கோவிட்-19 தடுப்பூசிகளின் விளைவாக நோய்த்தடுப்பு ஊசி(adverse events following immunisation) போடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள்குறித்த தரவுகளை ஒரு நேரத்தில் வெளியிடுவதாகச் சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது என்று அதன் அமைச்சர் ட்ஸுல்கெஃப்லி அகமது கூறுகிறார். ஒரு திட்டவட்டமான கால வரையறைபற்றிக் குறிப்பிடாமல், சுகாதாரத் துறை அமைச்சராக இது…
திட்டமிட்டபடி டிஎல்பி தொடரும், மேலும் பள்ளிகள் அப்பட்டியலில் இணைக்கப்படும்
சர்ச்சைக்குரிய இருமொழித் திட்டம் (டிஎல்பி), திட்டமிட்டபடி தொடரும் எனக் கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. தற்போது இருமொழித் திட்டம் அமலில் இருக்கும் 1,215 பள்ளிகளிலும், அடுத்த வாரம் தொடங்கி, வகுப்புகள் தொடரும் எனக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தொடக்கம் கூடுதலாக இன்னும் 88…
பி.எஸ்.எம். : உலு லங்காட்டில் ஷுரைடாவைக் களமிறக்குவது, பிகேஆருக்கு நல்லதல்ல
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஷுரைடா கமாரூடினை உலு லங்காட் தொகுதியில் களமிறக்குவது பிகேஆருக்கு நல்லதல்ல என்று அத்தொகுதியின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் தெரிவித்துள்ளார். "உலு லங்காட்டில் ஷுரைடாவைக் களமிறக்குவது, இன்னும் சிக்கல்களை உண்டாக்கும், ஏனெனில் பிகேஆர் இரண்டாகப் பிரிந்துள்ளது. அவர் ஒரு பிரபலமான நபரும் இல்லை,…
அன்வார் ‘மக்கள் குரலை’ ஹரப்பானுக்கு நினைவூட்டுகிறார்
இவ்வார இறுதியில் பக்கத்தான் ஹரப்பான் மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டில் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அக்கூட்டணியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஹரப்பானின் வலிமை "மக்களின் குரலில்" இருக்கிறது என்று அக்கூட்டணியின் நான்கு உறுப்பியக் கட்சிகளுக்கும்…
மெமாலி விவகாரம்: ஆர்சிஐ தேவையில்லை; போலீஸ் பதில் கூறமுடியும், முன்னாள்…
மெமாலி சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) தேவையில்லை என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் அபு தாலிப் ஓத்மான் கூறுகிறார். போலீஸ் முன்வந்து 33 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை இம்மியும் பிசகாமல் வெளிப்படுத்த வேண்டும் என்றாரவர். இது நடந்து பல ஆண்டுகள்…
முன்னாள் ஏஜி மீண்டும் கூறுகிறார், ’சாலே அபாஸ் நீக்கப்பட்டதற்கு மகாதிர்…
முன்னாள் தலைமை நீதிபதி சாலே அபாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் காரணமல்ல என்று முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒத்மான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “நான் ஏற்கனவே கூறியுள்ளேன், மகாதிர் அவரை விலக்கினார் என்பதோ விலக்க விரும்பினார் என்பதோ உண்மையல்ல. மாமன்னரின் …
மலேசியா 2022- 23-இல் சமச்சீர் பட்ஜெட் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க…
மலேசியா ஏற்கனவே அறிவித்ததுபோல் 2020-இல் சமச்சீர் பட்ஜெட் என்ற இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று கூறும் இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனி, அதற்கு மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்றார். “2020க்குள் சமச்சீர் பட்ஜெட்டைக் காண முடியும் என்று நான் நம்பவில்லை. அதை அடைவதற்குப் …
ஹாடி: மாபுஸ் எப்பவோ செத்து விட்டார், இப்போதுதான் அடக்கம் செய்யப்படுகிறார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் கருத்தில் கட்சியிலிருந்து விலகிய பாஸ் எம்பி மாபுஸ் ஒமாட் “எப்பவோ இறந்து விட்ட ஒரு மனிதர்”. அந்த பொக்கோக் சேனா எம்பி கட்சியிலிருந்து வெளியேறியது குறித்துக் கருத்துரைத்தபோது ஹாடி அவ்வாறு கூறினார். “அவர் நீண்ட காலத்துக்கு முன்பே மறித்துப்போன மனிதருக்குச் சமம். …
