ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன!

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த…

இறுதிப் போரின் போது தஞ்சம் அடைந்த 1 1/2 லட்சம்…

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இனப் படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும் இடையில்…

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் கைது!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போருக்கு பின்னரும் அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இலங்கை இராணுவத்தைவிட்டு தப்பிச் சென்ற 2500 படைச் சிப்பாய்கள்  இவ்வாண்டு வரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சுமார் 65000 சிப்பாங்கள் இராணுவத்தில் இருந்து…

மகிந்தாவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: பா. அரியநேத்திரன்

இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து, மக்களைப் பட்டினியால் வதைக்கின்றது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசு. வாழ வழியின்றித் திண்டாடும் மக்கள் மரணத்தின் வாசலில் நிற்கின்றனர் என்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சிமேன்டு ஆகியவற்றின் விலைகளை…

இலங்கையுடனான பேச்சுவார்த்தையை புதுப்பிக்க வேண்டும்: TNA

இலங்கை அரசுடன் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுடன் நடைபெற்று வந்தது. மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.…

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை: எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தல்

அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா தலைமையிலான நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை…

நாளைய தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய தலைவர்கள் பாடுபட வேண்டும்!

நாளைய தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய தலைவர்கள் பாடுபட வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் வலியுறுத்தினார். கனடியத் தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என அழைக்கப்படும் கனடியத்…

பான் கீ மூனின் பேச்சால் கடுப்பாகியுள்ள இலங்கை!

இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள் நேர்காணல் இலங்கை அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகம் ஒன்று…

இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது

இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் ஒரு குழந்தை வெடிபொருள் வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகில் இந்த அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2009-இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில்…

சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை இன்றுடன் முடிகிறது

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் (26.04.2012) முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார். எனினும் அவரைப் பிணையில் விடுவிக்கும் முயற்சிகள்…

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை: இலங்கை அரசு

தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து, இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பிறகு, குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களை பார்வையிட, பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர்…

ஈராண்டுக்குள் இலங்கை இரண்டாகும்: ஐ.நா. மன்றம் இதை அரங்கேற்றும்!

ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் இலங்கை அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலங்கை இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும் என்றும், ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின்…

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் வாபஸ் பெற ராஜபக்சே மறுப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் அண்மையில் இலங்கை சென்றனர். அங்கு 6 நாட்கள் தங்கி சுற்று பயணம் மேற்கொண்டனர். இறுதி கட்டப் போரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரில் சென்றனர். முள்வேலி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களையும், சொந்த ஊர்களில்…

விடுதலைப் புலிகளைப் பிடிக்க சிங்கள இராணுவம் வேட்டை

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போரில் விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே அறிவித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஐலன்ட்  என்ற நாளிதழில்…

45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் வடித்தோம்: இந்திய எம்.பி

"மட்டக்களப்பு பகுதியில், 45 ஆயிரம் விதவைகளைப் பார்த்து, சுஷ்மா சுவராஜ் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் கண்ணீர் வடித்தோம்" என, இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார். இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கையில் தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்புக்…

தம்புள்ளவில் பள்ளிவாசல் மீது தாக்குதல்: பௌத்த துறவிகள் எச்சரிக்கை

இலங்கையின் தம்புள்ளவிலுள்ள பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பள்ளிவாசலை மூடிவிடும்படி அந்தப் பிரதேசத்தில் செயற்படும் பௌத்த துறவிகளை பிரதிநிதிக்கும் அமைப்பு எச்சரித்திருந்த நிலையிலேயே இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றுமாறு…

சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து: தனியாக சந்தித்ததால் சர்ச்சை

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அக்குழு தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது. இந்நிலையில், குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே நேற்று சிறப்பு விருந்து அளித்தார். மற்ற எம்.பி.க்கள்…

95 சதவீதம் பேரை குடியமர்த்தி விட்டோம்: பாசில் ராஜபக்ஷே தகவல்

"இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்' என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார். இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும்…

தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; பின்னணியில் அரசியல்வாதி

இலங்கையின் தெற்கே காலி - திலிதுற தோட்டத்தில் புத்தாண்டு நாளன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகளோடு வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து…

தமிழீழம் தொடர்பில் வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பொன்றை இலங்கையில் அனைத்துலகம் நடத்த வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேல்பட்ட கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை மனுவொன்றை குறித்த அமைப்பு அமெரிக்க அரச துறைக்கு…

இலங்கையில் இராணுவப் படைத் தளத்தை நிறுவுகிறது சீனா!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய…

ராஜபக்சே மற்றும் பாலஸ்தீன தலைவருக்குமிடையே விசேட சந்திப்பு

இரண்டு நாள் அதிகாரப்பூர்வமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பாலஸ்தீன குடியரசுத் தலைவருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.. நேற்றிரவு இலங்கை வானூர்தி நிலையத்தை சென்றடைந்த பலஸ்தீனத் தலைவர் முஹமட் அப்பாஸ் மற்றும்  அந்நாட்டு முக்கியஸ்தர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,…