பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
போலீசார் சுரண்டப்படும் பூர்வீகக் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்
முரும் அணைக்கட்டு கட்டப்படும் இடத்திற்குச் செல்லும் சாலையில் சுமார் 300 பெனான்கள் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்த முற்றுகையை நிறுத்துவதற்கு கிட்டத்தட்ட 30 போலீசார் சென்றனர் என்று சுவராம் ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார். பெனான் சமூகத்தினர் எஸ்இபியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பெனான்…
ஹுவா பெங்: சுவாவை எதிர்த்தேன்; விலக்கப்பட்டேன்
நேற்று மசீசவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய செயல்குழு உறுப்பினர், லீ ஹுவா பெங், கட்சித் தலைவருக்கு எதிராக ஏபிசி இயக்கம் ( Anybody But Chua Soi Lek) தொடங்கியதுதான் தாம் கட்சியிலிருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார். மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அந்த இயக்கம் தொடக்கப்பட்டது என்றும் அதன் தொடர்பில்…
தன் முதுகு தனக்குத் தெரியாது: பக்காத்தானைச் சாடுகிறது மசீச
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பல தவறுகள் நிகழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை அக்கூட்டணி கண்டுகொள்வதில்லை. அதே வேளை, மத்திய அரசின் நிதி நிர்வாகத் தவறுகளை மட்டும் அது தவறாமல் குறைகூறும் என மசீச மத்திய செயல்குழு உறுப்பினர் லோ செங் கொக்…
இறந்துபோனவர்களுக்கு பண உதவியும் வீட்டு வசதியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது
கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, காலமான பின்னரும்கூட பலருக்கு சமூகநல உதவியும் வீட்டு வசதியும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நெகிரி செம்பிலான் சமூக நலத் துறை 2008-க்கும் 2012-க்குமிடையில் இறந்துபோன 40 பேருக்குத் தொடர்ந்து பண உதவி செய்து வந்துள்ளதாக 2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. பினாங்கு முனிசிபல் மன்றம்…
பிகேஆர்: அடுத்த அறிக்கையாவது சுத்தமான அறிக்கையாக இருக்கும் என கேஜெ-ஆல்…
கடந்த ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தின்போது K-Pop இசை நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் செலவிடப்பட்டதற்குப் பொறுப்பேற்றதற்காக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிகேஆர் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், அடுத்த ஆண்டு அறிக்கையிலாவது இதுபோன்ற தேவையற்ற செலவினங்கள் இடம்பெறாமல்…
அம்பிகா: நன்றி, ஆனால் அரசு நியமனத்தை ஏற்பதற்கில்லை
குற்றத் தடுப்புச் சட்டத்தின்(பிசிஏ)கீழ் கைது செய்யப்படுவோரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மூவரடங்கிய வாரியத்தில் ஒருவராக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை நியமனம் செய்வது பற்றி ஆராய அரசு தயாராகவுள்ளது. ஆனால், அந்நியமனத்தை ஏற்க அம்பிகா விரும்பவில்லை. அவ்வாரியத்துக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள பெருமக்களை நியமிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும்…
தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, போலீஸ் ஆயுதங்கள் தொலைந்து போனதற்குக் கவனக் குறைவுதான் காரணம் என்றும் அதில் முறைகேடுகள் நிகழ வாய்ப்பில்லை என்றும் போலீசாரைத் தற்காத்துப் பேசினார். “அது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு”, என்றாரவர். செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், அது பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை.…
கே-போப் நிகழ்ச்சிக்கான செலவு இப்போது ரிம67 மில்லியன்!
ஹரி பெலியா 2012 நிகழ்ச்சிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சு செய்த செலவு நீண்டு கொண்டே போகிறது, ஜூனில் ரிம55 மில்லியனாக இருந்தது இப்போது ரிம67.61 மில்லியனாக நீண்டு இருக்கிறது. "ஆதரவு செயல்திட்டம்" என்ற தலைப்பில் ரிம12.61 மில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பது தேசிய கணக்காய்வாளர் அறிக்கையிலிருந்து தெரிய…
அன்வார்: அமைதியாக செயல்படுவதே பக்காத்தான் தலைவர்களின் வழிமுறையாகும்
பக்காத்தான் ரக்யாட் கூட்டணித் தலைவர்கள், அமைதியான முறையில் செயல்படுவது என்றும் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்க தெரு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்றும் ஏக மனதாக முடிவு செய்துள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும்கூட, அது தெரு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து அமைதியாகவே செயல்பட்டு வருகிறது என…
முன்னாள் எம்பி: ஊழலைத் தடுக்க போதுமான அதிகாரம் இல்லை
அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் முறைகேடுகள், சீர்கேடுகள் பற்றிய தகவல்கள் வருவதற்கு, அப்பிரச்னைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்குப் போதுமான அதிகாரம் இல்லாததுதான் காரணம் என்கிறார் ஒரு முன்னாள் பிஎன் எம்பி. அதற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு(பிஏசி), மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) போன்றவற்றுக்கும்கூட நடவடிக்கை…
மசீச, கெராக்கான் எம்பிகள் வெறும் ‘திண்ணை பேச்சு வீரர்கள்’
அண்மையில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்காத மசீச, கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் “திண்ணைப்பேச்சு வீரர்கள்” என்று டிஏபி சாடியது. அவ்விரு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் செய்தியாளர் கூட்டங்களில் எதிர்ப்புக் காட்டிப் பேசுவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் துணிச்சலைக் காண்பிப்பார்கள் என தைப்பிங் எம்பி இங்கா…