பிஎன் சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் தேதி விவாதிக்கப்படவில்லை
நேற்றிரவு கூடிய பிஎன் உச்சமன்றச் சிறப்புக் கூட்டம் இட ஒதுக்கீடுகள் குறித்தோ 14வது பொதுத் தேர்தல் தேதி குறித்தோ விவாதிக்கவில்லை. எதிர்வரும் தேர்தலுக்கு பிஎன் தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடுவது குறித்து மட்டுமே உச்சமன்றம் கலந்துரையாடியது என்று அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். “தேர்தல் தேதி …
புதியப் பள்ளி கட்டப்படவில்லை, மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்தனர்
நேற்று பள்ளியின் புதிய தவணை தொடங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் தங்கள் சக நண்பர்களைச் சந்தித்தவேளையில், மலாக்கா, ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி நுழைவாயிலில் ஒன்றுகூடி நின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மெர்லிமாவ் இடைத்தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, இப்பள்ளிக்கூடத்தின் புதியக்…
பெட்ரோல் விலை 3 சென்னும் டீசல் விலை 6 சென்னும்…
கடந்த வாரம் 1 சென் குறைந்த, ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை இவ்வாரம் 3 சென் உயர்கிறது. அதேசமயம், கடந்த வாரம் 3 சென் உயர்ந்த டீசலின் விலை, இவ்வாரம் 6 சென் உயர்கிறது. இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன் 95-ன் விலை லிட்டருக்கு ரிம2.29, ரோன்…
செரே அணைக்கட்டு உடையப்போகிறதா? பொய்யான செய்தி- போலீஸ்
சுங்கை லெம்பிங்கில் செரே அணைக்கட்டு உடையப்போவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறிய குவாந்தான் போலீஸ் மாவட்டத் தலைவர் ஏசிபி அப்துல் அசீஸ் சாலே, பொதுமக்கள் முகநூல், வாட்ஸ்எப் முதலிய சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “உண்மையல்லாத …
பிரதமர் வேட்பாளர் நியமனம் நான்கு கட்சிகளின் முடிவைப் பொறுத்தது- மகாதிர்
பக்கத்தான் ஹரபானில் உள்ள நான்கு கட்சிகளும் ஒத்துக்கொண்டால் மட்டுமே தாம் பக்கத்தான் ஹரபானின் பிரதமர் வேட்பாளராக முடியும் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “நான்கு கட்சிகளும் என்ன முடிவெடுத்தாலும் அதை நான் ஏற்பேன்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்கத்தான் ஹரபான் கட்சிகளில் மூன்று …
“துரோகி, காபிர்”- ஹாடியைச் சாடுகிறார் மகாதிர்
பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் கடுமையாக சாடினார். ஹாடி அம்னோவுடன் கைகோத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வாக்குகளைச் சிதறடிக்க முனைந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் பிரதமர் அவரை “ஒரு துரோகி, காபிர் (சமய நம்பிக்கையற்றவர்)” எனச் சாடினார். “அவருக்கு …
ஈசாம்: ஹரபான் பிரதமர் வேட்பாளராக அஸ்மினை அறிவிக்கலாம்
பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலியைப் பிரதமர் வேட்பாளராகவும் பெர்சத்து உதவித் தலைவர் முக்ரிஸ் மகாதிரைத் துணைப் பிரதமர் வேட்பாளராகவும் பெயர் குறிப்பிடுவது குறித்து பக்கத்தான் ஹரபான் ஆலோசிக்க வேண்டும் என பிகேஆரின் முன்னாள் இளைஞர் தலைவர் ஈசாம் முகம்மட் நோர் முன்மொழிந்துள்ளார். ஹரபான் புது முகங்களைக் …
வேலை இழந்தால், அரசாங்கம் 600 ரிங்கிட் வழங்கும்
இவ்வாண்டு தொடக்கம், காப்புறுதி திட்டச் சட்டம் 2017-ன் கீழ், வேலை இழந்தவர்கள் மாதந்தோறு 600 ரிங்கிட்டை, மூன்று மாதங்களுக்கு இடைக்கால உதவியாகப் பெறும் தகுதியுடையவர்கள் ஆகின்றனர். இத்திட்டம், வேலை காப்புறுதி அமைப்பு (எஸ்ஐபி) மூலம், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என, மனித வளத்துறை அமைச்சர் ரிச்சார்ட்…
பெர்சத்து உறுப்பினர் : டாக்டர் எம் பதவி விலக வேண்டும்
