரணமானவை எனத் தான்…
விடி சிங்கம் நீதித் துறைச் சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்
ஏ குகன் தீர்ப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம், 13 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றிய பின்னர் ஒய்வு பெற்றுள்ளார். நீதிபதி சிங்கம் இன்று தமது 65வது வயதில் ஒய்வு பெறுகிறார். தாம் ஒய்வு பெறும் வயதை அவர் தேர்வு…
பினாங்கு சட்டமன்றத்துக்கு வெளியில் உத்துசான் நிருபர் ஆட்சேபம்
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவைச் சேர்ந்த நிருபர் ஒருவர், பினாங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் சடங்கில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் தனி ஒருவராகப் போராட்டம் நடத்தினார். அந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு…
திரெங்கானுவில் தொங்கு சட்டமன்றத்துக்கு வாய்ப்பில்லை
திரெங்கானுவில் இடைத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் பிஎன் 16 இடங்களைப் பெற்றிருக்கும். பக்காத்தான் ரக்யாட்டும் 16 இடங்களைப் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமா என்றால் இருதரப்பு அரசியல்வாதிகளும் ஏற்படாது என்கிறார்கள். சட்டமன்றத் தலைவருக்கும் வாக்குரிமை உண்டு. அந்த வாக்குபலத்தில் பிஎன் ஆட்சியைத்…
‘மதமாற்றச் சட்டத்தை மாற்ற அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை’
கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சட்டத்தில் சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோரில் ஒருவர் சம்மதித்தால் போதும் என்ற திருத்தத்தைச் செய்வதற்குமுன் முதலில் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறது மலேசிய வழக்குரைஞர் மன்றம். “பெற்றோரில் ஒருவர், மதம்-மாறா மற்றொரு பெற்றோரின் ஒப்புதலின்றி சிறு பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு…
லிம் குவான் எங்: ஐஜிபி எல்லாத் தடுப்புக் காவல் மரணங்கள்…
ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரையில் நிகழ்ந்த ஏ குகன் மரணம் உட்பட அனைத்து தடுப்புக் காவல் மரணங்கள் பற்றிய முழு விவரங்களை வழங்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர்…
இடைத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுமா? அடுத்த வாரம் தெரியும்
கோலா பெசூட் இடைத் தேர்தலில் சர்ச்சைக்குரிய அழியா மையைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்(இசி) இன்னும் முடிவு செய்யவில்லை. “அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம்”, என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. பிஎன்னின் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார் காலமானதை அடுத்து …
பிஎஸ்எம் பக்காத்தானுடனான உறவுகளை மறுஆய்வு செய்யும்
இன்று தொடங்கிய மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)-இன் ஆண்டுக் கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தானுடனான உறவுகளையும் பேராளர்கள் ஆராயக்கூடும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் கூறினார். இந்த ஆண்டு சுமார் 300 பேராளர்கள் கலந்துகொள்ளும் அந்த மூன்று-நாள்…
சுஹாக்காம்: அவசர காலச் சட்டங்கள் மீண்டும் வேண்டாம்
குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு தடுத்து வைப்பதற்கு வகை செய்த 1969ம் ஆண்டுக்கான அவசர கால (பொது ஒழுங்கு குற்றத் தடுப்பு) சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் அல்லது அது போன்ற சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள யோசனைகளை சுஹாக்காம் (மலேசிய மனித உரிமை ஆணையம்)…
போலீஸ் தலைவர் குகனுக்குப் பதில் சொல்ல வேண்டும்
"அந்தத் தடுப்புக் காவல் மரணத்துக்குக் காரணமான அவரும் போலீஸ் அதிகாரிகளும் தீர்ப்பு பணத்தைச் செலுத்துமாறு செய்யப்பட வேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படக் கூடாது." குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது டாக்டர் சுரேஷ் குமார்: மதிப்புக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம் நீதிமன்றத்தில்…
மெட்ரிகுலேசன் மாணவர் பட்டியலைக் காட்டுங்கள்: பெற்றோர்கள் ஜெயாவிற்கு மீண்டும் படையெடுப்பு
-அ. திருவேங்கடம், ஜூன் 27, 2013. நாடளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் 1500 இந்திய மாணவருக்கு இடம் கொடுத்து விட்டோம் என்னும் பதில்ஆச்சரியமளிக்கவில்லை.இவரின் இந்த பதிலை அச்சடித்தாற் போல் ஏற்கெனெவே துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழைமைகளில் கமலநாதனும், நாங்களும் அவரது…
இசி-இல் ‘எதிரணி ஆதரவாளர்கள்’
தேர்தல் ஆணையத்தில் (இசி) மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர்கள் உண்டு என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “எனது தொகுதியான புத்ரா ஜெயாவில், பல புதிய வாக்காளர்கள் இருந்தனர். அவர்கள் ஹுசாம் மூசாவுக்கு (பக்காத்தான் வேட்பாளர்) வாக்களிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள். கேலாங் பாத்தாவிலும் அப்படித்தான் -வேண்டுமானால் (லிம்)…