‘முடிவில்லா வாய்ப்புகள்’-சுலோகத்தை இஸ்ரேல்தான் மலேசியாவிடமிருந்து ‘காப்பி அடித்தது’
தேச நிர்மாணிப்புக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவாக்கிய ‘முடிவில்லா வாய்ப்புகள் (Endless Possibilities)’ என்னும் புதிய சுலோகம், மலேசியா இஸ்ரேலிடம் ‘காப்பி’ அடித்ததல்ல. இஸ்ரேல்தான் மலேசியாவைப் பார்த்து அப்படி ஒரு சுலோகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், இஸ்ரேல் மே மாதத்திலிருந்து அச்சுலோகத்தைப்…
மகாதிர்: குற்றச் செயல்கள் பெருகும் என நஜிப் எதிர்பார்க்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்தபோது குற்ற விகிதம் இந்த அளவுக்குப் பெருக்கம் காணும் என்பதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “அவர் (தடுப்புச் சட்டத்தை எடுத்தெறிய) வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால், குற்றச்செயல்கள் பல்கிப் பெருகும்…
நவம்பர் 4-இல், சுங்கை லிமாவ் இடைத் தேர்தல்
கெடா, சுங்கை லிமாவ் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நவம்பர் 4 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23, வேட்பாளர் நியமன நாளாகும். அதன்பின்னர் பரப்புரைக்கு 12 நாள்கள் ஒதுக்கப்பட்டு நவம்பர் 4-இல் வாக்களிப்பு நடைபெறும். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல் காலமானதைத்…
பிசிஎ சட்டத் திருத்தம் இன்றிரவு நிறைவேற்றப்படலாம்
குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (பிசிஎ) க்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் இன்றிரவு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம். இன்று மாலை இச்சட்டத் திருத்த மசோதா குழு நிலையில் விவாதிக்கப்படுவதற்கு 115 க்கு 66 என்ற வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழு நிலையிலான விவாதம் இன்றிரவு நடைபெற விருக்கிறது. ஆறு எதிரணி…
ஹரி பெலியா 2012 ஆபாச நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் மக்கள்…
ஹரி பெலியா 2012 கொண்டாட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கே-போப் கலை நிகழ்ச்சிக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டார். அந்நிகழ்ச்சி தனியார் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2012 மூன்று கே-போப் குழுவினர்களுக்கு அந்த…
சொய் லெக்-எதிர்ப்புக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர் கலந்து கொண்டனர்
கோலாலும்பூரில் மசீச கட்சித் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள ஒரு தங்குவிடுதியில், சுமார் 500 மசீச மத்திய பேராளர்களும் அடிநிலைத் தலைவர்களும் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் தவறான நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்துக்கு வங்சா மாஜு தொகுதித் தலைவர் இயு தியோங் லுக்…
கணக்கறிக்கை: ஆர்ஓஎஸ் கடமையைச் சரிவரச் செய்யவில்லை
டிஏபி விவகாரத்தில் சங்கப் பதிவதிகம்(ஆர்ஓஎஸ்) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அறிவோம். ஆனால், ஆர்ஓஎஸ் அதன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை என்று கூறுகிறது தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை. புத்ரா ஜெயா, பினாங்கு, ஜோகூர், பகாங் ஆகிய இடங்களில் உள்ள கோப்புகளை ஆராய்ந்ததில், 90 சங்கங்கள் அவற்றின் ஆண்டு அறிக்கைகளை ஆர்ஓஎஸ்ஸுக்கு…
ஜிஎல்சி உயர் அதிகாரிகள் இருவர் போலிப் பட்டங்களை வைத்துள்ளனராம்
அரசுசார்ந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவர் வைத்துள்ள பல்கலைக்கழகப் பட்டங்கள் போலியானவை என எதிரணி எம்பி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் சிலர் போலிப் பட்டங்களை வைத்திருப்பதாக முன்பு கூறிய டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்தான் இப்போது இந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார். அந்நிறுவனங்களின் வலைத்தளங்கள் அவ்விருவரில்…
மலேசிய வருகையைத் தள்ளி வைத்தார் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இம்மாதம் மலேசியா வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அரசுத்துறைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் அதிபர் தம் வருகையைத் தள்ளி வைத்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இத்தகவலைத் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.
பக்காத்தான்: பொதுக் கணக்குக்குழுவுக்குப் பல் இல்லை
பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்குக் ‘கடிக்க’ பல் இல்லை, அதனால் அக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை என பக்காத்தான் ரக்யாட் கூறியுள்ளது. கணக்கறிக்கையில் காணப்படும் முறைகேடுகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட உயர்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்…
ஐஜிபி: துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம்
காணாமல் போனதாகக் கூறப்படும் போலீஸ் துப்பாக்கிகள் ஒரு வேளை படகுகளிலிருந்து தவறிக் கடலில் விழுந்திருக்கலாம் எனப் புதிதாக ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். “காணாமல் போன 37 துப்பாக்கிகளில் எதுவும் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. “காணாமல் போன துப்பாக்கிகள்…
அம்பிகா: அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்
பெர்சே 3.0 பேரணியின்போது செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் “தாக்கப்பட்டதாக” ஓர் அமைச்சர் கூறிருப்பது, அப்பேரணிமீது மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்கிறது பெர்சே. உண்மையில், 2012, ஏப்ரல் 28 பேரணியின்போது செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் போலீசார்தான் எனக் கண்டறிந்து கூறப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு…