கடந்த சனிக்கிழமை நடந்த, பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம், கட்சியின் சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை என்பதால், அதனை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஆர்ஓஎஸ்-ஐ பெர்சத்து உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். தெமெர்லோ தொகுதி தலைவர், அமெருஸ் சே ஓன், அந்த ஆண்டுப் பொதுக் கூட்டம் தனிநபர்…
இந்த ஞாயிற்றுக்கிழமை, டாக்டர் எம் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில், ஹராப்பானின் அதிகாரப்பூர்வப் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் அறிவிக்கப்படவுள்ளார். எனினும், டாக்டர் மகாதிர் ‘தற்காலிக பிரதமர்’ என்று குறிப்பிடப்பட வேண்டுமா, இல்லையா என்பது பற்றிய உடன்பாடு ஏதும் இல்லை என்று மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தற்காலிக பிரதமர்’ என்று அறிவிக்கப்பட்டால், தாங்கள்…
நஜிப்பைக் கவிழ்க்க மலேசியர்களைத் தூண்டுகிறார் மகாதிர், அம்னோ இளைஞர் தலைவர்…
எதிரணிக்கு வந்த பின்னர் மகாதிர் முகமட்டுக்கு எதிராகப் போலீஸ் புகார்கள் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அப்புகார்கள் பலவகையானவை. இன்று, கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ரஸ்லான் முகம்மட் ரபி இன்னொரு புகாரை மகாதிருக்கு எதிராகச் செய்துள்ளார். இன்று செய்யப்பட்ட போலீஸ் புகாரில்…
மாபுஸுக்கு அவருடைய சமய உறுதிமொழியை நினைவுறுத்துகிறது பாஸ்
பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாருக்குக் கடந்த பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது எடுத்துகொண்ட சமய (பயா) உறுதிமொழியை அவருக்கு நினைவூட்டுவதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். அந்த உறுதிமொழிப்படி, அவர் கட்சியிலிருந்து விலகினால் எம்பி பதவியைவிட்டும் விலக வேண்டும் என்றாரவர்.…
சிலாங்கூர் பாஸ் செயலவையில் ‘மாநில அரசுக்கு நெருக்கமாகவுள்ள’ கைருடினுக்கு இடமில்லை
சிலாங்கூர் பாஸ் கட்சியின் செயலவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் தாம் மாநில அரசுக்கு “நெருக்கமாக” இருப்பதை ஒப்புக்கொண்டார். “மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருப்பதால் சிலாங்கூர் அரசுடன் நெருக்கமாக உள்ளேன். அதை மறுக்கவில்லை. “சிலாங்கூர் அரசைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இல்லை, …
வான் ஜுனாய்டிக்கு விளக்கமளிக்க வேண்டும் பினாங்கு எக்ஸ்கோ
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோவ், அத்தீவின் தெற்குக் கடலோரத்தில் மாநில அரசு மேற்கொள்ளும் நிலமீட்புத் திட்டம் குறித்து இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சுக்குக் கடிதம் வாயிலாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்திட்டம் சட்டவிரோதமானது என்று அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறியதை செள மறுக்கிறார் …
நஜிப் : எதிர்க்கட்சியினர் கபடதாரிகள், ‘டோல் தந்தை’-ஐ ஆதரிக்கின்றனர்
4 டோல் சாவடிகளை மூடி இன்னும் 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், பிரதமர் நஜிப் எதிர்க்கட்சியினர் மீதான தனது தாக்குதலைத் தொடங்கிவிட்டார். நாட்டிலுள்ள டோல் சாவடிகளின் தந்தை என மகாதீரைக் குறிப்பிட்ட அவர், மகாதீருக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சியினரைக் கபடதாரிகள் என சித்தரித்தார். "இதுதான் மலேசியாவின் எதிர்த்தரப்பினர்,…
பஹாங் மற்றும் ஜொகூரில் பலத்த காற்று, கடுமையான மழை
நாளை, பஹாங் மற்றும் ஜொகூரின் பல இடங்களில், பலத்த காற்றுடன் கூடிய, கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய வானிலை இலாகா, பகாங் மாநிலத்தில் பெக்கான், ரொம்பின் மற்றும் ஜொகூரில் மெர்சிங் , செகாமாட் மாவட்டங்களை மோசமான வானிலை தாக்கும் என ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.…