திரிபோலி கிளர்ச்சிக்காரர்கள் வசம்; கடாஃபியின் மகன்கள் கைது!

லிபியாவின் தலைநகர் திரிபோலிக்குள் கிளர்ச்சிப் படைகள் நேற்றிரவு நுழைந்ததை அடுத்து அந்நகரின் பல இடங்களில் தற்போதும் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்திகளில்…

கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடி அதிகரிப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காவல் துறையினரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில்,…

போர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடிவு பிறக்கும்?

"சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி என்றாலும் இப்பள்ளி அனைத்து நிலையிலும் ஒதுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியாகவே உள்ளது" என மனம் குமுறியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் மனம் நொந்து பேசியிருக்கிறார்…

போர்க்குற்ற தடயங்களை அழிக்க அரசு முயற்சி : த.தே.கூ

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை…

மகாத்மா காந்தியை மறந்த இந்திய சுதந்திர நாள் உரை

இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு…

முள்ளிவாய்க்காலில் மக்கள் குடியமர முடியாது : இலங்கை அரசு

வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை…

அண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி

ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார். கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும்…

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து…

போலீஸ் தடுப்பு காவலில் பாலியல் தொல்லையா?

போலீஸ் காவலில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கப்பட்டதாக பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் மூன்று பெண் உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் புக்கிட் அமானில் புகார் செய்தனர். இந்த செய்தியைப் படித்தபோது "போலீசார் பொதுமக்களின் பாதுகாவலர்கள்" என்ற வாக்கியம்தான் என் போன்றவர்களின் சிந்தனையை கிளறிவிடுகின்றது. போலீசார்…

யோகாவா ஓகாவா?

யோகா எனும் சமஸ்கிருத சொல்லின் தமிழாக்கமே ஓகம் எனும் தமிழ்ச்சொல். யோகக் கலையின் வரலாற்றை அரிய முற்படும்போது ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட வரலாறு கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மை. இருப்பினும் பல ஆய்வாளர்களின் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகக் கலையின் வரலாற்றை ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்…

4 ஏக்கர் நிலம் வழங்குவதால் அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை

(ஐயன்திருமேனி) புக்கிட் ஜாலில் தோட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும். புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசும் அதிகாரிகளும் செவிசாய்க்க மறுத்து வருவது நியாயமான செயலாக இல்லை. காலங்காலமாக தோட்டங்களில் வேலைப் பார்த்து வரும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு ஏற்க மறுப்பது எந்த வகையில்…

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை அறிக்கை படி, "புக்கிட் ஜாலில் தோட்ட…

இலங்கையில் பெரிய துறைமுகம் சீனா அமைக்கிறது

இலங்கையில் 500 மில்லியன் டோலர் செலவில் பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சென்றுவந்தார். அப்போது இத்துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை - சீனா இடையே கையெழுத்தானது. இலங்கையில் புதிதாக அமைக்கப்படும் இத்துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின்…

10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா

சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல்…

சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு

நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார். "எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க…

நாள்தோறும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை 3 ஆண்டு நீடிக்கும்

நாள்தோறும் 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்தால் வாழ்நாளை 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது தைவான் ஆராய்ச்சி மையம். நிமிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் 'லான்செட்' பல்கலைக்கழக…

கிழக்கு மகாணத்தில் அரச படைகளுக்கு பலத்த எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள மர்மமனிதர்களின் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொள்ளை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அண்மைக் காலமாக கிழக்கு மகாணம் உட்பட…

நெருக்கடியில் இடைத்தங்கல் முகாம் மக்கள்

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம் பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அடிப்படை வசதிகளை நிறுத்தி தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும்…

அண்ணா ஹசாரே இன்று காலை திடீர் கைது

வலுவான லோக்பாலை வலியுறுத்தி டெல்லியில் ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் இன்று முதல் (ஆக.16) காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர். அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத்…

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு : 75 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில், சுமார் 75 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ., தொலைவில் உள்ள குத் நகரில், நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.…