சிறீலங்கா போகமாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளிப்பு!

தமிழர் நல பேரியக்கத்தின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து சிறிலங்கா கொழும்பு இசை நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளித்துள்ளார். தமிழர் நல பேரியக்கம் மராட்டிய மாநில உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பாடகர் கரிகரன் வீட்டை முற்றுகையிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலையில் இருந்து கரிகரன் இசை நிகழ்வில்…

சிங்கள படையினருக்கு சென்னையில் பயிற்சி; ஜெயலலிதா கண்டனம்!

இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "இது தமிழ் இனத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் நடவடிக்கை" என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "வீரர்களை உடனே இலங்கைக்கு திருப்பி…

பிரணாப்- சங்மா வேட்பு மனுக்கள் ஏற்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் மனுக்களும் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகளின் வேட்பாளர் பி ஏ சங்மா முறையிட்டிருந்தார்.…

கடைசி வரிசையில் போராட கருணாநிதி தயார்

"சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல"  தமிழக…

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து ‌கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, 13 மீனவர்களை சிறைபி‌டித்து இலங்கை அழைத்துச்…

குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !

பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். கேரள மாநிலத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும்,…

லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக்க பயிற்சி

மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை…

வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா…

ஒரு அனுபவமே போதும் என்கிறார் அப்துல் கலாம்

இந்திய குடியரசுத் தலைவராக ஒருமுறை பதவி வகித்துவிட்டேன். அந்த அனுபவமே எனக்குப் போதுமானது என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சூரியஒளி, காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.…

மும்பாய் தாக்குதல் சூத்திரதாரி அபு ஹம்ஸா கைதானார்

மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின்…

லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: மம்தா

கொல்கத்தா: இந்திய குடியரசு வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று கடந்த புதன்கிழமை முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்தனர். மறுநாள் வியாழக்கிழமை முலாயம் சிங் யாதவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து காங்கிரஸ் பக்கம் முலாயம்சிங் யாதவ் சேர்ந்தார். நேற்று பிரணாப்…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழகம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர். ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.…

கலாமை ஆதரிக்காத கருணாநிதி: காங்கிரசுக்காக மவுன குருவானார்!

"தமிழரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்" என்ற குரல் தமிழகத்தில் இருந்து அல்ல, வடமாநில அரசியல் தலைவர்களிடம் இருந்து தான் எழுந்துள்ளது. "தமிழினத் தலைவர்" என, அழைத்துக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இவ்விஷயத்தில், 'மவுனகுரு'வாக இருப்பது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை…

ஜூலை 19-ல் , இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில்…

சிதம்பரம் பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

சிவகங்கை தேர்தல் வெற்றி தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையேல், அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர்…

கோத்தபய வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி

சிங்கப்பூரில், ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவும், ஜி.எல்.பெரீசும் இணைந்து மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய இராணுவ மந்திரி…

பாதுகாப்பு விஷயங்கள்: இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியான் பனேட்டா, இந்தியப் பிரதமர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக புதுடில்லி சென்றுள்ளார். இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியப் பகுதியில் இந்தியாவை…

கூடங்குளம் போராட்டம்: மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக "கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழு" எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ…

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 52 இடங்களில் மத்திய அரசு பணிமனையின் முன்பு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன் லிட்டருக்கு 7.50 இந்திய ரூபா உயர்த்தப்பட்டது. இதனைக்…

நியூட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்து இந்திய மாணவன் சாதனை

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான். மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உலகுக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுகளுக்கான புதிர், 350 ஆண்டுகள்…

சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற யாருமே கம்யூனிஸ்ட்தான் !

"என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள், மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்... கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான்" என்கிறார் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். நேற்று…