உ.பி. கலவரம்: விசாரணைக் குழு நியமனம்

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநிலத்தில் கலவரத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள…

உ.பி மதக் கலவரம்-மன்மோகன் கண்டனம்

இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களுக்குக் காரணமான வன்செயல்களைக் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுமார் 1,000 துருப்புக்கள் அந்தப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உள்ளூர் பெண்மணி ஒருவர்…

உ.பி.யில் மதக் கலவரம்: 21 பேர் சாவு

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடந்த வகுப்புக் கலவரத்துக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கோரியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில்…

இந்தியப் போர்க் கப்பல்கள்! வெடிக்கும் மற்றொரு சர்ச்சை!

இலங்கைக் கடற்படைக்கு இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இந்தியா கட்டிக் கொடுக்கப் போவதான தகவல் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் இந்தியா வழங்கக்கூடாது என்றும், அதனுடனான இராணுவத் தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தப்…

மின்வெட்டில் மக்கள்; மின்னுற்பத்தியை தடுக்கிறதா தமிழக அரசு?

தமிழக மக்களும் தொழிற்சாலைகளும் மீண்டும் மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் பின்னணியில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் மறுப்பதாக கூறுகிறார் இந்திய காற்றாலை உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக நீடித்த பலமணி நேர மின்வெட்டுப்பிரச்சனை கடந்த சில மாதங்களில் பெருமளவு குறைந்திருந்தது.…

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து!

தனது ஒட்டுமொத்த வணிக கொள்கையின்படி இந்தியாவை எதிர்மறை பட்டியலிருந்து விடுவித்து, தனக்கு "மிகவும் வேண்டப்பட்ட நாடு' என்ற அந்தஸ்த்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும், தெற்காசிய…

2-ஆவது தேசிய அலுவல் மொழியாக தமிழ்

நாட்டின் இரண்டாவது தேசிய அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: "நம் நாட்டில் சிறந்து விளங்கும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளை…

ராகுல் தலைமையில் பணியாற்ற விருப்பம்

ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதை விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதற்காக மகிழ்ச்சியும் அடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றுவிட்டு…

தமிழர்களுக்கு மத்திய அரசு அனுசரணையாக இல்லை: கருணாநிதி

தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லாமல், இலங்கை அரசுக்கே இந்தியா அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர்…

சீன ஊடுருவல் இல்லை: ஏ.கே. அந்தோனி

நாட்டின் எந்த பகுதியிலும் சீன ஊடுருவல் நடைபெறவில்லை. ஒரு அங்குலம்கூட சீனாவுக்கு விட்டுத் தரமாட்டோம். நாட்டின் தேசிய நலன் பாதுகாக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் அந்தோனி வெள்ளிக்கிழமை அளித்த விளக்கம் வருமாறு: "கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-ஆம்…

தப்பியோடிய சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கர் சிக்கினான்

சிறையில் இருந்து தப்பியோடிய சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கரை இன்று கர்நாடகா பொலிசார் மடக்கி பிடித்தனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 40) மீது தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக கொலை, பாலியல் பலாத்காரம் உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜெய்சங்கரை…

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்

கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. அதன் விவரம்: டி.ஆர். பாலு (திமுக): "இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய நாடுகள்…

‘பிரதமர்’ கனவு எனக்கு இல்லை

பிரதமராகும் கனவு எனக்கு இல்லை. வருகிற 2017 வரை குஜராத் முதல்வராகவே நீடிக்க நான் விரும்புகிறேன் என்று நரேந்திர மோடி தெரிவித்தார். வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இவ்விதம் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.…

இந்திய நாவலாசிரியர் சுட்டுக் கொலை

தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் தனது வாழக்கை…

நிலக்கரிச் சுரங்க கோப்புகள் மாயமான விவகாரம்: சிபிஐ முன் பிரதமர்…

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீது தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சிபிஐ முன் தாமாக முன்வந்து ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.…

மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி: ராமதாஸ்

மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்தான் பயன்படுத்தப்படும்…

பெட்ரோலை மிச்சப்படுத்த வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் கலெக்டர்

பீகாரில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து,…

குற்றம் சாட்டப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: மத்திய அரசின்…

புதுடெல்லி, செப். 4- அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதன்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து அப்பீல்…

காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.…

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகள்

கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோர் குறள் பீட விருதுக்குத் தேர்வு…

தனது மனைவியை கொலை செய்ய, காமகொடூரன் ஜெய்சங்கரை தப்பிக்க வைத்த…

பெங்களூர் சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு, ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது. கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன், ஜெய்சங்கர் (வயது 36). காமக்கொடூரனான இவன் தமிழ்நாடு மற்றும்…

குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் 12% உயர்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக தேசிய அளவில் 2012-ஆம் ஆண்டில் 38,172 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1036 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2011-ஆம் ஆண்டோடு, 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிடும்போது 15.3 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும்…

எல்லையில் மோதல்களைத் தவிர்க்க இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மோதல்களைத் தவிர்க்க ஓர் வழிமுறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். மிக அதிக எடை கொண்ட ராணுவத் தளவாடங்களையும் கொண்டு செல்லக் கூடிய அதிநவீன சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து…